27/03/2012

உயிருண்ணும் மாலைப்பொழுது!

மாலைப்பொழுது வந்தாலே மங்கையர் மனமும்,​​ உடலும் வாடும்.​ பசலை நோய் படர்ந்த நிலையில் அவர்தம் மேனியெல்லாம் ஒருவித மாற்றத்தைக் காணும்.​ திருமான பெண்டிர்ளின் உயிரை உண்ணும் வேலையைச் செய்யவே இந்த மாலைப்பொழுது வருதாக வள்ளுவர்,​​

""மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது''
என்று கூறுகிறார்.​

லித்தொகையில் ஒரு காட்சி.​ தம் தலைனைப் பிரிந்த தலைவி;​ மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி,​​ தோழிக்கு உரைக்கிறாள்.​ காலையில் பகற்பொழுது காலத்தைக் கக்கி,​​ மாலையில் மீண்டும் அதை விழுங்குகிறான்.​ அதனால் கதிர்கள் சுருங்கி,​​ கதிவன் மலைவாயில் மறைந்துள்ளான்.​ காரிருள் படர்கிறது.​ கார்மேக வண்னின் மேனி நிறைந்தது போல் வெண்ணிலவு தோன்றுகிறது.​ தாமரை மலர்களோ உறங்குதுபோல் கண்மூடிக் கிடக்கின்றன,​​ தம் புகழைத் தாமே கேட்ட பெரியோர் தலைதாழ்த்தி நிற்தைப்போல மரங்கள் கிளை தாழ்ந்து துயில்கின்றன.​ குழலின் ஓசைபோல வண்டுகள் ஒலிக்கின்றன.​ தம் பார்ப்புகளை நினைத்துத் தாய்ப்வைகள் பறக்கின்றன.​ கன்றுகளை நினைத்துக் கறவைப் பசுக்கள் தம் கொட்கைக்குச் செல்கின்றன.​ விலங்கினங்களோ தம் வாழ்விடம் நோக்கி விரைகின்றன.​ செந்தீ வளர்த்து அந்ணர்,​​ அந்திப்பொழுதை வழிடுகின்னர்.​ இப்படி அனைத்து உயிர்ளும் மாலைநேரம் வந்தால் வீடு திரும்புகின்றன.​ மணந்த,​​ மனம் கவர்ந்த தலைவனோ மாளிகை திரும்வில்லை.​ தன் உயிரே போய்விடும் போலிருக்கிறதே'' என்று தலைவி வருந்திக் கூறுகிறாள்.​

அகன்ஞாலம் விளக்கும்தன் பல்திர் வாயாகப்
பகல்நுங்கி யதுபோலப் படுசுடர் கல்சேர
இகல்மிகு நேமியான் நிறம்போல் இருள்ரவ,​​
நிலவுக்காண் பதுபோல அணிமதி ஏர்ரக்
கண்பாயல் பெற்போல் கணைக்கால மலர்கூம்பத்
தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரம்துஞ்ச,​​
முறுவல்கொள் பாவைபோல முகைவிழ்பு புதல்நந்தச்
சிறுவெதிர்ங் குழல்போலச் சுரும்புமிர்ந்து இம்மெனப்
பறவைதம் பார்ப்புஉள்ளக் கறவைதம் பதியின்
கன்றுமர் விருப்பொடு மன்றுநிரை புகுதர
மாவதி சேர மாலை வாள்கொள்
அந்தி அந்ணர் எதிர்கொள,​​ அயர்ந்து
செந்தீச் செவ்ழல் தொடங்க}​வந்ததை
வால்இழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்
மாலை என்னார் மயங்கி யோரே
​(நெய்தற்கலி​)​

சிலப்திகாரத்தில்,​​ அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில்,​​ மாலையின் வருகையை இளங்கோடிகள் எடுத்துரைக்கும் விதம் அருமை.​

லும் இரவும் சந்திக்கின்ற அந்திமாலைப்பொழுது மயக்கம் தரும் பொழுதாம்.​ சேர்ந்வர்ளுக்கு இன்மும்,​​ பிரிந்வர்ளுக்குத் துன்மும் தருவது மாலைக்காலம்.​ கோவலன்,​​ கண்கியைப் பிரிந்து மாதவியைச் சேர்ந்தான்.​ அதனால் மாதவிக்கு இன்பம்.​ கணனைப் பிரிந்து தனித்திருந்த கண்கிக்கோ துன்பம்.​

மண்ணில் மன்னன் மறைந்துவிட்டான்.​ பகைசன் அந்நாட்டை அபரிக்க வருகிறான்;​ முறையாக வாழ்ந்வரோ அவதிப்டுகிறார்;​ முறையற்று வாழ்ந்வரோ மகிழ்வுறுகின்னர்.​ இந்த நிலை,​​ கண்ணகி}​மாதவி வாழ்க்கையின் மூலம் சூசமாகக் கூறப்டுகிறது.​

மாலைக் காலத்தில் ஆடு,​​ மாடுகள் ஓட்டிச்செல்லும் இடையர்கள்,​​ தங்கள் புல்லாங்குழலில் முல்லைப் பண் இசைக்கிறார்கள்.​ பெண்கள் சூடிய கூந்தலில் மலர்ந்த முல்லைப் பூக்ளில் வண்டுகள் அமர்ந்து வாய்வைத்து ஊதுகின்றன.​ தென்றலோ அவ்வண்டுகளை விரட்டிவிடுகின்றன.​ இருள் சூழ்ந்த நிலையில் மங்கல மகளிர் மணிவிளக்கு ஏற்றுகின்னர்.​ இவ்வாறு வளம் நிறைந்த புகாரில் வருத்தம் தருதற்காக வரும் மாலைக் காட்சியை,​​
""கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிளொடு ஒருதிறம் பற்றி
வலம்படு தானை மன்னர் இவ்ழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்ரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
குழல்ளர் முல்லையின் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லர் மூதூர் மாலைவந்து இறுத்தென''​
என்று இளங்கோடிகள்,​​ மாலைப்பொழுதைச் சித்திரித்துக் காட்டுகிறார்.​ சேர்ந்ருக்கு இன்பத்தையும்,​​ பிரிந்ருக்குத் துன்பத்தையும் மாலைப்பொழுது தருதால் தான் வள்ளுவர் அதை,​​ உயிருண்ணும் மாலைஎன்றார் போலும்!​


நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: