சில நொடிகள் கனத்த மௌனமும் சில நொடிகள் பேரிரைச்சலும் ஏற்படுத்துகின்றன அலைகள்! கடற்கரையோரம் செழித்திருக்கின்றன பனைகள். மீன் வீச்சமும், உப்புக் காற்றும் நிறைந்திருக்கிற உவரி கிராமத்தின் கடற்கரையில் குதிரை மீது இருக்கிறார் சாஸ்தா!
திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தள்ளி இருக்கிறது உவரி கடற்கரைக் கிராமம். சாலையின் இரண்டு பக்கமும் சிவப்பேறிக்கிடக்கிறது மண். வழியெல்லாம் கள்ளிச் செடிகள்.
சாஸ்தாவின் முன் தன் மகள் விஜயலட்சுமியுடன் கை கூப்பி நிற்கிறார் தொ. பரமசிவன். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர். தமிழியல், நாட்டுப்புற ஆய்வில் முக்கியமானவர். "அறியப்படாத தமிழகம்", "தெய்வங்களும் சமூக மரபுகளும்" என்ற இவரது ஆய்வு நூல்கள் மிகப் பிரபலம்.
"எம் மகளுக்குக் கல்யாணம். அதான் முதல் அழைப்பை சாஸ்தா காலடியில் வெச்சு ஆசி வாங்க வந்திருக்கேன்." ஒரு தகப்பனின் அன்பு, கண்களில் பொங்கப் பேச ஆரம்பிக்கிறார் தொ.ப!
"எங்க சாஸ்தா, சைவச்சாமி. குதிரை மேல ஏறி ஊரைச் சுத்தி வந்து காவல் காக்கிற முக்கியமான வேலை சாஸ்தாவுக்கு. கடல் பக்கமா பார்த்து உட்கார்ந்தபடியே குடிகளைக் காப்பாத்துவார்ங்கிறது மக்களோட நம்பிக்கை" என்கிறார்.
"தமிழர்களின் வீர வழிபாட்டுக்கான அடையாளம்தான் குல தெய்வங்கள். கால்நடைகளை, கண்மாய் நீரை, பெண்களை, விளைந்த பயிர்களைக் காக்கின்ற சண்டைகளில் உயிர்நீத்த மனிதர்கள் தான் வீர வழிபாட்டில் தெய்வங்களானார்கள். பெண்தெய்வங்களின் கதைகளும் பயங்கரமானவை. பகைவரால் கொல்லப்பட்டோர், பாலியல் வன்முறையில் இறந்தோர், பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கவும், அதை எதிர்க்கவும் தற்கொலை செய்துகொண்டோர், கணவனோடு உயிர்நீத்தோர் ஆகியோரே பெண்தெய்வங்களாக மாறினர்" - காலத்தின் சாட்சி மாதிரி கம்பீரமாகப் பேசுகிறார் பரமசிவம்.
"ஏழெட்டு தலைமுறைக்கு முன்னால் என் முன்னோர்கள் திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள். அதன் பிறகு சாஸ்தாவைக் கும்பிட இங்கே உவரிக்கு வருவதென்றால் வண்டி கட்டிக்கொண்டுதான் வரவேண்டும். போக்குவரத்து வசதிகள் எதுவுமே இருந்திராத காலத்தில் காட்டுப்பாதையில் வந்து போவதன் சிரமங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் குல முதல்வனை வழிபட ஒருவரும் தவறியதே இல்லை.
பின்னர் ஒரு கட்டத்தில் உவரியிலிருந்து பிடிமண் கொண்டுவந்து, திருநெல்வேலியிலேயே ஒரு சாஸ்தா கோவிலை உருவாக்கினார்கள். இப்போது ஊர் ஊருக்கு சாஸ்தா, மதுரைவீரன், அய்யனார், அங்காளபரமேஸ்வரிகள் இருக்கக் காரணம் பிடிமண் கிளைக்கோவில்கள்தான். வருடத்திற்கு ஒருமுறையாவது குடிசாமியின் முன் நின்று வேண்டிக் கொண்டால் தான் எம் மக்களுக்கு மனசு ஆறும். இல்லையென்றால் குடும்பத்தில் நடக்கிற எல்லா அசம்பாவிதங்களுக்கும், குடிசாமியின் கோபமே காரணமாகச் சொல்லப்படும். கிளைக்கோவில்கள் வந்த பிறகும், தாய்க் கோவிலை இன்னும் மறக்காமல் இருப்பதுதான் இந்த சமூகத்தின் பண்பாட்டு அடையாளம்.
மக்கள் வசதி வாய்ப்பு அற்றவர்களாக இருந்தால், அவர்களின் குடிசாமியும் அப்படியே வறுமையில் இருக்கும். சாஸ்தாவின் குடிகள் இப்போது கொஞ்சம் வசதிபெற்றுவிட்டார்கள் போலும். கோபுரம் கட்டி கும்பாபிஷேகமே நடத்திவிட்டார்கள். எங்கள் பாட்டானார் காலத்தில் சாஸ்தாவின் மீது உப்பு வாசமும் மீன் வீச்சமும் அடிக்கும். இப்போது சந்தனமும் ஜவ்வாதும் மணக்கிறது. கடல் மணற்பரப்பில் கூரைகூட இல்லாமல், மக்களோடு சேர்ந்து வெயிலில் காய்ந்திருந்தவருக்குக் கருவறை வந்துவிட்டது. திருநெல்வேலி வட்டார மொழியில் பாட்டும் கதையுமாக கலந்திருந்த சாஸ்தாவின் வீரமும், ஈரமும் இப்போது சமஸ்கிருதமாகிவிட்டது. மக்களின் தெய்வங்கள், இப்படியே மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விடுமோ என்ற வருத்தம்தான் மனதை அரிக்கிறது". வேதனை இழையோட அப்பா பேசுவதை, கண்கொட்டாமல் பார்க்கிறார். தொ.ப.வின் மகள் விஜயலட்சுமி.
"குலதெய்வங்களின் கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் மகாசிவராத்திரியன்று நடக்கும். விடியவிடிய சாமியாடி மக்கள், தங்கள் குடிமுதல்வனின் குறைகளைக் கேட்பர். பெரும்பாலும் கோயில்களில் பூசாரிகள் சாமியாடிகளாக இருப்பதில்லை. தங்கள் குடிகளின்மேலே சாமி வந்திறங்கி தனக்கு நேர்ந்த குறைகளைச் சொல்லும்.
இந்த நூற்றாண்டில்தான் பல சிறுதெய்வங்கள் பெருந்தெய்வமாக மாற்றப்பட்டன. சாஸ்தா இன்றைக்குப் பெருந்தெய்வத்திற்கான தோற்றத்துடன்தான் இருக்கிறார். எதிர்காலத்தில் எங்கள் சாஸ்தாவின் கல்குதிரை தங்கக்குதிரையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பெண்தெய்வங்கள்தான், பெரும்பாலும் இந்த மாற்றத்திற்குட்படுகின்றன. ரத்தப்பலி நிறுத்தப்படுகிறபோதும், சமஸ்கிருத மந்திரம் ஓதப்படுகிறபோதும் சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களாகி விடுகின்றன. ரத்தப்பலி தருதல் என்பது பெரும்பாலும் ஆண் விலங்குகளையே தருவர். பெண்விலங்குகள் உயிர் பெருக்கும் சக்திகள் என்பதால், அவற்றைப் பலிகொடுத்தால் தெய்வம் தண்டிக்கும் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம்.
சிறுதெய்வங்கள் இல்லாத கிராமங்களை தமிழகத்தில் நம்மால் பார்க்கமுடியாது. அவற்றில் பாதிக்குமேல் பெண் தெய்வங்களே குடிதெய்வங்களாக இருக்கின்றன. நம்முடைய வழிபாடே தாய்தெய்வ வழிபாடுதானே.
ஆண்தெய்வங்களைவிட பெண் தெய்வங்கள் இன்னும் உக்கிரத்தோடு இருக்கும். பெண் தெய்வங்களுக்குப் பலிதரும் முறை அச்சமூட்டுவதாக அமைந்திருக்கும். நிறைசினையாக உள்ள ஒரு ஆட்டை கொண்டு வந்து பெண் தெய்வத்தின் முன் நிறுத்த, வேல் போன்ற கருவியினால் அந்த ஆட்டின் வயிற்றைக் குத்திக் கிழித்து, அதன் உள்ளே இருக்கும் குட்டியை எடுத்து பலிபீடத்தின்மீது வைப்பர். இதனை "சூலாடு குத்துதல்" என்று பெயரிட்டு அழைத்தனர். சில இடங்களில் சாமியாடிகள், பலியிடப் பெறும் விலங்குகளின் ரத்தத்தைக் குடிப்பதுண்டு. தாய் தெய்வங்கள் தம் தாய் தெய்வங்கள் தம் மக்களைக் காக்க, அரக்க வடிவிலான தீமையை ஆயுதந்தாங்கி போரிட்டு அழிப்பதாக நம்பிக்கை. அதற்கு இத்தகைய உக்கிரத்தோடு இருக்கவேண்டும் என்கிற மக்களின் விருப்பம்தான் இத்தகைய சடங்குகள். சிறுதெய்வ வழிபாட்டின் பல சடங்கு கூறுகள் தமிழர்களின் போர் நெறிகளுடன் தொடர்பு உடையனவாகத் தோன்றுகின்றன" - குற்றால அருவி மாதிரிக் கொட்டுகிறார் பரமசிவன்.
உவரியில் கடல் நோக்கி கிழக்குப் பார்த்து குதிரைமீது அமர்ந்திருக்கும் சாஸ்தாவுக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்து முடிகாணிக்கை செலுத்துகிறார்கள். கடல்நீரில் கால் நனைத்தபடி கதை சொல்கிறார் தொ.ப.
பேரிரைச்சல் கொண்டு ஆர்ப்பரிக்கிறது கடல் அலை!
நன்றி: ஆனந்தவிகடன், 28.11.2004.
சமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைதீகத்தின் இருண்டமுகம் - தொ.பரமசிவன்
தமிழ்ச் சமூகத்தில் துறவு என்பதே ஆணுக்கு மட்டுமே உரிய வாழ்நெறியாகக் கருதப்படுகிறது. பெண் உறவை நீத்த ஆணுக்கான மரியாதை நம் சமூகத்தில் நிறையவே உண்டு. சமணச் சார்புடைய திருவள்ளுவரும் “துறந்தார்”. என்னும் பெயரில் ஆண் துறவிகளின் பெருமையை விரிவாகவே கொண்டாடியுள்ளார்.
மாறாக, ஆண் உறவு வேண்டாம் என்று வாழும் பெண்களுக்கு நம் சமுதாயத்தில் உரிய மரியாதை கூடக் கிடைப்பதில்லை. நெடுங்காலம் இதுவே வாழ்நிலையாக இருந்தபோது, காலனி ஆட்சிக்குச் சற்று முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவம் மீண்டும் பெண் துறவை இங்கு அறிமுகப்படுத்தியது. பெண் துறவிகள் கல்வி, மருத்துவம் ஆகிய சேவைகளோடு இணைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பெண் துறவு பழிப்புக் குள்ளான கதையை மிக நுட்பமாகக் காண வேண்டும். தமிழ்நாட்டுச் சிவன் கோவில்கள் சிலவற்றில் தனித்துவமான ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அதாவது இறைவனை (சிவனை) அடைய இறைவி(அம்மன்) தவம் இருப்பதாகவும்-தவத்தின் முடிவில் இறைவன் மனமிரங்கி, கோயிலுக்கு வெளியே ஒரு இடத்தில் காட்சி கொடுப்பதாகவும் இத்திருவிழா நடத்திக் காட்டப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக திருநெல்வேலி, சங்கரன் கோவில் ஆகிய இரண்டு இடங்களில் இத்திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு இடங்களில் திருநெல்வேலி அப்பர், சம்பந்தரால் பாடப்பெற்ற ஆகம வழிப்பட்ட தொன்மையான கோவிலாகும்.
நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள சங்கரன்கோவில் இறைவன் சங்கர நாராயணன் என்று அழைக்கப்படுகிறார். கல்வெட்டுக்களில் இந்நாட்டுப் பகுதி-தென்கல்லக நாடு என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைமைத் தெய்வமான கல்லக நாடியம்மனுக்கு புளியங்குடியில் ஒரு கோவில் உள்ளது. சங்கரன் கோவில் இப்பொழுது நெல்லை மாவட்டத்தில் பெரிதும் கொண்டாடப்படும் சிவத் தலமாகும். ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஆடித் தபசு என்னும் திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடுகின்றனர். இறைவி (அம்மன்) தவம் செய்து அவருக்கு இறைவன் சங்கரனார் அருட்காட்சி கொடுப்பதே இத் திருவிழாவின் உச்ச கட்ட நிகழ்ச்சியாகும்.
இக்கோவிலைப் பற்றியோ இத்திருவிழாவினைப் பற்றியோ தொல்லிலக்கியக் குறிப்புகளோ கல்வெட்டுக் குறிப்புகளோ கிடைக்கவில்லை. எனவே இக்கோயிலைப் பழைய சிவன் கோவில் என்று கோயில் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இக்கோவிலின் தனித்துவமான பிற கூறுகளைக் கவனிக்க வேண்டும். இக் கோயிலில் அடியவர்களுக்கு பிரசாதம்(இனிமம்) ஆக பாம்புப் புற்று மண்ணே வழங்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீட்டுக்குள் பாம்பு போன்ற நச்சுயிரிகளின் நடமாட்டம் தென்பட்டால் இக்கோயிலுக்கு நேர்ந்து கொள் கின்றனர். நேர்த்திக் கடனாக வெள்ளித் தகட்டால் ஆன பாம்பு, தேள் உருவங்களைக் காணிக்கை யாகச் செலுத்துகின்றனர். இக்கோயிலுக்குள் அமைந்த தெப்பக்குளம் நாக தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது.
இதுபோன்ற ஐயத்துக்கிடமான தோற்றக் கூறுகளை உடைய கோயில்கள் பெரும்பாலும் பிற சமயத்தவரிடமிருந்து பறிக்கப் பட்டதாகும். பிற சமயத்தவர்கள் என்போர் பெரும்பாலும் பௌத்தர்களும் சமணர்களும் ஆவர். பௌத்த சமயம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குள் தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து மறைந்து விட்டது. எனவே இக்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்டது என்பதனைக் கருதுகோளாக வைத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டுத் திருவிழாக்களிலும் தவம் செய்யும் அம்மன்மார் பெரும்பாலும் வெள்ளை சார்த்தியே தவக்கோலக் காட்சிதருகின்றனர். வெள்ளை சார்த்துதல் என்பது வெண்ணிறத் துணி சார்த்துதல் அல்லது வெண்ணிறத் திருநீற்றுக் காப்பு சார்த்துதல் என இரண்டு வகையில் அமைகிறது.
வெள்ளை நிறத்துக்கும் துறவுக்கும் உரிய ஒரே தொடர்பு தமிழ்நாட்டுச் சமயவரலாற்றில் (கத்தோலிக்கம் தவிர) சமணத்துக்கு மட்டுமே உரியதாகும். கந்தி, கவுந்தி, ஆர்யாங்கனை, குரத்தியடிகள் ஆகிய பெயரோடு சமணப் பெண் துறவிகள் அழைக்கப்பட்டதனை நிகண்டுகள் பேசுகின்றன. இன்றும் சமண மதத்துப் பெண் துறவிகள் வெண்ணிறச் சேலையும் வெள்ளை முழுக்கைச் சட்டையுமாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் சமணப் பெண் துறவிகள் மிகக் குறைவு. கர்நாடகத்தில் இவர்களை மிக அதிகமாகப் பார்க்கலாம். சமணத்தில் பொதுவாக துறவு நிலைக்கான கட்டுப்பாடுகள் மிகமிக அதிகம். தலை மழிப்பு, வெள்ளாடை, அணிகலன் களையும் சொத்துக்ககளையும் முழுவதும் விட்டு விடுதல் ஆகியவற்றோடு ஆண் குழந்தைகளைத் தொட்டுத் தூக்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமை மட்டுமே முழுமையாக வழங்கப் பட்டுள்ளது. எனவே, வெள்ளாடை உடுத்திய தவம் என்பது சமணத்திலிருந்து வைதீகம் பெற்றுக் கொண்ட நெறியாகும்.
சங்கரன்கோவில் ஒரு நாக வழிபாட்டுத் தலம் என்பதனைப் புற்றுமண்ணும் நாகத்தீர்த்தமும் நமக்கு உணர்த்துகின்றன.சமண சமயத் தீர்த்தங்கரர் 24 பேரும் வணக்கத்துக்குரியோர்கள். அவர்களில் பார்சுவநாதர், சுபார்சுவநாதர் ஆகிய இரண்டு தீர்த்தங்கரர்களின் சிற்பங்களில் அவர்களின் தலைமீது நாகம் குடை பிடிப்பது போன்ற வடிவமைப்பினை நிறையவே காணலாம். இவர்கள் இருவரில் பார்சுவநாதர் தலைமீது ஐந்து தலைநாகமும், சுபார்சுவநாதர் திருமேனி மீது ஏழு தலைநாகமும் குடை பிடித்திருக்கும். இவற்றுள் சங்கரன்கோவிலில் வழிபடப் பெற்ற தீர்த்தங்கரர் யார் என்று அடுத்து வரும் கேள்வியாகும்.இந்த இடத்தில் நெல்லை மாவட்டத்தில் பெருக வழங்கும் ஒரு தாலாட்டுப் பாடல் நமக்குத் துணை வருகிறது.
சங்கரனார் கோயிலிலே
சன்னதியில் புன்னைமரம்
அதிலே குடியிருக்கும்
அஞ்சு தலை செந்நாகம்
இதிலிருந்து சங்கரன் கோவிலில் வழிபடப் பெற்றவர் பார்சுவநாதரே என்று கொள்ளலாம்.
இதை வலுப்படுத்தும் இன்னொரு சான்றையும் பார்க்கலாம். சமண மதத்தின் தீர்த்தங்கரர் 24 பேருக்கும் ஒவ்வொரு இலாஞ் சனை (இலக்கினை) உண்டு. அதிலே பார்சுவநாதர் சிற்பத்தில் அடிப்புறத்தில் பாம்பு அவரது இலக் கினையாகக் காட்டப்பட்டுள்ளது. (ஏனையோருக்கு நிலாப் பிறை, சங்கு, மான் போன்றவை காட்டப் பெற்றிருக்கும்).
மேற்குறித்த செய்திகளால் சங்கரன்கோவில் பார்சுவநாதர் கோவிலாக இருந்து பின்னர் வைதிகத்துக்கு(இந்து மதத்திற்கு) மாற்றப்பட்ட கோவிலாக இருக்க வேண்டும். இந்த மாற்றம் எந்தக் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். கி.பி. 13-ஆம் நூற்றாண்டோடு தென் தமிழகத்தில் சமணத்தின் சுவடுகள் முழுவதுமாக அற்றுப் போகின்றன. எனவே, அதற்குப் பின்னரே இந்த மாற்றம் மெல்ல மெல்ல நிகழ்ந்திருக்க வேண்டும். சங்கராபரணம் என்ற பெயரில் சைவமும், ஆதிசேடன் என்ற பெயரில் வைணமும் பாம்பு வழிபாட்டைத் தனக்குள் கொண்டுள்ளன. எனவே சங்கரரும், நாராயணருமாக இந்தக் கோயிலைச் சமணத்திலிருந்து பறித்துக் கொள்வது எளிதாகப் போயிற்று.
சமணக் கோவில் வைதிகத்தால் பறிக்கப்பட்டு இந்துக் கோவில் ஆனதற்கு இருபதாம் நூற்றாண்டு எடுத்துக்காட்டு நாகர்கோவில் நாகராஜா கோவில் ஆகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அக்கோயிலில் சமணத் துறவிகள் இருந்தனர். இன்றும் அக்கோயில் தூண்களிலுள்ள சிற்பங்கள்-தீர்த்தங்கரர் சிற்பங்கள் அக்கோயில் சமணக் கோயிலாக இருந்தமைக்கான சான்றுகளாக எஞ்சி நிற்கின்றன.
(செம்மலர் செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)
மாறாக, ஆண் உறவு வேண்டாம் என்று வாழும் பெண்களுக்கு நம் சமுதாயத்தில் உரிய மரியாதை கூடக் கிடைப்பதில்லை. நெடுங்காலம் இதுவே வாழ்நிலையாக இருந்தபோது, காலனி ஆட்சிக்குச் சற்று முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவம் மீண்டும் பெண் துறவை இங்கு அறிமுகப்படுத்தியது. பெண் துறவிகள் கல்வி, மருத்துவம் ஆகிய சேவைகளோடு இணைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பெண் துறவு பழிப்புக் குள்ளான கதையை மிக நுட்பமாகக் காண வேண்டும். தமிழ்நாட்டுச் சிவன் கோவில்கள் சிலவற்றில் தனித்துவமான ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அதாவது இறைவனை (சிவனை) அடைய இறைவி(அம்மன்) தவம் இருப்பதாகவும்-தவத்தின் முடிவில் இறைவன் மனமிரங்கி, கோயிலுக்கு வெளியே ஒரு இடத்தில் காட்சி கொடுப்பதாகவும் இத்திருவிழா நடத்திக் காட்டப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக திருநெல்வேலி, சங்கரன் கோவில் ஆகிய இரண்டு இடங்களில் இத்திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு இடங்களில் திருநெல்வேலி அப்பர், சம்பந்தரால் பாடப்பெற்ற ஆகம வழிப்பட்ட தொன்மையான கோவிலாகும்.
நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள சங்கரன்கோவில் இறைவன் சங்கர நாராயணன் என்று அழைக்கப்படுகிறார். கல்வெட்டுக்களில் இந்நாட்டுப் பகுதி-தென்கல்லக நாடு என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைமைத் தெய்வமான கல்லக நாடியம்மனுக்கு புளியங்குடியில் ஒரு கோவில் உள்ளது. சங்கரன் கோவில் இப்பொழுது நெல்லை மாவட்டத்தில் பெரிதும் கொண்டாடப்படும் சிவத் தலமாகும். ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஆடித் தபசு என்னும் திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடுகின்றனர். இறைவி (அம்மன்) தவம் செய்து அவருக்கு இறைவன் சங்கரனார் அருட்காட்சி கொடுப்பதே இத் திருவிழாவின் உச்ச கட்ட நிகழ்ச்சியாகும்.
இக்கோவிலைப் பற்றியோ இத்திருவிழாவினைப் பற்றியோ தொல்லிலக்கியக் குறிப்புகளோ கல்வெட்டுக் குறிப்புகளோ கிடைக்கவில்லை. எனவே இக்கோயிலைப் பழைய சிவன் கோவில் என்று கோயில் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இக்கோவிலின் தனித்துவமான பிற கூறுகளைக் கவனிக்க வேண்டும். இக் கோயிலில் அடியவர்களுக்கு பிரசாதம்(இனிமம்) ஆக பாம்புப் புற்று மண்ணே வழங்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீட்டுக்குள் பாம்பு போன்ற நச்சுயிரிகளின் நடமாட்டம் தென்பட்டால் இக்கோயிலுக்கு நேர்ந்து கொள் கின்றனர். நேர்த்திக் கடனாக வெள்ளித் தகட்டால் ஆன பாம்பு, தேள் உருவங்களைக் காணிக்கை யாகச் செலுத்துகின்றனர். இக்கோயிலுக்குள் அமைந்த தெப்பக்குளம் நாக தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது.
இதுபோன்ற ஐயத்துக்கிடமான தோற்றக் கூறுகளை உடைய கோயில்கள் பெரும்பாலும் பிற சமயத்தவரிடமிருந்து பறிக்கப் பட்டதாகும். பிற சமயத்தவர்கள் என்போர் பெரும்பாலும் பௌத்தர்களும் சமணர்களும் ஆவர். பௌத்த சமயம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குள் தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து மறைந்து விட்டது. எனவே இக்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்டது என்பதனைக் கருதுகோளாக வைத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டுத் திருவிழாக்களிலும் தவம் செய்யும் அம்மன்மார் பெரும்பாலும் வெள்ளை சார்த்தியே தவக்கோலக் காட்சிதருகின்றனர். வெள்ளை சார்த்துதல் என்பது வெண்ணிறத் துணி சார்த்துதல் அல்லது வெண்ணிறத் திருநீற்றுக் காப்பு சார்த்துதல் என இரண்டு வகையில் அமைகிறது.
வெள்ளை நிறத்துக்கும் துறவுக்கும் உரிய ஒரே தொடர்பு தமிழ்நாட்டுச் சமயவரலாற்றில் (கத்தோலிக்கம் தவிர) சமணத்துக்கு மட்டுமே உரியதாகும். கந்தி, கவுந்தி, ஆர்யாங்கனை, குரத்தியடிகள் ஆகிய பெயரோடு சமணப் பெண் துறவிகள் அழைக்கப்பட்டதனை நிகண்டுகள் பேசுகின்றன. இன்றும் சமண மதத்துப் பெண் துறவிகள் வெண்ணிறச் சேலையும் வெள்ளை முழுக்கைச் சட்டையுமாக வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் சமணப் பெண் துறவிகள் மிகக் குறைவு. கர்நாடகத்தில் இவர்களை மிக அதிகமாகப் பார்க்கலாம். சமணத்தில் பொதுவாக துறவு நிலைக்கான கட்டுப்பாடுகள் மிகமிக அதிகம். தலை மழிப்பு, வெள்ளாடை, அணிகலன் களையும் சொத்துக்ககளையும் முழுவதும் விட்டு விடுதல் ஆகியவற்றோடு ஆண் குழந்தைகளைத் தொட்டுத் தூக்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமை மட்டுமே முழுமையாக வழங்கப் பட்டுள்ளது. எனவே, வெள்ளாடை உடுத்திய தவம் என்பது சமணத்திலிருந்து வைதீகம் பெற்றுக் கொண்ட நெறியாகும்.
சங்கரன்கோவில் ஒரு நாக வழிபாட்டுத் தலம் என்பதனைப் புற்றுமண்ணும் நாகத்தீர்த்தமும் நமக்கு உணர்த்துகின்றன.சமண சமயத் தீர்த்தங்கரர் 24 பேரும் வணக்கத்துக்குரியோர்கள். அவர்களில் பார்சுவநாதர், சுபார்சுவநாதர் ஆகிய இரண்டு தீர்த்தங்கரர்களின் சிற்பங்களில் அவர்களின் தலைமீது நாகம் குடை பிடிப்பது போன்ற வடிவமைப்பினை நிறையவே காணலாம். இவர்கள் இருவரில் பார்சுவநாதர் தலைமீது ஐந்து தலைநாகமும், சுபார்சுவநாதர் திருமேனி மீது ஏழு தலைநாகமும் குடை பிடித்திருக்கும். இவற்றுள் சங்கரன்கோவிலில் வழிபடப் பெற்ற தீர்த்தங்கரர் யார் என்று அடுத்து வரும் கேள்வியாகும்.இந்த இடத்தில் நெல்லை மாவட்டத்தில் பெருக வழங்கும் ஒரு தாலாட்டுப் பாடல் நமக்குத் துணை வருகிறது.
சங்கரனார் கோயிலிலே
சன்னதியில் புன்னைமரம்
அதிலே குடியிருக்கும்
அஞ்சு தலை செந்நாகம்
இதிலிருந்து சங்கரன் கோவிலில் வழிபடப் பெற்றவர் பார்சுவநாதரே என்று கொள்ளலாம்.
இதை வலுப்படுத்தும் இன்னொரு சான்றையும் பார்க்கலாம். சமண மதத்தின் தீர்த்தங்கரர் 24 பேருக்கும் ஒவ்வொரு இலாஞ் சனை (இலக்கினை) உண்டு. அதிலே பார்சுவநாதர் சிற்பத்தில் அடிப்புறத்தில் பாம்பு அவரது இலக் கினையாகக் காட்டப்பட்டுள்ளது. (ஏனையோருக்கு நிலாப் பிறை, சங்கு, மான் போன்றவை காட்டப் பெற்றிருக்கும்).
மேற்குறித்த செய்திகளால் சங்கரன்கோவில் பார்சுவநாதர் கோவிலாக இருந்து பின்னர் வைதிகத்துக்கு(இந்து மதத்திற்கு) மாற்றப்பட்ட கோவிலாக இருக்க வேண்டும். இந்த மாற்றம் எந்தக் காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். கி.பி. 13-ஆம் நூற்றாண்டோடு தென் தமிழகத்தில் சமணத்தின் சுவடுகள் முழுவதுமாக அற்றுப் போகின்றன. எனவே, அதற்குப் பின்னரே இந்த மாற்றம் மெல்ல மெல்ல நிகழ்ந்திருக்க வேண்டும். சங்கராபரணம் என்ற பெயரில் சைவமும், ஆதிசேடன் என்ற பெயரில் வைணமும் பாம்பு வழிபாட்டைத் தனக்குள் கொண்டுள்ளன. எனவே சங்கரரும், நாராயணருமாக இந்தக் கோயிலைச் சமணத்திலிருந்து பறித்துக் கொள்வது எளிதாகப் போயிற்று.
சமணக் கோவில் வைதிகத்தால் பறிக்கப்பட்டு இந்துக் கோவில் ஆனதற்கு இருபதாம் நூற்றாண்டு எடுத்துக்காட்டு நாகர்கோவில் நாகராஜா கோவில் ஆகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அக்கோயிலில் சமணத் துறவிகள் இருந்தனர். இன்றும் அக்கோயில் தூண்களிலுள்ள சிற்பங்கள்-தீர்த்தங்கரர் சிற்பங்கள் அக்கோயில் சமணக் கோயிலாக இருந்தமைக்கான சான்றுகளாக எஞ்சி நிற்கின்றன.
(செம்மலர் செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)
புதிய ஏற்பாட்டில் அத்வைதச் சிந்தனைகள் - ஏ.ஜே. சொர்ணராஜ்
மதத்தின் பெயரால் மக்களைச் சுயாதீனமிழக்கச் செய்து அவர்களின் பலவீனங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களைச் சுரண்டி சுகபோக வாழ்க்கை நடத்திய கபட பக்தர்களான புரோகிதர்களின் போலித்தனத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகத் தம்மையே அர்ப்பணித்தவர் பரமன் இயேசு. மானுட விடுதலைக்கு வேண்டி அவர் நடத்திய போராட்டம், புரோகிதர்களுக்கு எதிராக நடத்திய போராட்டத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. போராட்டத்திற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் அன்பு. அன்பைத் தம் வாழ்வின் ஆதார சுருதியாகக் கொள்ளும் ஒருவர் அத்வைதியாகத் தான் இருக்கஇயலும்.
அத்வைதம்:-
கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஆதிசங்கரரால் உலகுக்கு உணர்த்தப்பட்டதே அத்வைத தத்துவம். வேதங்களின் தத்துவங்களை அலசி ஆராய்ந்த உபநிடதங்களின் அடிநிலைக் கொள்கைகளை உள்ளடக்கியனவாகத் திகழும் மகாவாக்கியங்களை ஆதாரங்களாகக் கொண்டு சங்கரரால் உருவாக்கப்பட்டதே இத்தத்துவம். மகாவாக்கியங்களுக்கு விளக்கம் நல்க சமயவாதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டபோது முரண்பாட்டை நீக்கி ஏக இறைவழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அத்வைத சித்தாந்தத்தை உருவாக்கினார் என்பர் பெரியோர்.
இறைவனைப் புரிந்து கொள்ள உதவி புரியும் ஞான மார்க்கத்தை முற்றும் ஒதுக்கிவிட்டு அதே நேரத்தில் அவனுக்கு வழிபாடு நடத்தும் கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை நடத்தியவர்களிடம் இறை உண்மைகளை எடுத்துரைக்க உருவாக்கப்பட்டதே இத்தத்துவம். பூசைகளுக்கு முக்கியத்துவம் நல்கி அதன் மூலம் மக்களது பொருளாதாரத்தைச் சுரண்டிய புரோகித வர்க்கத்தினருக்கு ஒருவகையில் இத்தத்துவம் எதிராகவே அமைந்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
''இறைவன் ஒருவனே; அந்தப் பிரம்ம சொரூபமான கடவுளே எல்லா உயிர்களிடத்தும் வீற்றிருக்கிறான்'' என்பதே அத்வைத தத்துவம். அதாவது இறைவனும் பிற உயிரினங்களும் வெவ்வேறல்ல; ஒன்றே என்பது தான் இதன் பொருள். இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ள அனைத்தும் பிரம்மமாகும். இதை உணர்ந்து கொள்வதுதான் உண்மையான அறிவு. இந்த அறிவு கிடைக்கப்பெற்ற சமூகத்தில் சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, பொருளாதாரத்தின் பெயராலோ ஒருவர் மற்றொருவர் மேல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருக்காது. மதங்கள் உரைக்கும் ''இறையரசு'' அங்கு நிலவும். ''ஆடற்பருந்தும் மாதர் அருகூட்டும் பைங்கிளியும் ஒரு கூட்டில் அங்கு வாழும்''.
இறைவழிபாடு அறிவின் அடித்தளத்திலிருந்து தொடங்கப்படவேண்டும் என வலியுறுத்தும் இந்தத் தத்துவத்தின் பேராற்றலை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் பாரதி, ''அத்வைத நிலைகண்டால் மரண முண்டோ''? என்கிறார். ''அறிவில்லாதவன் சிவனைக் காணான்'' எனக் கூறிய அவர், ''எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்'', ''மண்ணுலகில் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ''? எனப்பாடி அத்வைத தத்துவத்தை மிகவும் எளிமையாக விளக்குகிறார். ''நானே கடவுள்'' என உரைத்த பல ஆன்மீகவாதிகளுக்கும் சக்தியை நல்கியது இத்தத்துவமே.
புதிய ஏற்பாட்டில் அத்வைதச் சிந்தனைகள்:-
இயேசு பெருமானின் போதனைகளை உள்ளடக்கிய பரிசுத்த மறையாகத் திகழ்கிறது புதிய ஏற்பாடு. இதில் உரைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பல அத்வைத சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. சங்கரருக்கு முன்பே இத்தத்துவம் கிறிஸ்துவாலும் வேறு பல ஆன்மீகப் பெரியவர்களாலும் கூறப்பட்டுள்ளதெனினும் சங்கரரைப் போன்று இத்தத்துவத்திற்குப் பெயர் சூட்டி முறையான விளக்கம் நல்க அவர்கள் முனையவில்லை. மண்மேல் மனிதன் சிறப்பான வாழ்க்கை நடத்தி மேன்மை அடையவேண்டும் என்ற நோக்கில்தான் மதங்கள் உருவாக்கப்பட்டன. அன்பையும் கருணையையும் குறித்துப் பேசாத மதங்கள் இருக்க இயலாது. இவற்றைக் குறித்து எந்த மதம் பேசுகிறதோ அந்த மதத்தால் அத்வைத சிந்தனையிலிருந்து ஒதுங்கிவிட இயலாது.
மதங்களின் பெயரால் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பிய புரோகிதர்கள் புனித நூல்களுக்குத் தங்கள் வசதிக்கு ஏற்ப விரும்பிய வண்ணம் விளக்கம் நல்கியதோடு உண்மைகளை மறைக்கத் தலைப்பட்டனர். மக்களின் சிந்தனைகட்குத் தடைபோடும் வண்ணம் தங்களின் வர்க்க மேம்பாட்டைக் கருதி புதிய கருத்துக்களையும் உட்புகுத்திவிட்டனர். தங்களது சூழ்ச்சியால் உண்மைக் கருத்துக்களை மக்கள் உணர இயலா வண்ணம் இவர்கள் ஆக்கிவிடுகின்றனர். இதில்தான் அவர்களது வெற்றி அமைந்துள்ளது. இவர்களது நயவஞ்சகத்தனமான நரித்தனத்தை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் பிரெஞ்சு தத்துவ ஞானியான வால்டர், ''உலகின் முதல் போதகன் முதல் வஞ்சகனாகவே இருந்துள்ளான்'' என்கிறார். கிறிஸ்துவின் போதனைகளும் இப்படிப்பட்ட புரோகிதர்களின் கையில் சிக்குண்டு தவிக்கின்ற காரணத்தால் தான் இன்றைய கிறிஸ்தவ மதம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இயேசுகிறிஸ்து ஒரு மதத்தைத் தோற்றுவிக்க ஒருபோதும் முனைந்ததில்லை; ஒரு போதகராக இருக்க விரும்பியதுமில்லை. யூதமதப் புரோகிதர்கள் தங்கள் நலனை மனதில் எண்ணிக் கடவுளின் பெயரால் மக்களிடம் பாவபலி, சமாதானபலி, தகனபலி எனப் பலவிதமான பலிகளை நடத்தத் தூண்டியதோடு கூடுதலான காணிக்கைகளையும் வரிகளையும் வசூலிக்கச் சட்டமியற்றினர். சட்டதிட்டங்களைப் பின்பற்றாதவர்கள் ஈவிரக்கமற்ற தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். கடவுளின் பெயரில் உள்ள நம்பிக்கையால் எந்தச் சிந்தனையுமின்றி இவற்றையெல்லாம் முறையாகச் செய்த யூதகுலத்தினர் அனுபவித்த பொருளாதாரப் பிரச்சனைகட்கு அளவில்லை. அதே நேரத்தில் புரோகிதவர்க்கம் செல்வச் செழிப்பில் திளைத்தது. இதைக் கண்ணுற்ற இயேசு ''சுமப்பதற்கு அரிய சுமையை'' மக்கள் மேல் புரோகிதர்கள் ஏற்றுகின்றனர் எனக் கவலைப்பட்டார். யூதமதத் தத்துவங்கள் எதையும் இயேசு எதிர்க்கவில்லை. ஆனால் அத்தத்துவங்கள் முறைகேடாகத் திரித்து கூறப்படுவதை எதிர்த்தார். அதற்கு எதிராகத் தம் புரட்சியை ஆரம்பித்தார். புரோகிதர்களை இயேசு மாயக்காரர், குருடரான வழிகாட்டிகள், மதிகேடர், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள், சர்ப்பங்கள், விரியன் பாம்புக்குட்டிகள் எனக் கூறுவதிலிருந்து இவர்கள் எப்படிப்பட்ட கெடுமதி படைத்தவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
முறையான ஒரு அத்வைதி பலிகளிலும் காணிக்கைகளிலும் நம்பிக்கை கொள்வதில்லை. அவனை எந்தப் புரோகிதனாலும் சுரண்டலுக்கு உள்ளாக்க இயலாது. காணும் உயிர்களில் இறைவனை உணரும் ஓர் அத்வைதியால் எவ்வாறு புரோகிதனை ஏற்க இயலும்? கடவுளோடு தொடர்பு கொள்ள இடைத்தரகர் ஒருவர் தேவை என்பதையும் அத்வைதியால் ஏற்க இயலாது. இயேசு தாம் வாழ்ந்த நாட்களில் இத்தகைய சிந்தனைகளை உடையவராக விளங்கியதோடு புரோகிதவர்க்கத்தின் கீழ்த்தரமான செயல்களைத் தெருவுக்கும் கொணர்ந்தார். கடவுளின் பிரதிநிதிகள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் புரோகிதர்களால் இயேசுவை எப்படி அங்கிகரிக்க முடியும்? எனவே அவர்கள் இயேசுவைக் கொல்வதில் தங்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுசேர்ந்தனர்.
எல்லா உயிர்களிலும் உறைந்திருப்பவன் இறைவனே என்ற கருத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் புதிய ஏற்பாட்டில் பல திருவசனங்கள் அமைந்துள்ளன. ''உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான். என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறான்'' (மத்.10:40) என்ற திருவசனம் மனிதனை ஏற்பவன் இறைவனை ஏற்கிறான் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாகத் தானே அமைந்துள்ளது. ''மிகவும் சிறியராகிய என் சகோதரனான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்'' (மத்.25:40) என்ற திருவசனம் மக்களுக்குத் தொண்டு புரிபவன் இறைவனுக்குத் தொண்டு புரிகின்றான் என்பதைத்தானே உணர்த்துகின்றது.
பவுல் என்ற சவுல் கிறிஸ்தவ வழியைப் பின்பற்றுபவர்களைக் கொடுமையாகத் துன்பப்படுத்தும் பழக்கத்தை மேற்கொண்டவன். அவ்வாறு துன்பப்படுத்தும்போது ஒரு தடவை அசரீரி ஒன்றைக் கேட்கிறான். அந்த அசரீரி நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் எனக் கேட்டது. அதற்குப் பவுல் ''ஆண்டவரே நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர், நீ துன்பப்படுத்துகிற யேசு நானே என்றார்'' (அப்.9:4,5) இதைவிட அத்வைதம் அல்லது ஏகாத்மவாதத்தை எவ்வாறு விலக்கிட இயலும்?
இயேசுகிறிஸ்து தம் சீடர்களிடம், ''உங்களுக்குச் செவி கொடுக்கிறவன் எனக்குச் செவி கொடுக்கிறான். உங்களை அசட்டை பண்ணுகிறவன் என்னை அசட்டை பண்ணுகிறான். என்னை அசட்டை பண்ணுகிறவனும் என்னை அனுப்பினவரை அசட்டை பண்ணுகிறான்'' (லூக்.10:16) எனக் கூறியதும் அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசேயர்களுக்கு எழுதிய நிரூபத்தில், ''அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றும் இல்லை, விருத்தசேதனமுள்ளவனென்னும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை. புறஜாதியனென்றும், புறதேசத்தானென்றும் இல்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்'' (கொலோ. 3.11) என உரைப்பதும் சுத்த அத்வைதச் சிந்தனைகள் அல்லவா? இதே பவுல் கொரிந்தியர்களிடம் நம்பிக்கையைப் பற்றிப் பேசும்போது, ''இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களை நீங்களே அறிவீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறிவீர்கள்'' (11 கொரி. 13.15) என்கிறார்.
புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் இத்தகைய அத்வைத சிந்தனைகளை எந்தப் புரோகிதனும் மக்களுக்கு விளக்குவது இல்லை. மக்கள் இவற்றின் பொருளை உணர்ந்து கொண்டால் புரோகிதவர்க்கம் வளம்பெற இயலுமா? எனவே அவர்கள் திட்டமிட்டு இவற்றை மறைக்கின்றனர். ''எல்லா உயிர்களிலும் எவன் என்னைக் காண்பானோ அல்லது என்னில் எவன் எல்லா உயிர்களையும் காண்பானோ அவனே உண்மையில் காட்சியுடையவனாக இருக்கிறான்'' என்ற கீதையின் கருத்துக்கும் மேற்கூறப்பட்ட கருத்துக்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதைக் கற்றோர் உணர்வர். ''கர்த்தருக்குப் பயப்படுதலே ஞாலத்தின் ஆரம்பம்'' என்ற திருவசனத்தை எண்ணிப்பார்ப்பது இவ்விடத்தில் சாலப்பொருந்தும்.
''சத்''தாகவும் ''சித்''தாகவும், ''ஆனந்த''மாகவும் இருப்பது பிரம்மம் என்கிறது அத்வைதம். இதைச் சச்சிதானந்தம் என்பர். பிரம்மத்தைக் குறித்த இக்கருத்து விவிலியத்தோடு ஒத்துச்செல்கிறது என்கிறார் பேராசிரியர் ஆபிரகாம். ''கடவுள் அன்பாகவே இருக்கிறார்'' என்கிறது விவிலியம். கலப்படமில்லாத அன்பினால் அல்லவா உண்மையான ஆனந்தத்தை நல்க இயலும். அந்த ஆனந்த மயமாக இறைவன் இருக்கிறார் என்பது தானே விவிலியம் கூறும் உண்மை. இறைவன் அறிவு வடிவமானவன் என்பதும் விவிலியத்திற்கு உடன்பாடே. ஆத்மாவிற்கு மட்டுமே உண்மை, ஞானம் ஆகியவற்றைக் கொண்டு விளங்க இயலும். ''தேவன் ஆவியாக இருக்கிறார்'' என்ற வேத வசனம் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது. ''அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்'' என்ற யோவானின் கூற்று அத்வைதத்தைக் கிறிஸ்தவம் விலியுறுத்துகின்றது என்பதை உணர்ந்து கொள்ள உதவி புரிகின்றது.
உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களால் கொல்லப்பட்ட உயிர்களைவிட மதங்களின் பெயரால் ஏற்பட்ட சண்டைகளால் கொல்லப்பட்ட உயிர்கள் அதிகம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய கொடூரம் நிகழாவண்ணம் தடுக்க உதவி புரிவது அத்வைத தத்துவம்.
நன்றி: ஆய்வுக்கோவை
அத்வைதம்:-
கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஆதிசங்கரரால் உலகுக்கு உணர்த்தப்பட்டதே அத்வைத தத்துவம். வேதங்களின் தத்துவங்களை அலசி ஆராய்ந்த உபநிடதங்களின் அடிநிலைக் கொள்கைகளை உள்ளடக்கியனவாகத் திகழும் மகாவாக்கியங்களை ஆதாரங்களாகக் கொண்டு சங்கரரால் உருவாக்கப்பட்டதே இத்தத்துவம். மகாவாக்கியங்களுக்கு விளக்கம் நல்க சமயவாதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டபோது முரண்பாட்டை நீக்கி ஏக இறைவழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அத்வைத சித்தாந்தத்தை உருவாக்கினார் என்பர் பெரியோர்.
இறைவனைப் புரிந்து கொள்ள உதவி புரியும் ஞான மார்க்கத்தை முற்றும் ஒதுக்கிவிட்டு அதே நேரத்தில் அவனுக்கு வழிபாடு நடத்தும் கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை நடத்தியவர்களிடம் இறை உண்மைகளை எடுத்துரைக்க உருவாக்கப்பட்டதே இத்தத்துவம். பூசைகளுக்கு முக்கியத்துவம் நல்கி அதன் மூலம் மக்களது பொருளாதாரத்தைச் சுரண்டிய புரோகித வர்க்கத்தினருக்கு ஒருவகையில் இத்தத்துவம் எதிராகவே அமைந்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
''இறைவன் ஒருவனே; அந்தப் பிரம்ம சொரூபமான கடவுளே எல்லா உயிர்களிடத்தும் வீற்றிருக்கிறான்'' என்பதே அத்வைத தத்துவம். அதாவது இறைவனும் பிற உயிரினங்களும் வெவ்வேறல்ல; ஒன்றே என்பது தான் இதன் பொருள். இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ள அனைத்தும் பிரம்மமாகும். இதை உணர்ந்து கொள்வதுதான் உண்மையான அறிவு. இந்த அறிவு கிடைக்கப்பெற்ற சமூகத்தில் சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, பொருளாதாரத்தின் பெயராலோ ஒருவர் மற்றொருவர் மேல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருக்காது. மதங்கள் உரைக்கும் ''இறையரசு'' அங்கு நிலவும். ''ஆடற்பருந்தும் மாதர் அருகூட்டும் பைங்கிளியும் ஒரு கூட்டில் அங்கு வாழும்''.
இறைவழிபாடு அறிவின் அடித்தளத்திலிருந்து தொடங்கப்படவேண்டும் என வலியுறுத்தும் இந்தத் தத்துவத்தின் பேராற்றலை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் பாரதி, ''அத்வைத நிலைகண்டால் மரண முண்டோ''? என்கிறார். ''அறிவில்லாதவன் சிவனைக் காணான்'' எனக் கூறிய அவர், ''எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்'', ''மண்ணுலகில் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ''? எனப்பாடி அத்வைத தத்துவத்தை மிகவும் எளிமையாக விளக்குகிறார். ''நானே கடவுள்'' என உரைத்த பல ஆன்மீகவாதிகளுக்கும் சக்தியை நல்கியது இத்தத்துவமே.
புதிய ஏற்பாட்டில் அத்வைதச் சிந்தனைகள்:-
இயேசு பெருமானின் போதனைகளை உள்ளடக்கிய பரிசுத்த மறையாகத் திகழ்கிறது புதிய ஏற்பாடு. இதில் உரைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பல அத்வைத சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. சங்கரருக்கு முன்பே இத்தத்துவம் கிறிஸ்துவாலும் வேறு பல ஆன்மீகப் பெரியவர்களாலும் கூறப்பட்டுள்ளதெனினும் சங்கரரைப் போன்று இத்தத்துவத்திற்குப் பெயர் சூட்டி முறையான விளக்கம் நல்க அவர்கள் முனையவில்லை. மண்மேல் மனிதன் சிறப்பான வாழ்க்கை நடத்தி மேன்மை அடையவேண்டும் என்ற நோக்கில்தான் மதங்கள் உருவாக்கப்பட்டன. அன்பையும் கருணையையும் குறித்துப் பேசாத மதங்கள் இருக்க இயலாது. இவற்றைக் குறித்து எந்த மதம் பேசுகிறதோ அந்த மதத்தால் அத்வைத சிந்தனையிலிருந்து ஒதுங்கிவிட இயலாது.
மதங்களின் பெயரால் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பிய புரோகிதர்கள் புனித நூல்களுக்குத் தங்கள் வசதிக்கு ஏற்ப விரும்பிய வண்ணம் விளக்கம் நல்கியதோடு உண்மைகளை மறைக்கத் தலைப்பட்டனர். மக்களின் சிந்தனைகட்குத் தடைபோடும் வண்ணம் தங்களின் வர்க்க மேம்பாட்டைக் கருதி புதிய கருத்துக்களையும் உட்புகுத்திவிட்டனர். தங்களது சூழ்ச்சியால் உண்மைக் கருத்துக்களை மக்கள் உணர இயலா வண்ணம் இவர்கள் ஆக்கிவிடுகின்றனர். இதில்தான் அவர்களது வெற்றி அமைந்துள்ளது. இவர்களது நயவஞ்சகத்தனமான நரித்தனத்தை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் பிரெஞ்சு தத்துவ ஞானியான வால்டர், ''உலகின் முதல் போதகன் முதல் வஞ்சகனாகவே இருந்துள்ளான்'' என்கிறார். கிறிஸ்துவின் போதனைகளும் இப்படிப்பட்ட புரோகிதர்களின் கையில் சிக்குண்டு தவிக்கின்ற காரணத்தால் தான் இன்றைய கிறிஸ்தவ மதம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இயேசுகிறிஸ்து ஒரு மதத்தைத் தோற்றுவிக்க ஒருபோதும் முனைந்ததில்லை; ஒரு போதகராக இருக்க விரும்பியதுமில்லை. யூதமதப் புரோகிதர்கள் தங்கள் நலனை மனதில் எண்ணிக் கடவுளின் பெயரால் மக்களிடம் பாவபலி, சமாதானபலி, தகனபலி எனப் பலவிதமான பலிகளை நடத்தத் தூண்டியதோடு கூடுதலான காணிக்கைகளையும் வரிகளையும் வசூலிக்கச் சட்டமியற்றினர். சட்டதிட்டங்களைப் பின்பற்றாதவர்கள் ஈவிரக்கமற்ற தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். கடவுளின் பெயரில் உள்ள நம்பிக்கையால் எந்தச் சிந்தனையுமின்றி இவற்றையெல்லாம் முறையாகச் செய்த யூதகுலத்தினர் அனுபவித்த பொருளாதாரப் பிரச்சனைகட்கு அளவில்லை. அதே நேரத்தில் புரோகிதவர்க்கம் செல்வச் செழிப்பில் திளைத்தது. இதைக் கண்ணுற்ற இயேசு ''சுமப்பதற்கு அரிய சுமையை'' மக்கள் மேல் புரோகிதர்கள் ஏற்றுகின்றனர் எனக் கவலைப்பட்டார். யூதமதத் தத்துவங்கள் எதையும் இயேசு எதிர்க்கவில்லை. ஆனால் அத்தத்துவங்கள் முறைகேடாகத் திரித்து கூறப்படுவதை எதிர்த்தார். அதற்கு எதிராகத் தம் புரட்சியை ஆரம்பித்தார். புரோகிதர்களை இயேசு மாயக்காரர், குருடரான வழிகாட்டிகள், மதிகேடர், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள், சர்ப்பங்கள், விரியன் பாம்புக்குட்டிகள் எனக் கூறுவதிலிருந்து இவர்கள் எப்படிப்பட்ட கெடுமதி படைத்தவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
முறையான ஒரு அத்வைதி பலிகளிலும் காணிக்கைகளிலும் நம்பிக்கை கொள்வதில்லை. அவனை எந்தப் புரோகிதனாலும் சுரண்டலுக்கு உள்ளாக்க இயலாது. காணும் உயிர்களில் இறைவனை உணரும் ஓர் அத்வைதியால் எவ்வாறு புரோகிதனை ஏற்க இயலும்? கடவுளோடு தொடர்பு கொள்ள இடைத்தரகர் ஒருவர் தேவை என்பதையும் அத்வைதியால் ஏற்க இயலாது. இயேசு தாம் வாழ்ந்த நாட்களில் இத்தகைய சிந்தனைகளை உடையவராக விளங்கியதோடு புரோகிதவர்க்கத்தின் கீழ்த்தரமான செயல்களைத் தெருவுக்கும் கொணர்ந்தார். கடவுளின் பிரதிநிதிகள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் புரோகிதர்களால் இயேசுவை எப்படி அங்கிகரிக்க முடியும்? எனவே அவர்கள் இயேசுவைக் கொல்வதில் தங்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுசேர்ந்தனர்.
எல்லா உயிர்களிலும் உறைந்திருப்பவன் இறைவனே என்ற கருத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் புதிய ஏற்பாட்டில் பல திருவசனங்கள் அமைந்துள்ளன. ''உங்களை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான். என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறான்'' (மத்.10:40) என்ற திருவசனம் மனிதனை ஏற்பவன் இறைவனை ஏற்கிறான் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாகத் தானே அமைந்துள்ளது. ''மிகவும் சிறியராகிய என் சகோதரனான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்'' (மத்.25:40) என்ற திருவசனம் மக்களுக்குத் தொண்டு புரிபவன் இறைவனுக்குத் தொண்டு புரிகின்றான் என்பதைத்தானே உணர்த்துகின்றது.
பவுல் என்ற சவுல் கிறிஸ்தவ வழியைப் பின்பற்றுபவர்களைக் கொடுமையாகத் துன்பப்படுத்தும் பழக்கத்தை மேற்கொண்டவன். அவ்வாறு துன்பப்படுத்தும்போது ஒரு தடவை அசரீரி ஒன்றைக் கேட்கிறான். அந்த அசரீரி நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் எனக் கேட்டது. அதற்குப் பவுல் ''ஆண்டவரே நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர், நீ துன்பப்படுத்துகிற யேசு நானே என்றார்'' (அப்.9:4,5) இதைவிட அத்வைதம் அல்லது ஏகாத்மவாதத்தை எவ்வாறு விலக்கிட இயலும்?
இயேசுகிறிஸ்து தம் சீடர்களிடம், ''உங்களுக்குச் செவி கொடுக்கிறவன் எனக்குச் செவி கொடுக்கிறான். உங்களை அசட்டை பண்ணுகிறவன் என்னை அசட்டை பண்ணுகிறான். என்னை அசட்டை பண்ணுகிறவனும் என்னை அனுப்பினவரை அசட்டை பண்ணுகிறான்'' (லூக்.10:16) எனக் கூறியதும் அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசேயர்களுக்கு எழுதிய நிரூபத்தில், ''அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றும் இல்லை, விருத்தசேதனமுள்ளவனென்னும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை. புறஜாதியனென்றும், புறதேசத்தானென்றும் இல்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்'' (கொலோ. 3.11) என உரைப்பதும் சுத்த அத்வைதச் சிந்தனைகள் அல்லவா? இதே பவுல் கொரிந்தியர்களிடம் நம்பிக்கையைப் பற்றிப் பேசும்போது, ''இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களை நீங்களே அறிவீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறிவீர்கள்'' (11 கொரி. 13.15) என்கிறார்.
புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் இத்தகைய அத்வைத சிந்தனைகளை எந்தப் புரோகிதனும் மக்களுக்கு விளக்குவது இல்லை. மக்கள் இவற்றின் பொருளை உணர்ந்து கொண்டால் புரோகிதவர்க்கம் வளம்பெற இயலுமா? எனவே அவர்கள் திட்டமிட்டு இவற்றை மறைக்கின்றனர். ''எல்லா உயிர்களிலும் எவன் என்னைக் காண்பானோ அல்லது என்னில் எவன் எல்லா உயிர்களையும் காண்பானோ அவனே உண்மையில் காட்சியுடையவனாக இருக்கிறான்'' என்ற கீதையின் கருத்துக்கும் மேற்கூறப்பட்ட கருத்துக்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதைக் கற்றோர் உணர்வர். ''கர்த்தருக்குப் பயப்படுதலே ஞாலத்தின் ஆரம்பம்'' என்ற திருவசனத்தை எண்ணிப்பார்ப்பது இவ்விடத்தில் சாலப்பொருந்தும்.
''சத்''தாகவும் ''சித்''தாகவும், ''ஆனந்த''மாகவும் இருப்பது பிரம்மம் என்கிறது அத்வைதம். இதைச் சச்சிதானந்தம் என்பர். பிரம்மத்தைக் குறித்த இக்கருத்து விவிலியத்தோடு ஒத்துச்செல்கிறது என்கிறார் பேராசிரியர் ஆபிரகாம். ''கடவுள் அன்பாகவே இருக்கிறார்'' என்கிறது விவிலியம். கலப்படமில்லாத அன்பினால் அல்லவா உண்மையான ஆனந்தத்தை நல்க இயலும். அந்த ஆனந்த மயமாக இறைவன் இருக்கிறார் என்பது தானே விவிலியம் கூறும் உண்மை. இறைவன் அறிவு வடிவமானவன் என்பதும் விவிலியத்திற்கு உடன்பாடே. ஆத்மாவிற்கு மட்டுமே உண்மை, ஞானம் ஆகியவற்றைக் கொண்டு விளங்க இயலும். ''தேவன் ஆவியாக இருக்கிறார்'' என்ற வேத வசனம் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது. ''அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்'' என்ற யோவானின் கூற்று அத்வைதத்தைக் கிறிஸ்தவம் விலியுறுத்துகின்றது என்பதை உணர்ந்து கொள்ள உதவி புரிகின்றது.
உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களால் கொல்லப்பட்ட உயிர்களைவிட மதங்களின் பெயரால் ஏற்பட்ட சண்டைகளால் கொல்லப்பட்ட உயிர்கள் அதிகம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய கொடூரம் நிகழாவண்ணம் தடுக்க உதவி புரிவது அத்வைத தத்துவம்.
நன்றி: ஆய்வுக்கோவை
சிலம்பில் சமய அறங்கள் - கோ. விஜெயம்
சிலப்பதிகாரத்தை சமுதாய நோக்கில் பார்க்கும் பொழுது சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஒன்றுபடுத்திக் கூறும் தேசியக் காப்பியமாகத் திகழ்கிறது. மேலும் சிலம்பு அனைத்துச் சமயங்களையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் மணிமேகலை பௌத்த சமயத்தை மட்டுமே வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது.
சமயம் என்பது மனிதனால் அரிதாக உணரக்கூடியதாகும். ஆனால் எளிதாகப் புலப்படக்கூடியது இதைத் தான்
''இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை
நம்புவதுதான் சமயம் ஆகும்'' என்கிறது வாழ்வியற் களஞ்சியம்.
சிலப்பதிகார ஆசிரியர் சமயச் சார்புடையவர் என்றும் சமயச் சார்பு அற்றவர் என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களாலும் பல்வேறு கருத்துக்களாலும் விமர்சிக்கப்படுகிறார். காப்பியத்தின் கதைப்போக்கு சமயச் சார்பைச் சார்ந்து நிற்காவிட்டாலும், அவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்துதான் நிற்கின்றனர். ஏனென்றால் அன்புக்கு அடுத்தபடியாக மனிதனை அமைதிப்படுத்தி அவனது உணர்வுகளைப் பண்படுத்தும் சிறந்த கருவியாகச் சமயம் பயன்படுகிறது.
இவ்வாறு மனிதனின் நாகரீகமான வளர்ச்சியில் பங்கெடுத்து அவனுடைய வாழ்க்கைப் போரில் இரண்டறக் கலந்து அவனுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்ற சமயங்களைத் தொடாத இலக்கியவாதிகளே இல்லை எனக் கூறலாம்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் தம்மைச் சார்பற்றவராகவே காட்சி செல்கிறார். அதே வேளையில் சமயச் சார்பு என்ற போர்வையில் அறிவுக்குப் பொருந்தாத செயல்களையும் கண்டிக்கிறார். தமது காப்பியத்தின் முடிவான கூற்றில் அடிகள் சமயச் சார்பாக கூறிய அறக்கருத்துக்கள்,
1. தெய்வம் தெளிமின்
2. தவநெறி மேற்கொள்ளுங்கள் ஆகிய இரண்டும் ஆகும்.
தெய்வம் தெளிமின்
''இறைவனை அடிப்படையாகக் கொண்டது சமயம். மனிதனை அடிப்படையாகக் —‘கண்டது அறம். இருப்பினும் இறைவனை அறிவியலில் ஒரு முற்கோளாகக் கொள்வது பயனுடையது என்று கூறலாம்'' என வாழ்வியற் களஞ்சியம் கூறுகிறது.
''சிலம்பில், சைவம், வைணவம், சமணம், புத்தம் என்ற அனைத்து மதங்களும் சொல்லப்பட்டாலும் புத்தமும், சமணமும் கடவுள் கொள்கையிலிருந்து சைவத்திற்கும், வைணவத்திற்கும் மாறாக இருக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.
சிலம்பில் குணவாயிற்கோட்டம் என்பதற்கு அருகன்கோயில் என்று அடியார்க்கு மதக்கொள்கைகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துக் கூறியிருத்தலாலும் இளங்கோவடிகளின் சமயம் சமணசமயம் என ஐயுற இடம் உண்டு''
என்று உ.வே.சாமிநாதையர் அவர்கள் கூறுவதாக டி.மகாலெட்சுமி தனது சிலப்பதிகார ஆய்வுகள் ஓர் ஒப்பாய்வு என்னும் நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் ''செங்குட்டுவன் சைவன்'' என்பதை இளங்கோவடிகளே கூறியுள்ளமையைச் சுட்டிச் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் சைவரே என்று தோன்றுகிறது என்பார் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை.
இவ்வாறு இளங்கோவடிகளின் சமயத்தைப் பல்வேறு ஊகித்தறியப் பல்வேறு சான்றுகள் சிலம்பில் இருந்தாலும், சமயம் சார்பாக அவர் சொல்லிச் சென்ற அறக்கருத்துக்கள் கூர்ந்து நோக்கத்தக்கன.
''தெய்வம் தெளிமின்'' என்ற கருத்தின் மூலம் தெய்வம் இருக்கிறதா? எவ்வாறு இருக்கிறது? உலகத்தை இந்த உயிர்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற நோக்குடன் தெளிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.
சிலப்பதிகாரம் சமண சமயக்காப்பியம் எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் அதிகம். கவுந்தியடிகள் மூலம்,
''காமுறு தெய்வம் கண்டடிபணிய
நீ போ யாங்களும் நீள் நெறிப்படர்குதும்'' என்னும் வரிமூலம் வைணவக்கடவுளை வசைபாடுவதாக எடுத்துக்கொண்டால் தெய்வத்தைத் தெளிந்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறாரே தவிர தெய்வம் உண்டெனத் தெளிவு கொள்ளுங்கள் எனப் பொருள் கொள்வது தவறாகப்படுகிறது.
ஒரு மனிதனுடைய வாழ்வியற் போராட்டங்கள் அவன் முற்பிறவியில் செய்த கருமப் பயனைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. எனவே தான் தன்னை விட்டுப்பிரிந்து சென்ற கோவலனை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் கண்ணகி அமைதியாகவே இருந்துவிடுகிறாள். இங்குத் தம் தோழியின் துயர் தாங்காமல்
''சோமகுண்டம், சூரிய குண்டம், துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்''
என்று கூறித் தேவந்தி கண்ணகிக்கு ஆறுதல் கூறிச் சோமகுண்ட, சூரிய குண்டங்களில் நீராடிக் காமவேள் கோட்டம் தொழ அழைக்கிறாள்.
ஆனால் கண்ணகி, ''பீடன்று'' என்று கூறி மறுத்து விடுகிறாள். அதன்பின் சோமகுண்டம், சூரிய குண்டங்களில் நீராடாமலேயே காமவேள் கோட்டம் தொழாமலேயே, கோவலன் திரும்பியும் வருகிறான். இதன்மூலம் ஒரு மனிதனுடைய ஒவ்வொரு செயலும் முற்பிறவியிலேயே முடிவு செய்யப்பட்ட அவனது கருமச் செயலாலேயே நடக்கின்றது என்ற சமண சமயத்துக் கருத்தை இங்கு வற்புறுத்திக் கூறுகிறார்.
சமண சமயம், கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத சமயம். கடவுளின் பெயரால் நிகழ்த்தப்படுகின்ற உயிர்க் கொலைகளையும் புறப்பாலாகிய வேற்றுமைகளையும் அடிப்படையாகக் கொண்டு சமணமும், புத்தமும் கடவுள் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றன.
இவ்வாறு சமண சமயக் கருத்துக்களையும், சைவ சமயக் கருத்துக்களையும் மாறி மாறி மிகுதியாகச் சொல்லிச் செல்வதால்
''இளங்கோவடிகள் சைவராகப்
பிறந்து சமணராக மாறியிருக்கலாம்''
என்று மு.சண்முகன் அவர்கள் கூறுவதாகச் சிலப்பதிகார ஆய்வுகள் ஓர் ஒப்பாய்வு என்னும் நூலில் டி.மகாலெட்சுமி குறிப்பிடுகிறார்.
சமண சமயக் கருத்துக்களைப் பரப்பக் கவுந்தியடிகளைப் படைத்ததைப் போல வைணவ சமயத்தின் சிறப்புக்களைச் சொல்வதற்கென்று மாங்கட்டு மறையோனையும் இடைக்குலப் பெண்களையும் காப்பியத்துள் கொண்டு வருகிறார்.
முல்லை நிலத் தெய்வமாக மட்டுமே தமிழர்க்கு அறிமுகமாயிருந்த திருமால் சிலம்பில் ஒரு மதத் தெய்வமாகவே காட்டப்படுகிறார்.
கோவலன், கண்ணகி இருவரும் மதுரை நோக்கிச் செல்லும் பொழுது நீர் அருந்தச் சென்ற கோவலனிடம் அக்கானகத்தில் உலவும் வானசாரிணி தெய்வம் வயந்தமாலையின் வடிவிலே தோன்றி, கோவலன் மாதவிமேல் உள்ள அன்பினால் இசைவான் என எண்ணி வயந்தமாலையின் உருவில் கோவலனை மயக்கும் பொருட்டு உருமாறித் தோற்றம் கண்டது. கோவலன் அவ்வனசாரிணியைச் செயலிழக்க வைக்கிறான்.
மாங்காட்டு மறையோன் திருமாலின் பெருமைகளைச் சிறப்பாகப் பேசுகிறான். சமண சமயச் சிறப்புக்களை எடுத்துக் கூற கவுந்தியைப் போன்றும், மாடலனைப் போன்றும், இங்கு மாங்காட்டு மறையோன் போன்ற மூன்று வழிகளைப் பற்றி எடுத்துரைக்கிறான்.
மேலும் அவ்வழிப் பயணத்தில் இருக்கின்ற புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று தடாகத்தின் சிறப்புக்களையும் அதனால் கிடைக்கும் அருளையும் சைவ சமயத்து அறக்கருத்தாக அவன் மூலம் எடுத்துக் கூறுகிறான்.
இதே போன்று வேட்டுவ வரியில் தெய்வ மேறப் பெற்ற பெண்ணொருத்தி கொற்றவைக் கோலத்துடன்,
''இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி
தென்றமிழ்ப்பாவை செய்தவக்கொழுந்து
ஒருமா மணிஆய், உலகிற்கு ஓங்கிய
திருமாமணி''
என்று கூறிக் கண்ணகியைத் தெய்வ நிலைக்கு உயர்த்துகிறாள்.
மற்றொரு நிகழ்ச்சியாக மதுரை மாநகரில் அழற்படுகாதையில் கண்ணகிக்கு முன்னால் மதுராபதித் தெய்வம் தோன்றி நான் மதுரையின் காவல் தெய்வம் என்று கூறிக் கண்ணகிக்கு முன்னால் வந்து நின்று மதுரையைப் பற்றிய செய்தியையும் பாண்டிய மன்னர்களின் பெருமையையும் எடுத்துக் கூறி கண்ணகி கோவலனுடைய முன்பிறப்புச் செய்தியையும் விளக்குகிறது. மேலும் கண்ணகியின் சினத்தைத் தணித்து மதுரையை எரிக்கும் அனலை அணைக்கக் கேட்கிறது. இங்கு மதுராபதித் தெய்வம் மதுரையின் காவல் தெய்வம், கண்ணகியைக் கேட்காமல் நெருப்பை அணைத்திருக்க முடியும்.
ஆய்ச்சியர் குரவையில் திருமாலைப்பற்றிய சிறப்புக்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. திருமால் உலகளந்த வரலாறு, கடல் கடைந்த வரலாறு, பிறப்பு வளர்ப்பு வரலாறு, கம்சனை வென்ற நிலை, சேர அரசனை அழித்த வரலாறு, அர்ச்சுனனுக்கு உதவ கதிர் மறைத்த வரலாறு, பஞ்சபாண்டவர்க்குத் தூது சென்ற வரலாறு போன்ற பல்வேறு வரலாறுகள் காட்டப்படுகின்றன.
முருகன் சூரனாகிய மாமரம் பிளந்தமை, அவுணரை அழித்தமை, சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்டிரிடம் பால் பெற்று உண்டமை போன்ற முருகனைப் பற்றிய பல்வேறு செய்திகள் குன்றக் குரவையிலும், காட்சிக் காதையிலும் அதிகமாக இடம் பெறுகின்றன.
சிலம்பில் செஞ்சடைக்கடவுளான சிவபெருமானும் செஞ்சடை வானவன், பிறவாயாக்கைப் பெரியோன், நிலவுக்கதிர் முடித்த நீலிருஞ்சென்னி, உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் என்றெல்லாம் குறிக்கப்பட்டு அவன் ஆடுகின்ற கொடுகொட்டி, பாண்டரங்கள் ஆகிய கூத்து வகைகளும், மதியினைப் சூடியமை நஞ்சுண்டகண்டம் கருத்தமை, சூலாயிரம் ஏந்தியமை போன்ற தோற்றப் பொலிவுகளும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளாகச் சிலம்பில் காணப்படுகின்றன.
இயற்கை வழிபாடு, பத்தினி வழிபாடு, திருமால் வழிபாடு, முருக வழிபாடு, இந்திர வழிபாடு, சிவபெருமான் வழிபாடு, அருகன் வழிபாடு, புத்த தேவன் வழிபாடு, கொற்றவை வழிபாடு, எனப் பல்வேறு சமயக்கடவுள்களையும் குறிப்பிடுகின்றது.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எந்தச் சமயத்தையும் சார்ந்து நிற்கவில்லை என்றாலும் எல்லாச் சமயத்தையும் கூறித்தாம் வற்புறுத்த நினைக்கின்ற அனைத்து அறக் கருத்துக்களையும் அச்சமயங்களின் போக்கிலேயே நின்று மக்களுக்கு விளக்கிக் கூறுகிறார். ஏனென்றால் மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு சமயங்களுக்கு மிகுதியாகவே இருக்கிறது.
எனவே தான் அடிகள் மக்களுக்குத் தாம் கூறவந்த அறக்கருத்துக்களைச் சமயக் கருத்துக்களின் மீது ஏற்றிச் சொல்கிறார்.
தவநெறிமேற்கொள்ளுங்கள்:
சிலப்பதிகாரத்தில் அணைத்துப் பாத்திரங்களுமே தவப்பெரியோர்களால் தான் வழி நடத்திச் செல்லப்படுகின்றன. புகார் நகரை விடுத்து இழந்த பொருளை மீட்கும் நோக்கோடு மதுரை நோக்கிச் செல்லும் கோவலனும், கண்ணகியும் கவுந்தியடிகள் என்னும் சமண சமயத்துத் தவப் பெரியோர்களால்தான் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள்.
வைணவக் கருத்துக்களை மிகுதியாகப் பேசுகின்ற தவப் பெரியோனாகிய மாங்காட்டு மறையோன் இடம் பெறுகிறான். வஞ்சிக்காண்டம் முழுவதிலும் சேரன் செங்குட்டுவனும், மதுரைக்காண்டம் முழுவதிலும் மாடல மறையோனும் மிகச் சிறந்த சைவ பக்தர்களாக வருகின்றனர்.
சிலப்பதிகாரத்தில் சைவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு மாலமறையோன் வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு மாங்காட்டு மறையோன். வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு கவுந்தியடிகள், பத்தினிவழிபாடு பற்றிப் பேச ஒரு சேரன் செங்குட்டுவன் எனச் சமயக் கோட்பாடுகளை விளக்கிக் கூறும் சார்பாளர்கள் காப்பியம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். பல்வேறு சமயக் கருத்துக்களையும் அங்கீகரித்து நிற்கும் சமயப் பெருந்தன்மையைச் சிலப்பதிகாரம் முன் நிறுத்தியிருக்கிறது எனலாம்.
நன்றி: பிறதுறைத் தமிழியல்
சமயம் என்பது மனிதனால் அரிதாக உணரக்கூடியதாகும். ஆனால் எளிதாகப் புலப்படக்கூடியது இதைத் தான்
''இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை
நம்புவதுதான் சமயம் ஆகும்'' என்கிறது வாழ்வியற் களஞ்சியம்.
சிலப்பதிகார ஆசிரியர் சமயச் சார்புடையவர் என்றும் சமயச் சார்பு அற்றவர் என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களாலும் பல்வேறு கருத்துக்களாலும் விமர்சிக்கப்படுகிறார். காப்பியத்தின் கதைப்போக்கு சமயச் சார்பைச் சார்ந்து நிற்காவிட்டாலும், அவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்துதான் நிற்கின்றனர். ஏனென்றால் அன்புக்கு அடுத்தபடியாக மனிதனை அமைதிப்படுத்தி அவனது உணர்வுகளைப் பண்படுத்தும் சிறந்த கருவியாகச் சமயம் பயன்படுகிறது.
இவ்வாறு மனிதனின் நாகரீகமான வளர்ச்சியில் பங்கெடுத்து அவனுடைய வாழ்க்கைப் போரில் இரண்டறக் கலந்து அவனுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்ற சமயங்களைத் தொடாத இலக்கியவாதிகளே இல்லை எனக் கூறலாம்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் தம்மைச் சார்பற்றவராகவே காட்சி செல்கிறார். அதே வேளையில் சமயச் சார்பு என்ற போர்வையில் அறிவுக்குப் பொருந்தாத செயல்களையும் கண்டிக்கிறார். தமது காப்பியத்தின் முடிவான கூற்றில் அடிகள் சமயச் சார்பாக கூறிய அறக்கருத்துக்கள்,
1. தெய்வம் தெளிமின்
2. தவநெறி மேற்கொள்ளுங்கள் ஆகிய இரண்டும் ஆகும்.
தெய்வம் தெளிமின்
''இறைவனை அடிப்படையாகக் கொண்டது சமயம். மனிதனை அடிப்படையாகக் —‘கண்டது அறம். இருப்பினும் இறைவனை அறிவியலில் ஒரு முற்கோளாகக் கொள்வது பயனுடையது என்று கூறலாம்'' என வாழ்வியற் களஞ்சியம் கூறுகிறது.
''சிலம்பில், சைவம், வைணவம், சமணம், புத்தம் என்ற அனைத்து மதங்களும் சொல்லப்பட்டாலும் புத்தமும், சமணமும் கடவுள் கொள்கையிலிருந்து சைவத்திற்கும், வைணவத்திற்கும் மாறாக இருக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.
சிலம்பில் குணவாயிற்கோட்டம் என்பதற்கு அருகன்கோயில் என்று அடியார்க்கு மதக்கொள்கைகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துக் கூறியிருத்தலாலும் இளங்கோவடிகளின் சமயம் சமணசமயம் என ஐயுற இடம் உண்டு''
என்று உ.வே.சாமிநாதையர் அவர்கள் கூறுவதாக டி.மகாலெட்சுமி தனது சிலப்பதிகார ஆய்வுகள் ஓர் ஒப்பாய்வு என்னும் நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் ''செங்குட்டுவன் சைவன்'' என்பதை இளங்கோவடிகளே கூறியுள்ளமையைச் சுட்டிச் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் சைவரே என்று தோன்றுகிறது என்பார் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை.
இவ்வாறு இளங்கோவடிகளின் சமயத்தைப் பல்வேறு ஊகித்தறியப் பல்வேறு சான்றுகள் சிலம்பில் இருந்தாலும், சமயம் சார்பாக அவர் சொல்லிச் சென்ற அறக்கருத்துக்கள் கூர்ந்து நோக்கத்தக்கன.
''தெய்வம் தெளிமின்'' என்ற கருத்தின் மூலம் தெய்வம் இருக்கிறதா? எவ்வாறு இருக்கிறது? உலகத்தை இந்த உயிர்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற நோக்குடன் தெளிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.
சிலப்பதிகாரம் சமண சமயக்காப்பியம் எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் அதிகம். கவுந்தியடிகள் மூலம்,
''காமுறு தெய்வம் கண்டடிபணிய
நீ போ யாங்களும் நீள் நெறிப்படர்குதும்'' என்னும் வரிமூலம் வைணவக்கடவுளை வசைபாடுவதாக எடுத்துக்கொண்டால் தெய்வத்தைத் தெளிந்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறாரே தவிர தெய்வம் உண்டெனத் தெளிவு கொள்ளுங்கள் எனப் பொருள் கொள்வது தவறாகப்படுகிறது.
ஒரு மனிதனுடைய வாழ்வியற் போராட்டங்கள் அவன் முற்பிறவியில் செய்த கருமப் பயனைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. எனவே தான் தன்னை விட்டுப்பிரிந்து சென்ற கோவலனை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் கண்ணகி அமைதியாகவே இருந்துவிடுகிறாள். இங்குத் தம் தோழியின் துயர் தாங்காமல்
''சோமகுண்டம், சூரிய குண்டம், துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்''
என்று கூறித் தேவந்தி கண்ணகிக்கு ஆறுதல் கூறிச் சோமகுண்ட, சூரிய குண்டங்களில் நீராடிக் காமவேள் கோட்டம் தொழ அழைக்கிறாள்.
ஆனால் கண்ணகி, ''பீடன்று'' என்று கூறி மறுத்து விடுகிறாள். அதன்பின் சோமகுண்டம், சூரிய குண்டங்களில் நீராடாமலேயே காமவேள் கோட்டம் தொழாமலேயே, கோவலன் திரும்பியும் வருகிறான். இதன்மூலம் ஒரு மனிதனுடைய ஒவ்வொரு செயலும் முற்பிறவியிலேயே முடிவு செய்யப்பட்ட அவனது கருமச் செயலாலேயே நடக்கின்றது என்ற சமண சமயத்துக் கருத்தை இங்கு வற்புறுத்திக் கூறுகிறார்.
சமண சமயம், கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத சமயம். கடவுளின் பெயரால் நிகழ்த்தப்படுகின்ற உயிர்க் கொலைகளையும் புறப்பாலாகிய வேற்றுமைகளையும் அடிப்படையாகக் கொண்டு சமணமும், புத்தமும் கடவுள் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றன.
இவ்வாறு சமண சமயக் கருத்துக்களையும், சைவ சமயக் கருத்துக்களையும் மாறி மாறி மிகுதியாகச் சொல்லிச் செல்வதால்
''இளங்கோவடிகள் சைவராகப்
பிறந்து சமணராக மாறியிருக்கலாம்''
என்று மு.சண்முகன் அவர்கள் கூறுவதாகச் சிலப்பதிகார ஆய்வுகள் ஓர் ஒப்பாய்வு என்னும் நூலில் டி.மகாலெட்சுமி குறிப்பிடுகிறார்.
சமண சமயக் கருத்துக்களைப் பரப்பக் கவுந்தியடிகளைப் படைத்ததைப் போல வைணவ சமயத்தின் சிறப்புக்களைச் சொல்வதற்கென்று மாங்கட்டு மறையோனையும் இடைக்குலப் பெண்களையும் காப்பியத்துள் கொண்டு வருகிறார்.
முல்லை நிலத் தெய்வமாக மட்டுமே தமிழர்க்கு அறிமுகமாயிருந்த திருமால் சிலம்பில் ஒரு மதத் தெய்வமாகவே காட்டப்படுகிறார்.
கோவலன், கண்ணகி இருவரும் மதுரை நோக்கிச் செல்லும் பொழுது நீர் அருந்தச் சென்ற கோவலனிடம் அக்கானகத்தில் உலவும் வானசாரிணி தெய்வம் வயந்தமாலையின் வடிவிலே தோன்றி, கோவலன் மாதவிமேல் உள்ள அன்பினால் இசைவான் என எண்ணி வயந்தமாலையின் உருவில் கோவலனை மயக்கும் பொருட்டு உருமாறித் தோற்றம் கண்டது. கோவலன் அவ்வனசாரிணியைச் செயலிழக்க வைக்கிறான்.
மாங்காட்டு மறையோன் திருமாலின் பெருமைகளைச் சிறப்பாகப் பேசுகிறான். சமண சமயச் சிறப்புக்களை எடுத்துக் கூற கவுந்தியைப் போன்றும், மாடலனைப் போன்றும், இங்கு மாங்காட்டு மறையோன் போன்ற மூன்று வழிகளைப் பற்றி எடுத்துரைக்கிறான்.
மேலும் அவ்வழிப் பயணத்தில் இருக்கின்ற புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று தடாகத்தின் சிறப்புக்களையும் அதனால் கிடைக்கும் அருளையும் சைவ சமயத்து அறக்கருத்தாக அவன் மூலம் எடுத்துக் கூறுகிறான்.
இதே போன்று வேட்டுவ வரியில் தெய்வ மேறப் பெற்ற பெண்ணொருத்தி கொற்றவைக் கோலத்துடன்,
''இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி
தென்றமிழ்ப்பாவை செய்தவக்கொழுந்து
ஒருமா மணிஆய், உலகிற்கு ஓங்கிய
திருமாமணி''
என்று கூறிக் கண்ணகியைத் தெய்வ நிலைக்கு உயர்த்துகிறாள்.
மற்றொரு நிகழ்ச்சியாக மதுரை மாநகரில் அழற்படுகாதையில் கண்ணகிக்கு முன்னால் மதுராபதித் தெய்வம் தோன்றி நான் மதுரையின் காவல் தெய்வம் என்று கூறிக் கண்ணகிக்கு முன்னால் வந்து நின்று மதுரையைப் பற்றிய செய்தியையும் பாண்டிய மன்னர்களின் பெருமையையும் எடுத்துக் கூறி கண்ணகி கோவலனுடைய முன்பிறப்புச் செய்தியையும் விளக்குகிறது. மேலும் கண்ணகியின் சினத்தைத் தணித்து மதுரையை எரிக்கும் அனலை அணைக்கக் கேட்கிறது. இங்கு மதுராபதித் தெய்வம் மதுரையின் காவல் தெய்வம், கண்ணகியைக் கேட்காமல் நெருப்பை அணைத்திருக்க முடியும்.
ஆய்ச்சியர் குரவையில் திருமாலைப்பற்றிய சிறப்புக்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. திருமால் உலகளந்த வரலாறு, கடல் கடைந்த வரலாறு, பிறப்பு வளர்ப்பு வரலாறு, கம்சனை வென்ற நிலை, சேர அரசனை அழித்த வரலாறு, அர்ச்சுனனுக்கு உதவ கதிர் மறைத்த வரலாறு, பஞ்சபாண்டவர்க்குத் தூது சென்ற வரலாறு போன்ற பல்வேறு வரலாறுகள் காட்டப்படுகின்றன.
முருகன் சூரனாகிய மாமரம் பிளந்தமை, அவுணரை அழித்தமை, சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்டிரிடம் பால் பெற்று உண்டமை போன்ற முருகனைப் பற்றிய பல்வேறு செய்திகள் குன்றக் குரவையிலும், காட்சிக் காதையிலும் அதிகமாக இடம் பெறுகின்றன.
சிலம்பில் செஞ்சடைக்கடவுளான சிவபெருமானும் செஞ்சடை வானவன், பிறவாயாக்கைப் பெரியோன், நிலவுக்கதிர் முடித்த நீலிருஞ்சென்னி, உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் என்றெல்லாம் குறிக்கப்பட்டு அவன் ஆடுகின்ற கொடுகொட்டி, பாண்டரங்கள் ஆகிய கூத்து வகைகளும், மதியினைப் சூடியமை நஞ்சுண்டகண்டம் கருத்தமை, சூலாயிரம் ஏந்தியமை போன்ற தோற்றப் பொலிவுகளும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளாகச் சிலம்பில் காணப்படுகின்றன.
இயற்கை வழிபாடு, பத்தினி வழிபாடு, திருமால் வழிபாடு, முருக வழிபாடு, இந்திர வழிபாடு, சிவபெருமான் வழிபாடு, அருகன் வழிபாடு, புத்த தேவன் வழிபாடு, கொற்றவை வழிபாடு, எனப் பல்வேறு சமயக்கடவுள்களையும் குறிப்பிடுகின்றது.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எந்தச் சமயத்தையும் சார்ந்து நிற்கவில்லை என்றாலும் எல்லாச் சமயத்தையும் கூறித்தாம் வற்புறுத்த நினைக்கின்ற அனைத்து அறக் கருத்துக்களையும் அச்சமயங்களின் போக்கிலேயே நின்று மக்களுக்கு விளக்கிக் கூறுகிறார். ஏனென்றால் மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு சமயங்களுக்கு மிகுதியாகவே இருக்கிறது.
எனவே தான் அடிகள் மக்களுக்குத் தாம் கூறவந்த அறக்கருத்துக்களைச் சமயக் கருத்துக்களின் மீது ஏற்றிச் சொல்கிறார்.
தவநெறிமேற்கொள்ளுங்கள்:
சிலப்பதிகாரத்தில் அணைத்துப் பாத்திரங்களுமே தவப்பெரியோர்களால் தான் வழி நடத்திச் செல்லப்படுகின்றன. புகார் நகரை விடுத்து இழந்த பொருளை மீட்கும் நோக்கோடு மதுரை நோக்கிச் செல்லும் கோவலனும், கண்ணகியும் கவுந்தியடிகள் என்னும் சமண சமயத்துத் தவப் பெரியோர்களால்தான் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள்.
வைணவக் கருத்துக்களை மிகுதியாகப் பேசுகின்ற தவப் பெரியோனாகிய மாங்காட்டு மறையோன் இடம் பெறுகிறான். வஞ்சிக்காண்டம் முழுவதிலும் சேரன் செங்குட்டுவனும், மதுரைக்காண்டம் முழுவதிலும் மாடல மறையோனும் மிகச் சிறந்த சைவ பக்தர்களாக வருகின்றனர்.
சிலப்பதிகாரத்தில் சைவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு மாலமறையோன் வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு மாங்காட்டு மறையோன். வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு கவுந்தியடிகள், பத்தினிவழிபாடு பற்றிப் பேச ஒரு சேரன் செங்குட்டுவன் எனச் சமயக் கோட்பாடுகளை விளக்கிக் கூறும் சார்பாளர்கள் காப்பியம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். பல்வேறு சமயக் கருத்துக்களையும் அங்கீகரித்து நிற்கும் சமயப் பெருந்தன்மையைச் சிலப்பதிகாரம் முன் நிறுத்தியிருக்கிறது எனலாம்.
நன்றி: பிறதுறைத் தமிழியல்
சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகள் - டாக்டர். கு. கதிரேசன்
தமிழர் பண்பாட்டில் வழிபாட்டினை தெய்வங்கள், அவற்றின் இயல்வுகளின் அடிப்டையில் குலதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வவழிபாடு சிறுதெய்வ வழிபாடு , பெருந்தெய்வழிபாடு என நான்கு நிலைகளில் வகைப்படுத்தலாம், குலதெய்வமாக வழிபடப்பட்ட ஒரு தெய்வம் காலப்போக்கில் ஊர் தெய்வமாகவோ சிறு தெய்வமாகவோ பெருந்தெய்வமாகவோ வழிபடப்படும் வளர்ச்சிப் பரிணாமத்தை ஆய்வுப்பூர்வமாக நிறுவலாம். சிறு தெய்வங்கள் என்பவை ஒரு கிராமத்தாராலோ பல கிராமத்தாராவோ அம்மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் பண்பாட்டுக் கூறுகளுடன் வழிபடப்படுபவையாகும். ஒரு சில ஊர்த்தெய்வமாக வளரலாம். பல சிறு தெய்வங்களாகப் பரிணாமம் பெறலாம். ஆயினும் இவை உள்ளீடு அடிப்படையில் ஒரே இயல்புடையவை எனவே இம்மூவகைத் தெய்வங்களும் சிறு தெய்வங்கள் என்றே வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேல் சிறு தெய்வங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர், இத் தெய்வங்களில் அம்மன், ஐயனார், சுடலைமாடன், பிரம்மசக்தி பத்திரகாளி, இசக்கியம்மன் முதலியவை தென்மாவட்டப் பகுதிகளில் பெரும்பான்மையாக வழிபடப்படுகின்றன. இக்கோயில்களில் நிகழ்த்தப்படும் சிறப்பு வழிபாடுகளில் திருக்கார்த்திகை தீபவிழாவும் ஒன்று. இவ்விழாவில் பல நம்பிக்கை அடிப்படைச் சடங்குகளை மேற்கொள்வதைக் கள ஆய்வின் மூலம் அறியலாம். அகல் விளக்கு தீபமேற்றி பல்வேறு பொருட்களைப் படைத்து, பகுத்துண்டு மகிழ்கின்றனர். இத்தகைய தீப வழிபாடும் சடங்களும் ''வளமை நோக்க அடிப்படை நிகழ்வுகளாகும். இவை காலம் காலமாகத் தொடர்ந்து மக்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பதிவு பெறாத வழக்காறுகளின் சாசனங்கள் ஆகும். பொதுவாக இவ்வழிபாடு அவரவர் வீடுகளிலும் நிகழ்த்துவதுண்டு. கோயில்களிலும் சிறப்பு வழிபாடாக அமைவதுண்டு. எனவே கார்த்திகை தீப வழிபாடு சிறுதெய்வக் கோயில்களில் பெறும் இடம் யாது? இதில் வளமை நோக்கச் சடங்குகள் எவ்வாறு பரிணமிக்கின்றன? மக்கள் பண்பாட்டை அவை எவ்வாறு உணர்த்துகின்றன? என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுறையின் நோக்கம்.
இந்து சமயத்திற்கும் தீபத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ''தீ''பமே இவ்விழா வழிபாட்டிற்கும் அடிப்படையாக அமைகிறது . கார்த்திகை மாதமும் அதில் வரும் கார்த்திகை நட்சத்திரமும் இந்து சமயக் கடவுளான முருக வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. முருகன் ஆறு குழந்தைகளாக இருந்த நிலையில் கார்த்திகைப் பெண்களே அவனை வளர்த்தனர் என்றும் பின்பு அவர்கள் விண்மீன்களாக மாறி ஒளி கொடுத்தனர் என்றும் சுந்தரபுராணம் கூறுகிறது. எனவே தமிழ்க்கடவுளாக முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்ணை குறிக்கும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்ததிரத்தன்று நோன்பும், சிறந்த வழிபாடும் கொண்டாட்டமும் நிகழ்த்தப்படுகின்றன. பெண்கள் அவரவர் வீடுகளில் விரதமிருந்து வழிபாடு செய்து விரதத்தை முறிக்கின்றனர். மேலும் அயனும் மாலும் அறியமுடியாதவாறு சிவபெருமான் நெருப்புத்தூணாக நீண்டு நின்ற நாள் அது. இந்நெருப்பை உணர்த்தும் குறியீடாக தீபம் எடுத்தாளப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழர்கள் கார்த்திகை தீபத்தை ''திரு'' அடைமொழியாக சேர்த்து மிகச் சிறந்த வழிபாடாகக் கொண்டாடி வருகின்றனர்
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் என்று முழுவதும் தென் மாவட்டத்து மக்கள் குறிப்பாகப் பெண்கள் உண்ணாநோன்புவிருக்கின்றனர். நீர்ம உணவை மட்டுமே உட்கொள்கின்றனர். வீடுகளைக் சுத்தம் செய்து மஞ்சள், பச்சரிசி ஆகியவற்றை இடிததுத் தயாரித்த கலவையில் நிலை, கதவு, ஜன்னல் மற்றும் படிக்கட்டுகளில் நட்சத்திரங்கள் பொறித்து குங்குமம் வைக்கின்றனா. இதற்காக ஆமணக்கு, பப்பாளி ஆகிய தாவரங்களின் இலையை பயன்படுத்துவர். இலை தண்டோடு இணைத்துள்ள நரம்புகள தன்மைக்கேற்ப நட்சத்திரங்கள் அமைகின்றன. மாலை மயங்கும் நேரத்தில் மண்ணால் செய்யப்பட்ட சியி அகல்விளக்குகளில் எண்ணெய் திரியிட்டு தீபம் ஏற்றி வாயில்களிலும் சுற்றுப்புறங்களிலும் மதிற்சுவர்களிலும் வைத்து அழகுபடுத்துகின்றனர். பலர் அகல்விளக்குக்குப் பதிலாக மெழுகுவர்த்திகளை ஏற்றி அழுகுபடுத்தும் வழக்கம் காணப்படுகிறது. தற்காலத்தில் பொருளாதார நிலைக்கேற்ப சிறிய அலங்கார சரமின்விளக்குகளைப் போட்டு அழகுபடுத்துவதும் உண்டு. பின், பச்சரிசி, பாசிப்பயறு, தேங்காய், வெல்லம், ஏலக்காய், முந்திரி ஆகியவை கொண்டு பனை ஓலை ''கொழுக்கட்டை தயாரித்து அதனைப் கடவுளர்களுக்குப் படைத்து தீபம் ஏற்றி வழிபட்டு பகுத்துண்டு மகிழும் வழககம் காணப்படுகிறது 10 முதல் 15செ.மீ நீளம் கொண்டதாக மாவை உருட்டி பனை ஓலையில் வைத்து நீராவியில் வேகவைப்பதால் ''பனை ஓலை கொழுக்கட்டை எனப்படுகிறது.
கொழுக்கட்டைக்கான பொருட்கள் பெரும்பாலும் அவரவர் விளை நிலங்களில் கிடைத்த பொருளாக அமைய வேண்டும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்த பொருள் என்பதனால் அது விரும்பிப் படைக்கப்படுகிறது. ஆயின் உளவியல் அணுகுமுறையில் பார்க்கும்பொழுது இது ஒரு வளமைக் குறியூடு ஆகும். ஒலைக் கொழுக்கட்டையின் அமைப்பையும் அதன உருவாக்கச் சூழலையும் பின்புலத்தையும் ஆராயும் பொழுது அது அவர்கள் அடிமனத்தில் பதிந்திருக்கும் பாலியல் உணர்வுகளின் பிரதிபலிப்புக்ள் என்று கொள்ள வாய்ப்பேற்படுகிறது. அதோடு தங்கள் நிலத்தில் கிடைத்த விளைபொருட்களை கொழுக்கட்டையாக செய்து படைப்பதும் பகுத்து உண்பதும் முழுமையான வளமைச் சடங்கின் வழி வந்த வழக்காறு என்று கொள்ளலாம்.
அதோடு நோன்பு மேற்கொள்வதும் மஞ்சள், பச்சரிசி கலவையினால் நட்சத்திரக்குறி பொறித்து குங்குமம் இடுவதும் அகல் விளக்கினால் அலங்கரிப்பதும் தீபம் ஏற்றி அதை வழிபடுவதும் முழுமையான வளமைச் சடங்குகள் ஆகும். இவை அம்மக்களின் வளமை நோக்கச் சிந்தனைகளின் பிரதிபலிப்பே எனலாம்.
மேலும் சிறுவர்கள் சூரிய அஸ்தமத்திற்குப் பின், காய்ந்த பனை தென்னை ஆகியவற்றின் ஓலை வாழை சருகு ஆயிவற்றினால் செய்த தீப்பந்தங்களைக் கையில் ஏந்தி தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இதனால் இருளில் பதுங்கியிருக்ககும் பேய்கள் விலகி ஒடுகின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஊரைச் சுற்றிலும் உள்ள எல்லைப்புற சிறு தெய்வங்களான அம்மன், ஐயனார், பத்திரக்காளி, பிரம்மசக்தி, கடலைமாடன், இசக்கியம்மன் முதவியவற்றின் கோயில்களின் முன் தீப்பந்தங்களை நட்டு பாடி, ஆடி குரலையிட்டு அரவாரம் செய்து மகிழ்வதுண்டு.
சூவே....சூ
கார்த்திகை மாதம் வந்தது
கான மழை பொழிஞ்சது
கார்த்திகை தீபம் வந்தது
காத்து கருப்பு ஒழிஞ்சது
கழனி விதைச்சி முடிஞ்சது
காடு மேடும் விளைஞ்சது
சூவே....சூ
(ஆறுமுகம் : முதுமொத்தன் மொழி)
என்ற பாடல் அடிகள் மூலம், வளம் பெறுவதையும் பேய்கள் விலகுவதையும் விரும்பிச் செய்யும் சடங்கு இது என்பது புலனாகிறது. தீப்பந்தத்தை ''சூ..'' என்று அழைக்கும் மரபு காணப்படுகிறது. ''சூ..'' என்பது ஒரு உயிரினத்தை விரட்டி ஓட்டுவதற்குத் தென்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஒலிவடிவம் ஆகும். இங்கு இருளையும் அதற்குக் குறியீடாக உள்ள பேய்களையும் விரட்டும் நோக்கிலேயே ''சூ'' என்ற ஒலி வடிவம் பயன்படுத்தப்டுகிது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வழக்காறு முழுமையான வளமைச் சடங்கு என்பதை மேற்குறித்த பாடல் தெளிவாக்குகிறது. இவ்வாறு வழிபடப்படும் தெய்வங்களும் வளமைத் தெய்வங்களே. இத் தீப்பந்த நடுதல் வழிபாடு சங்கககாலவழக்காறுகளான நடுகல், வேல் மற்றும் கேடயங்களை நிறுத்துதல், கழுவேற்றுதல், வெற்றி மரங்களை நாட்டல் முதலிய பண்பாட்டு மரபுகளோடு தொடர்புடையது. இவ்வழக்காறுகள் அனைத்தும் ஒன்றிருந்து பரிணமித்ததாகவே இருக்கவேண்டும்.
''பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுதல்''
வேலூன்றி பலகை வேற்றுமுனை கடுக்கும்'' என்னும்
அகநானுற்று (131) அடிகளும்
''பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லாயினையே கடுமான் தோற்றல்'' என்னும் புறநானுற்று (264)
அடிகளும் நடுகல் வழக்காற்றை உணர்த்தும் சான்றுகள் ஆகும். தீப்பந்தங்களை ஏந்துவது யா‘? என்ற போட்டி நிலவுவதும் இதன் பொருட் பல நாட்களுக்கு முன்பே தீப்பந்தம் தயாரிக்கத் தொடங்கிவிடுவதும் மேற்குறிப்பிட்ட கருத்தை உறுதி செய்கின்றன. தற்காலத்தில் தீப்பந்தங்களுக்குப் பதிலாக சைக்கிள் டயர், டியூப்களைக் கொழுத்தும் வழக்கு பெருகி வருகிறது. பயன்படு பொருட்கள் மாறினும் ''தீ'' என்னும் மையப் பொருள் மாறவில்லை. எனவே நெருப்பை கார்த்திகை தீபத்தின் மையப் பொருளாகக் கொண்டு வழிபடும் பண்பாட்டு மரபை இனம் காணமுடிகிறது. சில கிராமங்களில் சிறுவர்கள் கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்திற்குத் தீப்பந்தம் நட்டு வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை தீபநாள் மட்டும் எல்லா கோயில்களையும் வழிபட வேண்டும் என்பது நியதி. இரவு அடர்ந்திருக்கும் இருளை அகற்றி ஒளியைக் கொடுக்கும் இவ்வழக்காறு பசியையும் பஞ்சத்தையும் போக்கி வறுமையை விரட்டி வளத்தை நிலை நாட்டும் மக்களின் அடிமன உணர்வின் வெளிப்பாடகவே இருக்க முடியும். இச்சடங்கின் போது தீப்பந்தம் ஏந்தும் இளைஞர்களின் அகமும் முகமும் சுடர் போன்று பிரகாசமாக இருப்பதை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால் அவர்கள் உள்ளம் ஒளியை விரும்புகிறது. வளத்தை நாடுகிறது என்ற உண்மையை இனம் காணமுடியும்.
மேலும் சிறுதெய்வக் கோயில்களின் முன்போ ஊரின் பொதுஇடத்திலோ ''சொக்கப்பனை'' என்னும் ஒருவகை மிகப்பெரிய தீப்பந்தத்தை நாட்டி அதற்கு மாலையிட்டு தோங்காய் பழம் படையலிட்டு பூசை செய்து தீயிட்டு மகிழும் வழக்காறு இன்னும் காணப்படுகிறது. இதில் இடம் பெறும் சடங்குகள் அம்மக்களின் வாழ்வியலையும் வலிமை நோக்கப் படிமங்களையும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கின்றன. எனவே விநோதமான இச்சடங்கினைப் பதிவு செய்தும் அதில் ஊடுருவியிருக்கும் நம்பிக்கைகளை ஆராய்வதும் மிக இன்றியமையாதது தமிழர்களின் சிறுதெய்வ வழிபாட்டில் மிகப் பெரிய அங்கமான மர வழிபாட்டை இங்கு ஒப்பு நோக்குவது அவசியம். அரசு, ஆல், வேம்பு, பனை, பூவரசு, வேங்கை, அத்தி, வில்வம், வன்னி உள்ளிட்ட பல மரங்களைத் தெய்வம் உறைந்திருக்கும் இடமாக கொண்டு மாலையிட்டு படையல் வைத்து பூசிக்கும் மரபை இன்றும் காணமுடிகிறது. மேலும் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மரத்தையும் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கநிற மலர்களைத் தரும் குடைப்பனை மரத்தையும் மிகவும் புனிதமான மரங்களாக எண்ணி வழிபடும் வழக்காறை இங்கு பொருத்திப் பார்ப்பது அவசியம். குடைப்பனை மரம் பூத்துக்குலுங்குவதைக் காண்பது மிக அரிது என்பதால் அது சிறப்பிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பெருந்தெய்வக் கோயில்களில் கொடிமரம் ஒன்று வைத்து கொடியேற்றப் படுவதும் சிறுதெய்வக் கோயில்களில் ''பந்தல்கால் நடுதல்'' என்று ஒரு மூங்கில் களையில் வேப்பிலை மாவிலை, மஞ்சள், பூ ஆகியவற்றைக் கட்டி அதனை விழா முடியும் வரைப் பாதுகாப்பதும் யாவரும் அறிந்த வழக்காறுகள் ஆகும். திருமண வீடுகளிலும் முகூர்த்தக் கால் என்ற பெயரிலும் புதிய வீடு அமைப்போர் கால் நடுதல், நிலையிடுதல் என்ற பெயரிலும் மரங்களை நாட்டி அதனைப் புனிதமாக எண்ணி வழிபட்டு வருகின்றனர் எனவே மரம் நடுவதும் அதனை வழிபடுவதும் தமிழர் பண்பாட்டில் சமய நம்பிக்கை அடிப்படைச் சடங்காக இருந்து வருகிறது. இந்த பின்னணியிலேயே திருக்கார்த்திகை தீபநாள் அன்று கோயில்களின் முன் பொது இடத்தில் ''சொக்கப்பனை'' என்ற மிக உயர்ந்த தீப்பந்தத்தை நாட்டி வழிபடுவதை எண்ணிப் பார்க்க முடிகிறது.
சொக்கப்பனை என்பது உயரமான பப்பாளி மரத்தை வெட்டியெடுத்து அதனைச்சுற்றி பனை, தென்னை ஆகியவற்றின் காய்ந்த ஓலை, வாழை சருகுகளால் அடர்த்தியாகக் கட்டப்படுவதாகும். இதனைக் கோயில் முன்னோ, ஊர் பொது இடத்திலோ நாட்டி அதற்குரிய வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டு நுனிப்பகுதியில் தீ வைத்து எரிய விடுவர். தீ எரியத் தொடங்கியவுடன் ஏற்படும் ஒளியுடன் மக்கள் முகத்தில் தோன்றும் ஒளி ஒப்பு நோக்கத் தக்கது. இது மக்களின் வளர்ச்சிப் படிநிலை மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாகும். இது உயரமாகப் பனைபோன்று காணப்படுவதால் இதற்குச் ''சொக்கப்பனை'' என்று பெயர் வந்திருக்கலாம். எரிந்த முடிந்தபின் எஞ்சிநிற்கும் பப்பாளி மரத்தின் அடிப்பகுதியில் சுற்றிலும் வெட்டுகின்றனர். இந்நிலையில் மக்கள் தெய்வங்களை நினைத்து வணங்கி கன்னத்தில் போட்டுக்கொள்வதைக் காணலாம். வெட்டப்பட்ட பப்பாளிமரம் எந்தத் திசையில் விழுகிறது? என்பதைப் பொறுத்து அந்த ஆண்டு நன்மையோ, தீமையோ, இன்பமோ, துன்பமோ, வளமோ, வறுமையோ ஏற்படும் என்று நம்பிக்கையே அதற்கு காரணம். வெட்டப்ட்ட பப்பாளிமரம் கிழக்கு திசையில் விழுந்தால்மிகவும் நல்லது. அவ்வாண்டு நல்ல மழையும் விளைச்சலும் கிடைக்கும். வடக்கு திசையில் விழுந்தால் வறுமையும் மேற்குத் திசையில் விழுந்தால் குறைவான மழையும், தெற்குத் திசையில் விழுந்தால் நல்ல மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. எனவே பெரும்பாலும் கிழக்கு திசையில் சொக்கப்பனை விழ வேண்டும் என்றே விரும்புகின்றனர். தெற்குத் திசையில் விழுவதை மீனவர்கள் தவிர பிறர் விரும்புவதில்லை. பொதுவாகவே கிழக்கு திசையை எல்லா சிறு தெய்வ வழிபாட்டோடும், சூரிய உதயத்தோடும் வளமை நோக்கில் சிறப்பித்துக் கூறும் மரபைக் காணமுடிகிறது. கோயில்கள் கட்டிடங்கள் வீடுகள் அனைத்தும் கிழக்கு நோக்கி இருப்பதே சிறப்பு என்று மனையடி சாஸ்த்திரம் கூறுகிறது. கிழக்கு திசை வளர்ச்சி வளம் முதலிய கருத்தோட்டங்களின் பின்னணியில் சிறப்பிக்கப்படுவதால் சொக்கப்பனையும் கிழக்கு திசை நோக்கி விழுவதையே சிறப்பாகக் கருதுகின்றனர். இவ்வாறு விழுந்தால் மக்கள் மனம் பூரிப்போடும் பிற திசைகளில் விழுந்தால் மனச்சஞ்சலத்தோடு மாறி தெய்வக்குறையே இதற்குக் காரணம் என்றும் நம்புகின்றனர்
சொக்கப்பனை எரியும் பொழுது கிராமம் முழுமையும் மண்டியிருக்கும் இருள் அகன்று ஒளி கிடைக்கிறது. துன்பம் நீங்கி இன்பம் தளைக்கிறது. எங்கும் வளம் பெருகும் உயர்ந்த சிந்தனை குடிகொள்கிறது சிவபெருமான் நெருப்புத்து‘ணாக உயர்ந்த நின்ற தன்மையை உணர்த்த சொக்கப்பனை எடுத்தாளப்படுகிறது. எனவே சொக்கப்பனை சிவபெருமான் நெருப்பத்து‘ணாக உயர்ந்து நின்று தொன்மத்தின் படிமமாக வெளிப்படுவதை அறியலாம். சிவபெருமான் அதன் மூலம் இந்த உலகிற்கே ஒளி கொடுப்பதும் சொக்கப்பனை அந்த ஊருக்கே ஒளி கொடுப்பதும் உள்ளீடு அடிப்படையில் ஒரே இயல்புடையவை என்பது அறியத்தக்கது.
எனவே சிறுதெய்வக் கோயில்களில் நிகழ்த்தப் பெறும் திருக்கார்த்திகை தீப வழிபாடும் நம்பிக்கைகளும், சடங்குகளும் முற்றிலும் வளமையை அடிப்படையாகக் கொண்டு, மக்களைப் பற்றி மக்களால் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுச் சின்னங்களே ஆகும். இவ்விழாவில் வழிபடப்படும் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், பயன்படு பொருட்கள், பண்பாட்டு மரபுகள், வழக்காறுகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் வளமைப் படிமங்களோடு தொடர்புடையவையே. எனவே கார்த்திகை தீபம் ஒரு முழுமையான வளமைச் சடங்கு விழாவாகும். அதனால் அவற்றில் மக்களின் பண்பாட்டு மரபுகளையும் வாழ்வியல் யதார்த்தங்களையும் இனம் காண முடிகிறது..
இந்து சமயத்திற்கும் தீபத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ''தீ''பமே இவ்விழா வழிபாட்டிற்கும் அடிப்படையாக அமைகிறது . கார்த்திகை மாதமும் அதில் வரும் கார்த்திகை நட்சத்திரமும் இந்து சமயக் கடவுளான முருக வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. முருகன் ஆறு குழந்தைகளாக இருந்த நிலையில் கார்த்திகைப் பெண்களே அவனை வளர்த்தனர் என்றும் பின்பு அவர்கள் விண்மீன்களாக மாறி ஒளி கொடுத்தனர் என்றும் சுந்தரபுராணம் கூறுகிறது. எனவே தமிழ்க்கடவுளாக முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்ணை குறிக்கும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்ததிரத்தன்று நோன்பும், சிறந்த வழிபாடும் கொண்டாட்டமும் நிகழ்த்தப்படுகின்றன. பெண்கள் அவரவர் வீடுகளில் விரதமிருந்து வழிபாடு செய்து விரதத்தை முறிக்கின்றனர். மேலும் அயனும் மாலும் அறியமுடியாதவாறு சிவபெருமான் நெருப்புத்தூணாக நீண்டு நின்ற நாள் அது. இந்நெருப்பை உணர்த்தும் குறியீடாக தீபம் எடுத்தாளப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழர்கள் கார்த்திகை தீபத்தை ''திரு'' அடைமொழியாக சேர்த்து மிகச் சிறந்த வழிபாடாகக் கொண்டாடி வருகின்றனர்
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் என்று முழுவதும் தென் மாவட்டத்து மக்கள் குறிப்பாகப் பெண்கள் உண்ணாநோன்புவிருக்கின்றனர். நீர்ம உணவை மட்டுமே உட்கொள்கின்றனர். வீடுகளைக் சுத்தம் செய்து மஞ்சள், பச்சரிசி ஆகியவற்றை இடிததுத் தயாரித்த கலவையில் நிலை, கதவு, ஜன்னல் மற்றும் படிக்கட்டுகளில் நட்சத்திரங்கள் பொறித்து குங்குமம் வைக்கின்றனா. இதற்காக ஆமணக்கு, பப்பாளி ஆகிய தாவரங்களின் இலையை பயன்படுத்துவர். இலை தண்டோடு இணைத்துள்ள நரம்புகள தன்மைக்கேற்ப நட்சத்திரங்கள் அமைகின்றன. மாலை மயங்கும் நேரத்தில் மண்ணால் செய்யப்பட்ட சியி அகல்விளக்குகளில் எண்ணெய் திரியிட்டு தீபம் ஏற்றி வாயில்களிலும் சுற்றுப்புறங்களிலும் மதிற்சுவர்களிலும் வைத்து அழகுபடுத்துகின்றனர். பலர் அகல்விளக்குக்குப் பதிலாக மெழுகுவர்த்திகளை ஏற்றி அழுகுபடுத்தும் வழக்கம் காணப்படுகிறது. தற்காலத்தில் பொருளாதார நிலைக்கேற்ப சிறிய அலங்கார சரமின்விளக்குகளைப் போட்டு அழகுபடுத்துவதும் உண்டு. பின், பச்சரிசி, பாசிப்பயறு, தேங்காய், வெல்லம், ஏலக்காய், முந்திரி ஆகியவை கொண்டு பனை ஓலை ''கொழுக்கட்டை தயாரித்து அதனைப் கடவுளர்களுக்குப் படைத்து தீபம் ஏற்றி வழிபட்டு பகுத்துண்டு மகிழும் வழககம் காணப்படுகிறது 10 முதல் 15செ.மீ நீளம் கொண்டதாக மாவை உருட்டி பனை ஓலையில் வைத்து நீராவியில் வேகவைப்பதால் ''பனை ஓலை கொழுக்கட்டை எனப்படுகிறது.
கொழுக்கட்டைக்கான பொருட்கள் பெரும்பாலும் அவரவர் விளை நிலங்களில் கிடைத்த பொருளாக அமைய வேண்டும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்த பொருள் என்பதனால் அது விரும்பிப் படைக்கப்படுகிறது. ஆயின் உளவியல் அணுகுமுறையில் பார்க்கும்பொழுது இது ஒரு வளமைக் குறியூடு ஆகும். ஒலைக் கொழுக்கட்டையின் அமைப்பையும் அதன உருவாக்கச் சூழலையும் பின்புலத்தையும் ஆராயும் பொழுது அது அவர்கள் அடிமனத்தில் பதிந்திருக்கும் பாலியல் உணர்வுகளின் பிரதிபலிப்புக்ள் என்று கொள்ள வாய்ப்பேற்படுகிறது. அதோடு தங்கள் நிலத்தில் கிடைத்த விளைபொருட்களை கொழுக்கட்டையாக செய்து படைப்பதும் பகுத்து உண்பதும் முழுமையான வளமைச் சடங்கின் வழி வந்த வழக்காறு என்று கொள்ளலாம்.
அதோடு நோன்பு மேற்கொள்வதும் மஞ்சள், பச்சரிசி கலவையினால் நட்சத்திரக்குறி பொறித்து குங்குமம் இடுவதும் அகல் விளக்கினால் அலங்கரிப்பதும் தீபம் ஏற்றி அதை வழிபடுவதும் முழுமையான வளமைச் சடங்குகள் ஆகும். இவை அம்மக்களின் வளமை நோக்கச் சிந்தனைகளின் பிரதிபலிப்பே எனலாம்.
மேலும் சிறுவர்கள் சூரிய அஸ்தமத்திற்குப் பின், காய்ந்த பனை தென்னை ஆகியவற்றின் ஓலை வாழை சருகு ஆயிவற்றினால் செய்த தீப்பந்தங்களைக் கையில் ஏந்தி தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இதனால் இருளில் பதுங்கியிருக்ககும் பேய்கள் விலகி ஒடுகின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஊரைச் சுற்றிலும் உள்ள எல்லைப்புற சிறு தெய்வங்களான அம்மன், ஐயனார், பத்திரக்காளி, பிரம்மசக்தி, கடலைமாடன், இசக்கியம்மன் முதவியவற்றின் கோயில்களின் முன் தீப்பந்தங்களை நட்டு பாடி, ஆடி குரலையிட்டு அரவாரம் செய்து மகிழ்வதுண்டு.
சூவே....சூ
கார்த்திகை மாதம் வந்தது
கான மழை பொழிஞ்சது
கார்த்திகை தீபம் வந்தது
காத்து கருப்பு ஒழிஞ்சது
கழனி விதைச்சி முடிஞ்சது
காடு மேடும் விளைஞ்சது
சூவே....சூ
(ஆறுமுகம் : முதுமொத்தன் மொழி)
என்ற பாடல் அடிகள் மூலம், வளம் பெறுவதையும் பேய்கள் விலகுவதையும் விரும்பிச் செய்யும் சடங்கு இது என்பது புலனாகிறது. தீப்பந்தத்தை ''சூ..'' என்று அழைக்கும் மரபு காணப்படுகிறது. ''சூ..'' என்பது ஒரு உயிரினத்தை விரட்டி ஓட்டுவதற்குத் தென்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஒலிவடிவம் ஆகும். இங்கு இருளையும் அதற்குக் குறியீடாக உள்ள பேய்களையும் விரட்டும் நோக்கிலேயே ''சூ'' என்ற ஒலி வடிவம் பயன்படுத்தப்டுகிது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வழக்காறு முழுமையான வளமைச் சடங்கு என்பதை மேற்குறித்த பாடல் தெளிவாக்குகிறது. இவ்வாறு வழிபடப்படும் தெய்வங்களும் வளமைத் தெய்வங்களே. இத் தீப்பந்த நடுதல் வழிபாடு சங்கககாலவழக்காறுகளான நடுகல், வேல் மற்றும் கேடயங்களை நிறுத்துதல், கழுவேற்றுதல், வெற்றி மரங்களை நாட்டல் முதலிய பண்பாட்டு மரபுகளோடு தொடர்புடையது. இவ்வழக்காறுகள் அனைத்தும் ஒன்றிருந்து பரிணமித்ததாகவே இருக்கவேண்டும்.
''பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுதல்''
வேலூன்றி பலகை வேற்றுமுனை கடுக்கும்'' என்னும்
அகநானுற்று (131) அடிகளும்
''பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லாயினையே கடுமான் தோற்றல்'' என்னும் புறநானுற்று (264)
அடிகளும் நடுகல் வழக்காற்றை உணர்த்தும் சான்றுகள் ஆகும். தீப்பந்தங்களை ஏந்துவது யா‘? என்ற போட்டி நிலவுவதும் இதன் பொருட் பல நாட்களுக்கு முன்பே தீப்பந்தம் தயாரிக்கத் தொடங்கிவிடுவதும் மேற்குறிப்பிட்ட கருத்தை உறுதி செய்கின்றன. தற்காலத்தில் தீப்பந்தங்களுக்குப் பதிலாக சைக்கிள் டயர், டியூப்களைக் கொழுத்தும் வழக்கு பெருகி வருகிறது. பயன்படு பொருட்கள் மாறினும் ''தீ'' என்னும் மையப் பொருள் மாறவில்லை. எனவே நெருப்பை கார்த்திகை தீபத்தின் மையப் பொருளாகக் கொண்டு வழிபடும் பண்பாட்டு மரபை இனம் காணமுடிகிறது. சில கிராமங்களில் சிறுவர்கள் கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்திற்குத் தீப்பந்தம் நட்டு வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை தீபநாள் மட்டும் எல்லா கோயில்களையும் வழிபட வேண்டும் என்பது நியதி. இரவு அடர்ந்திருக்கும் இருளை அகற்றி ஒளியைக் கொடுக்கும் இவ்வழக்காறு பசியையும் பஞ்சத்தையும் போக்கி வறுமையை விரட்டி வளத்தை நிலை நாட்டும் மக்களின் அடிமன உணர்வின் வெளிப்பாடகவே இருக்க முடியும். இச்சடங்கின் போது தீப்பந்தம் ஏந்தும் இளைஞர்களின் அகமும் முகமும் சுடர் போன்று பிரகாசமாக இருப்பதை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால் அவர்கள் உள்ளம் ஒளியை விரும்புகிறது. வளத்தை நாடுகிறது என்ற உண்மையை இனம் காணமுடியும்.
மேலும் சிறுதெய்வக் கோயில்களின் முன்போ ஊரின் பொதுஇடத்திலோ ''சொக்கப்பனை'' என்னும் ஒருவகை மிகப்பெரிய தீப்பந்தத்தை நாட்டி அதற்கு மாலையிட்டு தோங்காய் பழம் படையலிட்டு பூசை செய்து தீயிட்டு மகிழும் வழக்காறு இன்னும் காணப்படுகிறது. இதில் இடம் பெறும் சடங்குகள் அம்மக்களின் வாழ்வியலையும் வலிமை நோக்கப் படிமங்களையும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கின்றன. எனவே விநோதமான இச்சடங்கினைப் பதிவு செய்தும் அதில் ஊடுருவியிருக்கும் நம்பிக்கைகளை ஆராய்வதும் மிக இன்றியமையாதது தமிழர்களின் சிறுதெய்வ வழிபாட்டில் மிகப் பெரிய அங்கமான மர வழிபாட்டை இங்கு ஒப்பு நோக்குவது அவசியம். அரசு, ஆல், வேம்பு, பனை, பூவரசு, வேங்கை, அத்தி, வில்வம், வன்னி உள்ளிட்ட பல மரங்களைத் தெய்வம் உறைந்திருக்கும் இடமாக கொண்டு மாலையிட்டு படையல் வைத்து பூசிக்கும் மரபை இன்றும் காணமுடிகிறது. மேலும் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மரத்தையும் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கநிற மலர்களைத் தரும் குடைப்பனை மரத்தையும் மிகவும் புனிதமான மரங்களாக எண்ணி வழிபடும் வழக்காறை இங்கு பொருத்திப் பார்ப்பது அவசியம். குடைப்பனை மரம் பூத்துக்குலுங்குவதைக் காண்பது மிக அரிது என்பதால் அது சிறப்பிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பெருந்தெய்வக் கோயில்களில் கொடிமரம் ஒன்று வைத்து கொடியேற்றப் படுவதும் சிறுதெய்வக் கோயில்களில் ''பந்தல்கால் நடுதல்'' என்று ஒரு மூங்கில் களையில் வேப்பிலை மாவிலை, மஞ்சள், பூ ஆகியவற்றைக் கட்டி அதனை விழா முடியும் வரைப் பாதுகாப்பதும் யாவரும் அறிந்த வழக்காறுகள் ஆகும். திருமண வீடுகளிலும் முகூர்த்தக் கால் என்ற பெயரிலும் புதிய வீடு அமைப்போர் கால் நடுதல், நிலையிடுதல் என்ற பெயரிலும் மரங்களை நாட்டி அதனைப் புனிதமாக எண்ணி வழிபட்டு வருகின்றனர் எனவே மரம் நடுவதும் அதனை வழிபடுவதும் தமிழர் பண்பாட்டில் சமய நம்பிக்கை அடிப்படைச் சடங்காக இருந்து வருகிறது. இந்த பின்னணியிலேயே திருக்கார்த்திகை தீபநாள் அன்று கோயில்களின் முன் பொது இடத்தில் ''சொக்கப்பனை'' என்ற மிக உயர்ந்த தீப்பந்தத்தை நாட்டி வழிபடுவதை எண்ணிப் பார்க்க முடிகிறது.
சொக்கப்பனை என்பது உயரமான பப்பாளி மரத்தை வெட்டியெடுத்து அதனைச்சுற்றி பனை, தென்னை ஆகியவற்றின் காய்ந்த ஓலை, வாழை சருகுகளால் அடர்த்தியாகக் கட்டப்படுவதாகும். இதனைக் கோயில் முன்னோ, ஊர் பொது இடத்திலோ நாட்டி அதற்குரிய வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டு நுனிப்பகுதியில் தீ வைத்து எரிய விடுவர். தீ எரியத் தொடங்கியவுடன் ஏற்படும் ஒளியுடன் மக்கள் முகத்தில் தோன்றும் ஒளி ஒப்பு நோக்கத் தக்கது. இது மக்களின் வளர்ச்சிப் படிநிலை மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாகும். இது உயரமாகப் பனைபோன்று காணப்படுவதால் இதற்குச் ''சொக்கப்பனை'' என்று பெயர் வந்திருக்கலாம். எரிந்த முடிந்தபின் எஞ்சிநிற்கும் பப்பாளி மரத்தின் அடிப்பகுதியில் சுற்றிலும் வெட்டுகின்றனர். இந்நிலையில் மக்கள் தெய்வங்களை நினைத்து வணங்கி கன்னத்தில் போட்டுக்கொள்வதைக் காணலாம். வெட்டப்பட்ட பப்பாளிமரம் எந்தத் திசையில் விழுகிறது? என்பதைப் பொறுத்து அந்த ஆண்டு நன்மையோ, தீமையோ, இன்பமோ, துன்பமோ, வளமோ, வறுமையோ ஏற்படும் என்று நம்பிக்கையே அதற்கு காரணம். வெட்டப்ட்ட பப்பாளிமரம் கிழக்கு திசையில் விழுந்தால்மிகவும் நல்லது. அவ்வாண்டு நல்ல மழையும் விளைச்சலும் கிடைக்கும். வடக்கு திசையில் விழுந்தால் வறுமையும் மேற்குத் திசையில் விழுந்தால் குறைவான மழையும், தெற்குத் திசையில் விழுந்தால் நல்ல மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. எனவே பெரும்பாலும் கிழக்கு திசையில் சொக்கப்பனை விழ வேண்டும் என்றே விரும்புகின்றனர். தெற்குத் திசையில் விழுவதை மீனவர்கள் தவிர பிறர் விரும்புவதில்லை. பொதுவாகவே கிழக்கு திசையை எல்லா சிறு தெய்வ வழிபாட்டோடும், சூரிய உதயத்தோடும் வளமை நோக்கில் சிறப்பித்துக் கூறும் மரபைக் காணமுடிகிறது. கோயில்கள் கட்டிடங்கள் வீடுகள் அனைத்தும் கிழக்கு நோக்கி இருப்பதே சிறப்பு என்று மனையடி சாஸ்த்திரம் கூறுகிறது. கிழக்கு திசை வளர்ச்சி வளம் முதலிய கருத்தோட்டங்களின் பின்னணியில் சிறப்பிக்கப்படுவதால் சொக்கப்பனையும் கிழக்கு திசை நோக்கி விழுவதையே சிறப்பாகக் கருதுகின்றனர். இவ்வாறு விழுந்தால் மக்கள் மனம் பூரிப்போடும் பிற திசைகளில் விழுந்தால் மனச்சஞ்சலத்தோடு மாறி தெய்வக்குறையே இதற்குக் காரணம் என்றும் நம்புகின்றனர்
சொக்கப்பனை எரியும் பொழுது கிராமம் முழுமையும் மண்டியிருக்கும் இருள் அகன்று ஒளி கிடைக்கிறது. துன்பம் நீங்கி இன்பம் தளைக்கிறது. எங்கும் வளம் பெருகும் உயர்ந்த சிந்தனை குடிகொள்கிறது சிவபெருமான் நெருப்புத்து‘ணாக உயர்ந்த நின்ற தன்மையை உணர்த்த சொக்கப்பனை எடுத்தாளப்படுகிறது. எனவே சொக்கப்பனை சிவபெருமான் நெருப்பத்து‘ணாக உயர்ந்து நின்று தொன்மத்தின் படிமமாக வெளிப்படுவதை அறியலாம். சிவபெருமான் அதன் மூலம் இந்த உலகிற்கே ஒளி கொடுப்பதும் சொக்கப்பனை அந்த ஊருக்கே ஒளி கொடுப்பதும் உள்ளீடு அடிப்படையில் ஒரே இயல்புடையவை என்பது அறியத்தக்கது.
எனவே சிறுதெய்வக் கோயில்களில் நிகழ்த்தப் பெறும் திருக்கார்த்திகை தீப வழிபாடும் நம்பிக்கைகளும், சடங்குகளும் முற்றிலும் வளமையை அடிப்படையாகக் கொண்டு, மக்களைப் பற்றி மக்களால் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுச் சின்னங்களே ஆகும். இவ்விழாவில் வழிபடப்படும் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், பயன்படு பொருட்கள், பண்பாட்டு மரபுகள், வழக்காறுகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் வளமைப் படிமங்களோடு தொடர்புடையவையே. எனவே கார்த்திகை தீபம் ஒரு முழுமையான வளமைச் சடங்கு விழாவாகும். அதனால் அவற்றில் மக்களின் பண்பாட்டு மரபுகளையும் வாழ்வியல் யதார்த்தங்களையும் இனம் காண முடிகிறது..
சைவ சமயம் உணர்த்தும் மும்மலங்கள் - டாக்டர். உ. சாமுவேல் ஸ்டீபன்
தென் இந்திய சமயங்களில் சைவ சமயக் கோட்பாடுகள் மிகவும் விரிவான விலைமதிப்பற்ற கோட்பாடுகளாக இருந்து வந்துள்ளன. சைவம் என்பதற்கு பாசப்பற்றாகிய உலகப் பற்றினை விட்டு நீங்கி இறைவனின் திருவடிகளைப் பற்றுவது எனப் பொருள் கொள்ளப்படுகிறது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்தின் மூலமாக 5000 ஆண்டுகளுக்கு முன்பே சக்தி வழிபாடும், சிவவழிபாடும் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. மிகவும் பழமையான ரிக் வேதம், இதிகாசங்களில் கூடு சிவலிங்க வழிபாடுகள் இருந்ததற்கான சான்றுகளும், சிவன் மேலானவன் என்ற கருத்தும் இருந்து வந்துள்ளது. மேலும் சமய கோட்பாடுகளில் மிகவும் சிறந்ததாகவும் தெளிவான வாழ்க்கை முறைகளை சுட்டிக் காட்டும் ஒன்றாகவும், திராவிட மக்களின் அறிவாற்றலுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும், தமிழ் மக்களை மிகவும் கவர்ந்த நிலையில் சைவ சமயக் கோட்பாடுகள் உள்ளன. இந்திய தத்துவங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த முனிவர்கள் தங்கள் வாழ்வில் கண்ட உண்மைகளை அனுபவத்தின் மூலமாக சரிபார்த்து ஏற்படுத்தப்பட்ட இறையருள் பெற்ற கோட்பாடுகளாகவும் சைவ சமயக் கோட்பாடுகள் உள்ளன. உலகிலுள்ள அனைத்து விதமான சமய கருத்துக்களும், கோட்பாடுகளைத் தரும் நிலையில சைவ சமயக் கோட்பாடுகள் உள்ளது. மேலும் இயல்பியல் கூறிய கற்பனையொளியுடனும், உணர்ச்சி பெருக்குடனும், வெளிப்பாட்டழகுடனும் கூடிய பக்தி இலக்கியச் செல்வத்தினை தமிழ் உலகில் சைவத்தினை தவிர வேறு எச்சமயமும் எய்தவில்லை என பெர்னார்டு என்பவர் சைவ சமயக் கருத்துக்களைக் குறித்து சிறப்பித்துக் கூறுகிறார். சைவ சமயத்திற்கு சான்றுகளாக வேதங்கள், திருமுறைகள் சிவாகமங்கள், சாத்திர நூல்கள் போன்றவை உள்ளன. வேதங்களும் ஆகமங்களும் சைவ சமயத்திற்கு பிரமாண நூல்களாக அமைந்துள்ளன. சைவ சமயத்தில் வேதங்கள் பொது பிராமணமாகவும், வேதங்களில் சுருங்க கூறியுள்ள கருத்துக்களை விரைவாக, தெளிவாக எடுத்துக்கூறி உயிர்களில் காணப்படும் மலங்களை கெடுத்து இறையருளைப் பெற்றுத் தரும் ஒன்றாகவும், முப்பொருட்களின் (பதி, பசு, பாசம்) தன்மைகளை விளக்கி கூறும் ஒன்றாகவும் ஆகமங்கள் உள்ளதால் சைவ சமயம் இதனை சிறப்பு பிரமாணமாகவும் கொள்கிறது. மேலும் சைவசமயக் கோட்பாடுகள் வேதகாலத்தில் வித்திடப்பட்டு ஆகமகாலத்தில் துளிர்விட்டு, திருமுறை ஆசிரியர்கள் காலத்தில் செடியாகி, சாத்திர நூலாசிரியர்கள் காலத்தில் மரமாகி காய்த்து கனியை தந்தது, எனவும் கருதுவர். மேலும் இவ்வுலகில் அனைத்தையும் கடந்து நிற்கும் உண்மையினைத் தேடிச் செல்லும் நிலையில் சைவ சமயக் கோட்பாடுகள் உள்ளதால், இவ்வுலகில் காணப்படும் அனைத்துச் சமயங்களிலும் மேலான சமயமாக சைவ சமயம் கருதப்படுகிறது. சைவ சமயத்தில் சித்தாந்தம் என்ற சொல் நிலை நிறுத்தப் பெற்ற உண்மை எனவும் மூற்று முடிந்த மெய்பொருட்கொள்கை எனவும், தத்துவச் சிந்தனையின் இறுதிமுடிவிடம் எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வாறு சைவ சமயக் கோட்பாடுகள் பழங்காலம் தொட்டு தமிழ் பேசும் மக்களிடையே மட்டும் மிகுதியாக வழங்கப்பட்டு வந்துள்ளதால் இதனை தமிழர்களுக்கே உரிய சிறந்ததொரு சமயமாகக் கருதலாம்.
சைவ சமயத்தில் இறை (பதி) உயிர் (பசு) கட்டு (பாசம்) என்ற முப்பொருட்களின் உண்மை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சைவ சமயம் உயிர்களை (ஆன்மா) பசு எனக் கருத காரணம் அது பாசம் என்ற கட்டுக்குள் சிக்கி இருப்பதினால்தான். உயிர்களை கட்டுப்படுத்தும் தளைகளுக்கு பாசம் எனப் பெயர். உலக வாழ்வில் எது கீழ்த்தரமானதோ உயிர்கள் எவைகளை விட்டு விலகி நிற்க வேண்டுமோ அவைகளையோ பாசம் என சைவ சமயம் கூறுகிறது. சைவ சமய கருத்துப்படி இந்த பாசங்களான ஆணவம், கன்மம், மாயை என்பன இறைவனைப் போன்றே என்றும்அநாதியாக உயிர்களைப் பற்றியிருக்கும் கயிறாக உள்ளது. சைவ சமயக் கருத்துப்படி பசுவாகிய உயிர்கள் (ஆன்மா) தன் நிலையில் எங்கும் நிறைந்த, எல்லையற்ற தன்மை கொண்ட அனைத்தையும் அறிந்த உணர்வுடைய பொருளாக இறைவனைப் போன்றே எக்காலத்திலும் அழியாது நிலைத்திருக்கும் பொருளாகக் காணப்பட்டாலும் பாசங்களான மலங்களுடன் இணைவதால் இத்தகைய உயிர்கள் ஒரு எல்லைக்குட்பட்டதாகவும், அறியாமை என்ற உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு பிறப்பு இறப்பு போன்ற துன்பங்களை நுகரும் நிலையில் உள்ளன. மேலும் இத்தகைய உயிர்கள் பருப்பொருட்கள் நிறைந்த இந்த உலகுடனும், உடலுறுப்புகளுடனும், புலனுறுப்புகளுடனும் இணைந்து காணப்பட்டாலும் இத்தகைய பருப்பொருள் உலகு, உடலுறுப்புகளிலிருந்து மாறுபட்ட நிலையில் காணப்படுகிறது எனச் சைவ சமயம் கூறுகிறது. இத்தகைய உயிர்கள் தன் நிலையில் உலகப் பொருட்களின் மாறுபாடுகளிலிருந்து செயல்பாடுகளிலிருந்து மிக்க வேறுபாடுகள் கொண்ட நிலையில்லாது அதே சமயம் இறைவனது ஆன்மீகமான தூய்மையான தன்மையுடனும் இணையாத நிலையில் இருப்பதால் தான் சைவ சமயம் உயிர்களை பசு என கருதுகிறது. இத்தகைய உயிர்கள் இவ்வுலகப் பொருட்களால் கவரப்பட்டு பாசநிலைகளிலிருந்தும் பதியாகிய இறைவனது தூய்மையான செயல்பாடுகளிலிருந்தும் வேறுபட்ட நிலையில் அகங்காரத்தின் அறியாமையின் விளைவாக உலக விவகாரங்களில் சிக்குண்டு அனைத்து காரியங்களையும் செயல்பாடுகளையும் தானே செய்வதாக கருதி அதன் பயனாக இன்ப துன்பங்களை நுகர்ந்து செயலற்ற நிலையில் காணப்படுகிறது.
சைவ சமயம் உயிர்களை கட்டியிருக்கும் பாசங்களை ஆணவம், கன்மம் மாயை என மூன்றாக கொண்டு இந்த பாசங்களும் இறைவனைப் போன்றே அநாதியாக என்றும் இவ்வுலக உயிர்களுடன் இணைந்து இருக்கும் நிலையில் காணப்படுகிறது என கூறுகிறது. சைவ சமயம் உயிர்களைப் பற்றியிருக்கும் ஆணவ மலத்தினை சகஜ மலம் எனவும், கன்மம், மாயை என்ற இரு மலங்களையும் ஆகந்துக மலம் எனக் கூறும். இத்தகைய ஆணவமலம் இயற்கையில் அனைத்து உயிர்களிடமும் பற்றியுள்ள நிலையில் உள்ளதாலும் உயிர்களின் அறிவாற்றலுக்கு முதல் தளையாக இருப்பதாலும், இதனை மூலமலம் எனவும் அது எவ்வாறு நெல்லில் உமி ஒட்டிக் கொண்டுள்ளதோ செம்பில் களிம்பு ஒட்டிக் கொண்டுள்ளதோ அது போல உயிர்களிடத்தில் காலங்காலமாக ஒட்டிக் கொண்டுள்ளதோ எனவும் உயிர்கள் இத்தகைய மலங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக அதன் அறிவும், சக்தியும் குறைக்கப்படும் நிலையில் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் நிலையில் காணப்படுகிறது என சைவ சமயம் கூறுகிறது.
சைவ சமய கருத்துப்படி உயிர்கள் அனைத்து விதமான நற்செயல்களுக்கும் இருப்பிடமாகக் காணப்பட்டாலும் உயிர்களிடத்திலுள்ள ஆணவ மலசேர்க்கையின் விளைவாக இவ்வுலகிலுள்ள அனைத்து பொருட்களும் தன்னுடையவை, அனைத்துப் பொருட்களின் சுகத்தையும் இன்பங்களையும் தானே அனுபவிக்க வேண்டும் என எண்ணுகிறது. இத்தகைய உயிர்கள் தன் நிலையில் தூய்மையாக காணப்பட்டாலும் ஆசை, அறியாமை, மன இருள் போன்றவைகளின் தொடர்புகளில் சிக்கி அதன் பயனாக கர்மவினையின் விளைவுகளை அனுபவிக்கும் நிலையில் காணப்படுகிறது. சைவ சமய கருத்துப்படி இத்தகைய ஆணவ மலம் ஒன்றேயாயினும் தன்னிலையில் உலக உயிர்களின் மத்தியில பல நிலைகளில் செயல்பட்டு தன் நிலையினை வெளியே காட்டிக் கொள்ளாத நிலையில் இருளாக மறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதாக காணப்படுகிறது. சைவ சமயத்தில் இத்தகைய ஆணவ மலம் இருள் எனவும் இந்த இருளினை உயிர்களால் பார்க்கவோ அளக்கவோ இயலாது எனவும் இம்மலம் பிரபஞ்சம் தோன்றும் முன்பே இருந்து இந்த பிரபஞ்சத்தின் செயல்பாடுகளை தொடங்கச் செய்யும் நிலையிலிருந்து உயிர்களின் உணர்வு நிலைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் காணப்படுகிறது. இம்மலமாகிய இருளினை புலன்களாவோ சிந்தனைகளாகவோ அளக்க இயலாது. உலகில் நாம் காணும் இருள் பிற பொருட்களை மறைத்தாலும் தன் நிலையினை மறைக்காது வெளிப்படுத்திக் காட்டாது உயிர்களின் பார்வையிலிருந்து மறைத் செயல்படக்கூடிய நிலையில் காணப்படுவதால் இதனை இருளினும் இருள் என சைவ சமயம் கூறுகிறது. மேலும் உயிர்களுக்கு உலக வாழ்வில் ஆசை, மோகம், நேசம், கர்வம், சந்தோசம் போன்ற பண்புகளை ஏற்படுத்திக் கொடுத்து உலக வாழ்வில் விரும்பிய பொருள் கிடைத்த நிலையில் இன்பத்தையும் கிடைக்காத நிலையில் துயரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையில் காணப்படுகிறது.
சைவ சமயக் கருத்துப்படி எவ்வாறு அரிசி உமியினால் மூடப்பட்டுள்ளதோ, கடல் நீர் உப்பினால் கவரப்பட்டுள்ளதோ அது போல இந்த ஆணவ மலம் ஆரம்பம் தெரியாத காலத்திலிருந்தே உயிர்களுடன் இணைந்து உயிர்களின் செயல்பாடுகளுக்கு இடையூறாக அமைந்து உயிர்களின் பண்புகளை மறைக்கும் நிலையில் காணப்படுகிறது. மேலும் உயிர்கள் அறியாமையின் விளைவாகத் தான் இவ்வுலகிலுள்ள பொருட்களை மனதில் கொண்டு அவைகளை அடையும் வழிமுறைகளை தேடிச் செல்வதன் மூலமாக புலன் இன்பங்களுக்கு அடிமையுற்று மறுபிறவிக்களுக்குரிய வழிமுறைகளைத் தேடிச் சென்று தனது ஆன்மீகமான தூய்மையான இயல்பினை இழக்கும் நிலையில் காணப்படுகிறது. உயிரின் வாழ்வில் இத்தகைய ஆணவமலம் நிரந்தரமாக காணப்படும் நிலையிலிருப்பதால் இம்மலத்தின் தொடர்புகளிலிருந்து துன்புறும் உயிர்களை விடுவிக்க ஆணவ மலத்தின் சக்தியினை போக்க இறைவன் உயிர்களுக்கு ஆனந்தமான அறிவின் உச்சியான சிவஞானத்தை அளிக்கும் நிலையில், உயிர்கள் ஆணவ மலத்தினால் ஏற்படும் துன்ப நிலைகளிலிருந்த தன்னை விடுவித்து இன்பமாக வாழும் நிலையில் காணப்படுகிறது என சைவ சமயம் கூறுகிறது.
மேலும் உயிர்கள் தன் நிலையில் ஆணவ மலம் இருப்பதனை உணராத நிலையில் காணப்படுவது போல தன்னில் இறையருள் இருப்பதனையும் உணராத நிலையில் காணப்படுகிறது. உயிர்கள் கர்மவினைகளுக்கு காரணமாக உள்ள மலங்களின் தொடர்புகளிலிருந்து விடுவித்துக் கொள்ள இறைவனின் அருள் தேவைப்படுகிறது. எவ்வாறு ஒருவனின் சரீரத்திலுள்ள வியாதி அவனது வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியும் நிலையிலிருப்பது போல உயிர்கள் கர்மவினையின் விளைவுகளால் புலனின்பங்களுக்கு அடிமையுற்று அதன் பயனாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையினை இறைவன் அறிந்த நிலையில் காணப்படுகிறான். ஆனால் எவ்வாறு தன்னருகேயிருக்கும் தோழனை அறியாத நிலையில் இருப்பதுபோல உயிர்களும் தன்னருகேயிருந்து கர்மத்தில் விளைவுகளில் சிக்கி துன்புறும் நிலையிலிருந்து காப்பாற்றும் விடுவிக்கும் நிலையில் இறைவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையினை மறந்த நிலையில் காணப்படுகின்றன. பாற்கடலில் வசிக்கும் மீன் தனது பசியினைப் போக்க சிறு சிறு பூச்சிகளை தேடிச் செல்வது போல உயிர்களும் இறையருளை மறந்து புலன் இன்பங்களை நாடிச் செல்வதன் மூலமாக தனது உண்மை நிலையினை மூழ்கடித்துக் கொள்ளும் நிலையில் காணப்படுகிறது. மேலும் உயிர்களிடத்தில் காணப்படும் ஆணவமலம் உயிர்களின் குணமாக அல்லது உயிரின் குற்றமாக அதாவது எவ்வாறு கண்ணின் முன் தோன்றும் படலம் ஒரு குற்றமாகக் காணப்படுகிறதோ, அது போல உயிரின் உண்மை நிலை மறக்கும் நிலையில் இம்மலம் ஒரு குற்றமாக அமைகிறது. கண்ணின் முன் தோன்றிய படலத்தை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றும் நிலையில் கண் ஒளி பெறுவது போல இறைவனாகிய வைத்தியன் மூலம் ஞானமாகிய வாளினைக் கொண்டு உயிர்களில் காணப்படும் மலமாகிய படலத்தினை அறுக்கும் நிலையில் உயிர்கள் உண்மையறிவினைப் பெறும் நிலையில் காணப்படுகிறது என்று சைவ சமயம் கூறுகிறது.
மேலும் உயிர்கள் இந்த உலகின் உண்மையான இயல்பினை உணராத நிலையில் தான் இத்தகைய உலக இன்ப துன்பங்களில் நாட்டம் கொண்டு துன்புறுகிறது எனவும் இதற்கு மூல காரணம் உயிர்கள் மலங்களுடன் இணைந்து செயல்படுவதேயாகும் எனவும் சைவ சமயம் கூறுகிறது. உயிர்கள் இறைவனின் அருள் சக்தியான திரோதான சக்தியின் பயனாக உலகப் பொருட்களின் உண்மை நிலையினை உணர்ந்து இத்தகைய உலக அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை நிரந்தமற்றவை என்பதனை உணர்ந்து இத்தகைய உலக அனுபவங்களில் நாட்டம் கொள்வதால் ஏற்படும் இன்ப துன்ப நிலைகளைக் கடந்து தன் நிலையில் தூய்மையாக இன்பமான நிலையில் காணப்பட வேண்டும் என சைவ சமயம் கூறுகிறது. உயிர்கள் மலங்களாகிய இருளிலிருந்து விடுபட இறைவன் தனு, கரண, புவன, போகம் என்ற மாயா காரியங்களை தனது கருணையின் அதாவது அழுக்கடைந்த ஆடையினை தூய்மை செய்ய உவர் மண் சேர்ப்பது போல மலங்களின் தொடர்புகளினால் மறைப்பூண்டு செயலற்றுத் துன்புறும் உயிர்களுக்கு இன்பம் தரும் நிலையில் இவைகள் இருந்தாலும் இவைகளையே உயர்ந்தவை, நிலையானவை என்று உயிர்கள் கருதாது என்றும் நிலைத்த இன்பம் தரும் இறையருளை நாடிச் செல்லுதல் வேண்டும் எனவும் இவைகளெல்லாம் இருளில் தடுமாறுபவருக்கு மெழுகுவர்த்தி பயன்படுவது போல உயிர்களின் நிலைகளுக்கு தகுந்தவாறு உதவக்கூடிய நிலையில் உள்ளன எனவும் சைவ சமயம் உணர்த்துகிறது. மேலும் ஆணவ மலச் சேர்க்கையால் சிக்குண்டு துன்புறும் உயிர்கள் விஞ்ஞான கலர் எனவும் ஆணவம், கன்மம் என்ற இரண்டாலும் கட்டுற்று துன்புறும் உயிர்கள் பிரளயா கலர் எனவும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தாலும் கட்டுற்ற உயிர்கள் கலர் எனவும் கருதப்படுகிறது.
சைவ சமயத்தில் ஆணவ மலம் எனில் அணுத் தன்மையைச் செய்வது என்ற நிலையில் பொருள் கொள்ளப்படுகிறத. இத்தகைய ஆணவமலம் ஒன்றாயினும் தன் நிலையில் பல சக்திகளை கொண்டதாய் உயிர்களின் அறிவையும் தொழிலையும் மறைத்து வினை முதலாக செயல்களில் ஈடுபடுத்தி நிலைத்த பொருளை மறைத்து நிலையற்ற உலக நிலைகளில் பங்கு கொள்ளச் செய்து துன்புறச் செய்யும் நிலையில் உள்ளது. இத்தகைய உயிர்கள் இயற்கையில் அறிவுடையதாயினும் மலங்களின் சேர்க்கையால் இருளில் அகப்பட்ட கண் போல எதனையும் அறியாத, உணராத மலங்களின் தன்மைகளில் சார்ந்திருக்கும் நிலையில் உயிர்களின் அறிவுத்தன்மையினை விபரீதமாக்கி உலகின் இன்ப துன்ப போகங்கள் அனைத்தையும் நுகர்பவன் நானே என எண்ணச் சொல்லும் நிலைக்கு அதோநியமிகா சக்தி எனவும், அதோநியமிகம் எனில் கீழே வீழ்த்தும் சக்தி அல்லது பொருளின் உண்மையியல்பினை தவறாக எண்ணச் செய்யும் சக்தி எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
உயிர்களில் காணப்படும் ஆணவ மலம் உயிர்களோடு சம நிறைவு கொண்டதாய் உயிர்களின் அறிவு செயல்களை விளங்கவொட்டாது பிணித்து நிற்கும் ஒன்றாய் மாயை, கன்மங்கள் உயிரின் கண் அடங்கும் நிறைவுப் பொருளாய் உயிர்களில் கலந்துள்ள ஆவண மல பிணிப்பினைப் போக்க இறைவனால் செலுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதால் இதனை ஆகந்துகமலம் அதாவது இடையில் சேர்க்கப்பட்டது என்று பொருள் கொள்ளலாம். அதாவது ஆடையிலுள்ள கறையினை நீக்க சலவைப் பொருட்கள் இணைத்து நன்றாகச் சுத்தம் செய்யும் சலவை தொழிலாளியைப் போல உயிர்களின் வாழ்வில் துன்பத்திற்கு காரணமாயுள்ள ஆணவ மலத்தின் சக்தியிலிருந்து இறைவன் உயிர்களை காப்பாற்ற உயிர்கள் மீதுள்ள கருணையின் விளைவாக கன்மம், மாயை போன்ற மலங்களைச் சேர்த்து காப்பாற்றும் நிலையில் காணப்படுகிறான் என சமயம் கூறுகிறது.
எனவே, உயிர்கள் வாழ்வில் அறியாமையின் விளைவாகச் செய்யும் செயல்களே வினையின் காரணமாக பிறவிச் சூழல் என்ற நிலையினை பெற்று தரும் நிலையில் உள்ளன. உயிர்கள் தன்னிலுள்ள உண்மையறிவின் மூலமாக இத்தகைய உலக இன்ப துன்ப நிலைகளில் நாட்டம் கொள்ளாது அதன் விளைவுகளிலிருந்து நீங்கி பிறவிச் சூழல் என்ற நிலையினை கடந்து இன்பமாக வாழ்தல் வேண்டும் என உயிர்கள் மீது கொண்ட கருணையின் விளைவாக இறைவன் உயிர்களின் பக்குவ நிலைகளுக்குத் தகுந்தாற் போல் செயல்படும் நிலையில் காணப்படுகின்றன. மழை பெய்யும் போது பச்சை மண் கலம் கரையும் நிலையில் காணப்பட்டாலும் அம்மண் கலத்தினை சுட்டபின் மழை பெய்யும் நிலையில் கரையாது மழை நீரால் பாதிக்கப்படாது இருப்பது போல உயிர்கள் பொறிகள் மூலம் உலக இன்ப நாட்டங்களில் சிக்கி துன்புறும் நிலையில் பிறவிச் சூழல் என்ற நிலையால் பாதிக்கப்பட்டாலும் இறைவன் அளிக்கும் திருவருள் ஞானத்தின் மூலமாக உலக செயல்பாடுகளின் தன்மைகளின் விளைவுகளால் நிகழும் துன்ப நிலைகளிலிருந்து நீங்கிதன் நிலையில் இன்பமாக காணப்படுகிறது. மேலும் மாசு படிந்த குளத்து நீரில் தேற்றான் கொட்டையினை போடும் நிலையில் குளத்திலுள்ள மாசுகள் யாவும் அடியில் தங்கி குளத்து நீர் சுத்தமாவது போல உயிர்களில் காணப்படும் மாசுகளான மலங்கள் நீங்கும் நிலையில் உயிர்கள் இறைவனின் திருவருள் ஞானத்தினை உருணம் நிலையில் காணப்படுகிறது. இதில் குளத்திலுள்ள கலங்கிய நீர் மலங்களால் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள உயிர்களுக்கும் அதிலுள்ள மாசுகள் உயிர்களில் காணப்படும்.
சைவ சமயத்தில் இறை (பதி) உயிர் (பசு) கட்டு (பாசம்) என்ற முப்பொருட்களின் உண்மை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சைவ சமயம் உயிர்களை (ஆன்மா) பசு எனக் கருத காரணம் அது பாசம் என்ற கட்டுக்குள் சிக்கி இருப்பதினால்தான். உயிர்களை கட்டுப்படுத்தும் தளைகளுக்கு பாசம் எனப் பெயர். உலக வாழ்வில் எது கீழ்த்தரமானதோ உயிர்கள் எவைகளை விட்டு விலகி நிற்க வேண்டுமோ அவைகளையோ பாசம் என சைவ சமயம் கூறுகிறது. சைவ சமய கருத்துப்படி இந்த பாசங்களான ஆணவம், கன்மம், மாயை என்பன இறைவனைப் போன்றே என்றும்அநாதியாக உயிர்களைப் பற்றியிருக்கும் கயிறாக உள்ளது. சைவ சமயக் கருத்துப்படி பசுவாகிய உயிர்கள் (ஆன்மா) தன் நிலையில் எங்கும் நிறைந்த, எல்லையற்ற தன்மை கொண்ட அனைத்தையும் அறிந்த உணர்வுடைய பொருளாக இறைவனைப் போன்றே எக்காலத்திலும் அழியாது நிலைத்திருக்கும் பொருளாகக் காணப்பட்டாலும் பாசங்களான மலங்களுடன் இணைவதால் இத்தகைய உயிர்கள் ஒரு எல்லைக்குட்பட்டதாகவும், அறியாமை என்ற உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு பிறப்பு இறப்பு போன்ற துன்பங்களை நுகரும் நிலையில் உள்ளன. மேலும் இத்தகைய உயிர்கள் பருப்பொருட்கள் நிறைந்த இந்த உலகுடனும், உடலுறுப்புகளுடனும், புலனுறுப்புகளுடனும் இணைந்து காணப்பட்டாலும் இத்தகைய பருப்பொருள் உலகு, உடலுறுப்புகளிலிருந்து மாறுபட்ட நிலையில் காணப்படுகிறது எனச் சைவ சமயம் கூறுகிறது. இத்தகைய உயிர்கள் தன் நிலையில் உலகப் பொருட்களின் மாறுபாடுகளிலிருந்து செயல்பாடுகளிலிருந்து மிக்க வேறுபாடுகள் கொண்ட நிலையில்லாது அதே சமயம் இறைவனது ஆன்மீகமான தூய்மையான தன்மையுடனும் இணையாத நிலையில் இருப்பதால் தான் சைவ சமயம் உயிர்களை பசு என கருதுகிறது. இத்தகைய உயிர்கள் இவ்வுலகப் பொருட்களால் கவரப்பட்டு பாசநிலைகளிலிருந்தும் பதியாகிய இறைவனது தூய்மையான செயல்பாடுகளிலிருந்தும் வேறுபட்ட நிலையில் அகங்காரத்தின் அறியாமையின் விளைவாக உலக விவகாரங்களில் சிக்குண்டு அனைத்து காரியங்களையும் செயல்பாடுகளையும் தானே செய்வதாக கருதி அதன் பயனாக இன்ப துன்பங்களை நுகர்ந்து செயலற்ற நிலையில் காணப்படுகிறது.
சைவ சமயம் உயிர்களை கட்டியிருக்கும் பாசங்களை ஆணவம், கன்மம் மாயை என மூன்றாக கொண்டு இந்த பாசங்களும் இறைவனைப் போன்றே அநாதியாக என்றும் இவ்வுலக உயிர்களுடன் இணைந்து இருக்கும் நிலையில் காணப்படுகிறது என கூறுகிறது. சைவ சமயம் உயிர்களைப் பற்றியிருக்கும் ஆணவ மலத்தினை சகஜ மலம் எனவும், கன்மம், மாயை என்ற இரு மலங்களையும் ஆகந்துக மலம் எனக் கூறும். இத்தகைய ஆணவமலம் இயற்கையில் அனைத்து உயிர்களிடமும் பற்றியுள்ள நிலையில் உள்ளதாலும் உயிர்களின் அறிவாற்றலுக்கு முதல் தளையாக இருப்பதாலும், இதனை மூலமலம் எனவும் அது எவ்வாறு நெல்லில் உமி ஒட்டிக் கொண்டுள்ளதோ செம்பில் களிம்பு ஒட்டிக் கொண்டுள்ளதோ அது போல உயிர்களிடத்தில் காலங்காலமாக ஒட்டிக் கொண்டுள்ளதோ எனவும் உயிர்கள் இத்தகைய மலங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக அதன் அறிவும், சக்தியும் குறைக்கப்படும் நிலையில் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் நிலையில் காணப்படுகிறது என சைவ சமயம் கூறுகிறது.
சைவ சமய கருத்துப்படி உயிர்கள் அனைத்து விதமான நற்செயல்களுக்கும் இருப்பிடமாகக் காணப்பட்டாலும் உயிர்களிடத்திலுள்ள ஆணவ மலசேர்க்கையின் விளைவாக இவ்வுலகிலுள்ள அனைத்து பொருட்களும் தன்னுடையவை, அனைத்துப் பொருட்களின் சுகத்தையும் இன்பங்களையும் தானே அனுபவிக்க வேண்டும் என எண்ணுகிறது. இத்தகைய உயிர்கள் தன் நிலையில் தூய்மையாக காணப்பட்டாலும் ஆசை, அறியாமை, மன இருள் போன்றவைகளின் தொடர்புகளில் சிக்கி அதன் பயனாக கர்மவினையின் விளைவுகளை அனுபவிக்கும் நிலையில் காணப்படுகிறது. சைவ சமய கருத்துப்படி இத்தகைய ஆணவ மலம் ஒன்றேயாயினும் தன்னிலையில் உலக உயிர்களின் மத்தியில பல நிலைகளில் செயல்பட்டு தன் நிலையினை வெளியே காட்டிக் கொள்ளாத நிலையில் இருளாக மறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதாக காணப்படுகிறது. சைவ சமயத்தில் இத்தகைய ஆணவ மலம் இருள் எனவும் இந்த இருளினை உயிர்களால் பார்க்கவோ அளக்கவோ இயலாது எனவும் இம்மலம் பிரபஞ்சம் தோன்றும் முன்பே இருந்து இந்த பிரபஞ்சத்தின் செயல்பாடுகளை தொடங்கச் செய்யும் நிலையிலிருந்து உயிர்களின் உணர்வு நிலைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் காணப்படுகிறது. இம்மலமாகிய இருளினை புலன்களாவோ சிந்தனைகளாகவோ அளக்க இயலாது. உலகில் நாம் காணும் இருள் பிற பொருட்களை மறைத்தாலும் தன் நிலையினை மறைக்காது வெளிப்படுத்திக் காட்டாது உயிர்களின் பார்வையிலிருந்து மறைத் செயல்படக்கூடிய நிலையில் காணப்படுவதால் இதனை இருளினும் இருள் என சைவ சமயம் கூறுகிறது. மேலும் உயிர்களுக்கு உலக வாழ்வில் ஆசை, மோகம், நேசம், கர்வம், சந்தோசம் போன்ற பண்புகளை ஏற்படுத்திக் கொடுத்து உலக வாழ்வில் விரும்பிய பொருள் கிடைத்த நிலையில் இன்பத்தையும் கிடைக்காத நிலையில் துயரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையில் காணப்படுகிறது.
சைவ சமயக் கருத்துப்படி எவ்வாறு அரிசி உமியினால் மூடப்பட்டுள்ளதோ, கடல் நீர் உப்பினால் கவரப்பட்டுள்ளதோ அது போல இந்த ஆணவ மலம் ஆரம்பம் தெரியாத காலத்திலிருந்தே உயிர்களுடன் இணைந்து உயிர்களின் செயல்பாடுகளுக்கு இடையூறாக அமைந்து உயிர்களின் பண்புகளை மறைக்கும் நிலையில் காணப்படுகிறது. மேலும் உயிர்கள் அறியாமையின் விளைவாகத் தான் இவ்வுலகிலுள்ள பொருட்களை மனதில் கொண்டு அவைகளை அடையும் வழிமுறைகளை தேடிச் செல்வதன் மூலமாக புலன் இன்பங்களுக்கு அடிமையுற்று மறுபிறவிக்களுக்குரிய வழிமுறைகளைத் தேடிச் சென்று தனது ஆன்மீகமான தூய்மையான இயல்பினை இழக்கும் நிலையில் காணப்படுகிறது. உயிரின் வாழ்வில் இத்தகைய ஆணவமலம் நிரந்தரமாக காணப்படும் நிலையிலிருப்பதால் இம்மலத்தின் தொடர்புகளிலிருந்து துன்புறும் உயிர்களை விடுவிக்க ஆணவ மலத்தின் சக்தியினை போக்க இறைவன் உயிர்களுக்கு ஆனந்தமான அறிவின் உச்சியான சிவஞானத்தை அளிக்கும் நிலையில், உயிர்கள் ஆணவ மலத்தினால் ஏற்படும் துன்ப நிலைகளிலிருந்த தன்னை விடுவித்து இன்பமாக வாழும் நிலையில் காணப்படுகிறது என சைவ சமயம் கூறுகிறது.
மேலும் உயிர்கள் தன் நிலையில் ஆணவ மலம் இருப்பதனை உணராத நிலையில் காணப்படுவது போல தன்னில் இறையருள் இருப்பதனையும் உணராத நிலையில் காணப்படுகிறது. உயிர்கள் கர்மவினைகளுக்கு காரணமாக உள்ள மலங்களின் தொடர்புகளிலிருந்து விடுவித்துக் கொள்ள இறைவனின் அருள் தேவைப்படுகிறது. எவ்வாறு ஒருவனின் சரீரத்திலுள்ள வியாதி அவனது வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியும் நிலையிலிருப்பது போல உயிர்கள் கர்மவினையின் விளைவுகளால் புலனின்பங்களுக்கு அடிமையுற்று அதன் பயனாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையினை இறைவன் அறிந்த நிலையில் காணப்படுகிறான். ஆனால் எவ்வாறு தன்னருகேயிருக்கும் தோழனை அறியாத நிலையில் இருப்பதுபோல உயிர்களும் தன்னருகேயிருந்து கர்மத்தில் விளைவுகளில் சிக்கி துன்புறும் நிலையிலிருந்து காப்பாற்றும் விடுவிக்கும் நிலையில் இறைவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையினை மறந்த நிலையில் காணப்படுகின்றன. பாற்கடலில் வசிக்கும் மீன் தனது பசியினைப் போக்க சிறு சிறு பூச்சிகளை தேடிச் செல்வது போல உயிர்களும் இறையருளை மறந்து புலன் இன்பங்களை நாடிச் செல்வதன் மூலமாக தனது உண்மை நிலையினை மூழ்கடித்துக் கொள்ளும் நிலையில் காணப்படுகிறது. மேலும் உயிர்களிடத்தில் காணப்படும் ஆணவமலம் உயிர்களின் குணமாக அல்லது உயிரின் குற்றமாக அதாவது எவ்வாறு கண்ணின் முன் தோன்றும் படலம் ஒரு குற்றமாகக் காணப்படுகிறதோ, அது போல உயிரின் உண்மை நிலை மறக்கும் நிலையில் இம்மலம் ஒரு குற்றமாக அமைகிறது. கண்ணின் முன் தோன்றிய படலத்தை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றும் நிலையில் கண் ஒளி பெறுவது போல இறைவனாகிய வைத்தியன் மூலம் ஞானமாகிய வாளினைக் கொண்டு உயிர்களில் காணப்படும் மலமாகிய படலத்தினை அறுக்கும் நிலையில் உயிர்கள் உண்மையறிவினைப் பெறும் நிலையில் காணப்படுகிறது என்று சைவ சமயம் கூறுகிறது.
மேலும் உயிர்கள் இந்த உலகின் உண்மையான இயல்பினை உணராத நிலையில் தான் இத்தகைய உலக இன்ப துன்பங்களில் நாட்டம் கொண்டு துன்புறுகிறது எனவும் இதற்கு மூல காரணம் உயிர்கள் மலங்களுடன் இணைந்து செயல்படுவதேயாகும் எனவும் சைவ சமயம் கூறுகிறது. உயிர்கள் இறைவனின் அருள் சக்தியான திரோதான சக்தியின் பயனாக உலகப் பொருட்களின் உண்மை நிலையினை உணர்ந்து இத்தகைய உலக அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை நிரந்தமற்றவை என்பதனை உணர்ந்து இத்தகைய உலக அனுபவங்களில் நாட்டம் கொள்வதால் ஏற்படும் இன்ப துன்ப நிலைகளைக் கடந்து தன் நிலையில் தூய்மையாக இன்பமான நிலையில் காணப்பட வேண்டும் என சைவ சமயம் கூறுகிறது. உயிர்கள் மலங்களாகிய இருளிலிருந்து விடுபட இறைவன் தனு, கரண, புவன, போகம் என்ற மாயா காரியங்களை தனது கருணையின் அதாவது அழுக்கடைந்த ஆடையினை தூய்மை செய்ய உவர் மண் சேர்ப்பது போல மலங்களின் தொடர்புகளினால் மறைப்பூண்டு செயலற்றுத் துன்புறும் உயிர்களுக்கு இன்பம் தரும் நிலையில் இவைகள் இருந்தாலும் இவைகளையே உயர்ந்தவை, நிலையானவை என்று உயிர்கள் கருதாது என்றும் நிலைத்த இன்பம் தரும் இறையருளை நாடிச் செல்லுதல் வேண்டும் எனவும் இவைகளெல்லாம் இருளில் தடுமாறுபவருக்கு மெழுகுவர்த்தி பயன்படுவது போல உயிர்களின் நிலைகளுக்கு தகுந்தவாறு உதவக்கூடிய நிலையில் உள்ளன எனவும் சைவ சமயம் உணர்த்துகிறது. மேலும் ஆணவ மலச் சேர்க்கையால் சிக்குண்டு துன்புறும் உயிர்கள் விஞ்ஞான கலர் எனவும் ஆணவம், கன்மம் என்ற இரண்டாலும் கட்டுற்று துன்புறும் உயிர்கள் பிரளயா கலர் எனவும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தாலும் கட்டுற்ற உயிர்கள் கலர் எனவும் கருதப்படுகிறது.
சைவ சமயத்தில் ஆணவ மலம் எனில் அணுத் தன்மையைச் செய்வது என்ற நிலையில் பொருள் கொள்ளப்படுகிறத. இத்தகைய ஆணவமலம் ஒன்றாயினும் தன் நிலையில் பல சக்திகளை கொண்டதாய் உயிர்களின் அறிவையும் தொழிலையும் மறைத்து வினை முதலாக செயல்களில் ஈடுபடுத்தி நிலைத்த பொருளை மறைத்து நிலையற்ற உலக நிலைகளில் பங்கு கொள்ளச் செய்து துன்புறச் செய்யும் நிலையில் உள்ளது. இத்தகைய உயிர்கள் இயற்கையில் அறிவுடையதாயினும் மலங்களின் சேர்க்கையால் இருளில் அகப்பட்ட கண் போல எதனையும் அறியாத, உணராத மலங்களின் தன்மைகளில் சார்ந்திருக்கும் நிலையில் உயிர்களின் அறிவுத்தன்மையினை விபரீதமாக்கி உலகின் இன்ப துன்ப போகங்கள் அனைத்தையும் நுகர்பவன் நானே என எண்ணச் சொல்லும் நிலைக்கு அதோநியமிகா சக்தி எனவும், அதோநியமிகம் எனில் கீழே வீழ்த்தும் சக்தி அல்லது பொருளின் உண்மையியல்பினை தவறாக எண்ணச் செய்யும் சக்தி எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
உயிர்களில் காணப்படும் ஆணவ மலம் உயிர்களோடு சம நிறைவு கொண்டதாய் உயிர்களின் அறிவு செயல்களை விளங்கவொட்டாது பிணித்து நிற்கும் ஒன்றாய் மாயை, கன்மங்கள் உயிரின் கண் அடங்கும் நிறைவுப் பொருளாய் உயிர்களில் கலந்துள்ள ஆவண மல பிணிப்பினைப் போக்க இறைவனால் செலுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதால் இதனை ஆகந்துகமலம் அதாவது இடையில் சேர்க்கப்பட்டது என்று பொருள் கொள்ளலாம். அதாவது ஆடையிலுள்ள கறையினை நீக்க சலவைப் பொருட்கள் இணைத்து நன்றாகச் சுத்தம் செய்யும் சலவை தொழிலாளியைப் போல உயிர்களின் வாழ்வில் துன்பத்திற்கு காரணமாயுள்ள ஆணவ மலத்தின் சக்தியிலிருந்து இறைவன் உயிர்களை காப்பாற்ற உயிர்கள் மீதுள்ள கருணையின் விளைவாக கன்மம், மாயை போன்ற மலங்களைச் சேர்த்து காப்பாற்றும் நிலையில் காணப்படுகிறான் என சமயம் கூறுகிறது.
எனவே, உயிர்கள் வாழ்வில் அறியாமையின் விளைவாகச் செய்யும் செயல்களே வினையின் காரணமாக பிறவிச் சூழல் என்ற நிலையினை பெற்று தரும் நிலையில் உள்ளன. உயிர்கள் தன்னிலுள்ள உண்மையறிவின் மூலமாக இத்தகைய உலக இன்ப துன்ப நிலைகளில் நாட்டம் கொள்ளாது அதன் விளைவுகளிலிருந்து நீங்கி பிறவிச் சூழல் என்ற நிலையினை கடந்து இன்பமாக வாழ்தல் வேண்டும் என உயிர்கள் மீது கொண்ட கருணையின் விளைவாக இறைவன் உயிர்களின் பக்குவ நிலைகளுக்குத் தகுந்தாற் போல் செயல்படும் நிலையில் காணப்படுகின்றன. மழை பெய்யும் போது பச்சை மண் கலம் கரையும் நிலையில் காணப்பட்டாலும் அம்மண் கலத்தினை சுட்டபின் மழை பெய்யும் நிலையில் கரையாது மழை நீரால் பாதிக்கப்படாது இருப்பது போல உயிர்கள் பொறிகள் மூலம் உலக இன்ப நாட்டங்களில் சிக்கி துன்புறும் நிலையில் பிறவிச் சூழல் என்ற நிலையால் பாதிக்கப்பட்டாலும் இறைவன் அளிக்கும் திருவருள் ஞானத்தின் மூலமாக உலக செயல்பாடுகளின் தன்மைகளின் விளைவுகளால் நிகழும் துன்ப நிலைகளிலிருந்து நீங்கிதன் நிலையில் இன்பமாக காணப்படுகிறது. மேலும் மாசு படிந்த குளத்து நீரில் தேற்றான் கொட்டையினை போடும் நிலையில் குளத்திலுள்ள மாசுகள் யாவும் அடியில் தங்கி குளத்து நீர் சுத்தமாவது போல உயிர்களில் காணப்படும் மாசுகளான மலங்கள் நீங்கும் நிலையில் உயிர்கள் இறைவனின் திருவருள் ஞானத்தினை உருணம் நிலையில் காணப்படுகிறது. இதில் குளத்திலுள்ள கலங்கிய நீர் மலங்களால் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள உயிர்களுக்கும் அதிலுள்ள மாசுகள் உயிர்களில் காணப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)