திருவாசகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாசகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏகபாதமும் மாலைமாற்றும்! - இடைமருதூர் கி.மஞ்சுளா

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்மறைக் கருத்துகளே சைவத் திருமுறைகளாக வெளிப்பட்டுள்ளன என்பதை, ""நான்மறை நாவன் நற்றமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்'' (1-75-11) என்று திருஞானசம்பந்தப் பெருமானே அருளிச் செய்துள்ள திருப்பாட்டால் அறிந்துகொள்ள முடிகிறது. எப்படியெனில், "தாம் திருவாய் மலர்ந்து அருளிய சொற்கள் அனைத்தும் சிவபெருமானின் திருவாக்கே அன்றி வேறில்லை' என்பதை, "திருஇலம்பையங்கோட்டூர்' பதிகத்தில் ""எனதுரை தனதுரையாக'' என்று பதிகம் முழுவதும் கூறியுள்ளதில் இருந்து தெளிவாகிறது. சிவபெருமான், திருஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்குகளில் நின்று தான் கூறவேண்டுவனவற்றை எல்லாம் ஞானக்குழந்தையின் திருவாக்கின் மூலம் கூறியருளியுள்ளார். எனவேதான் சிவஞான சுவாமிகள், இதை "தேசிகன் வாக்கு' என்றார்.