27/03/2012

இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்

தமிழ் இலக்கியப் பாக்கள் அனைத்துமே முக்னியின் சாறு பிழிந்து புனையப்பட்வையோ என எண்ணும் வகையில்,​​ படிக்குந்தோறும் இன்பம் பயப்பவை;​ நினைக்குந்தோறும் நெஞ்சத்தை குளிர் சாரலால் நனைப்பவை.​
விவிமான கனிகள் விளைந்தாலும் "முக்கனி' என தமிழர்ளால் சிறப்பிக்கப்பெற்றவை மா,​​ பலா,​​ வாழை.​ அவற்றிலும்,​​ இலக்கியத் தோட்டங்ளில் அதிகம் கனிந்து மணம் வீசி,​​ வாசகனை வாசனையாலும்,​​ சுவையாலும் சுண்டி இழுப்பது பலாக்னிதான்.​

னித மனத்தை குரங்குடன் ஒப்பிடுவது வழக்கம்.​ குரங்கு மனத்தை எதனுடன் ஒப்பிடுவது?​ அருவியின் இக்ரையில் நிற்கிறது மந்தி ​(பெண் குரங்கு)​ ஒன்று.​ அருவியைக் கடந்து அக்ரைக்குச் செல்ல அதற்கு ஆசை.​ மரங்கள் அடர்ந்த காடு என்றால் மந்திக்குக் கேட்கவே வேண்டாம்.​ இங்கோ,​​ இடையில் தடுப்பது தண்ணீர்க் காடு!​


அப்போது,​​ பறிப்பார் இல்லாமல் முற்றிய பலாக்கனி ஒன்று அருவி நீரில் விழுந்து மிதந்படி வருகிறது.​ அருவியில் பாய்ந்த அம் மந்தி,​​ பலாப்ழத்தின் மீதேறி அமர்ந்து கொள்கிறது.​ மலைச்சாரலில் உள்ள ஓர் ஊரின் பக்மாகச் சென்று வீழும் அருவியின் துறையை அடைந்தும் பலாப்ழத்திலிருந்து இறங்கிச் செல்கிறது மந்தி.​

பசி நீக்கும் உணவுப் பொருளான பலா படகாகிவிட்டது.​ அருவியைக் கடந்து செல்ல உதவிதால் "பலா'க்கனியை "பால'க்கனி என்றே அழைக்லாம் எனத் தோன்றுகிதல்லவா!​​
அருவிபாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம்புணை யாகச்
சாரல் பேரூர் முன்துறை இழிரும்...​
​(பா..382,​ வரிகள் 9}11)
என,​​ தலைனின் நாட்டு வளத்தைக் கூறும் தலைவியின் கூற்றாகத் தொடர்கிறது,​​ கபிரின் அந்த அகநானூற்றுப் பாடல்.​ அந்த மந்தியைப்போலவே,​​ தலைனும் தான் மேற்கொண்ட செயலில் எத்கைய இடையூறுகள் வந்தாலும் அவற்றைத் தக்க வழிளில் தகர்த்தெறிந்து தன்னை வந்டைவான் என மறைமுமாகக் குறிப்பிடுகிறாள் தலைவி.​
லைனின் மலை நாட்டு வளத்துக்கு மட்டுமல்ல,​​ தலைவியின் மன வளத்தைச் சோதிக்கும் காமத்தின் பாங்கையும் பளிங்கென உவமையாக்க பலாக்னியால் முடியும்.​

யிரோ மிகச் சிறியது.​ கண்வழி புகுந்து நெஞ்சில் வேரோடி உயிரெலாம் படரும் காமமோ மிகப் பெரியது.​ அரசன் அன்று கொல்வான்;​ தெய்வம் நின்றும் கொல்லும் என்பார்கள்.​ காமமோ என்றும் கொல்லும்.​ காதல் பார்வையாலும்,​​ கனிந்த மொழிளாலும் தலைவியின் இதயத்தைக் கடத்திவன்,​​ இப்போது திருணம் செய்யாமல் காலத்தைக் கடத்துகிறான்.​ சித்திர விழியாள் சில நாள் பொறுக்லாம்,​​ ஆனால்,​​ நாள்கள் மாதங்ளாகிவிட்ட பின்பும் மணநாள் குறித்து எவ்வித அறிகுறியையும் காண்பிக்வில்லை அவன்.​ எப்டிப் பொறுப்பாள்?​

கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்கத்தின் கதையாக,​​ காமம் தலைவியின் உயிரை வதைக்கிறது.​ அதை,​​ அவளது தலைனிடம் சொல்ல வேண்டிய இக்கட்டுக்கு உள்ளாகிறாள் இன்னுயிர்த் தோழி.​ தோழியும் பெண்தானே!​ நேரடியாய்ச் சொல்ல அந்த நேரிழையாளுக்கு நெஞ்சில் துணிவேது?​ உவமையால் உணர்த்த நினைக்கிறது இதயம்.​

லைத்து நிற்கும் அவள் பார்வையில்,​​ மலையில் வளர்ந்திருக்கும் பலா மரங்கள் தென்டுகின்றன.​ அவற்றில் உள்ள மெல்லிய கொம்புளில் மிகப் பருத்த பலாக் கனிகள் முற்றித் தொங்குதைப் பார்க்கிறாள் தோழி.​ பலாக் கனியைத் தாங்கும் மெல்லிய கொம்பின் பரிதாப நிலையைச் சொல்லி,​​ தலைவி துன்பம் நீங்கி,​​ இன்பம்பெற வேண்டுமானால் உடனே அவளைத் திருணம் செய்துகொள் என்கிறாள் தோழி,​​ தலைனிடம்.​
வேரல்வேலி வேர்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அதறிந்திசி னோரே?​ சாரல்
சிறுகோட்டுப் பெரும்ழம் தூங்கி யாங்கு,​​ இவள்
உயிர்வச் சிறிது;​ காமமோ பெரிதே.​ ​(18)
என,​​ காமத்தின் தன்மையை "குறுந்தொகை'யில் தோழியின் கூற்றாக,​​ சுளைப்பலா உவமையால் சுவைடச் சொல்வர் வேறு யாருமல்லர்,​​ குறிஞ்சிக் கவிஞர் கபிரேதான்.​

டையெழு வள்ளல்ளில் ஒருவன் பொதிகை மலையில் பொன்னாட்சி தந்த ஆய் என்வன்.​ பகைவர் எதிர்த்து நின்றால் அவர்ளின் தலைகளை அவன் கரங்கள் கிள்ளி எடுக்கும்;​ பரிசில் பெற வருவோருக்கோ அவன் கரங்கள் பொருள்களை அளக்காமல் அள்ளிக்கொடுக்கும்.​

வீமும் ஈரமும் ஒரு கொடியில் மலர்ந்த மலர்ளாய் மணம் வீசுதைத் தமிழக மன்னர்ளிடம் மட்டுந்தான் அதிகம் காண முடியும்.​ அதற்கு ஆயும் விதிவிலக்கல்லன்.​

னிடம் பரிசில் பெற்றுச் செல்தற்காக கூத்தர்கள் சிலர் அவனை நாடி வருகின்னர்.​ அவனது எல்லைக்குள்பட்ட மலைக்காடுளின் வழியே வரும் அவர்கள் இளைப்பாறும் பொருட்டு தங்கள் தோள்ளிலே சுமந்துவந்த மத்ளங்களை பலாரத்தின் கிளைளில் மாட்டித் தொங்விட்டுள்னர்.​
மந்தி ஒன்றின் பார்வையில் மத்ளம் பட்டுவிட்டது.​ சும்மாயிருக்குமா?​ தொடுதொடுவென மனது தொல்லைசெய்ய,​​ விடுவிடுவென மரக்கிளையிலிருந்து இறங்கி வருகிறது.​

மத்ளம் என அறியாத அம் மந்தி,​​ கனிதான் என நினைத்து கனிவோடு தட்டுகிறது.​ அதிலிருந்து இன்னிசை வருகிறது.​ அருகேயுள்ள குளத்திலிருக்கும் ஆண் அன்னங்களோ அந்த இசைக்குத் தக்படி குரலெழுப்புகின்றன.​ விளைவு...இசையும் பாட்டும் அங்கே இலமாக அரங்கேறுகின்றன.​
மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் றெண்கண் கனிசெத் தடிப்பின்
அன்னச் சேவல் மாறெழுந் தாலும்
கழல்தொடி ஆஅய் மழைவழ் பொதியில்..​
​(புறநானூறு,​​ 128,​ வரிகள் 1}5)
எனத் தொடரும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,​​ இப்டிப்பட்ட சூழலில் பகைருக்கு இங்கென்ன வேலை என்று கூறி ஆய் மன்னின் வீரத்தைப் புகழ்கிறார்.​

லாப்ழத்தை "வாய்ப் புசிக்கும்'; மத்ளமோ இசையால் காதுளைக் குளிவைக்கும்.​ இங்கே இரண்டையு கலக்கச் செய்த மடமந்தி நடத்திய கூத்தை வேறு எங்கு காண "வாய்ப்பு சிக்கும்?​'

ருவத்தில் பெரிதாயிருந்தாலும்,​​ உவமையாக எடுத்தாள எளிதாய் இருப்தாலோ என்னவோ வருக்கை ​(வேர்ப்பலா)​ புலவர்ளின் பாடல்ளில் தனக்கென ஓர் இருக்கை கொண்டுள்ளது என்றால் மிகையில்லைதானே!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: