22/02/2012

வலி - மிகா இடங்கள்!

வல்லெழுத்து மிகாமல் (வலிவருவது "வலிமிகாமை எனப்படும்சிறியபெரியநடைபெற்றஅன்றைய என்பவை பெயரெச்சங்கள்பெயரெச்சங்களின் பின் வல்லெழுத்து மிகாது. (.கா.) சிறிய பெட்டிபெரிய பையன்நடைபெற்ற பொதுக்கூட்டம்அன்றைய பேச்சு.

துணி கிழிந்தது - என்ற தொடர் தொகாநிலைத் தொடர்இத்தொடரில் எழுவாய் முதலில் இருப்பதால் இது எழுவாய்த் தொடரானதுஎழுவாய்த் தொடரில் பெரும்பாலும் வலி மிகாது.

அதுஇதுஎதுஅவைஇவைஎவைஅன்றுஇன்றுஎன்று ஆகியவற்றின் பின் வலிமிகாது. (.காஅது செய்இது பார்எது தவறுஅவை பறந்தனஇவை காண்எவை சாப்பிட்டனஅன்று காண்போம்இன்று போவோம்என்று சாப்பிடுவோம்.

அத்தனைஇத்தனைஎத்தனை என்று வரும் இடங்களில் வலி மிகாது. (.காஅத்தனை சட்டைகள்இத்தனை செடிகள்எத்தனை கோடிஎத்தனை காலம்.

அவ்வாறுஇவ்வாறுஎவ்வாறுஅவ்வளவுஇவ்வளவுஎவ்வளவு என்று வரும் இடங்களில் வலிமிகாது. (.காஅவ்வாறு எழுதுஇவ்வாறு பாடுஎவ்வாறு செய்வாய்அவ்வளவு பேர்இவ்வளவு காலம்எவ்வளவு தொலைவு.

ஒருஇருஅறுஎழு என்று வரும் இடங்களில் வலிமிகாது. (.காஒரு தடவைஒரு தரம்இரு காகங்கள்இரு படங்கள்அறுசுவை உணவுஎழுகடல்.

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாதுஇரண்டு சொற்கள் நின்று இரண்டாம் வேற்றுமை "உருபு தொக வருவது இரண்டாம் வேற்றுமைத் தொகை. (.காவிடுதலை பெற்றதுகுறள் கற்றான்பொன் சேர்த்தான்தமிழ் படித்தார்நீர் குடித்ததுபங்கு பிரித்தான்பறவை பிடித்தான்தேர் செய்தான், (பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு).
நான்காம் வேற்றுமைத் தொகையில் (குஉயர்திணைப் பெயர்களின் பின் வலி மிகாது. (.காபொன்னி கணவன் (பொன்னிக்குக் கணவன்), ஊர் போயினர் (ஊருக்குப் போயினர்), பள்ளி சென்றனர் (பள்ளிக்குச் சென்றனர்).
ஆறாம் வேற்றுமைத் தொகையில் (அதுஉடையநிலைமொழி உயர்திணையாய் இருந்தால் வலி மிகாது. (.கா.) கண்ணகி கைதம்பி துணிகாளி கோயில்ஐயனார் கோயில்.

ஏழாம் வேற்றுமைத் தொகையில் (இல்உள்இடம்பின்கண்பால்கீழ்மேல் முதலியனநிலைமொழி உயர்திணையாய் இருந்தால் வலி மிகாது. (.காவாய் புகுந்தது.

வினைத்தொகையில் வலி மிகாது. (.காசுடுசோறுபாய்குதிரைஒலிகடல்குடிதண்ணீர்சுடுகாடு இவை வினைத்தொகைகள்மூன்று காலம் (இறந்தகாலம்நிகழ்காலம்எதிர்காலம்காட்டும் விகுதி மறைந்து வருவது வினைத்தொகை.

எழுவாய்த் தொடரில் வலி மிகாது. (.காபாம்பு கடித்ததுயானை பெரிது.
அடுக்குத்தொடரில் வலி மிகாது. (.காபூச்சிபூச்சிபார்பார்படபடகிடுகிடுசலசலகலகல.
உம்மைத் தொகையில் வலி மிகாது. (.காமுத்துபவளம்செடிகொடி.
பெயரெச்சம்வினையெச்சத்தின் பின் வலி மிகாது. (.கா)கெட்டதயிர்எழுதின பாட்டுவந்து பார்த்தார்நின்றுபோனார்.

ஒருஇருஅறுஎழுஇரண்டுமூன்றுநான்குஐந்துஆறுஏழுஒன்பதுநீபலசில ஆகிய இச்சொற்களுக்குப் பின் வருமொழி முதலில்  வருக்கம் இருந்தால் வல்லெழுத்து மிகாது.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிற பெயரெச்சங்களின் பின்வரும் வல்லெழுத்து மிகாதுஓடிய குதிரை என்னும் தொடரிலுள்ள ஓடிய என்பது பெயரெச்சம்ஓடாத குதிரை என்னும் தொடரில் ஓடாத என்பது ஈறுகெட்ட பெயரெச்சம்ஓடாக் குதிரை என்னும் தொடரிலுள்ள ஓடா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்இந்த ஈறுகெட்ட எதிர்றைப் பெயரெச்சங்களின் பின் வரும் வல்லெழுத்து மிகும்ஈறுகெடாத பெயரெச்சத்தின் பின் வரும் வல்லெழுத்து மிகவே மிகாது.

கூப்பிடும் விளிப்பெயர், (தம்பீபோவியங்கோள் வினைமுற்று (வாழி பெரியோய்வீழ்க கொடுமைஆகிய இவற்றின் பின் வல்லெழுத்து (வலிமிகாது.

ன்றுந்துண்டு என்று முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வல்லெழுத்து மிகாதுஇலக்கண விதிப்படி மென்தொடர்க் குற்றுகரச் சொற்களுக்குப் பின் வல்லெழுத்து மிகாது. (.கா.) என்று கூறினார்வந்து கேட்டார்கண்டு பேசினார்நன்று பேசினாய்.

இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடரில் வலி மிகாது. (.கா.) ஆதிபகவன்தேசபக்தி.

யா என்னும் கேள்வி வினாக்களுக்குப் பின் வலி மிகாது. (.கா.) அவனா சொன்னான்?, தம்பியோ கேட்கிறான்யா சிறியன? (யா-யாவை).
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின் "கள்' "தல்என்னும் விகுதிகள் சேரும்போது வலி மிகத் தேவையில்லைவலி மிகுந்தாலும் தவறில்லை. (.கா.) எழுத்துகள்வாக்குகள்வாழ்த்துகள்தோப்புகள்தூற்றுதல்வாழ்த்துதல்கூம்புதல்.

இப்படி எழுதுவதற்கு விதி உண்டாஎன்று கேட்பவருக்கு,
"இடைச்சொல்உரிச்சொல்வடசொல் இவற்றுக்குச் சொல்லிய விதிகளுள் கூறப்படாதனவும்போலியும்மரூஉவும் பொருந்திய வகையில் புணர்தலைக் கொள்ளுதல் அறிவுடையோர் யாவர்க்கும் முறையாகும்என்று நன்னூல் சூத்திரம் விடையளிக்கிறதுஆனால்பழைய நூல்களிலும்புதிய நூல்களிலும் வாக்குக்கள்எழுத்துக்கள்வாழ்த்துக்கள்வகுப்புக்கள்கருத்துக்கள் என்றே அச்சாகியுள்ளதைக் காணலாம்இவை செவிக்கு இனிமை தராதிருப்பதால், (இன்னோசை கருதிவலி மிகாமல் எழுதுவதே சிறந்ததாகும்.

(குறிப்பு: "வலி மிகும் இடங்கள்மற்றும் "வலி மிகா இடங்கள்ஆகிய இவ்விரு கட்டுரைகளும் தொல்காப்பியம்நன்னூல்மற்றும் .கி.பரந்தாமனாரின் "நல்ல தமிழில் எழுதுவது எப்படி?', நல்ல தம்பியின் "தாய்மொழியில் பிழைநீக்கி எழுதப் பழகுவோம்', என்.ஸ்ரீதரனின் "பிழையின்றித் தமிழ் எழுதுவோம்ஆகிய நூல்களை ஒப்புநோக்கி எழுதப்பட்டவை).

நன்றி - தமிழ்மணி

1 கருத்து:

Sankar சொன்னது…

>>> நான்காம் வேற்றுமைத் தொகையில் (கு) உயர்திணைப் பெயர்களின் பின் வலி மிகாது. (எ.கா) பொன்னி கணவன் (பொன்னிக்குக் கணவன்), ஊர் போயினர் (ஊருக்குப் போயினர்), பள்ளி சென்றனர் (பள்ளிக்குச் சென்றனர்).

பள்ளி என்பது உயர்திணை இல்லையே ? பிறகு எப்படி இது பொருந்தும் ?