கல்லும் வில்லும் கைத்தடியும் கொண்டு வேட்டையாடித்திரிந்த மனிதன் உணவுக்காக தானிய சாகுபடி முயற்சியில் ஈடுபட்டான், அப்போது அவன் பயிர்சாகுபடி பற்றி ஏதும் அறியாத நிலையில் தான் இருந்தான். அந்நிலையில் அநுபவம் சில பாடங்களை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும். கட்டாந்தரையில் விதைகளைப் போட்டால் பறவைகள் அவற்றைப் பொறுக்கித் தின்று விடுதல் கூடும், எறும்புகளும் இழுத்துச் சென்று விடும்.
மேலும் மழை பெய்யும் போது மழைநீர் விதைகளை அரித்துச் சென்று விடுதல் கூடும். எனவே நிலத்தைக் கிளறிப்புழுதியாக்கி, அப்புழுதியில் விதைகளை விதைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டான். ஆனால் காட்டு மிராண்டியாக அநாகரிக நிலையில் வாழ்ந்த அவனுக்கு உழவுத் தொழில் பற்றி எதுவும் தெரியாது. உழுவதற்கான கருவிகள் எவையும் அவனிடம் இல்லை. இந்நிலையில் நிலத்தில் கிடக்கும் கிழங்குகளைத் தின்பதற்காகப் பன்றிகள் மண்ணைத் தோண்டிக் கிளறிப் புழுதியாக்கியிருப்பதைக் கண்டான். அவ்வாறு பன்றிகளால் கிளறிப்புழுதியாக்கப்பட்ட இடங்களில் கானவர் மழைக்காலத்தில் தினை விதைத்தனர். அங்ஙனம் விதைத்த தினை முளைத்து வளர்ந்து விளைந்தது.
பன்றிகள் கிளறிக்கிளைத்த புழுதியில் கானவர் தினை விதைத்தமை குறித்து,
‘அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
கடுங்கட் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
முந்து விளை யாணர்” - புறநானூறு : 168
(அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச் சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக் கிளறித்தன் இனத்தோடு கூடித் தறுகண்மையுடைய பன்றிகள் உழுத புழுதியில் நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்துக் குறவர் அந்நிலத்தை உழாமல் அதுவே உழவாக வித்திய பரிய தோகையுடைய சிறிய தினை முற்பட விளைந்த புதிய வருவாயாகிய கதிர்) என்று புறநானுறு கூறுகிறது.
‘கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
றலை விளை கானவர் கொய்தனர்” - ஐங்குறுநூறு : 270
என்றும் ‘கேழல் உழுத கரிபுனக் கொல்லை “ - ஐந்தினை எழுபது : 11
என்றும் பிறநூலார் இது குறித்துக் கூறும் செய்தி நம் கவனத்துக்குரியதாகும்.
தினைக் கதிர் விளைந்து முற்றிய காலத்தில் பகற்பொழுதுகளில் கிளி, மயில் முதலிய பறவைகளும் இரவுப் பொழுதுகளில் பன்றி, யானை முதலிய விலங்குகளும் தினைக் கதிரைத் தின்று நொக்கி விடுகைக்கு வரும். எனவே, அவற்றைக் காவல் காக்கும் பொறுப்பு இப்பொழுது மனிதனை வந்தடைந்தது. பகற்பொழுதில் பெண்களும் இரவு நேரங்களில் ஆண்களும் தினைப் பயிரைக் காவல் காத்தனர், ஆண்களும் பெண்களும் தினைப்புனம் காத்தமை குறித்துச் சங்க இலக்கியங்களில் குறிஞ்சித் திணைப் பாடல்கள் விரிவாகவும் சுவையாகவும் பேசுகின்றன.
இதுவரை, இயற்கையாகக் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள் முதலியவற்றையும் வேட்டையாடிய விலங்குகளின் ஊனையும் தின்று உயிர்வாழ்ந்த மனிதன் முதன் முதலாகத் தன் உடல் உழைப்பைப் பயன்படுத்தித் தானியங்களை உற்பத்தி செய்யத் தொடங்கினான். உற்பத்தி செய்ததானியங்களை அறுவடை செய்தல், சேமித்துப் பாதுகாத்தல் என்ற புதிய வேலைகள் மனிதனை வந்தடைந்தன. கால வோட்டத்தில் நிகழ்ந்த சமூகவளர்ச்சியில் விதைப்பதும். பயிர்களைப் பாதுகாப்பதும் விளைந்த தானியங்களைச் சேமித்து வைப்பதும் மனிதனை வந்தடைந்த புதிய அனுபவமும் வேலையும் ஆகும். இதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.
‘நிலத்தைக் கிளறிப் புழுதியாக்கிப் பண்படுத்திச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும்” என்பதைக் காலமும் அனுபவமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தன. மக்கள் தொகைப் பெருக்கமும் உணவுப் பற்றாக் குறையும் கூடுதலான நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டுவர மனிதனைத் தூண்டின. காட்டை அழித்துத் தான் நிலத்தைப் பயன் பாட்டுக்குக் கொண்டுவரமுடியும். ஆனால் காட்டை வெட்டி அழிப்பதற்கும் நிலத்தை உழுவதற்கும் அவனிடம் கருவிகள் ஏதும் இல்லை. கற்கருவிகளும் கைத்தடியும் வில்லுமே அவனிடமிருந்த கருவிகள், இரும்பைப் பற்றி மனிதன் இன்னும் அறிந்திருக்க வில்;லை. அதன் உபயோகம் குறித்து அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால் நெருப்பின் உபயோகத்தை அவன் நன்கு அறிந்திருந்தான். எனவே, புதர் மண்டிக் கிடந்த நிலங்களைத் தீயிட்டு அழித்தான். அவ்வாறு அழித்துத்தான் நிலத்தைச் சாகுபடிக்கு ஏற்றதாகத் திருத்திப் பண்படுத்தினான். திருத்திய நிலத்தில் வரகும் தினையும் பயறும் விதைத்தான். இச்செய்தி களைச் சங்க நூல்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றன.
‘கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
கருவி வானம் தலை இ”
(வேட்டுவர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைகக்கண் ஐவன நெல்லோடு வித்தி இருட்சியுற அழகு பெற்றுக் கோடை மிகுதியில் ஈன்றலைப் பொருந்தாத தினைக்கு இழு மென்னும் ஓசையுடன் மின்னலும் இடியும் முதலாகிய தொகுதியுடைய மழைத்துளி சொரிந்தது ) என்று புற நானூறு (159)
கூறுகிறது.
தானிய சேமிப்பும் பாதுகாப்பும்
மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்தில் உணவைச் சேமித்துப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படவில்லை. அதற்குரிய சூழ்நிலையும் சமூக அமைப்பும் ஏற்பட்டிருக்க வில்லை, உணவுக்காக வேட்டையாடுதலோடு, கனிகள் முதலியவற்றைத் தேடித்தின்று பசியைப் போக்கிக்கொண்ட அவன், வேறு தொழில் எதையும் அறிந்திருக்கவில்லை. கிடைத்த உணவைக் கிடைத்த இடத்தில் தின்று உயிர் வாழ்;ந்தான். சில நேரங்களில் பெரிய விலங்குகள் வேட்டையில் கிடைத்து, கூட்டத்தார் அனைவருடனும் உண்டதுபோக எஞ்சியதை வெயிலில் உலர்த்திச் சேமிக்கப் பழகியிருந்தான். இலக்கியங்கள் இதனை ‘வாடூன்” என்று குறித்தன. அவ்வப்போது ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையும் பசியும் பட்டினியும் அவனை அவ்வாறு சேமிக்கத் தூண்டின.
தற்போது, தான் விளைவித்த தாவர உணவாகிய வரகு, தினை முதலிய வற்றையும் சேமித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்பட்டது. அவற்றின் சேமிப்புக் காகக் குதிர்கள் அமைக்கவும் அவன்கற்றுக் கொண்டான் சாகுபடியும் சேமிப்பும் காலத்தின் கட்டாயமாயின . மனிதனை நரமாமிசம் உண்ணத்தூண்டிய காரணிகளே, இப்போது நரமாமிசம் புசித்தலைக் கைவிட்ட நிலையில், உணவு தானியங்களைச் சாகுபடி செய்யவும் சேமிக்கவும் தூண்டின.
குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் தம் உணவுத் தேவைக்காக வேட்டையாடுதலோடு வரகு, தினை முதலியவற்றின் சாகுபடியையும் மேற்கொண்டனர், அத்துடன் தேனழித்தல் கிழங்ககழ்தல் முதலிய வேலைகளையும் செய்தனர். கானவர் தேனழித்தது பற்றியும் கிழங்ககழ்ந்தது பற்றியும் ‘ தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்” என்று மலைபடுகடாம் கூறுகிறது. கானவர் தம் குடியிருப்புக்குப் பக்கத்தில் காட்டைச் சுட்டுத்திருத்திய நிலத்தில் தினை விதைத்தனர். தினைவிளைவிக்கும் வேலையைப் பெண்களே செய்தனர். நிலத்தைக் கிளறி விதைத்தல், களைபறித்தல், கிளி கடிதல், கதிர் அறுத்தல், தினைகுற்றுதல் முதலிய வேலைகளைப் பெண்களே செய்தனர்.
காதற்களமான தினைப்புனம்
தினைப்புனங்கள் இளைஞர்களின் காதற்களங்களாக விளங்கின. இதனைச் சங்க இலக்கியங்கள் காதற்சுவை நனி சொட்டச் சொட்டப் பேசுகின்றன. தினைக்கதிர்களைப் பறவைகள் தின்று விடாமல் தடுத்துக் காவல் காக்கும் வேலையைப் பெண்களே செய்தனர். தினைப்புனத்தைக் காவல் காத்துக் கிளியோட்டிக் கொண்டிருந்த வள்ளியை;த தேடி வந்த வேலனாகிய முருகன், மானைத் தேடி வந்ததாகக் கதையளந்து காதல் செய்து அவளை மணம் முடித்ததை வள்ளி திருமணம் நாடகம் நமக்குக் காட்டுகிறது. தலைவி, தினைப் புனத்தில் கிளியோட்டிக் காவல் காத்துக் கொண்டிருந்தாள், அவளை நாடிவந்த வேட்டுவ இளைஞன் ‘ வயமான் அடித்தேர்வான் போல” (கலித்தொகை குறிஞ்சிக் கலி) வந்து தினைப்புனம் காத்தவளைச் சந்தித்தான். பின்னர் இருவருக்கும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தது. இது குறித்துச் சங்க இலக்கியங்களில், குறிஞ்சித்திணைப் பாடல்கள் விரிவாகப் பேசுகின்றன.
கானவர் அமைத்த பரண்கள்
யானை, பன்றி முதலிய விலங்குகள் இரவு நேரங்களில் வந்து தினைப் புனத்தை அழித்து விடாமல் ஆண்கள் காவல் காத்தனர். அவர்கள் இரவு நேரக் காவலுக்காக மரங்களின் மேல் பரண் அமைத்துக் காத்தனர், யானைக்கு எட்டாத உயரத்தில் பரண்கள் அமைத்தனர்.
‘வேழங்காவலர் குரம்பை”
(யானையைப் புனத்தில் தின்னாமல் காக்கின்ற தொழிலையுடையார் இதண் மேல் கட்டின குடில் ) என்றும்
‘ கழுதிற் சேணோன்”
(பரண்மேல் இருந்த, யானை முதலியவற்றுக்கு எட்டாதவன்) என்றும் பெரும்பாணாற்றப்படை (51) மலைபடுகடாம் (243) முதலிய நூல்கள் இதுபற்றிக் கூறுகின்றன.
இரவில் பரண்மீதிருந்து தினைப்புனம் காத்த கானவன் யானை தன் துணையாகிய பிடியுடன் தினைப் புனத்தை மேய வந்த ஓசையைக் கேட்டான், மழைக் காலத்து இரவாகையால் கானவன் கண்ணுக்கு யானை தெரியவில்லை. இடியும் மின்னலுமாக இருந்த அந்த நேரத்தில் ஓசைவந்த திசையை நோக்கி அவன்தன் கையில் இருந்த கவணையால் கல்லை வீசினான். விசையுடன் வீசப்பட்ட அக்கல் மலைமேல்; இருந்த வேங்கைமரத்தின் ஒள்ளிய பூக்களைச் சிதறி, ஆசினிப் பலாவின் பழங்களை உதிர்த்து, தேனிறாலைச் சிதைத்து மரத்தின் துணர்களைக் குலைத்து, குலை பொருந்திய வாழையின் மடலைக் கிழித்துப் பலாப்பழத்துள் தங்கியது” என்று கலித்தொகை கூறுகிறது.
‘இடி உமிழ்பு இரங்கிய விரைபெயல் நடுநாள்
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து
பிடியொடுமேயும் புன்செய்யானை
அடியொதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்
இறுவரை வேங்கை ஓள் வீசிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிரா
தேன் செய்இறா அல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கி
குலையுடைவாழைக் கொழுமடல் கிழியா
பலவின் பழத்துள் தங்கும்” என்னும் கலித் தொகைப் (குறிஞ்சிக்கலி 5 ) பாடலில் எயினர்களின் கவண் எறியும் கை வண்ணம் குறித்துக் கபிலர் கவினுறப் பாடியுள்ளார். இ;ங்கே, கல்லும் கவணும் எயினரின் வேட்டைக் கருவிகளாக விளங்கியதைக் கலித்தொகை காட்டுகிறது.
மனிதன் காட்டு மிராண்டி நிலையிலும் அநாகரிக நிலையிலும் வாழ்ந்த காலகட்டத்தில் வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டு வேட்டைக் கருவிகளாகப்பயன்படுத்தப்பட்டன. காட்டு மிராண்டி நிலையின் தலைக் கட்டத்தில்தான் வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று எங்கல்ஸ் அவர்கள் கருதுகிறார்கள். இது குறித்து அவர் கூறுவதாவது”. வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டதில் இருந்து காட்டு மிராண்டி நிலையின் தலைக்கட்டம் தொடங்குகிறது. இதனால் காட்டு மிருக இறைச்சி ஒழுங்காக சாப்பாட்டுக்குக் கிடைக்கிற உணவுப் பொருளாக அமைந்தது. வேட்டையாடுதலும் ஒரு சகஜமான தொழிலாயிற்று”.
வில் நாண், அம்பு கூட்டாக அமைந்த ஒரு கருவியின் தொகை ஆகும். அதை சிருஷ்டிக்கிறதென்றால் அதற்கு முந்தி வெகுகாலமாகச் சேகரித்து வந்த அனுபவமும் கூர்மைப் படுத்தப் பட்ட புத்திபலமும் இருந்திருக்க வேண்டும். அதன் விளைவாக இதரபல புதுப்படைப்புகளும் அதே சமயத்தில் அறிந்து வைத்திருக்க வேண்டும். வில் அம்புகளோடு பழக்கப்பட்டிருந்த போதிலும் மண்பாண்டங்களைச் செய்யும் கலையை இன்னும் அறிந்திராத (இந்தக் கலை அநாகரிக நிலைக்கு மாறிச்செல்வதின் ஆரம்பத்தைக் குறிக்கிறது என்று மார்கன் கருதுகிறார்.) மக்கள் சமூகங்களை ஒப்பு நோக்கினால், இந்த ஆரம்பக்கட்டத்தில் கூட,கிராமம் கிராமமாகக் குடியமைத்துத்தங்குவதின் ஆரம்ப நிலைகளைப் பார்க்கிறோம். மரத்தால் செய்த கலயங்கள் சாமான்கள் நாரில் இருந்து (தறியில்லாமல்) கைவிரல்களால் துணி நெய்தல், நாரைக் கொண்டோ அல்லது நாணல் புல்லைக் கொண்டோ கூடைகளை முடைதல், பட்டை தீட்டப்பட்ட (புதிய கற்காலத்தைச் சேர்ந்த ) கற்கருவிகள் ஆகிய ஜீவனோபாயத்திற்குரிய சாதனங்களை உற்பத்தி செய்வதில் ஓரளவுக்குத் தேர்ச்சியடைந்திருப்பதையும் பார்க்கிறோம்.
மேலும் பெரும்பாலான இடங்களில் நெருப்பும் கற்கோடாரியும் கொண்டு மரத்தைக்குடைந்து ஓடம் செய்யப்பட்டுவிட்டது. சில இடங்களில் வீடுகட்டுவதற்கு மரக்கட்டைகளும் பலகைகளும் செய்யப்பட்டுவிட்டன. உதாரணமாக, இந்த முன்னேற்றங்களையெல்லாம் வடமேற்கு அமெரிக்க இந்தியர்களிடையே காணலாம். இவர்களுக்கு வில்லும் அம்பும் பழக்க மானவைதான். ஆனால் மண்பாண்டக் கலையைப் பற்றித் தெரியாது. அநாகரிக நிலைக்கு எப்படி இரும்புவாள் நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ, நாகரிக நிலைக்குத் துப்பாக்கி வகையறா எப்படி நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ அது போலத்தான் காட்டடுமிராண்டி நிலைக்கு வில்லும் அம்பும் நிர்ணயமான ஆயுதங்களாக விளங்கின”
(நூல் : குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)
வேட்டுவர்களின் வில்லாற்றல்
வேட்டுவர்கள் வில்லாற்றலில் சிறந்து விளங்கினர். அதற்கு கண சமூகத்தலைவர்களில் ஒருவனான வல்வில் ஓரியின் வில்லாற்றலே சிறந்த சான்றாகும். ஓரி என்பவன் கொல்லி மலைத்தலைவன், அவன் தன் வில்லாற்றல் காரணமாகப் புலவர்களால் வல்வில் ஓரி என்று சிறப்பிக்கப்பட்டான். அவனது வில்லாற்றலை வன் பரணர் புறப்பாடல் ஒன்றில் வியந்து போற்றுகிறார்.
‘வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிதுறீஇப்
புழற்றலைப் புகர்க்கலையுருட்டி யுரற்றலைக்
கேழற்பன்றி வீழவயல
தாழற்புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன்”
- புறநானூறு: 152
( யானையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு, பெரியவாயை யுடைய புலியை இறந்து படச் செய்து, துளை பொருந்திய கொம்பையுடைய தலையினையுடைய புள்ளிமான் கலையை உருட்டி, உரல் போலும் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து அதற்கு அயலதாகிய ஆழ்தலையுடைய புற்றின் கட் கிடக்கும் உடும்பின் கண் சென்று செறியும் வல்வில்லால் உண்டாகிய வேட்டத்தை வென்றிப் படுத்தியிருப்பவன்: புகழமைந்த சிறப்பினையுடைய அம்பைச் செலுத்தும் தொழிலில் மிகச்சென்று உறுதற்குக் காரணமாகிய கொலைவன் ) என்று ஓரியின் வில்லாற்றல் வியந்து போற்றப்படுகிறது.
வேட்டுவச்சிறாரின் விற்பயிற்சி
வேட்டுவச் சிறுவர் விளையாட்டுப் பருவத்திலேயே விற்பயிற்சியைத் தொடங்கிவிடுவர், வளார்களில் மரற்கயிற்றைப் பிணித்து வில்லாகச் செய்வர். உடை வேலமரத்தின் உள்ளே புழையுடைய வெள்ளிய முள்ளை ஊகம் புல்லின் நுண்ணிய கோலிற் செருகி அம்புகளாகச் செய்வர். அவ்வம்புகளை வில்லில் தொடுத்து எய்து விளையாடுவர். இது குறித்துப் புறநானூறு அழகாகப்பேசுகிறது.
‘உழுதூர் காளை யாழ்கோடன்ன
கவை முட்கள்ளிப் பொரியரைப் பொருந்திப்
புது வரகரிகாற் கருப்பை பார்க்கும்
புன்றலைச் சிறாஅர் வில்லெடுத்தார்ப் பிற்
செங்கட் குறுமுயல் கருங்கலனுடைய
மன்றிற் பாயும் வன்புலம்” - புறநானூறு : 322
(வன்புலமாகிய முல்லை நிலத்தில் வாழும் வில்லேருழவரான வேட்டுவர்களின் சிறுவர்கள் வரகுக் கொல்லைகளில் வரகினது அரிகாலைப் பொருந்தியிருக்கும் காட்டெலிகளை வேட்டமாடுவர். எலியொன்றைக் கண்டதும் அவர்கள் ஆரவாரம் செய்வர். அவ்வோசையைக் கேட்டு, அருகேமேயும் முயல்கள் அண்மையில் உள்ள அவர்களது குடிசையின் முற்றத்தில் இருக்கும் மட்கலங்களின் இடையே துள்ளிப் பாய்ந்து செல்லும். அதனால் மட்கலங்கள் உருண்டு உடைந்து கெடும்.) என்று அக்காட்சியைப் புறநானூற்றில் ஆவூர்கிழார் அழகுறக் காட்டுகிறார்.
‘வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை
புள்ளன்தின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடைவான் முள்
ஊக நுண் கோற் செறிந்த அம்பின்
வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந்தழீஇய அங்குடிச்சீறூர்” - புறநானூறு: 324
(வேட்டுவர்கள் காட்டுப் பூனையின் ஆணைப் போல் வெருண்ட பார்வையும் பெரிய தலையும் உடையவர்கள். பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய
வெளுத்த வாயையுடையவர்கள். அவர்களின் பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்பிநட்புக் கொண்டு உறையும் பண்பினை உடையவர்கள். அச்சிறுவர்கள் சிறிய இலைகளையுடைய ஊகம் புல்லில் செருகிய அம்பை வளாரால் செய்யப்பட்ட வில்லில் வைத்து வளைத்துப் பருத்தியாகிய வேலியடியில் உறையும் காட்டெலிகளை வீழ்த்துவதற்குக் குறி பார்த்து எய்து விளையாடுவர். இத்தகைய புன்செய் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சீறூர்) என்று ஆலத்தூர் கிழார் அமைவுறக் கூறுகிறார்.
எயினர்களின் விற்பயிற்சியும் வில்லாற்றலும் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடுவதற்கே பயன்படுத்தப்பட்டன என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. மண்ணாசை மற்றும் அதிகார போதை காரணமாகப் போர்த் தொழிலில் ஈடுபட்டு சக மனிதர்களைக் கொல்லும் நிலையினை மனித சமூகம் இன்னும் எய்தவில்லை என்பதனை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பறவை வேட்டை
கானவர் தினை பயிரிட்ட செய்தி முன்னர் கூறப்பட்டது. அவர்கள் உணவுக்காக மட்டுமல்லாது கானக் கோழி, இதற் பறவை, புறா முதலிய பறவை களைப் பிடித்துச் சமைப்பதற்கும் தினையைப் பயன்படுத்தினர். எயினப் பெண்கள் அப்பறவைகளைப் பிடிப்பதற்காகத் தம் குடிசைகளின் முற்றத்தில் மான் தோலை விரித்து அதில் தினையைப் பரப்பிவைப்பர். அப்பறவைகள் அதில் வந்து அமர்ந்து தினையை மேயுங்கால் எயிற்றியர் அவற்றைப் பிடித்துக் கொன்று சமைப்பர். இதனை,
‘மானதட் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியோடிதல் கவர்ந்ததுண்டென
ஆரநெருப்பினாரல் நாறத்
தடிவாந் திட்ட முழு வள்ளாரம்
இரும்பே ரொக்கலொ டொருங்கினிதருந்தித்
தங்கினை சென்மோ பாண” - புறநானூறு 320
( பாணனே மான் தோலில் பரப்பி உலரவைத்த தினையரிசியைக் காட்டுக் கோழியும் இதற் பறவைகளும் கவர்ந்துண்டு அகப் பட்டனவாக, சந்தனக் கட்டையாலாகிய நெருப்பில் சுட்டுத் துண்டு துண்டாக அறுத்து நிறைத்த இறைச்சியை ஆரல் மீனின் நாற்றமும் உடன் கமழ, கரிய பெரிய சுற்றத் தோடே கூடியிருந்து இனிது உண்டு அவ்விடத்தே தங்கிச் செல்வாயாக )என்றும்
படலை முன்றிற் சிறு தினை யுணங்கல்
புறவு மிதலு மறவு முண்கெனப்
பெய்தற் கெல்லின்று பொழுதே” - புறநானூறு : 319
(படல் கட்டிய முற்றத்தில் சிறிய தினையாகிய உலர்ந்ததனைப் புறாக்களும் இதற்பறவைகளும் முற்றவும் உண்க என்று தெளித்து அவற்றைப் பிடித்துச் சமைப்பதற்கு ஞாயிறு மறைந்து இரவாயிற்று) என்றும் கானவர், குடிசை முற்றத்தில் தினையைத் தெளித்து புறாவையும் இதற்பறவைகளையும் காட்டுக் கோழியையும் பிடித்துச் சமைத்தனர் என்ற செய்தியை ஆலங்குடிவங்கனாரும் வீரை வெளியனாரும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
எயினரது ஊரும் அரணும்
எயினரது ஊர்கள் மிளை என்றும் காட்டரண் என்றும் கூறப்படுகின்ற காவற்காடு சூழ அமைந்திருந்தன.
‘ஊர், அருமிளை இருக்கையதுவே” - புறநானூறு :326
(ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின்கண் உள்ளது)
‘வாழ்முள்வேலிச் சூழ்மிளைப் படப்பை”
பெரும்பாணாற்றுப்படை : 126
(ஊர், முள்ளையுடைத்தாகிய வாழ்முள் வேலியினையும் அதனைச் சூழ்ந்த காவற் காட்டினையுடைத்தாகிய பக்கத்தையும் உடையது)
‘ அருங்குழு மிளை “ - மதுரைக் காஞ்சி 64
(பகைவர் சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காடு)
என்னும் தொடர்கள் குறிஞ்சி நிலத்து வேட்டுவரது ஊர்களைச் சார்ந்து அமைந்திருந்த காவற்காடுகள் பற்றியும் அவற்றின் தன்மை பயன் ஆகியன குறித்தும் கூறுகின்றன.
இக்காவற்காடுகள் எயினர் ஊர்களின் பாதுகாப்புக்கான அரண்களாகவும் வேட்டைக்காடுகளாகவும் இருந்தன. பின்னர் கணசமூகத்தில் இருந்து அடிமைச் சமூகமும் நிலப்பிரபுத்துவசமூகமும் தோன்றி அரசு என்ற அமைப்பு நிறுவப்பட்ட கால கட்டத்தில் அரசுகளின் (சுரண்டு வர்க்கத்தின்) பாதுகாப்புக்காக அரண்கள் அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில் அரசர்கள் மதில், அகழி, மலை, காடு என்னும் நான்கனையும் அரணாகக் கொண்டனர்.
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையதரண்” - (குறள்) என்று வள்ளுவர் கூறுகிறார். இவற்றில் மலையும் காடும் இயற்கை அரண்கள் ஆகும். மதிலும் அகழியும் மன்னர்கள் தம்பாதுகாப்புக்காக அடிமைகளைக் கொண்டு செயற்கையாக அமைத்துக் கொண்டவை. வள்ளுவர் கூறும் காட்டரண் என்பது கணசமூகத்தின் காவற்காடேயாகும். இக்காட்டரண் எயினரின் வேட்டைக்காடாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் இருந்தன. மேய்ச்சல் நிலங்களை இலக்கியங்கள் விடுநிலம் என்று குறித்தன.
வேட்டைச் சமூகத்தவர் ஆன எயினர்கள் தம் முயற்சியால் விளைவித்துச் சேமித்த உணவுதானியங்கள் மற்றும் கால் நடைகள் முதலிய உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவை பாதுகாத்துக் கொள்ளப்படவில்லையானால் அண்டைப் புலங்களில் உள்ளார் வந்து கொள்ளையடித்துச் செல்லும் அபாயம் இருந்தது. எனவே, அவர்கள் அரண் அமைத்துத் தம் செல்வத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.
எயினர் குடிசை
எயினரின் குடிசைகள் வேல் போன்ற கூர்மையான ஈந்தின் இலைகளால் வேயப்பட்டிருந்தன. அதனால் அக்குடிசைகள் முள்ளம் பன்றியின் முதுகுபோல் ஒழுங்கின்றிக் காணப்பட்டன. குடிசையின் முற்றத்தில் படல் கட்டப்பட்டிருந்தது. எயினர்களின் வீட்டு உபயோகப் பொருள்களைப் போலவே, வேட்டைக் கருவிகளும் எளிமையானவை. முரியடுப்பு, முரவு வாய்க் குழிசி, முதுவாய்ச்சாடி (ஒறுவாய் போன மண்பானை, முரிந்த அடுப்பு, பழைய மண்சாடி) மற்றும் நிலவுரல், உலக்கை, துடுப்பு இவையே எயினர்களின் வீட்டு உபயோகப் பொருட்களாம். அவர்கள் மான் தோலையே பாயாகப் பயன்படுத்தினர். கல், கவண், கைத்தடி, வில், அம்பு, வலை, வேல், குத்குக்கோல் முதலியவையே எயினர்களின் வேட்டைக் கருவிகளாம். இவற்றால் அவர்கள் உடும்பு, முயல், பன்றி, முள்ளம் பன்றி, மான், புலி, யானை முதலிய விலங்குகளை வேட்டையாடினர். புறா காட்டுக்கோழி முதலிய பறவைகளையும் வேட்டையாடினர்.
வல்லுவர்க் கூவல்
எயினர்கள் குடிநீருக்காகத் தம் குடிசைகளுக்குப் பக்கத்தில் கிணறுகளைத் தோண்டினார்கள். அக்கிணறுகளில் நீர் சில்லூற்றாகவே ஊறியது. நீரும் உவர்நீர் ஆகத்தான் இருந்தது. ‘கல்லறுத்தியற்றியவல்லுவர்க்கூவல்” (புறநானூறு 331) “ நெடுங்கிணற்று வல்லுவரி ‘களர்ப் படுகூவல்” என்று இக்கிணறுகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. சில இடங்களில் இயற்கையாக அமைந்த பள்ளங்களில் தேங்கியிருந்த மழைநீரையும் மக்கள் பயன்படுத்தினர்.
‘பூவற்படுவில் கூவற்றொடீஇய
செங்கட் சின்னீர்” -புறநானூறு 319
(செம்மண் நிலத்து மடுவில் உள்ள நீர் நிலையைத் தோண்டியதால் உண்டாகிய சிவந்த இடத்தில் சிறிதாக ஊறிய நீர்) என்றும்
‘களிறு நீறாடிய விடுநில மருங்கில்
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்திறந்தெனக்
குழிக்கொள்சின்னீர் குராஅ லுண்டலிற்
சேறு கிளைத்திட்ட கலுழ்கண்ணூறல்”
- புறம்;: 325
(பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட விடுநிலத்தின் கண் புதிதாக வந்த பெருமழை அவ்விடத்தை வரைந்து பெய்து நீங்கிற்றாக பள்ளங்களில் தங்கிய சிறிதாக ஊறிய நீரைக் கன்றையுடைய பசுவானது அங்கே முளைத்திருந்த புல்லை மேய்ந்து உண்டொழிதலால் சேற்றைநீக்கித் தோண்ட ஊறிய கலங்கலாகிய நீர்) என்றும்,
‘களிறு பொரக் கலங்கிய கழன்முள் வேலி
அரிதுண்கூவலங் குடிச் சீறூர்”
- புறநானூறு: 306
(களிறு படிந்துழக்கக்கலங்கிச் சேறாகும் உண்ணும் நீர் அரிதாகிய நீர் நிலையும் முள்ளையுடைய கழற்கொடியாலாகிய வேலியும் சூழ்ந்த அழகிய குடிகளையுடைய சீறூர்) என்றும் புறநானூறு, முல்லை நிலத்து வல்லுவர்க்கூவல் பற்றிப்பேசுகிறது.
எயினர் அரண்
எயினரின் அரண் ஊகம் புல்லால் வேய்ந்த உயரமான மதில்களை உடையவாயிருந்தன. வீடுகளில் வடித்த மணிகட்டின பலகைகளோடே வேல்களும்வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவ்வேல்கள் பருந்து மொய்க்குமாறு பகைவரைக் குத்தி வீழ்த்தியதால் முனை மழுங்கியிருந்தன. இரு முனைகளிலும் முடிந்த நாணையுடைய விற்கள் சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. திரண்ட கால்களையுடைய பந்தல்களிலே தேனிறால் போன்ற குதையினையுடைய அடியையுடைய அம்புக்கட்டுகளும் வல்லோசையுடைய பறைகளும் வைக்கப்பட்டிருந்தன. வாயிலில் கணைய மரம் செருகப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன. செவ்விய முனையையுடைய கழுக்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. முள்ளையுடைய வாழ் வேலியால் அரண் சூழப் பட்டிருந்தது.
‘பருந்துபட
ஒன்னாத்தெவ்வர் நடுங்க வோச்சி
வைநுதி மழுங்கிய புலவுவாயெ‡கம்
வடிமணி பலகை யொடுநிரைஇ முடிநாண்
சாபஞ்சார்த்திய கணைதுஞ்சு வியனகர்
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப் பின்
வரைத் தேன்புரையுங்கவைக்கடைப்புதையொடு
கடுந்துடி தூங்கும் கணைக் காற்பந்தர்
தொடர் நாயாத்த துன்னருங்கடிநகர்
வாழ்முள்வேலி சூழ்மிளைப் படப்பை
கொடுநுகந்தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
கொடுவில்லெயினர் குறும்பு”
என்று பெரும்பாணாற்றுப்படை (117-129) எயினரின் அரண் பற்றிப் பேசுகிறது.
இங்கு, அமெரிக்க செவ்விந்தியக் குலங்களின் குடியிருப்புக்களைச் சூழ அமைந்திருந்த காவற் காடுகள் பற்றி தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ள செய்தி நம் கவனத்துக்குரியதாகிறது. அவர் கூறுகிறார். ‘ யதார்த்தத்தில் குடிதங்கியிருந்த பிரதேசத்தோடு கூடுதலாக வேட்டையாடவும் மீன் பிடிக்கவும் ஒவ்வொரு குலமும் கணிசமான பிரதேசத்தைப்பெற்றிருந்தது. இதற்கு அப்பால், அடுத்த குலத்தின் பிரதேசத்தை வந்தடைகிறவகையில் அகலமான ஒரு நடு நிலைப் பிரதேசம் இருந்தது. எங்கு இரு குலங்களின் மொழிகளும் உறவு கொண்டிருந்தனவோ அங்கு இந்த நடுநிலைப் பிரதேசத்தின் அளவு சிறியதாக இருந்தது. அப்படி இல்லாத இடங்களில் விரிவாக இருந்தது. இங்கு கூறப்பட்ட செய்திகளால் உலகம் முழுவதிலும் கணசமூகத்தின் குடியிருப்புகள் காவற்காடு அல்லது விடு நிலம் எனப்பட்ட மேய்ச்சல் நிலம் (வேட்டைக்காடு) சூழ அமைந்திருந்தது என்ற உண்மையை நாம் உணரமுடிகிறது.
إظهار الرسائل ذات التسميات வெ.பெருமாள் சாமி. إظهار كافة الرسائل
إظهار الرسائل ذات التسميات வெ.பெருமாள் சாமி. إظهار كافة الرسائل
கானவரின் விலங்கு வேட்டை - வெ.பெருமாள் சாமி
உடும்பு
எயினர் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளில் உடும்பும் ஒன்றாகும். உடும்புகளை எயினர் விரும்பி வேட்டையாடினர். உடும்பின்தசை சத்துமிக்கது என்று மக்கள் கருதுகின்றனர். அதன் தசை, உண்பாரது உடலில் முழுமையாகச் சேரும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கை ஆகும். இதுபற்றி ‘கால் கோழி, அரை ஆடு, முக்கால் காடை, முழுஉடும்பு” என்று ஒரு சொலவம்மக்களிடையே வழங்கிவருகிறது. வேட்டைப்பிரியர்கள் இன்றும் உடும்புகளை விரும்பி வேட்டையாடுகின்றனர்.
ஊருக்கு அண்மையில் இருந்த மடுக்கரையில் இருந்து உடும்புகளை எயினச்சிறார் பிடித்து வந்த செய்தியைப் புறநானூறு முதலிய நூல்கள் கூறுகின்றன.
‘ஊர்,அருமிளையதுவே மனைவியும்
வேட்டைச்சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்கு நிணம்பெய்த தயிர்க்கண் விதவை
யாணர்நல்லவை பாணரொடொராங்கு
வருவிருந்தயரும் விருப்பினள்”
- புறநானூறு 326
(கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின் கண் உள்ள ஊரில் மனைக் கிழத்தி, வேட்டுவச் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் மடுக்கரையில் பிடித்துக் கொண்டு வந்த குறுகிய காலையுடைய உடும்பினது விழுக்காகிய தசையைப் பெய்து சமைத்த தயிரோடு கூடிய கூழையும் புதிதாக வந்த வேறு நல்;ல உணவுகளையும் பாணருக்கும் அவரோடு வந்த ஏனை விருந்தினருக்கும் ஒரு சேரக் கொடுத்து உண்பிக்கும் இயல்பினள்) என்றும்
‘களர் வளரீந்தின் காழ் கண்டன்ன
சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலிதந்த மனவுச் சூல் உடும்பின்
வரைகால்யாத்தது வயின் தொறும் பெறுகுவிர்”
பெரும்பாணாற்றுப்படை: 130-133
(களர்நிலத்தேவளர்ந்த ஈந்தினது விதைபோன்ற மேட்டுநிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை, நாய்கடித்துக் கொண்டுவந்த அக்குமணிபோன்ற முட்டைகளையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்ததனை மனை தோறும் பெறுகுவீர்) என்றும் எயினப் பெண்கள் தம் குடிசைக்கு வந்த விருந்தினராகிய பாணர் முதலியவர்களுக்கு உடும்பின் தசையைச்சமைத்து விருப்புடன் வழங்கி உபசரித்த செய்தியைச் சங்க இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன.
முயல்
உடும்பைப் போலவே முயலும் ஒரு சிறிய விலங்குதான். மக்கள் இன்றும் அதனை விரும்பி வேட்டையாடுகின்றனர். பண்டை நாள் போலவே இன்றும் உணவுக்காகவே முயல் வேட்டையாடப்படுகிறது. முயல் ஒருசாதுவான ஆபத்தில்லாத விலங்கு. அதை வேட்டையாடுவதும் எளிது. எனவே எயினர் முயலை மிகுதியாக வேட்டையாடினர். வேட்டுவர் குடிசைகளில் முயற்கறி முக்கிய உணவாக இருந்தது. அங்கு எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் முயற்கறி உண்ணக் கிடைத்தது. வேட்டுவர் முயல் வேட்டையாடியது குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.
“படலை முன்றிற் சிறு தினையுணங்கல்
புறவுமிதலுமறவுமுண்கெனப்
பெய்தற் கெல்லின்று பொழுதேயதனால்
முயல் சுட்டவாயினும் தருவேம் புகுதந்
தீங்கிருந்தீமோ முதுவாய்ப்பாண” என்று புறநானூறு ( 319) கூறுகிறது.
எயினரது மனைக்குப் பாணனாகிய விருந்தினன் தன் சுற்றத்தாருடன் ஞாயிறு மறைந்த மாலைப் பொழுதில் வந்திருந்தான். அவனுக்கு உணவளித்துப் பசி போக்கி உபசரிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உண்டு என்பதை உணர்ந்த மனைத் தலைவி பாணனிடம் கூறினாள். “பாணனே சிறிய தினையரிசியை முற்றத்தில் தெளித்து அதனை உண்ணவரும் புறா முதலிய பறவைகளைப் பிடித்துச்சமைத்து உங்களுக்கு வழங்குதவற்குக் கால மின்மையின் எம்மிடம் உள்ளது பழையதாகிய சுட்ட முயற்கறியே. அதனை உங்களுக்கு உண்ணத்தருவோம்.” என்று கூறி மனைத்தலைவி பாணரை உபசரித்து உணவூட்டிய செய்தியை ஆலங்குடி வங்கனார் மேற்குறித்த புறநானூற்றுப் பாடலில் கூறுகிறார்.
முயல் வேட்டைக்குச் சென்ற எயினர் தாம் வளர்த்த நாய்களையும் வேட்டைக்காக உடன்கொண்டு சென்றனர். ( இன்றும் முயல் வேட்டைக்குச் செல்வோர் நாய்களையும் உடன் கொண்டு செல்கின்றனர்) “நெடியசெவிகளையுடைய முயல்களை அவை ஓரிடத்தும் போக்கில்லாதபடிகுவிந்த இடத்தையுடைய வேலியிடத்தே வலைகளைப் பிணைத்து மாட்டிவளைத்துப் பசிய தூறுகளையடித்து முயல்களை அவற்றில் கிடவாமல் ஓட்டிக் கொன்றனர்” என்று கானவர் முயல் வேட்டையாடியமை குறித்து கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் கூறுகிறார்;.
பன்றி வேட்டை
எயினர் உணவுக்காகப் பன்றி களையும் வேட்டையாடினர். பன்றி வேட்டை முயல் வேட்டைபோல எளிய செயல் அன்று, கடினமானது. வேட்டையின் போது, விரட்டி வரும் வேடர்களைப் பன்றிகள் தம் வளைந்த கொம்பால் மோதித்தாக்குவதும் உண்டு . அதனால் எயினர் பன்றிகளைக் கொல்வதற்குச் சில தந்திரமான செயல்களை மேற்கொண்டனர். (குறிஞ்சி நிலத்தில் பன்றிகளைக் குடிசைகளில் வளர்க்கும் பழக்கம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை : ஏனெனில், வேட்டைச் சமூகம் இன்னும் மேய்ச்சல் சமூகமாக மாறவில்லை) மழையின்றி வறட்சி பாதித்த கடுங்கோடைக் காலங்களில் விலங்குகள் நீருக்காக தாகத்தோடு மயங்கித்திரியும். அவ்வாறு நீர் தேடியலையும் விலங்குகளின் காலடித்தடங்கள் மிகுதியாக அழுந்திக் கிடக்கின்ற வழியிடங்களில் தறுகண்மையுடைய கானவர்கள், மழைபெய்தால் நீர் நிற்க வேண்டுமென்று கருதிக் குளங்கள் அமைத்தனர். அக்குளங்களின் அருகில் மட்டுக் குழி (பதுங்குழி) களையும் அமைத்தனர். இரவில் பன்றி முதலிய விலங்குகள் நீருண்ண அக்குளங்களுக்கு வரும். அப்படி வரும் காலங்களில் மறைந்திருந்து அவற்றைக் கொல்வதற்காக வேட்டுவர் அமைத்துக் கொண்ட அக்குழிகளே மட்டுக் குழிகள் எனப்பட்டன. விலங்குகள் நீருண்ண வருதலை எதிர்பார்த்து அக்குழிகளில் பதுங்கியிருந்த வேட்டுவர் அவை வந்ததும் அவற்றைப் பாய்ந்து கொன்றனர். இச் செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை தெளிவாகக் கூறுகிறது. இங்கு வேட்டுவர் அமைத்த இக்குளங்கள் தனிமனிதர்களுக்காக அமைக்கப்பட்டவை அன்று. சமூகத்தேவைக்காக சமூகத்தவர் அமைத்துக் கொண்ட குளமே அது.
‘மானடிபொறித்த மயங்கதர் மருங்கின்
வான் மடி பொழுதின் நீர் நசைக் குழித்த
அகழ்சூழ் பயம்பின் அகத்தொழித்தொடுங்கிப்
புகழாவாகைப் பூவினன்ன
வளை மருப்பேனம் வரவுபார்த்திருக்கும்
அரைநாள் வேட்ட மழுங்கிற்பகனாட்
பகுவாய்ஞமலியொடுபைம்புதலெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கறவளைஇக்
கடுங்கட்கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சுரம்” என்று, எயினர் மட்டுக் குழிகள் அமைத்துப் பதுங்கியிருந்து பன்றி வேட்டையாடியது குறித்துச் சுவைபடக் கூறிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், முயல் வேட்டையாடியது குறித்தும் கூறியுள்ளார்.
தினைப்புனத்தில் தினைக் கதிர்கள் நன்கு விளைந்து முற்றிய காலங்களில் பன்றிகள் இரவுப் பொழுதில் வந்து அத்தினைக் கதிர்களை மேய்ந்து அழிக்கும், அதனைத் தடுப்பதற்காக வேட்டுவர் தினைப் புனங்களில் பன்றிகள் வரும் பாதையில் பெரியகற்பொறிகளை அமைத்து வைத்திருப்பார்கள். தினைப்புனத்தை மேய வரும் பன்றிகள் அக்கற்பொறிகளில் அகப்பட்டுக்கொள்ளும், அப்போது, தினைப்புனம் காத்திருந்த எயினர் விரைந்து வந்து அப்பன்றியைக் குத்திக் கொல்வர். இக்கற் பொறிகள் அடார் என்று வழங்கப்பட்டன.
“விளைபுன நிழத்தலிற் கேழலஞ்சிப்
புழை தொறும் மாட்டிய இருங்கலரும் பொறி
யுடைய ஆறே”
(வழிகள் முற்றிய தினைப்புனத்தைப் பன்றிகள் நொக்குகையினாலே இதற்கு அஞ்சிச் சில் வழிகள் தோறும் கொளுத்திவைத்த பெரிய கற்பொறிகளையுடையவை ) என்று, தினைப்புனங்காத்த எயினர், பன்றிகள் தினைக்கதிரை உண்ணவரும் பாதைகளில் கற்பொறிகளை அமைத்து வைத்த செய்தியை மலைபடுகடாம் ( 193-95 ) கூறுகிறது.
“தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடா அர்
ஒண்கேழ் வயப்புலிபடூ; உம்”
(தினைக் கதிரைத் தின்ன வரும் பன்றியை வீழ்த்துவதற்காக வேட்டுவன் மாட்டி வைத்த பெரிய கற்பொறியாகிய அடார் என்பதில் வலிமை மிக்க புலி அகப்பட்டுக் கொண்டது) என்று நற்றிணை ( 119 ) கூறுகிறது. வேட்டுவர் புலி வேட்டையின் பொருட்டும் அடார் என்னும் கற்பொறியினை அமைத்து வைத்த செய்தியைப் புறநானூறு கூறுகிறது” இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கலடார், என்பது புறநானூறு (19) அது குறித்துக் கூறும் செய்தியாகும்.
முள்ளம் பன்றி வேட்டை
வேடர்கள் விரும்பி வேட்டையாடும் விலங்குகளில் முள்ளம் பன்றியும் ஒன்று. முளவுமா என்றும் எய்ப்பன்றி என்றும் இலக்கியங்கள் இதனைக் குறிக்கின்றன. முள்ளம் பன்றியானது, தனக்கு ஆபத்து நேரிட்ட காலங்களில், தன் எதிரிகளின் மேல், தன் உடலைச் சிலிர்த்து உதறிக் கூரிய முள்போன்ற மயிரைச் செலுத்துமாம். அவ்வாறு செலுத்தப்பட்ட மயிராகிய முள் எதிரியின் உடம்பில் தைத்து அவற்றுக்கு மிகுந்த துன்பத்தைச் செய்யும், இவ்வாறு உடலைச் சிலிர்த்து எதிரிகளின் மேல் மயிரை எய்வதால் முள்ளம் பன்றி எய்ப்பன்றி எனப்பட்டது. முள்ளம் பன்றி வேட்டை, பன்றி வேட்டையை விட ஆபத்தானது. ஆனாலும் எயினர் அவற்றை விரும்பி வேட்டையாடினர். “முளவு மாத் தொலைச்சிய முழுச்சொலாடவர்” - ( புறநானூறு : 325 )
“முளவுத் தொலைச்சிய பை நிணப் பிளவை” என்று வேட்டுவர் முள்ளம் பன்றிகளை வேட்டையாடிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நெடிய மலையிடத்துக் குகையில் முள்ளம் பன்றி பதுங்கிக் கிடந்தது. அதனையறிந்த வேட்டுவன் அதனை வேட்டையாடுவதற்காக அங்குச் சென்றான். கானவனது வருகையை உணர்ந்து கொண்ட அவ்விலங்கு அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கான தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டது. கூர்மையான ஊசி போன்ற தன்மயிராகிய முள்ளை, உடலைச் சிலிர்த்து உதறி ஏவியது. அம்முட்கள் கானவன் உடலில் தைத்துப் பெரும்புண் உண்டாக்கின. புண்பட்ட வேட்டுவன் வலிதாங்கமாட்டாமல் அழுது கூச்சலிட்டான். அக்கூச்சல் கானகமெங்கும் எதிரொலித்தது.
“சேயளைப் பள்ளியெ‡குறு முள்ளின்
எய்தெற விழுக்கிய கானவரழுகை” (நெடிய முழையாகிய இருப்பிடத்தில் தங்கும் எய்ப்பன்றி தனது கூர்மையுறுகின்ற முள்ளால் எய்து கொல்லுகையினாலே பட்ட கானவர் அழுகை) என்று, முள்ளம்பன்றியை வேட்டையாடப் புகுந்த கானவன் பட்ட பாட்டை மலைபடுகடாம் (300- 1) கூறுகிறது.
“அகன்றுறைச்சிலைப் பாற்பட்ட முளவு மான்கொழுங்குறை”
“அகன்ற நீர்த்துறைக்கண் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் ஊன்”; என்று, முள்ளம் பன்றி ஊனுக்காக வேட்டையாடப்பட்டது குறித்துப் புறநானூறு ( 374) கூறுகிறது. இரவு நேரங்களில் பன்றி முதலிய விலங்குகள் வந்து தினைப்புனத்தை நொக்கி அழித்து விடாமல் இருக்கக் காவல் காத்த எயினர், பரண் அமைத்து அதன்மேல் இருந்து காத்தனர். இரவு நேரத்தில் யானைகள் வந்து தினைப்புனத்தை அழித்தலும் உண்டு. பரண்கள் உயரம் குறைவாக இருந்தால் யானைகள் பரண்களை அழித்து, பரண்மேல் இருப்போரைத் துன்புறுத்தக் கூடும். அதனால் யானைகளுக்கு எட்டாத உயரத்தில் மரங்களின் மேல் பரண் அமைத்து வேடர் அதன் மேல் இருந்து தினைப்புனம் காத்தனர். அப்போது பன்றியொன்று தினைப்புனத்தை மேய்ந்து அழிப்பதற்கு வந்தது. பன்றியின் காலடியோசை கேட்ட கானவன் பரண்மேல் இருந்தபடியே ஓசைவந்த திசையை நோக்கி அம்பு ஒன்றை வேகமாகச் செலுத்தினான். கானவன் கடுகச் செலுத்திய அம்பு பன்றியின் உடம்பில் பட்டுப் புண் படுத்தியது. புண்பட்ட பன்றி புண்ணுடனும் அம்புடனும் ஓடிப்போனது. ஓடிய பன்றி புண்ணின் வலியின் கடுமையால் மயங்கித் தான் வந்த பாதையை மறந்து வழி மாறிச் சென்று இறந்து வீழ்ந்தது. இதனை
“கழுதிற் சேணோன் ஏவொடு போகி
யிழுதினன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்
நெறிகெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந்தன்ன ஏனம்” என்று மலைப்படுகடாம் (243 – 47) கூறுகிறது.
மான்வேட்டை
முயலைப் போல மானும் ஒரு சாதுவான ஆபத்தில்லாத விலங்குதான். தற்காலத்தில் தோல், கொம்பு, இறைச்சி ஆகியவற்றுக்காக மான் வேட்டையாடப்படுகிறது. பண்டைக் காலத்திலும் மான் தோல், இறைச்சி ஆகியவற்றுக்காக வேட்டையாடப்பட்டது. வேள்வி செய்யும் காலத்தில் பார்ப்பார் மான் தோலைப் பச்சையாகத் தோளில் போர்த்திக் கொண்டு யாகச்சடங்குங்களைச் செய்தனர் என்று புறநானூறு ( 166 ) கூறுகிறது.
“வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப்புல்வாய்க் கலைப் பச்சை
சுவற்பூண் ஞாண் மிசைப் பொலிய”
(வேள்வித் தொழிற்கு வேண்டி நீ போர்க்கப்பட்ட, காட்டு நிலத்தே வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத்தோல் நினது தோளின் கண் இடப்பட்ட பூணூல் மீது சிறந்து தோன்றியது) என்று ஆவூர் மூலங்கிழார்அது குறித்துக் கூறுகிறார்.
மானுக்கு இரங்கிய மங்கை
எயினரது குடிசையின் முற்றத்தில் பலாமரம் அல்லது விளாமரம் நிற்கும், அதில் பார்வை மான் கட்டப்பட்டிருக்கும். பார்வைமான் கட்டிய கயிறு உராய்ந்ததால் அம்மரத்தின் அடி தேய்ந்திருந்தது. இதனை,
“பார்வை யாத்த பரைதாழ் விளவு, என்றும்
முன்றில் முஞ்ஞை முசுண்டைபம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇ” – புறாநானூறு : 320
என்றும் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.
பார்வைமான் என்பது, பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சிதந்து கட்டப்பட்ட பெண்மான். இதனை எயினர் தம் குடிசையின் முற்றத்தில் இருந்த பலாமரம் அல்லது விளாமரத்தின் அடியில் கட்டி வைத்திருந்தனர். ஆண்மான்கள் புணர்ச்சி வேட்கை கொண்டு மேய்தல் தொழிலைக் கைவிட்டு அதனோடு கூடி விளையாட்டயர அங்கு வரும். கலையும் பிணையும் புணர் நிலைக்கண் விளையாட்டயர்தலைக் காணும் எயினர் இரக்க மின்றிக் கலையை எளிதில் வீழ்த்துவர். அதற்காகப் பயிற்சி தந்து கட்டப்பட்ட பெண்மானே பார்வைமான் என்ப்படும். எயினரின் எளிய குடிசையின் முன் கனிகள் தொங்கும் பலாமரம் ஒன்று நின்றிருந்தது. முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அதன் மீது செறிந்து படர்ந்திருந்தன. வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தராகப் படந்திருந்தன. குடிசையின் முற்றத்தில் மான் தோலைவிரித்து எயிற்றி தினையரிசியைப் பரப்பி உலரவிட்டிருந்தாள். குடிசைக் குரிய வனான எயினன் பலாமரத்தின் நிழலில் படுத்துறங்கிக் கொண்டிருந்தான். அவன் யானை வேட்டம்புரிவோன்: இரவு அவ்வேட்டத்தின் மேற்சென்றிருந்தமையால் பேருறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.
குடிசையின் பக்கத்தில் பார்வை மானாகிய பெண்மான் கட்டப்பட்டிருந்தது. தொழிலொன்று மில்லாத பிறிதொரு தனி ஆண் மான் வந்து அப்பெண்மானைத் தழுவிக்கலந்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்குடிசையின் தலைவியான எயிற்றி, குடிசையின் ஒரு பக்கமாக மான் தோலைவிரித்து அதில் தினையரிசியை உலர விட்டிருந்தாள். அவள், இன்பம் மிக்க அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்டாள். கண்ட அவள் தன் கணவன் உறக்கம் நீங்கி எழுந்து விடுவானோ என அஞ்சினாள், எழுந்து கலையும் பிணையும் புணர்நிலைக் கண் விளையாட்டயர்தலைக் காணின் அவன் அருளின்றிக்கலையை வீழ்த்துவன் என்று உணர்ந்து, அவன் உறக்கம் கலைந்து எழுவானோ எனவும், தன்வருகையைக் கண்டால் புதிதாக வந்த கலைமான் அஞ்சியோடுமோ, அங்ஙனம் அஞ்சியோடின் அவற்றின் புணர்நிலை இன்பம் சிதையுமோ என்றும் கவன்ற அவள் ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்தாள். அவளது ஒடுக்கம் கானக்கோழியும் இதற் பறவையும் வந்து அவள் மான் தோலில் பரப்பி உலர விட்டிருந்த தினையரிசியைக் கல்லென ஆரவாரித்துக் கவர்நதுண்ண ஏதுவாயிற்று. பின்னர் எயிற்றி வைத்திருந்த கண்ணியில் அகப்பட்டுக் கொண்டன.
கலைமான் பிணைமானைப் புணர்ந்து நீங்கியபின் எயிற்றி அப்பறவைகளைப் பிடித்துத் துண்டு துண்டாக அறுத்து நிறைத்த இறைச்சியைச் சந்தனக்கட்டையாலாகிய நெருப்பில் சுட்டு ஆரல் மீனின் நாற்றமும் உடன்கமழ அவற்றைப் பாணரின்கரிய பெரிய சுற்றத்தார்க்கு உண்ணக்கொடுத்து உபசரித்தாள். இச்செய்தியைச் சுவைபடக் கூறும் வீரைவெளியனாரின் பாடல் இது.
‘முன்றில் முஞ்ஞை முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழிற்றனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலு மஞ்சி யாவதும்
இல் வழங்காமையின் கல்லென வொலித்து
மானதட்பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடிதல் கவர்ந்துண்டென
ஆரநெருப்பினாரல் நாறத்
தடிவார்ந்திட்ட முழு வள்@ரம்
இரும்பே ரொக்க லொடொருங்கினி தருந்தித்
தங்கினை சென்மோபாணை”
- புறானூறு 320
வீரைவெளியனாரின் இப்பாடல் கணசமூகத்தலைவியான எயினப்பெண்ணின் இல்லற மாட்சியையும் எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணிஇரங்கும் உயர்பண்பையும் அவளது விருந்தோம்பற் சிறப்பையும் உலகுக்குத் தெற்றெனப் புலப்படுத்துகிறது.
புலிவேட்டை
வேட்டுவர் புலி வேட்டைக்குச் சென்றனர். வேட்டையின் போது சினமுற்ற புலியானது வேட்டுவன் மீது பாய்ந்து மார்பைக் கிழித்துப்புண்ணாக்கியது. அக்கொடிய புண்ணை ஆற்றுவதற்காகவும் புண்ணின் வலி தெரியாமல் இருப்பதற்காகவும் எயிற்றியர் இனிய பாடல் களைப் பாடினர். அப்பாடல் காடெல்லாம் எதிரொலித்தது.
“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்; காப்பென
அறல் வாழ் கூந்தல்கொடியச்சியர் பாடல்”
(தம் கணவர் மார்பிலே புலிபாய்ந்ததாகப்பட்ட நெடிய பிளத்தலையுடைய சீரிய புண்ணை ஆற்றுவதற்குக் காவல் என்று கருதி அறல் போலும் கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பாடலால் எழுந்த ஓசை) என்று மலைபடுகடாம் கூறுகிறது.
யானை வேட்டை
கானவர் மலைமேல் பரண் அமைத்துத் தினைப்புனம் காத்தனர். அப்போது, விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடையதும் தன் இனத்தைப் பிரிந்து வந்ததுமான யானை தினைப்புனத்தைத் தின்னும் பொருட்டு வந்தது. யானைத் தலைவனான அதனை வளைத்துப் பிடித்தற்காகக் கானவர் கூடிமுயன்றனர். அதனால் ஏற்பட்ட ஆரவாரம் கானகமெங்கும் எதிரொலித்தது.
‘விலங்கல் மீமிசைப் பணவை கானவர்
புலம்புக் குண்ணும் இலங்கேந்து மருப்பின்
இனம்பிரி ஒருத்தல் புரிவளை பூசல்” என்று, மலைபடுகடாம் ( 277-99)
எயினரின் யானை வேட்டம் குறித்துக் கூறுகிறது.
இதுகாறும் கூறிய செய்திகளால் கானவர்; உடும்பு, முயல், பன்றி, முள்ளம் பன்றி, மான், புலி, யானை முதலிய காட்டு விலங்குகளை வேட்டையாடினர். அவ்வேட்டத்தின் போது பல்வகை இன்னல்களுக்கு ஆளாயினர் என்பதை அறிந்தோம். வேட்டைத் தொழில் கானவரின் கூட்டு முயற்சியாகவே இருந்தது.
கானவர் தேனெடுத்தல்
குரங்குகளும் ஏற முடியாத உயரத்தையுடையதும் இனிதாகக் காட்சி தருவதுமான உயர்ந்த மலையில் தேனீக்கள் தேனைத் திரட்டிக் கூடுகட்டியிருந்தன. கானவர் அத்தேனை எடுக்க முயன்றனர். நிலைபேறுண்டாகக் கட்டியமைத்தகண்ணேணி வழியாக ஏறிச் சென்று அத்தேன் கூட்டை யழித்துத் தேனெடுத்தனர். அதனால் எழுந்த மகிழ்ச்சியால் மிகுதியாக ஆரவாரித்தனர். அந்த ஆரவாரம் மலையெங்கும் எதிரொலித்தது. கண்ணேணியாவது, கணுக்களிலே அடிவைத்து ஏறிச் செல்லும்படி அமைத்துள்ள மூங்கில் ஏணியாகும். மலையுச்சியில் உள்ள தேனிறாலை அழிக்கும் பொருட்டாகச் செங்குத்தாக மூங்கில்களைக் கூட்டி ஏணியாக நிறுத்தி வைத்து அதன் வழியாக ஏறிச் சென்று கானவர் தேனெடுப்பர்.
“கலைகையற்ற காண்பினெடுவரை
நிலைபெய்திட்ட மால்பு நெறியாகப்
பெரும்பயன் தொடுத்த தேங்கொள் கொள்ளை”
என்று கானவர் கண்ணேணி வழியாக ஏறிச்சென்று தேனெடுத்த செய்தியை மலைபடுகடாம் ( 315-17) கூறுகிறது. ( மால்பு கண்ணேணி ) பாரியின் பறம்பு மலையில் தேனெடுத்தற்காகக்;கானவர்கண்ணேணிகள் அமைத்த செய்தியைக் கபிலர் கவினுறக் கூறுகிறார். மால்புடை நெடுவரைக் கோடு” ( புறநானூறு 105) ( கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரம் ) என்பது கபிலரது கூற்று,
“அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே “என்றும்
“நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றிற்
தேர்வீசிருக்கை நெடியோன் குன்றே “ புறம் : 114
( மதுப் பிழிந்து போகடப்பட்ட கவளத்தினது கோதுடைத்தாகிய சிதறிய வற்றினின்றும் வார்ந்த மதுச் சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை ) என்றும்
‘ஒரு சார் அருவி ஆர்ப்ப வொருசார்
பாணர்மண்டை நிறையப்பெய்மார்
வாக்கவுக்க தேக்கட்டேறல்
கல்லலைத் தொழுகும்” – புறநானூறு : 115
( ஒரு பக்கம் அருவி ஆர்த் தொழுக, ஒரு பக்கம் பாணருடைய மண்டைகள் ( கலங்கள்) நிரம்ப வாக்க வேண்டி வடித்தலால் சிந்திய இனிய கள்ளாகிய தேறல் கல்லையுருட்டி ஒழுகும் ) என்றும் பறம்புமலையின் தேன் வளம் குறித்தும் கானவர் அங்கு தேனெடுத்தது குறித்தும் தேன் சுவை சொட்டக் கபிலர் கூறுகிறார்.
எயினர் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளில் உடும்பும் ஒன்றாகும். உடும்புகளை எயினர் விரும்பி வேட்டையாடினர். உடும்பின்தசை சத்துமிக்கது என்று மக்கள் கருதுகின்றனர். அதன் தசை, உண்பாரது உடலில் முழுமையாகச் சேரும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கை ஆகும். இதுபற்றி ‘கால் கோழி, அரை ஆடு, முக்கால் காடை, முழுஉடும்பு” என்று ஒரு சொலவம்மக்களிடையே வழங்கிவருகிறது. வேட்டைப்பிரியர்கள் இன்றும் உடும்புகளை விரும்பி வேட்டையாடுகின்றனர்.
ஊருக்கு அண்மையில் இருந்த மடுக்கரையில் இருந்து உடும்புகளை எயினச்சிறார் பிடித்து வந்த செய்தியைப் புறநானூறு முதலிய நூல்கள் கூறுகின்றன.
‘ஊர்,அருமிளையதுவே மனைவியும்
வேட்டைச்சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்கு நிணம்பெய்த தயிர்க்கண் விதவை
யாணர்நல்லவை பாணரொடொராங்கு
வருவிருந்தயரும் விருப்பினள்”
- புறநானூறு 326
(கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின் கண் உள்ள ஊரில் மனைக் கிழத்தி, வேட்டுவச் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் மடுக்கரையில் பிடித்துக் கொண்டு வந்த குறுகிய காலையுடைய உடும்பினது விழுக்காகிய தசையைப் பெய்து சமைத்த தயிரோடு கூடிய கூழையும் புதிதாக வந்த வேறு நல்;ல உணவுகளையும் பாணருக்கும் அவரோடு வந்த ஏனை விருந்தினருக்கும் ஒரு சேரக் கொடுத்து உண்பிக்கும் இயல்பினள்) என்றும்
‘களர் வளரீந்தின் காழ் கண்டன்ன
சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலிதந்த மனவுச் சூல் உடும்பின்
வரைகால்யாத்தது வயின் தொறும் பெறுகுவிர்”
பெரும்பாணாற்றுப்படை: 130-133
(களர்நிலத்தேவளர்ந்த ஈந்தினது விதைபோன்ற மேட்டுநிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை, நாய்கடித்துக் கொண்டுவந்த அக்குமணிபோன்ற முட்டைகளையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்ததனை மனை தோறும் பெறுகுவீர்) என்றும் எயினப் பெண்கள் தம் குடிசைக்கு வந்த விருந்தினராகிய பாணர் முதலியவர்களுக்கு உடும்பின் தசையைச்சமைத்து விருப்புடன் வழங்கி உபசரித்த செய்தியைச் சங்க இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன.
முயல்
உடும்பைப் போலவே முயலும் ஒரு சிறிய விலங்குதான். மக்கள் இன்றும் அதனை விரும்பி வேட்டையாடுகின்றனர். பண்டை நாள் போலவே இன்றும் உணவுக்காகவே முயல் வேட்டையாடப்படுகிறது. முயல் ஒருசாதுவான ஆபத்தில்லாத விலங்கு. அதை வேட்டையாடுவதும் எளிது. எனவே எயினர் முயலை மிகுதியாக வேட்டையாடினர். வேட்டுவர் குடிசைகளில் முயற்கறி முக்கிய உணவாக இருந்தது. அங்கு எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் முயற்கறி உண்ணக் கிடைத்தது. வேட்டுவர் முயல் வேட்டையாடியது குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.
“படலை முன்றிற் சிறு தினையுணங்கல்
புறவுமிதலுமறவுமுண்கெனப்
பெய்தற் கெல்லின்று பொழுதேயதனால்
முயல் சுட்டவாயினும் தருவேம் புகுதந்
தீங்கிருந்தீமோ முதுவாய்ப்பாண” என்று புறநானூறு ( 319) கூறுகிறது.
எயினரது மனைக்குப் பாணனாகிய விருந்தினன் தன் சுற்றத்தாருடன் ஞாயிறு மறைந்த மாலைப் பொழுதில் வந்திருந்தான். அவனுக்கு உணவளித்துப் பசி போக்கி உபசரிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உண்டு என்பதை உணர்ந்த மனைத் தலைவி பாணனிடம் கூறினாள். “பாணனே சிறிய தினையரிசியை முற்றத்தில் தெளித்து அதனை உண்ணவரும் புறா முதலிய பறவைகளைப் பிடித்துச்சமைத்து உங்களுக்கு வழங்குதவற்குக் கால மின்மையின் எம்மிடம் உள்ளது பழையதாகிய சுட்ட முயற்கறியே. அதனை உங்களுக்கு உண்ணத்தருவோம்.” என்று கூறி மனைத்தலைவி பாணரை உபசரித்து உணவூட்டிய செய்தியை ஆலங்குடி வங்கனார் மேற்குறித்த புறநானூற்றுப் பாடலில் கூறுகிறார்.
முயல் வேட்டைக்குச் சென்ற எயினர் தாம் வளர்த்த நாய்களையும் வேட்டைக்காக உடன்கொண்டு சென்றனர். ( இன்றும் முயல் வேட்டைக்குச் செல்வோர் நாய்களையும் உடன் கொண்டு செல்கின்றனர்) “நெடியசெவிகளையுடைய முயல்களை அவை ஓரிடத்தும் போக்கில்லாதபடிகுவிந்த இடத்தையுடைய வேலியிடத்தே வலைகளைப் பிணைத்து மாட்டிவளைத்துப் பசிய தூறுகளையடித்து முயல்களை அவற்றில் கிடவாமல் ஓட்டிக் கொன்றனர்” என்று கானவர் முயல் வேட்டையாடியமை குறித்து கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் கூறுகிறார்;.
பன்றி வேட்டை
எயினர் உணவுக்காகப் பன்றி களையும் வேட்டையாடினர். பன்றி வேட்டை முயல் வேட்டைபோல எளிய செயல் அன்று, கடினமானது. வேட்டையின் போது, விரட்டி வரும் வேடர்களைப் பன்றிகள் தம் வளைந்த கொம்பால் மோதித்தாக்குவதும் உண்டு . அதனால் எயினர் பன்றிகளைக் கொல்வதற்குச் சில தந்திரமான செயல்களை மேற்கொண்டனர். (குறிஞ்சி நிலத்தில் பன்றிகளைக் குடிசைகளில் வளர்க்கும் பழக்கம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை : ஏனெனில், வேட்டைச் சமூகம் இன்னும் மேய்ச்சல் சமூகமாக மாறவில்லை) மழையின்றி வறட்சி பாதித்த கடுங்கோடைக் காலங்களில் விலங்குகள் நீருக்காக தாகத்தோடு மயங்கித்திரியும். அவ்வாறு நீர் தேடியலையும் விலங்குகளின் காலடித்தடங்கள் மிகுதியாக அழுந்திக் கிடக்கின்ற வழியிடங்களில் தறுகண்மையுடைய கானவர்கள், மழைபெய்தால் நீர் நிற்க வேண்டுமென்று கருதிக் குளங்கள் அமைத்தனர். அக்குளங்களின் அருகில் மட்டுக் குழி (பதுங்குழி) களையும் அமைத்தனர். இரவில் பன்றி முதலிய விலங்குகள் நீருண்ண அக்குளங்களுக்கு வரும். அப்படி வரும் காலங்களில் மறைந்திருந்து அவற்றைக் கொல்வதற்காக வேட்டுவர் அமைத்துக் கொண்ட அக்குழிகளே மட்டுக் குழிகள் எனப்பட்டன. விலங்குகள் நீருண்ண வருதலை எதிர்பார்த்து அக்குழிகளில் பதுங்கியிருந்த வேட்டுவர் அவை வந்ததும் அவற்றைப் பாய்ந்து கொன்றனர். இச் செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை தெளிவாகக் கூறுகிறது. இங்கு வேட்டுவர் அமைத்த இக்குளங்கள் தனிமனிதர்களுக்காக அமைக்கப்பட்டவை அன்று. சமூகத்தேவைக்காக சமூகத்தவர் அமைத்துக் கொண்ட குளமே அது.
‘மானடிபொறித்த மயங்கதர் மருங்கின்
வான் மடி பொழுதின் நீர் நசைக் குழித்த
அகழ்சூழ் பயம்பின் அகத்தொழித்தொடுங்கிப்
புகழாவாகைப் பூவினன்ன
வளை மருப்பேனம் வரவுபார்த்திருக்கும்
அரைநாள் வேட்ட மழுங்கிற்பகனாட்
பகுவாய்ஞமலியொடுபைம்புதலெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கறவளைஇக்
கடுங்கட்கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சுரம்” என்று, எயினர் மட்டுக் குழிகள் அமைத்துப் பதுங்கியிருந்து பன்றி வேட்டையாடியது குறித்துச் சுவைபடக் கூறிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், முயல் வேட்டையாடியது குறித்தும் கூறியுள்ளார்.
தினைப்புனத்தில் தினைக் கதிர்கள் நன்கு விளைந்து முற்றிய காலங்களில் பன்றிகள் இரவுப் பொழுதில் வந்து அத்தினைக் கதிர்களை மேய்ந்து அழிக்கும், அதனைத் தடுப்பதற்காக வேட்டுவர் தினைப் புனங்களில் பன்றிகள் வரும் பாதையில் பெரியகற்பொறிகளை அமைத்து வைத்திருப்பார்கள். தினைப்புனத்தை மேய வரும் பன்றிகள் அக்கற்பொறிகளில் அகப்பட்டுக்கொள்ளும், அப்போது, தினைப்புனம் காத்திருந்த எயினர் விரைந்து வந்து அப்பன்றியைக் குத்திக் கொல்வர். இக்கற் பொறிகள் அடார் என்று வழங்கப்பட்டன.
“விளைபுன நிழத்தலிற் கேழலஞ்சிப்
புழை தொறும் மாட்டிய இருங்கலரும் பொறி
யுடைய ஆறே”
(வழிகள் முற்றிய தினைப்புனத்தைப் பன்றிகள் நொக்குகையினாலே இதற்கு அஞ்சிச் சில் வழிகள் தோறும் கொளுத்திவைத்த பெரிய கற்பொறிகளையுடையவை ) என்று, தினைப்புனங்காத்த எயினர், பன்றிகள் தினைக்கதிரை உண்ணவரும் பாதைகளில் கற்பொறிகளை அமைத்து வைத்த செய்தியை மலைபடுகடாம் ( 193-95 ) கூறுகிறது.
“தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடா அர்
ஒண்கேழ் வயப்புலிபடூ; உம்”
(தினைக் கதிரைத் தின்ன வரும் பன்றியை வீழ்த்துவதற்காக வேட்டுவன் மாட்டி வைத்த பெரிய கற்பொறியாகிய அடார் என்பதில் வலிமை மிக்க புலி அகப்பட்டுக் கொண்டது) என்று நற்றிணை ( 119 ) கூறுகிறது. வேட்டுவர் புலி வேட்டையின் பொருட்டும் அடார் என்னும் கற்பொறியினை அமைத்து வைத்த செய்தியைப் புறநானூறு கூறுகிறது” இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கலடார், என்பது புறநானூறு (19) அது குறித்துக் கூறும் செய்தியாகும்.
முள்ளம் பன்றி வேட்டை
வேடர்கள் விரும்பி வேட்டையாடும் விலங்குகளில் முள்ளம் பன்றியும் ஒன்று. முளவுமா என்றும் எய்ப்பன்றி என்றும் இலக்கியங்கள் இதனைக் குறிக்கின்றன. முள்ளம் பன்றியானது, தனக்கு ஆபத்து நேரிட்ட காலங்களில், தன் எதிரிகளின் மேல், தன் உடலைச் சிலிர்த்து உதறிக் கூரிய முள்போன்ற மயிரைச் செலுத்துமாம். அவ்வாறு செலுத்தப்பட்ட மயிராகிய முள் எதிரியின் உடம்பில் தைத்து அவற்றுக்கு மிகுந்த துன்பத்தைச் செய்யும், இவ்வாறு உடலைச் சிலிர்த்து எதிரிகளின் மேல் மயிரை எய்வதால் முள்ளம் பன்றி எய்ப்பன்றி எனப்பட்டது. முள்ளம் பன்றி வேட்டை, பன்றி வேட்டையை விட ஆபத்தானது. ஆனாலும் எயினர் அவற்றை விரும்பி வேட்டையாடினர். “முளவு மாத் தொலைச்சிய முழுச்சொலாடவர்” - ( புறநானூறு : 325 )
“முளவுத் தொலைச்சிய பை நிணப் பிளவை” என்று வேட்டுவர் முள்ளம் பன்றிகளை வேட்டையாடிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நெடிய மலையிடத்துக் குகையில் முள்ளம் பன்றி பதுங்கிக் கிடந்தது. அதனையறிந்த வேட்டுவன் அதனை வேட்டையாடுவதற்காக அங்குச் சென்றான். கானவனது வருகையை உணர்ந்து கொண்ட அவ்விலங்கு அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கான தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டது. கூர்மையான ஊசி போன்ற தன்மயிராகிய முள்ளை, உடலைச் சிலிர்த்து உதறி ஏவியது. அம்முட்கள் கானவன் உடலில் தைத்துப் பெரும்புண் உண்டாக்கின. புண்பட்ட வேட்டுவன் வலிதாங்கமாட்டாமல் அழுது கூச்சலிட்டான். அக்கூச்சல் கானகமெங்கும் எதிரொலித்தது.
“சேயளைப் பள்ளியெ‡குறு முள்ளின்
எய்தெற விழுக்கிய கானவரழுகை” (நெடிய முழையாகிய இருப்பிடத்தில் தங்கும் எய்ப்பன்றி தனது கூர்மையுறுகின்ற முள்ளால் எய்து கொல்லுகையினாலே பட்ட கானவர் அழுகை) என்று, முள்ளம்பன்றியை வேட்டையாடப் புகுந்த கானவன் பட்ட பாட்டை மலைபடுகடாம் (300- 1) கூறுகிறது.
“அகன்றுறைச்சிலைப் பாற்பட்ட முளவு மான்கொழுங்குறை”
“அகன்ற நீர்த்துறைக்கண் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் ஊன்”; என்று, முள்ளம் பன்றி ஊனுக்காக வேட்டையாடப்பட்டது குறித்துப் புறநானூறு ( 374) கூறுகிறது. இரவு நேரங்களில் பன்றி முதலிய விலங்குகள் வந்து தினைப்புனத்தை நொக்கி அழித்து விடாமல் இருக்கக் காவல் காத்த எயினர், பரண் அமைத்து அதன்மேல் இருந்து காத்தனர். இரவு நேரத்தில் யானைகள் வந்து தினைப்புனத்தை அழித்தலும் உண்டு. பரண்கள் உயரம் குறைவாக இருந்தால் யானைகள் பரண்களை அழித்து, பரண்மேல் இருப்போரைத் துன்புறுத்தக் கூடும். அதனால் யானைகளுக்கு எட்டாத உயரத்தில் மரங்களின் மேல் பரண் அமைத்து வேடர் அதன் மேல் இருந்து தினைப்புனம் காத்தனர். அப்போது பன்றியொன்று தினைப்புனத்தை மேய்ந்து அழிப்பதற்கு வந்தது. பன்றியின் காலடியோசை கேட்ட கானவன் பரண்மேல் இருந்தபடியே ஓசைவந்த திசையை நோக்கி அம்பு ஒன்றை வேகமாகச் செலுத்தினான். கானவன் கடுகச் செலுத்திய அம்பு பன்றியின் உடம்பில் பட்டுப் புண் படுத்தியது. புண்பட்ட பன்றி புண்ணுடனும் அம்புடனும் ஓடிப்போனது. ஓடிய பன்றி புண்ணின் வலியின் கடுமையால் மயங்கித் தான் வந்த பாதையை மறந்து வழி மாறிச் சென்று இறந்து வீழ்ந்தது. இதனை
“கழுதிற் சேணோன் ஏவொடு போகி
யிழுதினன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்
நெறிகெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந்தன்ன ஏனம்” என்று மலைப்படுகடாம் (243 – 47) கூறுகிறது.
மான்வேட்டை
முயலைப் போல மானும் ஒரு சாதுவான ஆபத்தில்லாத விலங்குதான். தற்காலத்தில் தோல், கொம்பு, இறைச்சி ஆகியவற்றுக்காக மான் வேட்டையாடப்படுகிறது. பண்டைக் காலத்திலும் மான் தோல், இறைச்சி ஆகியவற்றுக்காக வேட்டையாடப்பட்டது. வேள்வி செய்யும் காலத்தில் பார்ப்பார் மான் தோலைப் பச்சையாகத் தோளில் போர்த்திக் கொண்டு யாகச்சடங்குங்களைச் செய்தனர் என்று புறநானூறு ( 166 ) கூறுகிறது.
“வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப்புல்வாய்க் கலைப் பச்சை
சுவற்பூண் ஞாண் மிசைப் பொலிய”
(வேள்வித் தொழிற்கு வேண்டி நீ போர்க்கப்பட்ட, காட்டு நிலத்தே வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத்தோல் நினது தோளின் கண் இடப்பட்ட பூணூல் மீது சிறந்து தோன்றியது) என்று ஆவூர் மூலங்கிழார்அது குறித்துக் கூறுகிறார்.
மானுக்கு இரங்கிய மங்கை
எயினரது குடிசையின் முற்றத்தில் பலாமரம் அல்லது விளாமரம் நிற்கும், அதில் பார்வை மான் கட்டப்பட்டிருக்கும். பார்வைமான் கட்டிய கயிறு உராய்ந்ததால் அம்மரத்தின் அடி தேய்ந்திருந்தது. இதனை,
“பார்வை யாத்த பரைதாழ் விளவு, என்றும்
முன்றில் முஞ்ஞை முசுண்டைபம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇ” – புறாநானூறு : 320
என்றும் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.
பார்வைமான் என்பது, பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சிதந்து கட்டப்பட்ட பெண்மான். இதனை எயினர் தம் குடிசையின் முற்றத்தில் இருந்த பலாமரம் அல்லது விளாமரத்தின் அடியில் கட்டி வைத்திருந்தனர். ஆண்மான்கள் புணர்ச்சி வேட்கை கொண்டு மேய்தல் தொழிலைக் கைவிட்டு அதனோடு கூடி விளையாட்டயர அங்கு வரும். கலையும் பிணையும் புணர் நிலைக்கண் விளையாட்டயர்தலைக் காணும் எயினர் இரக்க மின்றிக் கலையை எளிதில் வீழ்த்துவர். அதற்காகப் பயிற்சி தந்து கட்டப்பட்ட பெண்மானே பார்வைமான் என்ப்படும். எயினரின் எளிய குடிசையின் முன் கனிகள் தொங்கும் பலாமரம் ஒன்று நின்றிருந்தது. முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அதன் மீது செறிந்து படர்ந்திருந்தன. வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தராகப் படந்திருந்தன. குடிசையின் முற்றத்தில் மான் தோலைவிரித்து எயிற்றி தினையரிசியைப் பரப்பி உலரவிட்டிருந்தாள். குடிசைக் குரிய வனான எயினன் பலாமரத்தின் நிழலில் படுத்துறங்கிக் கொண்டிருந்தான். அவன் யானை வேட்டம்புரிவோன்: இரவு அவ்வேட்டத்தின் மேற்சென்றிருந்தமையால் பேருறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.
குடிசையின் பக்கத்தில் பார்வை மானாகிய பெண்மான் கட்டப்பட்டிருந்தது. தொழிலொன்று மில்லாத பிறிதொரு தனி ஆண் மான் வந்து அப்பெண்மானைத் தழுவிக்கலந்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்குடிசையின் தலைவியான எயிற்றி, குடிசையின் ஒரு பக்கமாக மான் தோலைவிரித்து அதில் தினையரிசியை உலர விட்டிருந்தாள். அவள், இன்பம் மிக்க அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்டாள். கண்ட அவள் தன் கணவன் உறக்கம் நீங்கி எழுந்து விடுவானோ என அஞ்சினாள், எழுந்து கலையும் பிணையும் புணர்நிலைக் கண் விளையாட்டயர்தலைக் காணின் அவன் அருளின்றிக்கலையை வீழ்த்துவன் என்று உணர்ந்து, அவன் உறக்கம் கலைந்து எழுவானோ எனவும், தன்வருகையைக் கண்டால் புதிதாக வந்த கலைமான் அஞ்சியோடுமோ, அங்ஙனம் அஞ்சியோடின் அவற்றின் புணர்நிலை இன்பம் சிதையுமோ என்றும் கவன்ற அவள் ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்தாள். அவளது ஒடுக்கம் கானக்கோழியும் இதற் பறவையும் வந்து அவள் மான் தோலில் பரப்பி உலர விட்டிருந்த தினையரிசியைக் கல்லென ஆரவாரித்துக் கவர்நதுண்ண ஏதுவாயிற்று. பின்னர் எயிற்றி வைத்திருந்த கண்ணியில் அகப்பட்டுக் கொண்டன.
கலைமான் பிணைமானைப் புணர்ந்து நீங்கியபின் எயிற்றி அப்பறவைகளைப் பிடித்துத் துண்டு துண்டாக அறுத்து நிறைத்த இறைச்சியைச் சந்தனக்கட்டையாலாகிய நெருப்பில் சுட்டு ஆரல் மீனின் நாற்றமும் உடன்கமழ அவற்றைப் பாணரின்கரிய பெரிய சுற்றத்தார்க்கு உண்ணக்கொடுத்து உபசரித்தாள். இச்செய்தியைச் சுவைபடக் கூறும் வீரைவெளியனாரின் பாடல் இது.
‘முன்றில் முஞ்ஞை முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழிற்றனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலு மஞ்சி யாவதும்
இல் வழங்காமையின் கல்லென வொலித்து
மானதட்பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடிதல் கவர்ந்துண்டென
ஆரநெருப்பினாரல் நாறத்
தடிவார்ந்திட்ட முழு வள்@ரம்
இரும்பே ரொக்க லொடொருங்கினி தருந்தித்
தங்கினை சென்மோபாணை”
- புறானூறு 320
வீரைவெளியனாரின் இப்பாடல் கணசமூகத்தலைவியான எயினப்பெண்ணின் இல்லற மாட்சியையும் எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணிஇரங்கும் உயர்பண்பையும் அவளது விருந்தோம்பற் சிறப்பையும் உலகுக்குத் தெற்றெனப் புலப்படுத்துகிறது.
புலிவேட்டை
வேட்டுவர் புலி வேட்டைக்குச் சென்றனர். வேட்டையின் போது சினமுற்ற புலியானது வேட்டுவன் மீது பாய்ந்து மார்பைக் கிழித்துப்புண்ணாக்கியது. அக்கொடிய புண்ணை ஆற்றுவதற்காகவும் புண்ணின் வலி தெரியாமல் இருப்பதற்காகவும் எயிற்றியர் இனிய பாடல் களைப் பாடினர். அப்பாடல் காடெல்லாம் எதிரொலித்தது.
“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்; காப்பென
அறல் வாழ் கூந்தல்கொடியச்சியர் பாடல்”
(தம் கணவர் மார்பிலே புலிபாய்ந்ததாகப்பட்ட நெடிய பிளத்தலையுடைய சீரிய புண்ணை ஆற்றுவதற்குக் காவல் என்று கருதி அறல் போலும் கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பாடலால் எழுந்த ஓசை) என்று மலைபடுகடாம் கூறுகிறது.
யானை வேட்டை
கானவர் மலைமேல் பரண் அமைத்துத் தினைப்புனம் காத்தனர். அப்போது, விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடையதும் தன் இனத்தைப் பிரிந்து வந்ததுமான யானை தினைப்புனத்தைத் தின்னும் பொருட்டு வந்தது. யானைத் தலைவனான அதனை வளைத்துப் பிடித்தற்காகக் கானவர் கூடிமுயன்றனர். அதனால் ஏற்பட்ட ஆரவாரம் கானகமெங்கும் எதிரொலித்தது.
‘விலங்கல் மீமிசைப் பணவை கானவர்
புலம்புக் குண்ணும் இலங்கேந்து மருப்பின்
இனம்பிரி ஒருத்தல் புரிவளை பூசல்” என்று, மலைபடுகடாம் ( 277-99)
எயினரின் யானை வேட்டம் குறித்துக் கூறுகிறது.
இதுகாறும் கூறிய செய்திகளால் கானவர்; உடும்பு, முயல், பன்றி, முள்ளம் பன்றி, மான், புலி, யானை முதலிய காட்டு விலங்குகளை வேட்டையாடினர். அவ்வேட்டத்தின் போது பல்வகை இன்னல்களுக்கு ஆளாயினர் என்பதை அறிந்தோம். வேட்டைத் தொழில் கானவரின் கூட்டு முயற்சியாகவே இருந்தது.
கானவர் தேனெடுத்தல்
குரங்குகளும் ஏற முடியாத உயரத்தையுடையதும் இனிதாகக் காட்சி தருவதுமான உயர்ந்த மலையில் தேனீக்கள் தேனைத் திரட்டிக் கூடுகட்டியிருந்தன. கானவர் அத்தேனை எடுக்க முயன்றனர். நிலைபேறுண்டாகக் கட்டியமைத்தகண்ணேணி வழியாக ஏறிச் சென்று அத்தேன் கூட்டை யழித்துத் தேனெடுத்தனர். அதனால் எழுந்த மகிழ்ச்சியால் மிகுதியாக ஆரவாரித்தனர். அந்த ஆரவாரம் மலையெங்கும் எதிரொலித்தது. கண்ணேணியாவது, கணுக்களிலே அடிவைத்து ஏறிச் செல்லும்படி அமைத்துள்ள மூங்கில் ஏணியாகும். மலையுச்சியில் உள்ள தேனிறாலை அழிக்கும் பொருட்டாகச் செங்குத்தாக மூங்கில்களைக் கூட்டி ஏணியாக நிறுத்தி வைத்து அதன் வழியாக ஏறிச் சென்று கானவர் தேனெடுப்பர்.
“கலைகையற்ற காண்பினெடுவரை
நிலைபெய்திட்ட மால்பு நெறியாகப்
பெரும்பயன் தொடுத்த தேங்கொள் கொள்ளை”
என்று கானவர் கண்ணேணி வழியாக ஏறிச்சென்று தேனெடுத்த செய்தியை மலைபடுகடாம் ( 315-17) கூறுகிறது. ( மால்பு கண்ணேணி ) பாரியின் பறம்பு மலையில் தேனெடுத்தற்காகக்;கானவர்கண்ணேணிகள் அமைத்த செய்தியைக் கபிலர் கவினுறக் கூறுகிறார். மால்புடை நெடுவரைக் கோடு” ( புறநானூறு 105) ( கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரம் ) என்பது கபிலரது கூற்று,
“அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே “என்றும்
“நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றிற்
தேர்வீசிருக்கை நெடியோன் குன்றே “ புறம் : 114
( மதுப் பிழிந்து போகடப்பட்ட கவளத்தினது கோதுடைத்தாகிய சிதறிய வற்றினின்றும் வார்ந்த மதுச் சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை ) என்றும்
‘ஒரு சார் அருவி ஆர்ப்ப வொருசார்
பாணர்மண்டை நிறையப்பெய்மார்
வாக்கவுக்க தேக்கட்டேறல்
கல்லலைத் தொழுகும்” – புறநானூறு : 115
( ஒரு பக்கம் அருவி ஆர்த் தொழுக, ஒரு பக்கம் பாணருடைய மண்டைகள் ( கலங்கள்) நிரம்ப வாக்க வேண்டி வடித்தலால் சிந்திய இனிய கள்ளாகிய தேறல் கல்லையுருட்டி ஒழுகும் ) என்றும் பறம்புமலையின் தேன் வளம் குறித்தும் கானவர் அங்கு தேனெடுத்தது குறித்தும் தேன் சுவை சொட்டக் கபிலர் கூறுகிறார்.
எயினர் இயல்பு - வெ.பெருமாள் சாமி
வேட்டுவர்கள் காட்டுப் பூனையின் ஆணைப் போன்ற வெருண்டபார்வையை உடையவர்கள், பெரியதலையை உடையவர்கள், பறவைகளின் ஊனைத்தின்பதால் புலால் நாற்றம் கமழும் வாயினர். இடக்கர்ச் சொற்களை அடிக்கடி கூசாது கூறினாலும் கரவில்லாத சொற்களையே பேசுவர். அதனால் வெள்வாய் வேட்டுவர் எனப்பட்டனர்.
“வெருக்குவிடையன்ன வெருணோக்குக் கயந்தலை
புள் தின்ற புலவு நாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர்” என்று வேட்டுவர் இயல்பு குறித்து ஆலத்தூர் கிழார் புறநானூற்றில் (324) கூறுகிறார்.
வேட்டைச் சமூகத்தவரான எயினர்கள் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. விருந்தோம்பல் இம்மக்களின் தலையாய பண்பாக விளங்கியது. அது மட்டுமல்ல இருப்பது எதுவாயினும் அதனை எல்லாரும் சமமாகப்பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது இம்மக்களின் சீரிய பண்பாக மிளிர்ந்தது. இவர்கள் கரவு, கபடம், சூது முதலிய தீயபண்புகளை அறியாதவராக இருந்தனர் என்பதையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.
தம் இல்லம் நாடி வந்த பாணர் முதலிய விருந்தினரை இனிய முகத்தினராய் இன்சொல்லினராய் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். பசி நீங்க உணவளித்துப் போற்றினர். தம்மிடம் இருந்தது எதுவாயினும் எந்நேரமாயினும் அதனை விருந்தினர்க்குப் பகிர்ந்தளித்துப் பசிபோக்கினர். பகிர்ந்துண்ணும் பண்பை இயல்பாகவே பெற்றிருந்த எயின்குடிப்பெண்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர் என்பதில் வியப்பேதுமில்லை. எயின்குடியினரின் இச்சீரியபண்புக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் ஆதி பொதுவுடைமை வகைப்பட்ட கண சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
எயினரின் விருந்தோம்பல் சிறப்பு
வேலின் கூரிய முனை போன்ற ஈந்தின் இலைகளால் வேயப்பட்டதும் முள்ளம் பன்றியின் முதுகுபோல் காணப்பட்டதும் ஆன குடிசைகளில் எயினர் வாழ்ந்தனர். அது பற்றி முன்னர்க் கூறப்பட்டுள்ளது. அக்குடிசையின் உள்ளே எயிற்றி ஒருத்தி படுத்திருந்தாள். அவள் அண்மையில் தான் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தாள். தாயும், சேயும் மான் தோலாகிய படுக்கையில் முடங்கிப்படுத்திருந்தனர்.
அக்குடிசையைச் சேர்ந்த பிறபெண்கள் உணவு தேடி வெளியே சென்றிருந்தனர். அவர்கள் கையில் வலியகோல் ஒன்று இருந்தது. வயிரம் பாய்ந்த கோல். அதன் ஒரு முனையில் உளி ஒன்று செருகப்பட்டிருந்தது. மறு முனையில் பூண் கட்டப்பட்டிருந்தது. அக்கோல் கடப்பாரைபோல் தோற்றமளித்தது.
கரம்பை நிலமாகிய காட்டில் மிக விளைந்து உதிர்ந்து கிடந்த புல்லரிசியை எறும்புகள் இழுத்துச் சென்று சேமித்து வைத்திருந்தன. அவ்வாறு சேமித்து வைத்த இடங்களைத் தேடி அப்பெண்கள் சென்றனர். வெண்மையான பற்களையுடைய அவர்கள் தம் கையில் வைத்திருந்த கடப்பாறையால் அவ்விடங்களில் கட்டிகள் கீழ்மேலாகுமாறு குத்தியதால் கரம்பை நிலத்தில் உண்டாகிய புழுதியினை அளைந்து எறும்புகள் சேமித்து வைத்திருந்த புல்லரிசியை எடுத்து வந்தார்கள். அதனை அவர்கள் குடிசையின் முற்றத்தில் விளாமரத்தின் அடியில் பதித்து வைத்திருந்த மரவுரலில் பெய்து, வயிரமுடைய கோலாகிய உலக்கையால் குற்றினார்கள்.
கிணற்றில் சில்லூற்றாக ஊறிய உவர் நீரை முகந்து வந்து, பழைய ஒறுவாய் போனபானையில் உலை ஏற்றினார்கள். உலையை முரிந்த அடுப்பில் வைத்துச் சோறு ஆக்கினார்கள். அரியாது ஆக்கின அச்சோற்றை உப்புக் கண்டத்தோடே, தெய்வங்களுக்குச் சேர இட்டு வைத்த பலிபோலத் தேக்கிலையில் வைத்து விருந்தினராக வந்த பாணர்க்கும் கொடுத்துத் தாமும் உண்டனர். இக்காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை (86-105) பெருமையுடன் காட்டுகிறது.
‘யாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வற்றலை யன்ன வைநுதி நெடுந்தகர்
ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்காழ்
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச் சிறையின் மிளிர மண்டி
இருநிலக்கரம்பை படு நீறாடி
நுண்புலடக்கிய வெண்பலெயிற்றியர்
பார்வையாத்த பரைதாழ் விளவின்
நீழல்முன்றில் நிலவுரற் பெய்து
குறுங்காழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற்றுவரீ தோண்டித் தொல்லை
முரவு வாய்க் குழுசி முரியடுப்பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல்
-----------------------------------------
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவீர்”
என்று கடியலுர் உருத்திரங் கண்ணனார்வரைந்து காட்டும் சித்திரம், எயின் குடிமகளிரின் பகுத்துண்ணும் பண்பையும் விருந்தோம்பற் சிறப்பையும் இனிதே புலப்படுத்துகிறது.
குறிஞ்சி நிலத்துச் சிற்நூர் ஒன்றில் நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றினைப் புறநானூற்றுப் புலவர் ஒருவர் நமக்குக் காட்டுகிறார். பெயர் தெரியாத அப்புலவர் காட்டும் காட்சி குறிஞ்சி நிலத்தில் கண சமூகமாக வாழ்ந்த மாந்தரின் எளிய தன்மையையும் தன்னல மறுப்பையும் விருந்தோம்பற் சிறப்பையும் பகுத்துண்ணும் பண்பையும் உணர்த்துகிறது.
அவ்வூரின்கண் வாழ்ந்த எயினர் கரவறியா உள்ளத்தவர், வெள்ளந்தியானவர்கள், நாகரிக உலகின் நடப்புக்கள் அவர்கள் அறியாதவை. ஆனால் மனைத் தலைவியானவள், தலைமைக்கேற்ற தகுதியும் தலைமைப் பண்பும் நன்மாட்சியும் வாய்க்கப்பெற்றவளாக விளங்கினாள். அவளைப் பற்றிப் புலவர்வரைந்து காட்டும் சித்திரம் கற்பார்க்கு வியப்பும் உவகையும் நல்குவதாக உள்ளது. அவ்வோவியம் இது :
‘நீருட்பட்ட மாரிப் பேருறை
மொக்குளன்ன பொகுட்டு விழிக்கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
தொள்ளை மன்றத் தாங்கட் படரின்
உண்கென உணரா உயவிற் றாயினும்
தங்கினிர் சென்மோ புலவீர் நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகுந் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுணக் கொளத் தீர்ந்தெனக்
குறித்து மாறெ திர்ப்பைப் பெறா அமையிற்
குரலுணங்கு விதைத் தினையுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன் றோவிலள் - புறநானூறு 333.
(புலவர்களே, ஊரின் கண் உள்ளதும் கரியபிடர் பொருந்திய தலையும் நீண்டகாதும் உடைய குறுமுயல் ஊருக்குள் இருக்கும் குறுகிய புதர்களில் துள்ளி விளையாடும் வளைகள் பொருந்தியதும் ஆன மன்றத்துக்குச் சென்றால், அங்கே உங்களை உண்ணுங்கள் என்று குறிப்பறிந்து கூறுபவர்கள் எவரும் இல்லாத வருத்தம் உடையதாயினும், அங்கே பெரிதும் தங்கிச் செல்வீர்களாக. சென்றதனால் மனைத் தலைவி, உங்களுக்கு உணவளிக்க விரும்பி, வரகும் தினையுமாக வீட்டில் இருந்தவற்றையெல்லாம் இரவலர் உண்டதனாலும் தானமாகக் கொண்டதனாலும் தீர்ந்து போனதனால், கைமாற்றுக் கடனாகவும் பெற முடியாத நிலையில் கதிரிடத்தே
முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றிச் சமைத்து உங்களை உண்ணச் செய்வாள், தனது இல்லாமையைச் சொல்லி நீங்கள் பசியோடு வெறுங்கையுடன் செல்ல விடமாட்டாள் ) என்று, தலைவியின் இயல்பு குறித்துப் புலவர் கூறுகிறார்.
“வரகும் தினையும் உள்ளவையெல்லாம்
இரவல்மாக்களுக் கீயத் தொலைந்தென”
தலைவி அவற்றைக் கைமாற்றுக் கடனாகப் பெற்றாவது பாணருக்கு உணவளிக்க நினைத்தாள். அதைப்பெற இயலாதநிலையில் “விருந்தோம்பல் ஓம்பா மடமையினும் வித்தட்டுண்டல் குற்றமன்று” எனத் தெளிவு பெற்று விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றிச் சமைத்து பாணருக்கு உணவளிக்க முன் வந்தாள். விருந்தினராக வந்த பாணரைப் பசியுடன் வெறுங்கையராக அனுப்புதல் பற்றி அவள் நினைத்தும் பார்த்தாளில்லை. கண சமூகத்திற்கே உரிய பகுத்துண்ணும் பண்பே, இங்கு அச்சமூகத்தின் தலைவியான மனையாளை, விதைத்தினையைக் குற்றிச் சமைத்துப் பாணரை உண்பிக்கத் தூண்டியது என்பது மிகையன்று.
“வெருக்குவிடையன்ன வெருணோக்குக் கயந்தலை
புள் தின்ற புலவு நாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர்” என்று வேட்டுவர் இயல்பு குறித்து ஆலத்தூர் கிழார் புறநானூற்றில் (324) கூறுகிறார்.
வேட்டைச் சமூகத்தவரான எயினர்கள் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. விருந்தோம்பல் இம்மக்களின் தலையாய பண்பாக விளங்கியது. அது மட்டுமல்ல இருப்பது எதுவாயினும் அதனை எல்லாரும் சமமாகப்பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது இம்மக்களின் சீரிய பண்பாக மிளிர்ந்தது. இவர்கள் கரவு, கபடம், சூது முதலிய தீயபண்புகளை அறியாதவராக இருந்தனர் என்பதையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.
தம் இல்லம் நாடி வந்த பாணர் முதலிய விருந்தினரை இனிய முகத்தினராய் இன்சொல்லினராய் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். பசி நீங்க உணவளித்துப் போற்றினர். தம்மிடம் இருந்தது எதுவாயினும் எந்நேரமாயினும் அதனை விருந்தினர்க்குப் பகிர்ந்தளித்துப் பசிபோக்கினர். பகிர்ந்துண்ணும் பண்பை இயல்பாகவே பெற்றிருந்த எயின்குடிப்பெண்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர் என்பதில் வியப்பேதுமில்லை. எயின்குடியினரின் இச்சீரியபண்புக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் ஆதி பொதுவுடைமை வகைப்பட்ட கண சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
எயினரின் விருந்தோம்பல் சிறப்பு
வேலின் கூரிய முனை போன்ற ஈந்தின் இலைகளால் வேயப்பட்டதும் முள்ளம் பன்றியின் முதுகுபோல் காணப்பட்டதும் ஆன குடிசைகளில் எயினர் வாழ்ந்தனர். அது பற்றி முன்னர்க் கூறப்பட்டுள்ளது. அக்குடிசையின் உள்ளே எயிற்றி ஒருத்தி படுத்திருந்தாள். அவள் அண்மையில் தான் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தாள். தாயும், சேயும் மான் தோலாகிய படுக்கையில் முடங்கிப்படுத்திருந்தனர்.
அக்குடிசையைச் சேர்ந்த பிறபெண்கள் உணவு தேடி வெளியே சென்றிருந்தனர். அவர்கள் கையில் வலியகோல் ஒன்று இருந்தது. வயிரம் பாய்ந்த கோல். அதன் ஒரு முனையில் உளி ஒன்று செருகப்பட்டிருந்தது. மறு முனையில் பூண் கட்டப்பட்டிருந்தது. அக்கோல் கடப்பாரைபோல் தோற்றமளித்தது.
கரம்பை நிலமாகிய காட்டில் மிக விளைந்து உதிர்ந்து கிடந்த புல்லரிசியை எறும்புகள் இழுத்துச் சென்று சேமித்து வைத்திருந்தன. அவ்வாறு சேமித்து வைத்த இடங்களைத் தேடி அப்பெண்கள் சென்றனர். வெண்மையான பற்களையுடைய அவர்கள் தம் கையில் வைத்திருந்த கடப்பாறையால் அவ்விடங்களில் கட்டிகள் கீழ்மேலாகுமாறு குத்தியதால் கரம்பை நிலத்தில் உண்டாகிய புழுதியினை அளைந்து எறும்புகள் சேமித்து வைத்திருந்த புல்லரிசியை எடுத்து வந்தார்கள். அதனை அவர்கள் குடிசையின் முற்றத்தில் விளாமரத்தின் அடியில் பதித்து வைத்திருந்த மரவுரலில் பெய்து, வயிரமுடைய கோலாகிய உலக்கையால் குற்றினார்கள்.
கிணற்றில் சில்லூற்றாக ஊறிய உவர் நீரை முகந்து வந்து, பழைய ஒறுவாய் போனபானையில் உலை ஏற்றினார்கள். உலையை முரிந்த அடுப்பில் வைத்துச் சோறு ஆக்கினார்கள். அரியாது ஆக்கின அச்சோற்றை உப்புக் கண்டத்தோடே, தெய்வங்களுக்குச் சேர இட்டு வைத்த பலிபோலத் தேக்கிலையில் வைத்து விருந்தினராக வந்த பாணர்க்கும் கொடுத்துத் தாமும் உண்டனர். இக்காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை (86-105) பெருமையுடன் காட்டுகிறது.
‘யாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வற்றலை யன்ன வைநுதி நெடுந்தகர்
ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்காழ்
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச் சிறையின் மிளிர மண்டி
இருநிலக்கரம்பை படு நீறாடி
நுண்புலடக்கிய வெண்பலெயிற்றியர்
பார்வையாத்த பரைதாழ் விளவின்
நீழல்முன்றில் நிலவுரற் பெய்து
குறுங்காழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற்றுவரீ தோண்டித் தொல்லை
முரவு வாய்க் குழுசி முரியடுப்பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல்
-----------------------------------------
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவீர்”
என்று கடியலுர் உருத்திரங் கண்ணனார்வரைந்து காட்டும் சித்திரம், எயின் குடிமகளிரின் பகுத்துண்ணும் பண்பையும் விருந்தோம்பற் சிறப்பையும் இனிதே புலப்படுத்துகிறது.
குறிஞ்சி நிலத்துச் சிற்நூர் ஒன்றில் நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றினைப் புறநானூற்றுப் புலவர் ஒருவர் நமக்குக் காட்டுகிறார். பெயர் தெரியாத அப்புலவர் காட்டும் காட்சி குறிஞ்சி நிலத்தில் கண சமூகமாக வாழ்ந்த மாந்தரின் எளிய தன்மையையும் தன்னல மறுப்பையும் விருந்தோம்பற் சிறப்பையும் பகுத்துண்ணும் பண்பையும் உணர்த்துகிறது.
அவ்வூரின்கண் வாழ்ந்த எயினர் கரவறியா உள்ளத்தவர், வெள்ளந்தியானவர்கள், நாகரிக உலகின் நடப்புக்கள் அவர்கள் அறியாதவை. ஆனால் மனைத் தலைவியானவள், தலைமைக்கேற்ற தகுதியும் தலைமைப் பண்பும் நன்மாட்சியும் வாய்க்கப்பெற்றவளாக விளங்கினாள். அவளைப் பற்றிப் புலவர்வரைந்து காட்டும் சித்திரம் கற்பார்க்கு வியப்பும் உவகையும் நல்குவதாக உள்ளது. அவ்வோவியம் இது :
‘நீருட்பட்ட மாரிப் பேருறை
மொக்குளன்ன பொகுட்டு விழிக்கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
தொள்ளை மன்றத் தாங்கட் படரின்
உண்கென உணரா உயவிற் றாயினும்
தங்கினிர் சென்மோ புலவீர் நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகுந் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுணக் கொளத் தீர்ந்தெனக்
குறித்து மாறெ திர்ப்பைப் பெறா அமையிற்
குரலுணங்கு விதைத் தினையுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன் றோவிலள் - புறநானூறு 333.
(புலவர்களே, ஊரின் கண் உள்ளதும் கரியபிடர் பொருந்திய தலையும் நீண்டகாதும் உடைய குறுமுயல் ஊருக்குள் இருக்கும் குறுகிய புதர்களில் துள்ளி விளையாடும் வளைகள் பொருந்தியதும் ஆன மன்றத்துக்குச் சென்றால், அங்கே உங்களை உண்ணுங்கள் என்று குறிப்பறிந்து கூறுபவர்கள் எவரும் இல்லாத வருத்தம் உடையதாயினும், அங்கே பெரிதும் தங்கிச் செல்வீர்களாக. சென்றதனால் மனைத் தலைவி, உங்களுக்கு உணவளிக்க விரும்பி, வரகும் தினையுமாக வீட்டில் இருந்தவற்றையெல்லாம் இரவலர் உண்டதனாலும் தானமாகக் கொண்டதனாலும் தீர்ந்து போனதனால், கைமாற்றுக் கடனாகவும் பெற முடியாத நிலையில் கதிரிடத்தே
முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றிச் சமைத்து உங்களை உண்ணச் செய்வாள், தனது இல்லாமையைச் சொல்லி நீங்கள் பசியோடு வெறுங்கையுடன் செல்ல விடமாட்டாள் ) என்று, தலைவியின் இயல்பு குறித்துப் புலவர் கூறுகிறார்.
“வரகும் தினையும் உள்ளவையெல்லாம்
இரவல்மாக்களுக் கீயத் தொலைந்தென”
தலைவி அவற்றைக் கைமாற்றுக் கடனாகப் பெற்றாவது பாணருக்கு உணவளிக்க நினைத்தாள். அதைப்பெற இயலாதநிலையில் “விருந்தோம்பல் ஓம்பா மடமையினும் வித்தட்டுண்டல் குற்றமன்று” எனத் தெளிவு பெற்று விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றிச் சமைத்து பாணருக்கு உணவளிக்க முன் வந்தாள். விருந்தினராக வந்த பாணரைப் பசியுடன் வெறுங்கையராக அனுப்புதல் பற்றி அவள் நினைத்தும் பார்த்தாளில்லை. கண சமூகத்திற்கே உரிய பகுத்துண்ணும் பண்பே, இங்கு அச்சமூகத்தின் தலைவியான மனையாளை, விதைத்தினையைக் குற்றிச் சமைத்துப் பாணரை உண்பிக்கத் தூண்டியது என்பது மிகையன்று.
உழவுத்தொழில் - வெ.பெருமாள் சாமி
மனிதன் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்த கால கட்டத்தில் அந்நிலங்களில் வரகு தினை முதலியவற்றை விளைவித்தான். அவற்றுடன் உழுந்து, பயறு அவரை முதலியவற்றையும் விளைவித்தான். ஆனால் விளைச்சலின் பயன் அவனுக்கு, வாய்க்கும் கைக்கும் எட்டாத நிலையிலேயே இருந்தது. கடன் வாங்கிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவன் தள்ளப்பட்டிருந்தான்.
எருதுகாலுறாஅ திளைஞர் கொன்ற
சில் விளைவரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு கடைதப்பலின்
ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறு புல்லாளர் முகத்தளவை கூறி
வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை “ - புறநானூறு : 327
(எருதுகளைப் பிணித்து அவற்றின் காற்கீழ்ப் பெய்து கடாவிடுதலின்றி இளையர்கள் காலால் மிதித்தெடுத்த சிலவாக விளைந்த வரகாகிய புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைப் பசித்து வந்த பாணர் உண்டு வெளியேறினாராக, புறங்கடை வறிதாகலின் சுற்றத்தாருடைய வறுமையைக் களைய வேண்டித் தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டுமளவைச் சொல்லி வரகைக் கடனாகப் பெறும் நெடிய புகழுடைய தலைவன்) என்று, உழவன் தன் சுற்றுத்தாருடைய வறுமையைக் களைய வேண்டி வரகைக் கடனாகப்; பெற்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.
வரகுந்தினையுமுள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுணக் கொளத்தீர்ந்தெனக்
குறித்து மாறெதிர்ப்பைப் பெறாஅ மையிற்
குரலுணங்கு விதைத்தினையுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன்றோவிலள்” - புறநானூறு : 333
(வரகுந்தினையுமாகத் தன்மனையில் உள்ளவற்றை யெல்லாம் இரவலர் உண்டதனாலும் கொண்டதனாலும் தீர்ந்தனவாக விருந்தினராக வந்த பாணரை உண்பித்தற்பொருட்டு, வரகைக் கடனாகப் பெற முடியாமையால் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலிற் பெய்து குற்றிச் சமைத்து மனைத்தலைவியானவள் உண்பித்தாள்) என்று மனனத்தலைவி விருந்தினரின் பொருட்டு விதைத்தினையைக் குற்றிச் சமைக்க முற்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. இவ்வாறு,கணசமூகமாக வாழ்ந்த குறிஞ்சி முல்லை நிலமாந்தரின் பற்றாக்குறையான அவலவாழ்வு குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இம்மக்கள் வறுமையில் வாடினாலும் பண்பில் உயர்ந்து ஓங்கி நின்றதைக் காண்கிறோம். இவ்வுயர்வுக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் கணசமூகமாக வாழ்ந்தனர். அது பொதுவுடைமை வகைப்பட்ட கணசமூகம்.
இரும்பு கண்டுபிடிக்கப் பட்டுப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு உற்பத்திக் கருவிளிலும் உற்பத்தி முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலமாக்கப்பட்டன. ஆறுகளும், ஓடைகளும் மறித்து ஏரிகளும் பாசனக் குளங்களும் அமைக்கப்பட்டன. புதர் மண்டிக் கிடந்த காடுகள் வயல்களாக – விளைநிலங்களாகத் திருத்தப்பட்டன. வரகும் தினையும் விளைந்த வன்னிலங்கள் நெல்லும் கரும்பும் இஞ்சியும் மஞ்சளும் வாழையும் கமுகும் விளையும் மென்னிலங்கள் ஆக்கப்பட்டன. காடு திருத்தி விளைநிலமாக்கப்பட்ட செய்தியை ‘காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி” (பாட்டினைப்பாலை (283 -84) என்றும் ‘நிலன் நெளிமருங்கில் நீர் நிலை பெருகத் தட்;டோரம்ம இவண் தட்டோரே” (நிலம் குழிந்த விடத்தே நீர் நிலை மிகும்படியாகத் தளைத்தோர்தாம் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தவர் ஆவர்) புறநானூறு 18) என்றும் சங்க இலங்கியங்கள் கூறுகின்றன. இவ்வேலைகள் அனைத்ததையும் அடிமைகளே செய்து முடித்தனர். ஆனால் திருத்தப்பட்ட நிலங்கள் தனி நபர் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன. உழைப்பாளிகளான அடிமைகளின் பேருழைப்பால் விளைச்சல் பெருகியது. ஒட்டுண்ணிகளாகத் தலையெடுத்த ஆண்டைகள் அதனை அபகரித்துக் கொண்டனர்.
அடிமைகளின் அயரா உழைப்பால் விளைச்சல் அபரிமிதமாகப் பெருகியது. ‘ஒரு பிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு’ என்றும் ‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளையும்” என்றும் இலங்கியங்கள் அடிமைகளின் உழைப்பால் விளைந்த மிகுவிளைச்சல் பற்றிக் கூறுகின்றன.
உழைக்கும் மக்களாகிய உழவர்,உழத்தியர், கடையர், கடைசியர் முதலியவர்களின் உழைப்பால் உழவுத்தொழில் சிறப்புப்பெற்றது. உழவுத் தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து திருவள்ளுவர் கூறுகிறார்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு - குறள்.
(ஏரால் உழுதலைப் போல எருவிடுதலும் பயிருக்கு நல்லதே யாம், களையினை நீக்கிய பிறகு பயிரைப் பாதுகாத்தல் நீர்பாய்ச்சுதலைப்போல நல்லதேயாகும்) என்பது உழவு குறித்து வள்ளுவர் கூறும் தொழில் நுட்பம் ஆகும். இக்குறளில் அவர் நிலத்தை உழுதல் பயிரைப்பாதுகாத்தல் நடவுக்குப் பிறகு களை நீக்குதல் , நீர் பாய்ச்சுதல், பயிரைப் பாதுகாத்தல் என உழவுத்தொழிலில்; கடைப்பிடிக்கவேண்டிய உத்திகள் குறித்துக் கூறியுள்ளார். சங்க காலத்தில் உழவர்கள் பின்பற்றிய உத்திகளைக் கண்டுதான் வள்ளுவர் அவ்வாறு கூறியிருத்தல் கூடும்.
ஆறு குளம் ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து உழவர்கள் வயலுக்கு நீர்பாய்ச்சினர், உழுது சேறாக்கித் தொளி கலக்கினர். பரம்படித்துப் பண்படுத்தினர். நாற்று நட்டனர். களை பறித்தனர். நீர்பாய்ச்சினர். பறவைகளும் விலங்குளும் பயிரை அழித்து விடாமல் பாதுகாத்தனர். நெல்லறுத்துப் போரடுக்கினர். பிணையல்அடித்துப் பொலி தூற்றினர். நெல்லை மலைபோலக் குவித்தனர். குவித்த நெல்லை ஆண்டைகளின் மனைகளில் இருந்த நெற் கூடுகளில் இட்டு நிரப்பினர். இத்தொழிலில் அடிமைகளான களமரின் உழைப்பு கடுமையானது. இது குறித்து சங்க இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன.
‘நல்லேர் நடந்த நசைசால் விளைவயல் “ (நன்றாக எருதுகள் உழுத நச்சுதல் அமைந்த, விளைகின்ற வயல்) என்றும் ‘எருதெறிகளமர் ஓதை “
(எருதுகளை அடித்து உழுகின்ற களமர்களின் ஓசை) என்றும் சங்க இலக்கியங்கள் உழவு பற்றிக் கூறுகின்றன.
‘மிதியுலை கொல்லன் முறிகொடிறன்ன
கவைத் தாளலவன் அளற்றளை சிதையப்
பைஞ்சாய்கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன்செருவின்
உழா நுண்டொளி நிரவிய வினைஞர்”
(மெத்தென்ற துருத்தியை அமுக்கி ஊதுகின்ற உலையிற்கொற்றொழில் செய்கின்றவனுடைய முறிந்த கொடிற்றை யொத்த கப்பித்த கால்களையுடைய நண்டினது சேற்றின்கண் உண்டாகிய முழை கெடும்படி பசிய கோரையை அடியிலே குத்தியெடுத்த மண்கிடக்கின்ற கொம்பையுடைய கரிய கடாக்கள் தம்மிற் பொருத இடமகன்ற செய்யின்கண், தாம் உழப்படாத நுண்ணிய சேற்றை உழவர் ஒக்க மிதித்து நிரவினர்) என்று, உழவர்கள் வயலில் நீர் பாய்ச்சித் தொளிகலக்கி உழுது சேற்றை நிரவிப் பண்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (207 -11) கூறுகிறது.
கடைசியர் நாற்று நடுதலும் களைபறித்தலும்
தொளி கலக்கிப் பண்படுத்திய வயல்களில் கடைசியர் நெல்நாற்றை நடவு செய்தது பற்றியும் களைபறித்தது பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ‘முடிநாறழுத்திய நெடுநீர்ச் செறு” என்று பெரும்பாணாற்றுப்படை அது குறித்துக் கூறுகிறது. வயலில் கடைசியர் களைபறித்தது குறித்தும் அந்நூல் கூறுகிறது. கடைசியர் களையாகப் பறித்த தண்டினை வளையலாக அணிந்து அழகுபார்த்ததனை ‘கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்” என்று புறநானூறு கூறுகிறது.
களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலையாரச் சூடி’
(முடியாகக் கிடந்த நாற்றை நட்ட நெடிய நீரையுடைய செய்களில், களையைப் பறிப்பார் களையாகப் பறித்துப் போட்ட திரண்ட தாளையுடைய நெய்தலினது தேன்நாறுகின்ற புதிய பூவை வெறுத்தார்களாயின் அரும்புகள் சூழ்ந்த முள்ளையுடைய பூவைப் பறித்துக் கொண்டு அந்நிலத்தில் உள்ள தண்டாங் கோரையைப் பல்லாலே சவட்டிக் கிழித்து முடிந்த நாராற் கட்டின புனைதற்கினிய மாலையை ஈர்நிறைந்த கரிய தலையிற் சூடினர்) என்று, பெரும்பாணாற்றுப் படை (211-18) வயலிற்களை பறித்த கடைசியர் நெய்தற் பூவையும் முள்ளியின் பூவையும் தண்டாங்கோரையைப் பல்லால் சவட்டிக் கிழித்ததில் தொடுத்து ஈர் நிறைந்த தலையிற் சூடிக் கொண்டதைப் பேசுகிறது.
‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாணெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறு.”
(கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையுடையையும் உடைய கடைசியர், மலங்கு மீன் பிறழ்கின்ற செய்யில் நெய்தலையும் ஆம்பலையும் களைந்தனர்) என்று, கடைசியர் வயலில் ஆம்பலும் நெய்தலுமாகிய களையைப் பறித்தனையும் தழையுடையை அணிந்திருந்ததையும் புறநானூறு (61) கூறுகிறது.
களமர் வயலுக்கு நீர் பாய்ச்சுதல்
களமர் கடைசியர் கடையர் என்று அழைக்கப்பட்ட அடிமைகள் வரிசையாக நின்று இடா ஏற்றம், பூட்டைப் பொறி பிழா பன்றிப் பத்தர் முதலியவற்றால் குளங்களில் இருந்து வயல்களுக்குத் தண்ணீர் இறைத்த காட்சியைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
‘நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர்
பாடு சிலம்பின் மிசை ஏற்றத்
தோடு விளங்கும் அகலாம்பியிற்
கயனகைய வயல் நிறைக்கும்
மென்றொடை வன்கிழார்” - மதுரைக் காஞ்சி : 89 – 95
(வயல் தழைக்கும்படி நீரை நிறைத்தற்குக் காரணமான குளங்களில் நிரையாக நின்று தொழுவர்கள் நீரை இடாவால் முகந்து ஒலிக்கும் ஓசை : ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப் பத்தரின் ஓசை: மெத்தென்ற கட்டுக்களையுடைய பூட்டைப்பொறியின் ஓசை : எருதுகள் பூண்ட தௌ;ளிய மணிகளின் ஓசை : பயிர்களிற் படியும் கிளி முதலியவற்றை ஓட்டும் ஓசை ஆகியன பற்றியும் சங்க இலங்கியங்கள் செய்தி கூறுகின்றன. பனையோலை யாற் செய்த பிழா என்னும் ஓலைப் பெட்டியால் உழவர் ஆற்றில் இருந்து வயலுக்கு நீர் இறைத்த செய்தியைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.
‘ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏற்றமும்” என்று அந்நூல் அது குறித்துக் கூறுகிறது.
‘வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை’ மதுரைக்காஞ்சி : 109 – 10
(யாறுகள் வெள்ளம் மாறாமல் வந்து விளைதல் பெருகுகையினாலே முற்றின நெல்லு காற்றடித்து அசைதலினாலே எழுந்த ஓசை, நெல்லரிவாரது ஓசை) என்று வயல்களில் வெள்ள நீர் பாய்ந்தமை குறித்தும் விளைந்த நெல்லைக் களமர் அரிந்தது பற்றியும் நூல்கள் கூறுகின்றன.
‘ஏர்பரந்த வயல் நீர்பரந்த செறு
நெல்மலிந்த மனை பொன்மலிந்தமறுகு” புறநானூறு : 338
என்று, நீர் நிறைந்த வயல்களில் ஏர்கள் உழுதமை குறித்தும் ஆண்டைகளின் மனைகள் நெல்லால் நிறைந்தமை குறித்தும் அவர்கள் வாழும் தெருக்கள் பொன்னால் நிறைந்தமை குறித்தும் சங்க இலக்கியங்கள ; கூறுகின்றன.
பயிர் பாதுகாப்பு
வேட்டைச் சமூகமாக வாழந்த மக்கள் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்து உழவுத் தொழிலை மேற்கொண்டு வரகு தினை முதலியவற்றைச் சாகுபடி செய்த காலம் முதலே பயிர்களைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். குறிஞ்சி முல்லை நிலங்களில் வரகும் தினையும் பயிரிட்ட எயினர்கள் யானை மான், பன்றி முதலிய விலங்குளாலும் கிளி மயில் புறா முதலிய பறவைகளாலும் பயிருக்கு ஏற்படும் சேதங்களினின்றும் அவற்றைப் பாதுகாக்கப் பரண் அமைத்துக் காவல் காத்தனர், பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் காவற்பணியில் ஈடுபட்டனர். இதனை,
‘நெற்கொணெடு வெதிர்க்கணந்தயானை
முத்தார் மருப்பினிறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினைப் படுபுள்ளோப்பி
எற்பட வருதியரென நீ விடுத்தலிற்
கலிகெழு மரமிசைக் சேணோன் இழைத்த
புலியஞ்சிதண மேறி யவண
சாரற் சூரற் றகைபெற வலந்த
தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும்
கிளிகடி மரபினூழூழ் வாங்கி
யுரவுக் கதிர் தெறூஉம்”
(நெல்லைத் தன்னிடத்தே கொண்ட நெடியமூங்கிலைத்தின்றற்கு மேல் நோக்கி நின்று வருந்தின யானை, அவ்வருத்தந் தீரும்படி முத்து நிறைந்த கொம்பிலே ஏறட்டு நான்ற கையையொப்ப, துய்யையுடைய, தலை வளைந்த ஈன்றணிமை தீர்ந்த கதிர்களை நன்றாகத் தன்னிடத்தே கொள்ளுதலையுடைய சிறிய தினையிலே வீழ்கின்ற கிளிகளை யோட்டி, பகற்பொழுது கழியாநிற்ப நீவீர் வருவிராக என்று கூறி நீ போக விடுகையினாலே யாங்களும் போய், ஆரவாரம் பொருந்தின மரத்தின் உச்சியிலே இராக்காலம் ஆகாயத்திருப்போன் பண்ணின புலியஞ்சுதற்குக் காரணமானதும் அவ்விடத்தன வாகிய மலைப்பக்கத்துப் பிரம்பாலே அழகுபெறத் தெற்றினதுமான பரணிலே ஏறித் தழலும் தட்டையும் குளிரும் பிறவுமாகியகிளியோட்டும் முறைமை யினையுடையவற்றை, மிகுதலையுடைய ஞாயிற்றின் கிரணங்கள் சுடும் வெம்மை விளங்கின்ற பொழுதிலே முறைமுறையே கையிலே வாங்கி ஓட்டினோம்) என்று குறிஞ்சி நிலத்தில் மகளிர் பகற்பொழுதில் பரண்மீதமர்ந்து கிளிகடி கருவிகளைக் கொண்டு பறவைகளை ஓட்டிக் காவல் காத்தமை பற்றி மதுரைக் காஞ்சி (35-45) கூறுகிறது.
‘வட்டவரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்” என்று புறநானூறு (28) இரவில் தினைப் புனங்காத்த எயினரைச் சேவல் கூவித்துயில் எழுப்பியது குறித்துக் கூறுகிறது. இவ்வாறு பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் தினைப்புனம் காத்தமை குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. அடிமைச் சமூகத்தில் மருதநிலத்தில் வயல்களில் விளைந்துநின்ற நெற்பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் அடிமைகளான ஆடவரும் மகளிரும் ஈடுபட்டிருந்தனர். இதனை,
‘கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” - புறநானூறு 396
(கழிகள் சூழப்பட்ட, நெல் விளைந்து கிடக்கும வயலின் கண் அரித்த ஓசையை யுடைய பறையை முழக்குவதால் கதிர் கவரவரும் கிளி முதலிய பறவைகளை ஓட்டினர்) என்றும்
‘புதற்றளவில் பூச்சூடி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” - புறநானூறு : 395.
(மகளிர் புதலிடத்தே மலர்ந்த தவள முல்லையின் பூவைத்தலைவிற் சூடிக் கொண்டு அரித்த ஓசையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த நெற்கதிர்களை யுண்டற்குவந்து படியும் பறவைகளை யோட்டினர்) என்றும் புறநானூறு கூறுகிறது.
செம்பொன் மலைபோல் சிறப்பத்தோன்றும் நெற்பொலி
களமர் வயலில் நெல்லரிந்தது குறித்தும் சூடு அடுக்கிப் போரடித்துப் பொலிதூற்றியது குறித்தும் தூற்றிய நெல்லைச்செல்வர்மனைகளில் உள்ள நெற் கூடுகளில்கொண்டு போய்ச் சேர்த்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
‘கூனி குயத்தின் வாய் நெல்லரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவை இய குன்றாக் குப்பை’
(களமர் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லையறுத்து நாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படி திரட்டின தொலையாத நெற்பொலியை நெருங்கத்தெற்றின குதிரின்கண் வெற்றிடம் இல்லையாம்படி பெய்தனர்.) என்று பொருநராற்றுப்படை (242 – 48) கூறுகிறது.
கழனிகள் நீங்காத புதுவருவாயையுடையவை , அவற்றில் நெற்பயிர் விளைந்து முற்றியிருந்தது. பசுமையறும்படி முற்றின பெரிய கதிர்கள், அறுப்பார்க்கும் சூடாக அடுக்குவார்க்கும் பிணையலடித்துக் கடாவிடுவார்க்கும் பெரிதும் துன்பம் விளைப்பன, குளவிகள் கொட்டினாற் கடுப்பது போலக் கடுக்கும் தன்மையன, களமர் அக்கதிர்களின் திரண்டதாளையறுத்துக்கட்டுக்களாகக் கட்டிப் பிணையலடித்தனர். எருதுகள் போன பின்பு வைக்கோலையும் கூளத்தையும் நீக்கினர். ஈரம் உலரா நிற்க, பொலியை மேல் காற்றிலே கையாலே தூற்றினர். தூற்றிய நெல் மேருமலை போலக் குவிந்து கிடந்தது. இக்காட்சியை,
‘நீங்காயாணர் வாங்கு கதிர்க் கழனிக்
கடுப்புடைப்பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செய் நெல்லின்
தூம்புடைத்திரள் தாள் மிதுத்த விளைஞர்
பாம்புறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலிபெறு வியன்களமலிய வேற்றிக்
கணங் கொள் சுற்றமொடு கைபுணர்ந்தாடும்
துணங்கையம் பூதம் துகிலடுத்தவை போல்
குழுமுநிலைப் போரின் முழு முதல் தொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத்துகள் தப
வையுந் துரும்பும் நீக்கிப் பைதறக்
குடகாற்றெறிந்த குப்பை வடபாற்
செம்பொன்மலையின் சிறப்பத்தோன்றும்” என்று பெரும்பாணாற்றுப்படை (228-241) காட்டுகிறது.
வயலில் களை பறித்த கடைசியர், வயலில் பிறழ்ந்து துள்ளிய மலங்கு, வாளை முதலிய மீன்களைத் தளம்பு என்றும் சேறு குத்தியால் பிடித்து வந்தனர். அதனைத் துண்டு துண்டாக அறுத்துச் சமைத்ததனைப் புதிய நெல்லில் சமைத்த வெள்ளிய சோற்றுக்கு மேலீடாகக் கொண்டு விலாப்புடைக்கத் தின்ற களமர், குனியமாட்டாதவராய், சூட்டை இடும் இடம் அறியாமல் தடுமாறினர் என்ற செய்தியை,
‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாணெய்தல் ஆம்பலொடுகட்கும்
மலங்குமிளிர் செறுவிற்றளம்பு தடிந்திட்ட
பழனவாளைப்பரூ உக்கட்டு ணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கையுறையாக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனி சூடு தடுமாறும்
வன்கை வினைஞர்” – புறநானூறு :61
என்று கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் நகைச்சுவை தோன்றக் கூறினார்.
ஆமை முதுகில் அரிவாள் தீட்டல்
களமர் வயலில் நெல்லறுத்துக் கொண்டிருந்தபோது அரிவாள் முனை மழுங்கிவிட்டது. அதனால் அவர்கள் விரைந்து அறுக்க முடியவில்லை. அரிவாளைத் தீட்டிக் கூராக்கினால் தான் தொடர்ந்து விரைவாக அறுக்க முடியும். அவ்வாறு ‘மறத்தோடு அரியும்படி (விரைந்து அரியும்படி) நிலவுடைமையாளரான ஆண்டைகள் அடிமைகளான களமரை வற்புறுத்தி ஏவினர். எனவே களமர் வயலில் கிடந்த ஆமையின் முதுகில்முனை மழுங்கிய அரிவாளைத் தீட்டிக் கொண்டார்களாம்.
‘களமர் ஏன் ஆமை முதுகில் அரிவாளைத் தீட்டினர்? வயலில் இருந்து வெளியேறி மேட்டு நிலத்துக்கு வந்து கல்லில் தீட்டினால் என்ன? என்ற வினாக்கள் இயல்பாக எழும். அறுவடையின் போது வேலையை இடையில் நிறுத்தி விட்டுக் களமர் அரிவாளைக் கூர் தீட்டுவதற்காக வயலில் இருந்து வெளியேறினால் வேலை தாமதப்படும். அதனால் ஆண்டைகள் அதை அனுமதிக்கவில்லை. வயலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாத நிலையில் வேறு வழியின்றிக் களமர் வயலில் கிடந்த ஆமையின் முதுகில் அரிவாளைத் தீட்டிக் கொண்டார்கள் என்பதே உண்மை. இக்காட்சியைப் புறநானூறு (379) தெளிவாகக் காட்டுகிறது.
‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கிற்
பின்னை மறத்தோடரியக் கல் செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்துரிஞ்சும்
நெல்லமல் புரவு ‘ என்பது அந்நூல் காட்டும் அரிய காட்சியாகும்.
களமர் அரிவாளைக் கூர்தீட்டிக் கொள்ள வயலில் இருந்து வெளியேறுதலும் கூடாது, விரைந்து அறுத்திடவும் வேண்டும். எனவே களமர் ஆமைமுதுகில் அரிவாளைக் கூர் தீட்டிக் கொண்டார்கள். அக்காலத்தில் அடிமை எஜமானர்களான ஆண்டைகளால் அடிமைகளான களமர் எவ்வளவு கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். என்பதை ‘பின்னை மறத்தோடரிய’ என்னும் தொடர் உணர்த்துகிறது. இதனை’மடியாவினைஞர் (ஓய்வறியாத உழைப்பாளிகள்) என்னும் தொடர் மேலும் வலியுறுத்துகிறது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சைத் தரணியில் நாற்று நடுதல் களைபறித்தல் முதலிய பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்கள், பசியால் அழுகின்ற கைக்குழந்தைக்குப் பால் கொடுத்துப்பசி போக்கி அழுகையை அமர்த்துவதற்காக வேலையின் இடையில் வயலை விட்டு வெளியேறுவதைப் பண்ணையாளர்களான ஆண்டைகள் அனுமதிப்பதில்லை. செங்கொடி இயக்கத்தின் நீண்ட நெடிய வலிமைமிக்க போராட்டத்திற்குப் பிறகுதான் அக்கொடிய நிலைமை மாறியது என்பது அண்மைக் கால வரலாறு நமக்கு அறிவிக்கும் செய்தியாகும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் அடிமைச் சமூகத்தில் தோன்றியிருந்த அக்கொடிய வழக்கம் இருபதாம் நூற்றாண்டில் செங்கொடிஇயக்கம் தலையிட்டுத் தீர்க்கும் வரையிலும் நீடித்திருந்தது. நாகரிகம் வளர்ந்து விட்டது. என்று கருதும் இருபதாம் நூற்றாண்டிலும் இக்கொடுமைகள் நீடித்திருந்தன என்னும் போது, மனிதன் அநாகரிக நிலையில் வாழ்ந்த அடிமைச் சமூகத்தில் அடிமைகளான களமரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பது கற்பனைக்கும் எட்டாததாகும்.
வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் மனிதன் வாழ்ந்த காலத்தில் காட்டைத் திருந்தி வரகும் தினையும் விளைவித்தான். விளைந்து வந்த வரகும் தினையும் குதிர்களில் சேமிக்கப்பட்டன. சேமிக்கப்பட்ட அவை அனைவருக்கும் பொதுவாக இருந்தன. அதனை; அடையாளமாக அக்குதிர்கள் பொது இடமாகிய அரணின் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவை யானைக் கூட்டம் போல் காட்சியளித்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
அடிமைச் சமூகத்தில் நெல் விளைவிக்கப்பட்டது. அந்நெல் நெற் கூடுகளில் சேமிக்கப்பட்டது. அக்கூடுகள் ஆண்டைகளின் வளமனைகளில் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஏணிக்கு எட்டாத உயரமுடைய அக்கூடுகளில் களமர் தாம் விளைவித்த நெல்லைக் கொண்டு போய்ப் பெய்து சேமித்தனர். ஆனால் நெல்லை விளைவித்த களமர்க்கு அதன் மீது உரிமை ஏதும் இல்லை. உற்பத்தி செய்த களமர்க்கு நெல்லின் மீது இருந்த உரிமை மறுக்கப்பட்டது. நெல்தனியுடைமை ஆக்கப்பட்டு விட்ட செய்தியை இலக்கியங்கள் நமக்குத் தெளிவு படக்கூறுகின்றன.
‘ஏணி எய்தா நீணெடு மார்பில்
முகடு துமித் தடுக்கிய பழம்பல்லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லில்”
(ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும் தலையைத்திறந்து உள்ளே சொரியப்பட்ட பலவாகிய பழைய நெல்லினையும் உடைய அழியாத் தன்மையவாய், முதிர்ந்த கூடுகள் வளர்ந்த நல்ல இல்) என்ற பெரும்பாணாற்றுப்படை (245- 47) வரிகள், நெல் தனியுடைமை ஆக்கப்பட்டு விட்டதற்கும். பசியோடும், பட்டினியோடும் உழைக்கின்ற மக்களுக்கு வழங்கப்படாமல் நெடுங்காலம் கூடுகளில் கிடந்தது என்பதற்கும் சான்றளிக்கின்ற சாசன வரிகளாகத் திகழ்கின்றன.
எருதுகாலுறாஅ திளைஞர் கொன்ற
சில் விளைவரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு கடைதப்பலின்
ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறு புல்லாளர் முகத்தளவை கூறி
வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை “ - புறநானூறு : 327
(எருதுகளைப் பிணித்து அவற்றின் காற்கீழ்ப் பெய்து கடாவிடுதலின்றி இளையர்கள் காலால் மிதித்தெடுத்த சிலவாக விளைந்த வரகாகிய புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைப் பசித்து வந்த பாணர் உண்டு வெளியேறினாராக, புறங்கடை வறிதாகலின் சுற்றத்தாருடைய வறுமையைக் களைய வேண்டித் தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டுமளவைச் சொல்லி வரகைக் கடனாகப் பெறும் நெடிய புகழுடைய தலைவன்) என்று, உழவன் தன் சுற்றுத்தாருடைய வறுமையைக் களைய வேண்டி வரகைக் கடனாகப்; பெற்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.
வரகுந்தினையுமுள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுணக் கொளத்தீர்ந்தெனக்
குறித்து மாறெதிர்ப்பைப் பெறாஅ மையிற்
குரலுணங்கு விதைத்தினையுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன்றோவிலள்” - புறநானூறு : 333
(வரகுந்தினையுமாகத் தன்மனையில் உள்ளவற்றை யெல்லாம் இரவலர் உண்டதனாலும் கொண்டதனாலும் தீர்ந்தனவாக விருந்தினராக வந்த பாணரை உண்பித்தற்பொருட்டு, வரகைக் கடனாகப் பெற முடியாமையால் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலிற் பெய்து குற்றிச் சமைத்து மனைத்தலைவியானவள் உண்பித்தாள்) என்று மனனத்தலைவி விருந்தினரின் பொருட்டு விதைத்தினையைக் குற்றிச் சமைக்க முற்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. இவ்வாறு,கணசமூகமாக வாழ்ந்த குறிஞ்சி முல்லை நிலமாந்தரின் பற்றாக்குறையான அவலவாழ்வு குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இம்மக்கள் வறுமையில் வாடினாலும் பண்பில் உயர்ந்து ஓங்கி நின்றதைக் காண்கிறோம். இவ்வுயர்வுக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் கணசமூகமாக வாழ்ந்தனர். அது பொதுவுடைமை வகைப்பட்ட கணசமூகம்.
இரும்பு கண்டுபிடிக்கப் பட்டுப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு உற்பத்திக் கருவிளிலும் உற்பத்தி முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலமாக்கப்பட்டன. ஆறுகளும், ஓடைகளும் மறித்து ஏரிகளும் பாசனக் குளங்களும் அமைக்கப்பட்டன. புதர் மண்டிக் கிடந்த காடுகள் வயல்களாக – விளைநிலங்களாகத் திருத்தப்பட்டன. வரகும் தினையும் விளைந்த வன்னிலங்கள் நெல்லும் கரும்பும் இஞ்சியும் மஞ்சளும் வாழையும் கமுகும் விளையும் மென்னிலங்கள் ஆக்கப்பட்டன. காடு திருத்தி விளைநிலமாக்கப்பட்ட செய்தியை ‘காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி” (பாட்டினைப்பாலை (283 -84) என்றும் ‘நிலன் நெளிமருங்கில் நீர் நிலை பெருகத் தட்;டோரம்ம இவண் தட்டோரே” (நிலம் குழிந்த விடத்தே நீர் நிலை மிகும்படியாகத் தளைத்தோர்தாம் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தவர் ஆவர்) புறநானூறு 18) என்றும் சங்க இலங்கியங்கள் கூறுகின்றன. இவ்வேலைகள் அனைத்ததையும் அடிமைகளே செய்து முடித்தனர். ஆனால் திருத்தப்பட்ட நிலங்கள் தனி நபர் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன. உழைப்பாளிகளான அடிமைகளின் பேருழைப்பால் விளைச்சல் பெருகியது. ஒட்டுண்ணிகளாகத் தலையெடுத்த ஆண்டைகள் அதனை அபகரித்துக் கொண்டனர்.
அடிமைகளின் அயரா உழைப்பால் விளைச்சல் அபரிமிதமாகப் பெருகியது. ‘ஒரு பிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு’ என்றும் ‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளையும்” என்றும் இலங்கியங்கள் அடிமைகளின் உழைப்பால் விளைந்த மிகுவிளைச்சல் பற்றிக் கூறுகின்றன.
உழைக்கும் மக்களாகிய உழவர்,உழத்தியர், கடையர், கடைசியர் முதலியவர்களின் உழைப்பால் உழவுத்தொழில் சிறப்புப்பெற்றது. உழவுத் தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து திருவள்ளுவர் கூறுகிறார்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு - குறள்.
(ஏரால் உழுதலைப் போல எருவிடுதலும் பயிருக்கு நல்லதே யாம், களையினை நீக்கிய பிறகு பயிரைப் பாதுகாத்தல் நீர்பாய்ச்சுதலைப்போல நல்லதேயாகும்) என்பது உழவு குறித்து வள்ளுவர் கூறும் தொழில் நுட்பம் ஆகும். இக்குறளில் அவர் நிலத்தை உழுதல் பயிரைப்பாதுகாத்தல் நடவுக்குப் பிறகு களை நீக்குதல் , நீர் பாய்ச்சுதல், பயிரைப் பாதுகாத்தல் என உழவுத்தொழிலில்; கடைப்பிடிக்கவேண்டிய உத்திகள் குறித்துக் கூறியுள்ளார். சங்க காலத்தில் உழவர்கள் பின்பற்றிய உத்திகளைக் கண்டுதான் வள்ளுவர் அவ்வாறு கூறியிருத்தல் கூடும்.
ஆறு குளம் ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து உழவர்கள் வயலுக்கு நீர்பாய்ச்சினர், உழுது சேறாக்கித் தொளி கலக்கினர். பரம்படித்துப் பண்படுத்தினர். நாற்று நட்டனர். களை பறித்தனர். நீர்பாய்ச்சினர். பறவைகளும் விலங்குளும் பயிரை அழித்து விடாமல் பாதுகாத்தனர். நெல்லறுத்துப் போரடுக்கினர். பிணையல்அடித்துப் பொலி தூற்றினர். நெல்லை மலைபோலக் குவித்தனர். குவித்த நெல்லை ஆண்டைகளின் மனைகளில் இருந்த நெற் கூடுகளில் இட்டு நிரப்பினர். இத்தொழிலில் அடிமைகளான களமரின் உழைப்பு கடுமையானது. இது குறித்து சங்க இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன.
‘நல்லேர் நடந்த நசைசால் விளைவயல் “ (நன்றாக எருதுகள் உழுத நச்சுதல் அமைந்த, விளைகின்ற வயல்) என்றும் ‘எருதெறிகளமர் ஓதை “
(எருதுகளை அடித்து உழுகின்ற களமர்களின் ஓசை) என்றும் சங்க இலக்கியங்கள் உழவு பற்றிக் கூறுகின்றன.
‘மிதியுலை கொல்லன் முறிகொடிறன்ன
கவைத் தாளலவன் அளற்றளை சிதையப்
பைஞ்சாய்கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன்செருவின்
உழா நுண்டொளி நிரவிய வினைஞர்”
(மெத்தென்ற துருத்தியை அமுக்கி ஊதுகின்ற உலையிற்கொற்றொழில் செய்கின்றவனுடைய முறிந்த கொடிற்றை யொத்த கப்பித்த கால்களையுடைய நண்டினது சேற்றின்கண் உண்டாகிய முழை கெடும்படி பசிய கோரையை அடியிலே குத்தியெடுத்த மண்கிடக்கின்ற கொம்பையுடைய கரிய கடாக்கள் தம்மிற் பொருத இடமகன்ற செய்யின்கண், தாம் உழப்படாத நுண்ணிய சேற்றை உழவர் ஒக்க மிதித்து நிரவினர்) என்று, உழவர்கள் வயலில் நீர் பாய்ச்சித் தொளிகலக்கி உழுது சேற்றை நிரவிப் பண்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (207 -11) கூறுகிறது.
கடைசியர் நாற்று நடுதலும் களைபறித்தலும்
தொளி கலக்கிப் பண்படுத்திய வயல்களில் கடைசியர் நெல்நாற்றை நடவு செய்தது பற்றியும் களைபறித்தது பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ‘முடிநாறழுத்திய நெடுநீர்ச் செறு” என்று பெரும்பாணாற்றுப்படை அது குறித்துக் கூறுகிறது. வயலில் கடைசியர் களைபறித்தது குறித்தும் அந்நூல் கூறுகிறது. கடைசியர் களையாகப் பறித்த தண்டினை வளையலாக அணிந்து அழகுபார்த்ததனை ‘கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்” என்று புறநானூறு கூறுகிறது.
களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலையாரச் சூடி’
(முடியாகக் கிடந்த நாற்றை நட்ட நெடிய நீரையுடைய செய்களில், களையைப் பறிப்பார் களையாகப் பறித்துப் போட்ட திரண்ட தாளையுடைய நெய்தலினது தேன்நாறுகின்ற புதிய பூவை வெறுத்தார்களாயின் அரும்புகள் சூழ்ந்த முள்ளையுடைய பூவைப் பறித்துக் கொண்டு அந்நிலத்தில் உள்ள தண்டாங் கோரையைப் பல்லாலே சவட்டிக் கிழித்து முடிந்த நாராற் கட்டின புனைதற்கினிய மாலையை ஈர்நிறைந்த கரிய தலையிற் சூடினர்) என்று, பெரும்பாணாற்றுப் படை (211-18) வயலிற்களை பறித்த கடைசியர் நெய்தற் பூவையும் முள்ளியின் பூவையும் தண்டாங்கோரையைப் பல்லால் சவட்டிக் கிழித்ததில் தொடுத்து ஈர் நிறைந்த தலையிற் சூடிக் கொண்டதைப் பேசுகிறது.
‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாணெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறு.”
(கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையுடையையும் உடைய கடைசியர், மலங்கு மீன் பிறழ்கின்ற செய்யில் நெய்தலையும் ஆம்பலையும் களைந்தனர்) என்று, கடைசியர் வயலில் ஆம்பலும் நெய்தலுமாகிய களையைப் பறித்தனையும் தழையுடையை அணிந்திருந்ததையும் புறநானூறு (61) கூறுகிறது.
களமர் வயலுக்கு நீர் பாய்ச்சுதல்
களமர் கடைசியர் கடையர் என்று அழைக்கப்பட்ட அடிமைகள் வரிசையாக நின்று இடா ஏற்றம், பூட்டைப் பொறி பிழா பன்றிப் பத்தர் முதலியவற்றால் குளங்களில் இருந்து வயல்களுக்குத் தண்ணீர் இறைத்த காட்சியைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
‘நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர்
பாடு சிலம்பின் மிசை ஏற்றத்
தோடு விளங்கும் அகலாம்பியிற்
கயனகைய வயல் நிறைக்கும்
மென்றொடை வன்கிழார்” - மதுரைக் காஞ்சி : 89 – 95
(வயல் தழைக்கும்படி நீரை நிறைத்தற்குக் காரணமான குளங்களில் நிரையாக நின்று தொழுவர்கள் நீரை இடாவால் முகந்து ஒலிக்கும் ஓசை : ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப் பத்தரின் ஓசை: மெத்தென்ற கட்டுக்களையுடைய பூட்டைப்பொறியின் ஓசை : எருதுகள் பூண்ட தௌ;ளிய மணிகளின் ஓசை : பயிர்களிற் படியும் கிளி முதலியவற்றை ஓட்டும் ஓசை ஆகியன பற்றியும் சங்க இலங்கியங்கள் செய்தி கூறுகின்றன. பனையோலை யாற் செய்த பிழா என்னும் ஓலைப் பெட்டியால் உழவர் ஆற்றில் இருந்து வயலுக்கு நீர் இறைத்த செய்தியைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.
‘ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏற்றமும்” என்று அந்நூல் அது குறித்துக் கூறுகிறது.
‘வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை’ மதுரைக்காஞ்சி : 109 – 10
(யாறுகள் வெள்ளம் மாறாமல் வந்து விளைதல் பெருகுகையினாலே முற்றின நெல்லு காற்றடித்து அசைதலினாலே எழுந்த ஓசை, நெல்லரிவாரது ஓசை) என்று வயல்களில் வெள்ள நீர் பாய்ந்தமை குறித்தும் விளைந்த நெல்லைக் களமர் அரிந்தது பற்றியும் நூல்கள் கூறுகின்றன.
‘ஏர்பரந்த வயல் நீர்பரந்த செறு
நெல்மலிந்த மனை பொன்மலிந்தமறுகு” புறநானூறு : 338
என்று, நீர் நிறைந்த வயல்களில் ஏர்கள் உழுதமை குறித்தும் ஆண்டைகளின் மனைகள் நெல்லால் நிறைந்தமை குறித்தும் அவர்கள் வாழும் தெருக்கள் பொன்னால் நிறைந்தமை குறித்தும் சங்க இலக்கியங்கள ; கூறுகின்றன.
பயிர் பாதுகாப்பு
வேட்டைச் சமூகமாக வாழந்த மக்கள் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்து உழவுத் தொழிலை மேற்கொண்டு வரகு தினை முதலியவற்றைச் சாகுபடி செய்த காலம் முதலே பயிர்களைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். குறிஞ்சி முல்லை நிலங்களில் வரகும் தினையும் பயிரிட்ட எயினர்கள் யானை மான், பன்றி முதலிய விலங்குளாலும் கிளி மயில் புறா முதலிய பறவைகளாலும் பயிருக்கு ஏற்படும் சேதங்களினின்றும் அவற்றைப் பாதுகாக்கப் பரண் அமைத்துக் காவல் காத்தனர், பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் காவற்பணியில் ஈடுபட்டனர். இதனை,
‘நெற்கொணெடு வெதிர்க்கணந்தயானை
முத்தார் மருப்பினிறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினைப் படுபுள்ளோப்பி
எற்பட வருதியரென நீ விடுத்தலிற்
கலிகெழு மரமிசைக் சேணோன் இழைத்த
புலியஞ்சிதண மேறி யவண
சாரற் சூரற் றகைபெற வலந்த
தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும்
கிளிகடி மரபினூழூழ் வாங்கி
யுரவுக் கதிர் தெறூஉம்”
(நெல்லைத் தன்னிடத்தே கொண்ட நெடியமூங்கிலைத்தின்றற்கு மேல் நோக்கி நின்று வருந்தின யானை, அவ்வருத்தந் தீரும்படி முத்து நிறைந்த கொம்பிலே ஏறட்டு நான்ற கையையொப்ப, துய்யையுடைய, தலை வளைந்த ஈன்றணிமை தீர்ந்த கதிர்களை நன்றாகத் தன்னிடத்தே கொள்ளுதலையுடைய சிறிய தினையிலே வீழ்கின்ற கிளிகளை யோட்டி, பகற்பொழுது கழியாநிற்ப நீவீர் வருவிராக என்று கூறி நீ போக விடுகையினாலே யாங்களும் போய், ஆரவாரம் பொருந்தின மரத்தின் உச்சியிலே இராக்காலம் ஆகாயத்திருப்போன் பண்ணின புலியஞ்சுதற்குக் காரணமானதும் அவ்விடத்தன வாகிய மலைப்பக்கத்துப் பிரம்பாலே அழகுபெறத் தெற்றினதுமான பரணிலே ஏறித் தழலும் தட்டையும் குளிரும் பிறவுமாகியகிளியோட்டும் முறைமை யினையுடையவற்றை, மிகுதலையுடைய ஞாயிற்றின் கிரணங்கள் சுடும் வெம்மை விளங்கின்ற பொழுதிலே முறைமுறையே கையிலே வாங்கி ஓட்டினோம்) என்று குறிஞ்சி நிலத்தில் மகளிர் பகற்பொழுதில் பரண்மீதமர்ந்து கிளிகடி கருவிகளைக் கொண்டு பறவைகளை ஓட்டிக் காவல் காத்தமை பற்றி மதுரைக் காஞ்சி (35-45) கூறுகிறது.
‘வட்டவரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்” என்று புறநானூறு (28) இரவில் தினைப் புனங்காத்த எயினரைச் சேவல் கூவித்துயில் எழுப்பியது குறித்துக் கூறுகிறது. இவ்வாறு பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் தினைப்புனம் காத்தமை குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. அடிமைச் சமூகத்தில் மருதநிலத்தில் வயல்களில் விளைந்துநின்ற நெற்பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் அடிமைகளான ஆடவரும் மகளிரும் ஈடுபட்டிருந்தனர். இதனை,
‘கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” - புறநானூறு 396
(கழிகள் சூழப்பட்ட, நெல் விளைந்து கிடக்கும வயலின் கண் அரித்த ஓசையை யுடைய பறையை முழக்குவதால் கதிர் கவரவரும் கிளி முதலிய பறவைகளை ஓட்டினர்) என்றும்
‘புதற்றளவில் பூச்சூடி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” - புறநானூறு : 395.
(மகளிர் புதலிடத்தே மலர்ந்த தவள முல்லையின் பூவைத்தலைவிற் சூடிக் கொண்டு அரித்த ஓசையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த நெற்கதிர்களை யுண்டற்குவந்து படியும் பறவைகளை யோட்டினர்) என்றும் புறநானூறு கூறுகிறது.
செம்பொன் மலைபோல் சிறப்பத்தோன்றும் நெற்பொலி
களமர் வயலில் நெல்லரிந்தது குறித்தும் சூடு அடுக்கிப் போரடித்துப் பொலிதூற்றியது குறித்தும் தூற்றிய நெல்லைச்செல்வர்மனைகளில் உள்ள நெற் கூடுகளில்கொண்டு போய்ச் சேர்த்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
‘கூனி குயத்தின் வாய் நெல்லரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவை இய குன்றாக் குப்பை’
(களமர் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லையறுத்து நாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படி திரட்டின தொலையாத நெற்பொலியை நெருங்கத்தெற்றின குதிரின்கண் வெற்றிடம் இல்லையாம்படி பெய்தனர்.) என்று பொருநராற்றுப்படை (242 – 48) கூறுகிறது.
கழனிகள் நீங்காத புதுவருவாயையுடையவை , அவற்றில் நெற்பயிர் விளைந்து முற்றியிருந்தது. பசுமையறும்படி முற்றின பெரிய கதிர்கள், அறுப்பார்க்கும் சூடாக அடுக்குவார்க்கும் பிணையலடித்துக் கடாவிடுவார்க்கும் பெரிதும் துன்பம் விளைப்பன, குளவிகள் கொட்டினாற் கடுப்பது போலக் கடுக்கும் தன்மையன, களமர் அக்கதிர்களின் திரண்டதாளையறுத்துக்கட்டுக்களாகக் கட்டிப் பிணையலடித்தனர். எருதுகள் போன பின்பு வைக்கோலையும் கூளத்தையும் நீக்கினர். ஈரம் உலரா நிற்க, பொலியை மேல் காற்றிலே கையாலே தூற்றினர். தூற்றிய நெல் மேருமலை போலக் குவிந்து கிடந்தது. இக்காட்சியை,
‘நீங்காயாணர் வாங்கு கதிர்க் கழனிக்
கடுப்புடைப்பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செய் நெல்லின்
தூம்புடைத்திரள் தாள் மிதுத்த விளைஞர்
பாம்புறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலிபெறு வியன்களமலிய வேற்றிக்
கணங் கொள் சுற்றமொடு கைபுணர்ந்தாடும்
துணங்கையம் பூதம் துகிலடுத்தவை போல்
குழுமுநிலைப் போரின் முழு முதல் தொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத்துகள் தப
வையுந் துரும்பும் நீக்கிப் பைதறக்
குடகாற்றெறிந்த குப்பை வடபாற்
செம்பொன்மலையின் சிறப்பத்தோன்றும்” என்று பெரும்பாணாற்றுப்படை (228-241) காட்டுகிறது.
வயலில் களை பறித்த கடைசியர், வயலில் பிறழ்ந்து துள்ளிய மலங்கு, வாளை முதலிய மீன்களைத் தளம்பு என்றும் சேறு குத்தியால் பிடித்து வந்தனர். அதனைத் துண்டு துண்டாக அறுத்துச் சமைத்ததனைப் புதிய நெல்லில் சமைத்த வெள்ளிய சோற்றுக்கு மேலீடாகக் கொண்டு விலாப்புடைக்கத் தின்ற களமர், குனியமாட்டாதவராய், சூட்டை இடும் இடம் அறியாமல் தடுமாறினர் என்ற செய்தியை,
‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாணெய்தல் ஆம்பலொடுகட்கும்
மலங்குமிளிர் செறுவிற்றளம்பு தடிந்திட்ட
பழனவாளைப்பரூ உக்கட்டு ணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கையுறையாக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனி சூடு தடுமாறும்
வன்கை வினைஞர்” – புறநானூறு :61
என்று கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் நகைச்சுவை தோன்றக் கூறினார்.
ஆமை முதுகில் அரிவாள் தீட்டல்
களமர் வயலில் நெல்லறுத்துக் கொண்டிருந்தபோது அரிவாள் முனை மழுங்கிவிட்டது. அதனால் அவர்கள் விரைந்து அறுக்க முடியவில்லை. அரிவாளைத் தீட்டிக் கூராக்கினால் தான் தொடர்ந்து விரைவாக அறுக்க முடியும். அவ்வாறு ‘மறத்தோடு அரியும்படி (விரைந்து அரியும்படி) நிலவுடைமையாளரான ஆண்டைகள் அடிமைகளான களமரை வற்புறுத்தி ஏவினர். எனவே களமர் வயலில் கிடந்த ஆமையின் முதுகில்முனை மழுங்கிய அரிவாளைத் தீட்டிக் கொண்டார்களாம்.
‘களமர் ஏன் ஆமை முதுகில் அரிவாளைத் தீட்டினர்? வயலில் இருந்து வெளியேறி மேட்டு நிலத்துக்கு வந்து கல்லில் தீட்டினால் என்ன? என்ற வினாக்கள் இயல்பாக எழும். அறுவடையின் போது வேலையை இடையில் நிறுத்தி விட்டுக் களமர் அரிவாளைக் கூர் தீட்டுவதற்காக வயலில் இருந்து வெளியேறினால் வேலை தாமதப்படும். அதனால் ஆண்டைகள் அதை அனுமதிக்கவில்லை. வயலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாத நிலையில் வேறு வழியின்றிக் களமர் வயலில் கிடந்த ஆமையின் முதுகில் அரிவாளைத் தீட்டிக் கொண்டார்கள் என்பதே உண்மை. இக்காட்சியைப் புறநானூறு (379) தெளிவாகக் காட்டுகிறது.
‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கிற்
பின்னை மறத்தோடரியக் கல் செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்துரிஞ்சும்
நெல்லமல் புரவு ‘ என்பது அந்நூல் காட்டும் அரிய காட்சியாகும்.
களமர் அரிவாளைக் கூர்தீட்டிக் கொள்ள வயலில் இருந்து வெளியேறுதலும் கூடாது, விரைந்து அறுத்திடவும் வேண்டும். எனவே களமர் ஆமைமுதுகில் அரிவாளைக் கூர் தீட்டிக் கொண்டார்கள். அக்காலத்தில் அடிமை எஜமானர்களான ஆண்டைகளால் அடிமைகளான களமர் எவ்வளவு கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். என்பதை ‘பின்னை மறத்தோடரிய’ என்னும் தொடர் உணர்த்துகிறது. இதனை’மடியாவினைஞர் (ஓய்வறியாத உழைப்பாளிகள்) என்னும் தொடர் மேலும் வலியுறுத்துகிறது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சைத் தரணியில் நாற்று நடுதல் களைபறித்தல் முதலிய பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்கள், பசியால் அழுகின்ற கைக்குழந்தைக்குப் பால் கொடுத்துப்பசி போக்கி அழுகையை அமர்த்துவதற்காக வேலையின் இடையில் வயலை விட்டு வெளியேறுவதைப் பண்ணையாளர்களான ஆண்டைகள் அனுமதிப்பதில்லை. செங்கொடி இயக்கத்தின் நீண்ட நெடிய வலிமைமிக்க போராட்டத்திற்குப் பிறகுதான் அக்கொடிய நிலைமை மாறியது என்பது அண்மைக் கால வரலாறு நமக்கு அறிவிக்கும் செய்தியாகும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் அடிமைச் சமூகத்தில் தோன்றியிருந்த அக்கொடிய வழக்கம் இருபதாம் நூற்றாண்டில் செங்கொடிஇயக்கம் தலையிட்டுத் தீர்க்கும் வரையிலும் நீடித்திருந்தது. நாகரிகம் வளர்ந்து விட்டது. என்று கருதும் இருபதாம் நூற்றாண்டிலும் இக்கொடுமைகள் நீடித்திருந்தன என்னும் போது, மனிதன் அநாகரிக நிலையில் வாழ்ந்த அடிமைச் சமூகத்தில் அடிமைகளான களமரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பது கற்பனைக்கும் எட்டாததாகும்.
வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் மனிதன் வாழ்ந்த காலத்தில் காட்டைத் திருந்தி வரகும் தினையும் விளைவித்தான். விளைந்து வந்த வரகும் தினையும் குதிர்களில் சேமிக்கப்பட்டன. சேமிக்கப்பட்ட அவை அனைவருக்கும் பொதுவாக இருந்தன. அதனை; அடையாளமாக அக்குதிர்கள் பொது இடமாகிய அரணின் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவை யானைக் கூட்டம் போல் காட்சியளித்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
அடிமைச் சமூகத்தில் நெல் விளைவிக்கப்பட்டது. அந்நெல் நெற் கூடுகளில் சேமிக்கப்பட்டது. அக்கூடுகள் ஆண்டைகளின் வளமனைகளில் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஏணிக்கு எட்டாத உயரமுடைய அக்கூடுகளில் களமர் தாம் விளைவித்த நெல்லைக் கொண்டு போய்ப் பெய்து சேமித்தனர். ஆனால் நெல்லை விளைவித்த களமர்க்கு அதன் மீது உரிமை ஏதும் இல்லை. உற்பத்தி செய்த களமர்க்கு நெல்லின் மீது இருந்த உரிமை மறுக்கப்பட்டது. நெல்தனியுடைமை ஆக்கப்பட்டு விட்ட செய்தியை இலக்கியங்கள் நமக்குத் தெளிவு படக்கூறுகின்றன.
‘ஏணி எய்தா நீணெடு மார்பில்
முகடு துமித் தடுக்கிய பழம்பல்லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லில்”
(ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும் தலையைத்திறந்து உள்ளே சொரியப்பட்ட பலவாகிய பழைய நெல்லினையும் உடைய அழியாத் தன்மையவாய், முதிர்ந்த கூடுகள் வளர்ந்த நல்ல இல்) என்ற பெரும்பாணாற்றுப்படை (245- 47) வரிகள், நெல் தனியுடைமை ஆக்கப்பட்டு விட்டதற்கும். பசியோடும், பட்டினியோடும் உழைக்கின்ற மக்களுக்கு வழங்கப்படாமல் நெடுங்காலம் கூடுகளில் கிடந்தது என்பதற்கும் சான்றளிக்கின்ற சாசன வரிகளாகத் திகழ்கின்றன.
வேட்டைச் சமூகம் - காட்டுமிராண்டி நிலையும் அநாகரிக நிலையும் - வெ.பெருமாள் சாமி
குரங்கில் இருந்து மனிதனாகப் பரிணாமரீதியில் வளர்ச்சி பெற்ற மக்கள் தொடக்கத்தில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். பின்னர் படிப்படியாக வளர்ந்து முன்னேறி நாகரிக நிலையினை அடைந்தனர். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலகட்டத்தில் உணவுக்காக வேட்டைத் தொழிலையே பெரிதும் சார்ந்திருந்தனர். அத்துடன் இயற்கையாகக் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், கொட்டைகள் முதலியவற்றை உண்டு உயிர்வாழ்ந்தனர். வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றம் முதலிய உற்பாதங்களால் தாவரங்களுக்கு அழிவு நேரிட்ட காலங்களிலும் வேட்டை மற்றும் நோய் முதலிய காரணங்களால் விலங்குகள் அழிய நேரிட்ட காலங்களிலும் மனிதர்கள் உணவுக்காக வேறு மூலாதாரங்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் மனிதனைத் தின்னும் பழக்கமும் உண்டாகியது. மனிதர்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த காலகட்டத்தில் இந்தப் பழக்கம் அவர்களிடையே நிலவியது.
தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நூலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவராயிருந்த காட்டுமிராண்டிகளைப் பற்றிக் கூறுகிறது. கீழைக்கடல் தீவுகளில் ஒன்றான நாகத்தீவில் வாழ்;ந்தவர்களான நாகர்களைப் பற்றி அந்நூலில் சாத்தனர் விரிவாகக் கூறுகிறார்.
சாதுவன் கதை
புகார் நகரத்து வணிகனான சாதுவன் என்பான் வாணிகம் செய்து பொருளீட்டுவதற்காகக் கப்பல் ஏறிக்கடல் கடந்து வெளிநாடு சென்றான். அவன் சென்ற கப்பல் நடுக்கடலில் புயலால் தாக்குண்டு நீரில் மூழ்கியது. உடன் சென்றார் அனைவரும் மாண்டாராக சாதுவன் மட்டும் கப்பலின் சிதைந்த மரத்துண்டு ஒன்றைப் பற்றிக் கொண்டு கடலில் மிதந்தான், தீவு ஒன்றின் கரையில் அலைகளால் ஒதுக்கப்பட்டு உயிர் பிழைத்தான். அது நாகர் என்பார் வாழ்ந்த தீவு. நாகர்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாகத் திரிந்தனர். அவர்களை நக்க சாரணர் என்று சாத்தனார் குறிப்பிடுகிறார். அவர்கள் மனித வரலாற்றின் ஆரம்பக் கட்டத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் ஆவர். நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவர்கள்.
தீவில் கரையொதுங்கிக் கிடந்த சாதுவனை அத்தீவினரான நாகர் சிலர் கண்டனர். அயலான் ஒருவன் தம் தீவில் கரையொதுங்கிக் கிடந்ததைக்கண்ட அவர்கள் தானே தமியன் வந்தனன் அளியன் ஊனுடை இவ்வுடம்பு உணவாம்” எனக்கூறி, அவனைக்கொன்று தின்னும் கருத்துடன் எழுப்பினர். ஆனால் அவர்கள் தாம் நினைத்தது போல உடனே அவனைக் கொல்ல முயலவில்லை. தம் கூட்டத்தார் இருந்த இடத்துக்கு அவனைக் கொண்டுபோக முயன்றனர். சாதுவன் கடல் வாணிகன் ஆனதால் நாகர் மொழியையும் நன்கு அறிந்திருந்தான். பசியாலும் களைப்பாலும் மயங்கிக்கிடந்த அவன் அந்நிலையிலும் அவர்கள் பேசியதைப் புரிந்து கொண்டான். தனக்கு நிகழ இருக்கும் ஆபத்தை உணர்ந்தவனாய் எழுந்து அவர்களுடன் சென்றான்.
அக்கூட்டத்தினர் “கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள்ளென்பு உணங்கலும் விரவிய” இடத்தில் கூடியிருந்தனர். அவர்களின் தலைவன் “எண்கு தன் பிணவோடு இருந்தது போல” ஒரு பெண்ணுடன் இருந்தான். சாதுவன் அவர்கள் மொழியில் உரையாடி, கடலில் தனக்கு நேர்ந்த இன்னல்களை உணர்த்தினான். சாதுவனின் துயரத்தை உணர்ந்து கொண்ட அத்தலைவன் அவனைக் கொல்லாமல் அவன் மேல் இரக்கம் கொண்டான். அவனைத் தன் விருந்தினனாக ஏற்றதுடன். “நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெங்கள்ளும் ஊனும் வேண்டுவ கொடுமின்” என்று தன் கூட்டத்தார்க்குக் கூறினான்.
கடற்கரையில் மயங்கிக் கிடந்த சாதுவனைக் கண்ட நாகர்கள் நினைத்திருந்தால் அப்போதே அவனைக் கொன்றிருக்கலாம், தின்றும் இருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர்கள் அவனைத் தம் கூட்டத்தார் இருக்கும் இடத்துக் கொண்டு சென்றனர். கூட்டத்தாரிடம் அவனைச் சேர்த்தபின், அவனைக் கொன்று அனைவருடனும் பங்கிட்டு உண்ண நினைத்தனர். ஏனெனில் அவர்கள் ஆதிபொதுவுடைமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிடைத்த உணவைத் தமக்குள் வேறுபாடின்றிச் சமமாகப் பங்கிட்டு உண்பதே அச்சமூகத்தின் இயல்பு. எனவே தான் அவர்கள் தமக்கு உணவாகக் கிடைத்த சாதுவனைக் கண்டவுடன் கொல்லாமல் தம் கூட்டத்தாரிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
நாகர் தலைவன் சாதுவனிடம் “பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டோம்” என்று கூறியது, அவர்கள் நர மாமிசம் உண்ணும் வழக்கமுடையவர்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்த மனிதன் நரமாமிசம் உண்டது பற்றி எங்கல்ஸ் கூறுவதாவது. ‘வேட்டைத்தொழில் ஒன்றை மட்டுமே கொண்டு உயிர்வாழ்கின்ற மக்கள் சமூகங்கள் என்று புத்தகங்களில் குறிக்கப்படுகின்றனவே அவை என்றைக்குமே இருந்ததில்லை. வேட்டையில் பலன்கள் கிடைக்கும் என்பது மிகவும் நிச்சயம் அற்றது. எனவே அது சாத்தியமில்லை. உணவுப் பொருள்களுக்குரிய மூலாதரங்கள் தொடர்ந்து நிச்சயமற்று இருந்ததன் விளைவாக இந்தக் கட்டத்தில் மனிதனைத் தின்னும் பழக்கம் உண்டாகி, அது ரொம்ப காலத்துக்கு நீடித்தது” ( நூல்: குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்) நாகர்களைப் பற்றிச் சாத்தனார் கூறும் செய்தியானது,
அவர்கள் வாழ்ந்த ஆதி பொதுவுடைமைச் சமூகம் பற்றிய உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. அவை:1. நரமாமிசம் உண்டு காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்களிடையே ஆதி பொதுவுடைமைச் சமூகம் நிலவியது. அவர்கள் கிடைத்த உணவைத் தமக்குள் சமமாகப் பங்கிட்டு உண்டனர். 2. அவர்கள் தீயின் உபயோகத்தை அறிந்திருந்தார்கள். 3. அம்மக்கள் மண்பாண்டம் செய்யவும் அறிந்திருந்தார்கள். 4. உணவை வேகவைத்து உண்ணவும் மதுவைக் காய்ச்சி அருந்தவும் தெரிந்திருந்தார்கள்.
கல்லைக் கருவியாகப் பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடிக் கொன்று ஊனைப் பச்சையாகத் தின்று பசியாறிய மனிதன், கற்கருவிகளைத் தொடர்ந்து, செய்யத் தொடங்கிய தொழில் மண்பாண்டத் தொழிலேயாகும் என்பது ஆய்வாளர் கருத்தாகும். இத்தொழிலில் இரும்பின் பயன்பாடு மிகக் குறைவேயாகும். அது இன்றியும் இவற்றைச் செய்திட முடியும். மனிதன் தற்காப்புக்காகவும் உணவுத் தேவைக்காகவும் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் செய்து பயன்படுத்திய முதற்கருவிகள் கற்கருவிகளே எனில், விலங்குகளின் ஊனைவேகவைப்பதற்குச் செய்து கொண்ட முதற்கலங்கள் மட்கலங்களேயாகும் எனலாம். “காட்டு மிராண்டி நிலையில் இருந்த மனிதன் அநாகரிக நிலைக்கு மாறிச் சென்ற காலகட்டத்தில் மண்பாண்டங்கள் செய்யும் கலையை அறிந்து கொண்டிருக்கலாம்” என்று எங்கல்ஸ் அவர்கள் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
இது குறித்து அவர் மேலும் அவர் கூறுவதாவது மண்பாண்டங்கள் புகுந்த காலத்தில் இருந்து அநாகரிக நிலையின் கடைக்கட்டம் தொடங்குகிறது. கூடைகளும் மரக்கலயங்களும் நெருப்பு படுவதால் எரிந்து போகாமல் இருப்பதற்கு அவற்றின் மீது களிமண்ணைப் பூசியதில் இருந்து இந்தக்கலை தோன்றியிருக்கிறது. இதைப் பல இடங்களிலும் கண்கூடாகக் காட்டலாம். அநேகமாக, எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடந்திருக்கும். அப்படிக் களிமண்ணைப் பூசப்போய் உள்ளே கலயம் இல்லாமலே உருவமைந்த களிமண்ணே பாண்டமாகப் பயன்பட முடியும் என்பது சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது” (நூல்; : குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)
காட்டுமிராண்டி நிலையில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவனாய் இருந்த மனிதன் படிப்படியாக வளர்ந்து முன்னேறி அநாகரிக நிலையை எட்டினான். அநாகரிக நிலையின் இடைக்கட்டம் வரையிலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் மனிதனிடம் நீடித்து இருந்தது. எங்கல்ஸின் கூற்றுப்படி, காட்டுமிராண்டி நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மனிதன், மேய்ச்சல் சமூகமாக அநாகரிக நிலையை அடைந்த போதுதான் நரமாமிசம் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டான். காலப் போக்கில் உற்பத்தியிலும் உற்பத்திக் கருவிகளிலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டது. காட்டு மிராண்டி நிலையில் இருந்த ஆதி பொதுவுடைமைச் சமூகம், படிப்படியாக வளர்ந்து அநாகரிக நிலையை அடைந்தது. நரமாமிசம் உண்ணும் பழக்கமும் மறைந்தது. அந்நிலையில் மனிதன் உணவுக்காகத் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடி வந்தான், அத்துடன் பழங்கள் முதலியவற்றையும் உண்டு உயிர் வாழ்ந்தான்.
‘கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசை வாகும்” புறநானூறு. 236
(முசுக்கலை (ஆண்குரங்கு) கிழித்துண்டலாற்பீறிய முழவுபோலும் பெரிய பலாப்பழம் வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாட்களுக்கு இட்டு வைத்துண்ணும் உணவாம்) என்று சங்க இலக்கியங்கள் இது குறித்துக் கூறுகின்றன.
மனிதன் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடியதாலும் தொற்றுநோய் முதலிய காரணங்களாலும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கக்கூடும். மேலும் வறட்சி மற்றும் மழையின்மை முதலிய காரணங்களால் தாவர உணவுகளான பழங்கள் முதலியவை கிடைப்பதும் அரிதாகியிருக்கலாம் நரமாமிசம் உண்ணும் வழக்கத்தை கைவிட்ட நிலையில் மனிதன் உணவுக்குரிய தாவரங்களையும் பயிர்களையும் சாகுபடி செய்யவும் தானியங்களைச் சேமித்து வைக்கவும் முயன்றான்.
தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நூலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவராயிருந்த காட்டுமிராண்டிகளைப் பற்றிக் கூறுகிறது. கீழைக்கடல் தீவுகளில் ஒன்றான நாகத்தீவில் வாழ்;ந்தவர்களான நாகர்களைப் பற்றி அந்நூலில் சாத்தனர் விரிவாகக் கூறுகிறார்.
சாதுவன் கதை
புகார் நகரத்து வணிகனான சாதுவன் என்பான் வாணிகம் செய்து பொருளீட்டுவதற்காகக் கப்பல் ஏறிக்கடல் கடந்து வெளிநாடு சென்றான். அவன் சென்ற கப்பல் நடுக்கடலில் புயலால் தாக்குண்டு நீரில் மூழ்கியது. உடன் சென்றார் அனைவரும் மாண்டாராக சாதுவன் மட்டும் கப்பலின் சிதைந்த மரத்துண்டு ஒன்றைப் பற்றிக் கொண்டு கடலில் மிதந்தான், தீவு ஒன்றின் கரையில் அலைகளால் ஒதுக்கப்பட்டு உயிர் பிழைத்தான். அது நாகர் என்பார் வாழ்ந்த தீவு. நாகர்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாகத் திரிந்தனர். அவர்களை நக்க சாரணர் என்று சாத்தனார் குறிப்பிடுகிறார். அவர்கள் மனித வரலாற்றின் ஆரம்பக் கட்டத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் ஆவர். நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவர்கள்.
தீவில் கரையொதுங்கிக் கிடந்த சாதுவனை அத்தீவினரான நாகர் சிலர் கண்டனர். அயலான் ஒருவன் தம் தீவில் கரையொதுங்கிக் கிடந்ததைக்கண்ட அவர்கள் தானே தமியன் வந்தனன் அளியன் ஊனுடை இவ்வுடம்பு உணவாம்” எனக்கூறி, அவனைக்கொன்று தின்னும் கருத்துடன் எழுப்பினர். ஆனால் அவர்கள் தாம் நினைத்தது போல உடனே அவனைக் கொல்ல முயலவில்லை. தம் கூட்டத்தார் இருந்த இடத்துக்கு அவனைக் கொண்டுபோக முயன்றனர். சாதுவன் கடல் வாணிகன் ஆனதால் நாகர் மொழியையும் நன்கு அறிந்திருந்தான். பசியாலும் களைப்பாலும் மயங்கிக்கிடந்த அவன் அந்நிலையிலும் அவர்கள் பேசியதைப் புரிந்து கொண்டான். தனக்கு நிகழ இருக்கும் ஆபத்தை உணர்ந்தவனாய் எழுந்து அவர்களுடன் சென்றான்.
அக்கூட்டத்தினர் “கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள்ளென்பு உணங்கலும் விரவிய” இடத்தில் கூடியிருந்தனர். அவர்களின் தலைவன் “எண்கு தன் பிணவோடு இருந்தது போல” ஒரு பெண்ணுடன் இருந்தான். சாதுவன் அவர்கள் மொழியில் உரையாடி, கடலில் தனக்கு நேர்ந்த இன்னல்களை உணர்த்தினான். சாதுவனின் துயரத்தை உணர்ந்து கொண்ட அத்தலைவன் அவனைக் கொல்லாமல் அவன் மேல் இரக்கம் கொண்டான். அவனைத் தன் விருந்தினனாக ஏற்றதுடன். “நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெங்கள்ளும் ஊனும் வேண்டுவ கொடுமின்” என்று தன் கூட்டத்தார்க்குக் கூறினான்.
கடற்கரையில் மயங்கிக் கிடந்த சாதுவனைக் கண்ட நாகர்கள் நினைத்திருந்தால் அப்போதே அவனைக் கொன்றிருக்கலாம், தின்றும் இருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர்கள் அவனைத் தம் கூட்டத்தார் இருக்கும் இடத்துக் கொண்டு சென்றனர். கூட்டத்தாரிடம் அவனைச் சேர்த்தபின், அவனைக் கொன்று அனைவருடனும் பங்கிட்டு உண்ண நினைத்தனர். ஏனெனில் அவர்கள் ஆதிபொதுவுடைமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிடைத்த உணவைத் தமக்குள் வேறுபாடின்றிச் சமமாகப் பங்கிட்டு உண்பதே அச்சமூகத்தின் இயல்பு. எனவே தான் அவர்கள் தமக்கு உணவாகக் கிடைத்த சாதுவனைக் கண்டவுடன் கொல்லாமல் தம் கூட்டத்தாரிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
நாகர் தலைவன் சாதுவனிடம் “பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டோம்” என்று கூறியது, அவர்கள் நர மாமிசம் உண்ணும் வழக்கமுடையவர்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்த மனிதன் நரமாமிசம் உண்டது பற்றி எங்கல்ஸ் கூறுவதாவது. ‘வேட்டைத்தொழில் ஒன்றை மட்டுமே கொண்டு உயிர்வாழ்கின்ற மக்கள் சமூகங்கள் என்று புத்தகங்களில் குறிக்கப்படுகின்றனவே அவை என்றைக்குமே இருந்ததில்லை. வேட்டையில் பலன்கள் கிடைக்கும் என்பது மிகவும் நிச்சயம் அற்றது. எனவே அது சாத்தியமில்லை. உணவுப் பொருள்களுக்குரிய மூலாதரங்கள் தொடர்ந்து நிச்சயமற்று இருந்ததன் விளைவாக இந்தக் கட்டத்தில் மனிதனைத் தின்னும் பழக்கம் உண்டாகி, அது ரொம்ப காலத்துக்கு நீடித்தது” ( நூல்: குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்) நாகர்களைப் பற்றிச் சாத்தனார் கூறும் செய்தியானது,
அவர்கள் வாழ்ந்த ஆதி பொதுவுடைமைச் சமூகம் பற்றிய உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. அவை:1. நரமாமிசம் உண்டு காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்களிடையே ஆதி பொதுவுடைமைச் சமூகம் நிலவியது. அவர்கள் கிடைத்த உணவைத் தமக்குள் சமமாகப் பங்கிட்டு உண்டனர். 2. அவர்கள் தீயின் உபயோகத்தை அறிந்திருந்தார்கள். 3. அம்மக்கள் மண்பாண்டம் செய்யவும் அறிந்திருந்தார்கள். 4. உணவை வேகவைத்து உண்ணவும் மதுவைக் காய்ச்சி அருந்தவும் தெரிந்திருந்தார்கள்.
கல்லைக் கருவியாகப் பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடிக் கொன்று ஊனைப் பச்சையாகத் தின்று பசியாறிய மனிதன், கற்கருவிகளைத் தொடர்ந்து, செய்யத் தொடங்கிய தொழில் மண்பாண்டத் தொழிலேயாகும் என்பது ஆய்வாளர் கருத்தாகும். இத்தொழிலில் இரும்பின் பயன்பாடு மிகக் குறைவேயாகும். அது இன்றியும் இவற்றைச் செய்திட முடியும். மனிதன் தற்காப்புக்காகவும் உணவுத் தேவைக்காகவும் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் செய்து பயன்படுத்திய முதற்கருவிகள் கற்கருவிகளே எனில், விலங்குகளின் ஊனைவேகவைப்பதற்குச் செய்து கொண்ட முதற்கலங்கள் மட்கலங்களேயாகும் எனலாம். “காட்டு மிராண்டி நிலையில் இருந்த மனிதன் அநாகரிக நிலைக்கு மாறிச் சென்ற காலகட்டத்தில் மண்பாண்டங்கள் செய்யும் கலையை அறிந்து கொண்டிருக்கலாம்” என்று எங்கல்ஸ் அவர்கள் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
இது குறித்து அவர் மேலும் அவர் கூறுவதாவது மண்பாண்டங்கள் புகுந்த காலத்தில் இருந்து அநாகரிக நிலையின் கடைக்கட்டம் தொடங்குகிறது. கூடைகளும் மரக்கலயங்களும் நெருப்பு படுவதால் எரிந்து போகாமல் இருப்பதற்கு அவற்றின் மீது களிமண்ணைப் பூசியதில் இருந்து இந்தக்கலை தோன்றியிருக்கிறது. இதைப் பல இடங்களிலும் கண்கூடாகக் காட்டலாம். அநேகமாக, எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடந்திருக்கும். அப்படிக் களிமண்ணைப் பூசப்போய் உள்ளே கலயம் இல்லாமலே உருவமைந்த களிமண்ணே பாண்டமாகப் பயன்பட முடியும் என்பது சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது” (நூல்; : குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)
காட்டுமிராண்டி நிலையில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவனாய் இருந்த மனிதன் படிப்படியாக வளர்ந்து முன்னேறி அநாகரிக நிலையை எட்டினான். அநாகரிக நிலையின் இடைக்கட்டம் வரையிலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் மனிதனிடம் நீடித்து இருந்தது. எங்கல்ஸின் கூற்றுப்படி, காட்டுமிராண்டி நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மனிதன், மேய்ச்சல் சமூகமாக அநாகரிக நிலையை அடைந்த போதுதான் நரமாமிசம் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டான். காலப் போக்கில் உற்பத்தியிலும் உற்பத்திக் கருவிகளிலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டது. காட்டு மிராண்டி நிலையில் இருந்த ஆதி பொதுவுடைமைச் சமூகம், படிப்படியாக வளர்ந்து அநாகரிக நிலையை அடைந்தது. நரமாமிசம் உண்ணும் பழக்கமும் மறைந்தது. அந்நிலையில் மனிதன் உணவுக்காகத் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடி வந்தான், அத்துடன் பழங்கள் முதலியவற்றையும் உண்டு உயிர் வாழ்ந்தான்.
‘கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசை வாகும்” புறநானூறு. 236
(முசுக்கலை (ஆண்குரங்கு) கிழித்துண்டலாற்பீறிய முழவுபோலும் பெரிய பலாப்பழம் வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாட்களுக்கு இட்டு வைத்துண்ணும் உணவாம்) என்று சங்க இலக்கியங்கள் இது குறித்துக் கூறுகின்றன.
மனிதன் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடியதாலும் தொற்றுநோய் முதலிய காரணங்களாலும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கக்கூடும். மேலும் வறட்சி மற்றும் மழையின்மை முதலிய காரணங்களால் தாவர உணவுகளான பழங்கள் முதலியவை கிடைப்பதும் அரிதாகியிருக்கலாம் நரமாமிசம் உண்ணும் வழக்கத்தை கைவிட்ட நிலையில் மனிதன் உணவுக்குரிய தாவரங்களையும் பயிர்களையும் சாகுபடி செய்யவும் தானியங்களைச் சேமித்து வைக்கவும் முயன்றான்.
மேய்ச்சல் சமூகம் - வெ.பெருமாள் சாமி
மக்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் கால்நடைகளை மந்தையாகத் திரட்டி மேய்த்துப் பயன்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை. காட்டுப்பசு, காட்டெருமை முதலிய விலங்குகளில் இருந்து, கிடைக்கும்போது பாலைக்கறந்து பயன்படுத்திக் கொண்டார்கள். காட்டுமிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்திலேயே தீயின் உபயோகத்தை மனிதன் தெரிந்து வைத்திருந்தான். அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் மண்பாண்டங்கள் செய்யவும் தெரிந்து கொண்டிருந்தான். இது பற்றி எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மண்பாண்டங்கள் செய்யத் தெரிந்திருந்தமையால் மனிதன் தினை முதலிய தானியங்களைக் குற்றி அரிசியாக்கிச் சமைத்து உண்ணக் கற்றுக் கொண்டான் பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலியவற்றை தயாரித்துப் பயன்படுத்தலானான். மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் இவற்றைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மேய்ச்சல் சமூகமாக மாறத் தொடங்கிய போதுதான் இவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் மனிதனிடம் ஏற்பட்டது. இது மனித வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமாற்றம் எனலாம்.
‘மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழிரும் புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகினுவித்த புன்கம்
கூதளங்கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை அகலிலைப்பகுக்கும்” - புறநானூறு 168
(மரையான் கறந்த நுரைகொண்ட இனிய பாலை, மான் தசையைச்சமைத்த புலால் நாறும் பானையின் நிணம் தோய்ந்த வெளிய நிறத்தையுடைய பெரிய வெளிப்பக்கத்தைக் கழுவாமல் உலை நீராக வார்த்து ஏற்றிச் சந்தன விறகால் சமைக்கப்பட்ட சோற்றை, கூதாளி அழகுடன் விளங்கும் மலை மல்லிகை நாறும் முற்றத்தில் வளமான குலைகளையுடைய வாழையினது அகன்ற இலையில் பலருடனும் பகுத்துண்ணும்) என்று மலையில் மேய்ந்த மரையாவைக் கறந்து பாலை உலையாக ஏற்றிச் சமைத்து வாழை யிலையில் எயினர் சோற்றைப் பகிர்ந்து உண்டதனைப் புறநானூறு கூறுகிறது. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்து வந்த நிலையின் தொடக்கத்தை இது குறிக்கிறது எனல் சரியேயாகும். சங்ககாலத்தில் தமிழகத்தில் மக்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த நிலை பற்றிக் கூறுகின்ற பாடல்களில் பசு, பால், தயிர் முதலியன பற்றிய குறிப்புகள் காணப்படாமை நோக்கத்தக்கது.
பாலையும் பால் பொருட்களையும் நீண்டநாட்களுக்குச் சேமித்துப் பாதுகாக்க முடியாது, எனவே மனிதன் பால் தரும் விலங்குகளான பசு எருமை முதலியவற்றைப் பாலுக்காக மந்தையாகத் திரட்டி மேய்த்துப் பாதுகாக்கவும் அதனால் பாலும் பால்படு பொருள்களும் பெற்றுப் பயன் துய்க்கவும் முற்பட்டான். பசுக்களுடன் எருமைகளையும் ஆடுகளையும் பன்றிகளையும் கூட மந்தையாக வளர்க்கலானான். இப்போது மனிதன் அவற்றை மந்தையாக வளர்த்துப் பயன்கொள்ளத் தெரிந்து கொண்டான். இவை அவனுக்குப் பால், இறைச்சி, தோல் முதலிய பொருள்களைக் கொடுத்தன. பறவைகளில் கோழிகளையும் வளர்க்கலானான். குடிசைகளில் கோழி வளர்த்தமை பற்றி “கோழி சேக்கும் கூடு” என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. கோழிகள் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டன. காவலுக்காகவும் வேட்டைக்காவும் நாய் வளர்க்கப்பட்டது.
‘தொடர்நாயாத்த துன்னருங் கடிநகர்” என்றும்
‘பகுவாய் ஞமலியொடு பைம்புதலெருக்கி “என்றும் பெரும்பாணாற்றுப்படை (112,125 ) எயினர் நாய்வளர்த்தது பற்றிக் கூறுகிறது.
இடையர் குடியிருப்பு
குறிஞ்சி நிலத்து எயினர் ஊர்களைப் போலவே முல்லை நிலத்து ஆயர்களின் ஊர்களும் காவற்காடு மற்றும் விடு நிலம் எனப்பட்ட மேய்ச்சல் நிலங்கள் சூழ அமைந்திருந்தன. குடிசைகள் வரிந்த கழிகளில் வைக்கோலாலே வேயப்பட்டிருந்தன. அவை மழை மேகங்கள் போலக் கறுத்துக் காணப்பட்டன. கழிகளால் கட்டப்பட்ட கதவுகளைக் கொண்டிருந்தன. சிறு தூற்றையுடைய வாயில்களில் குறிய கால்கள் நடப்பட்டு, அவற்றில் ஆட்டு மறிகள் நின்று தின்னும் வகையில் தழைகள் கட்டப்பட்டிருந்தன. முற்றத்தில் நடப்பட்டிருந்த குறிய முளைகளில் தாமணி தொடுத்தநெடிய தாம்புகள் கட்டப்பட்டிருந்தன. தங்குமிடமாகிய சேக்கையில் கிடாயினுடைய தோலைப் பாயலாகக் கொண்டு முதியவன் காவலுக் காகப்படுத்திருந்தான். கட்டு முள்ளாகிய வேலி சூழ்ந்த எருமிகுந்த ஊரில் வளைந்த முகத்தையுடைய செம்மறியாடுகளுடன் வெள்ளாடுகளும் கிடந்தன.
‘மறிய
குளகரையாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றைவாயிற்செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்
அதளோன் துஞ்சுங் காப்பின் உதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத்துருவை யொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி எருப்படு வரைப்பு” என்று முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த ஆயர்களின் ஊர் குறித்துப் பெரும்பாணாற்றுப்படை (147-54) பேசுகிறது. தொழுக்களையுடைய ஊர்களில் குடிசைகளின் முற்றத்தில் வரகு இட்டு நிரப்பிய குதிர்கள் மிகுதியாக இருந்தன. அவை யானைக் கூட்டம் போல் காணப்பட்டன. குடிசைகளின் முற்றங்களில் அமைக்கப்பட்டிருந்த பந்தரில் வரகு திரிகைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவை யானையின் முழந்தாள் போலத் தோற்றமளித்தன இக்காட்சியினை
‘முள்ளுடுத்
தெழுகாடோங்கிய தொழுவுடை வரைப்பிற்
பிடிக்கணத்தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந்திரி மரப்பந்தர்’
என்று பெரும்பாணற்றுப்படை (184 - 87 ) காட்டுகிறது.
நெடுகக் கட்டிய கொட்டிலின் ஒரு பக்கத்தில் அடுப்பெரித்து ஒரு பக்கத்தில் தொழில்; ஒழிந்திராத நாளில் சகடையில் உருளைகளையும் கலப்பைகளையும் சார்த்தி எருதுகளையும் கட்டி வைத்திருந்தனர். அதனால் கொட்டிலின் சுவர் தேய்ந்து புகைப்படிந்து காணப்பட்டது. இதனை
‘குறுஞ்சாட்டுருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர்பறைந்த கொட்டில்”என்று அந்நூல் மேலும் ( 188-89 ) கூறுகிறது.
குழலும் யாழும்
முல்லை நிலத்து இடையன் செருப்பு விடாமற் கிடந்து வடு அழுந்தின பாதங்களையுடையவன். பசுக்களுக்கு வருந்தஞ் செய்யும் தடியை ஊன்றியதும் மரங்களை ஒடியெறிந்து கொடுக்கும் கோடரியால் தழும்பிருந்ததுமான வலிய கைகளையுடையவன். இரண்டு முனைகளிலும் உரியையுடைய காக்கள் மேலே யிருந்ததனால் உண்டாகிய தழும்பு மிக்க மயிரெழுந்த தோள்களையுடையவன். எல்லாமணமும் பொருந்தும் பசு கறந்த பாற்கையைத் தடவிக் கொண்ட தலைமயிரையுடையவன். கலம்பகமாகிய மாலையைக் கழுத்தில் அணிந்திருந்தான். ஒற்றையாகப் பொருந்திய கோவணமாகிய உடையை அணிந்திருந்தான். கன்றுகள் பொருந்தின பசுத்திரளோடே காட்டில் தங்கியிருந்த அவன், கடைக் கொள்ளியால் துளையிடப்பட்ட மூங்கில் குழலில் பாலைப்பண் இசைத்தான். குமிழின் கொம்பில் மரற்கயிற்றால் வளைத்துக் கட்டின யாழை விரலாலே தெறித்துக் குறிஞ்சிப் பண்ணை வாசித்தான். இதனை
‘தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண்டூன்றிய மழுத்தின் வன்கை
யுரிக்காவூர்ந்த மருப்படு மயிர்ச் சுவன்
மேம்பாலுரைத்த வோரியோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக்காட்ட
பல்பூமிடைந்த படலைக் கண்ணி
யொன்றமருடுக்கைக் கூழாரிடையன்
கன்றமர் நிரையொடு கானத்தல்கி
யந்து ணவிர்புகை கமழக் கை முயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம்பாலை முனையிற் குமிழின்
புழற் கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற்பறவை கிளை செத்தோர்க்கும்” என்று பெரும்பாணாற்றுப்படை ( 169-183) கூறுகிறது.
உணவுக்காக விலங்குகளை விரட்டிச் சென்று வேட்டையாடும் தொழிலில் ஈடுபட்டிருந்த வேடன் ஓய்வு ஒழிச்சலின்றி வேட்டையாடவே நேரம் சரியாக இருந்தது. ஆனால் மனிதன் கால்நடை மேய்ச்சலை மேற்கொண்ட பொழுது அவனுக்கு ஓய்வு மிகுதியாகக் கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் அவன் இசை முதலிய கலைகளில் தன் மனத்தைச் செலுத்தலானான். அதனால் பல கலைகள் வளர்ந்தன. மேலே குறித்த பெரும்பாணாற்றுப் படைப் பாடலடிகள் இவ்வுண்மையைத் தெளிவாக உணர்த்துகின்றன. இங்கு, இது குறித்து எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ள கூற்று நம்கவனத்துக்குரியதாகிறது. அக்கூற்று இது. ‘குதிரைகள் பசுக்கள் ஒட்டகைகள் கழுதைகள் வெள்ளாடுகள் செம்மறியாடுகள் பன்றிகள் ஆகியவற்றின் மந்தைகளுடன் முன்சென்று கொண்டிருக்கிற மேய்ச்சல் தொழில்புரிந்த மக்கள் சமூகங்கள், பெற்றிருந்த உடைமைகளை வெறுமனே மேற்பார்வை செய்து மிகச்சாதாரணமான கவனிப்பு அளித்து வந்தால் போதும், அவற்றின் எண்ணிக்கையை மேலும் மேலும் பெருக்க முடிந்தது. பாலும் இறைச்சியுமாகச் சத்துமிக்க உணவு கிடைத்துவரும். இதுவரை உணவு சேமிப்புக்குக் கையாண்ட முறைகள் பின் தள்ளப்பட்டுப்போயின. ஒரு காலத்தில் அவசியமாய் இருந்த வேட்டைத் தொழில் இப்போது சுகஜீவன வேலையாகிவிட்டது” (நூல் : குடும்பம் தனித் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)
‘வேட்டைச் சமூகத்து எயினனைவிட மேய்ச்சல் சமூகத்து இடையனுக்கு ஓய்வு மிகுதியாகக் கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் அவன் குழல்,யாழ் முதலிய இசைக்கருவிகளைச்செய்யும் இயக்கவும் தெரிந்து கொண்டான். அதனால் இசை முதலியகலைகளோடு எண்ணும் எழுத்துமாகிய கலைகளும் தோன்றி வளரலாயின’ என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இடையரின் விருந்தோம்பற் சிறப்பு
மழைக்காலத்தில் ஆகாயத்தில் திரிகின்ற நீர்சுமந்த மேகம் போன்ற வரகு வைக்கோலால் வேய்ந்த அழகிய குடிசைகளையுடைய சிற்றூரில் உள்ளவர்கள் வரகினது அவிழாகிய சோற்றை அவரையினது நன்றாகிய பருப்பை விட்டுப் புழுங்க வெந்ததனைத்தாமும் உண்டு விருந்தினராகிய பாணர்க்கும் மிகுதியாக வழங்கினர். இதனை,
‘பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேய்ந்த கவின் குடிச் சீறுர்
நெடுங்குரற்பூளைப் பூவினன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண்டன்ன
அவரை வான் புழுக் கட்டிப் பயில்வுற்
றின் சுவை மூரற் பெறுகுவீர்’ என்று பெரும் பாணாற்றுப்படை (190 -96) கூறுகிறது.
கிடாய்கள் கலந்துள்ள செம்மறியாட்டுத் திரள் வெள்ளாட்டுடன் கலந்து கல்லென்ற ஓசையுடைய காட்டில் கடல்போல் ஒலிக்கும் பல ஆட்டினங்களின் திரளிலே இடையர்கள் இரவில் பாலும் பாற்சோறும் தமக்காகச் சமைத்ததனை விருந்திரனராகிய பாணர்க்கும் தந்து உண்பித்தனர்.
‘கல்லென் கடத்திடைக் கடலின் ஒலிக்கும்
பல்யாட்டின நிரை எல்லினர் புகினே
பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர்”
என்று மலைபாடுகடாம் ( 415- 17 ) முல்லை நிலத்து ஆயர்களின் விருந்தோம்பற்சிறப்பு பற்றிக் கூறுகிறது.
பாலும் பண்ட மாற்று வணிகமும்
வேற்றுப்புலங்களிலே பசுக்கூட்டத்தில் இருந்த சங்கு போன்ற வெண்மையான நிறமுடைய பசுக்களின் இனிய பாலை ஆநிரைகளைக் காக்கின்ற இடையர்கள் கொண்டுவந்து, வளையல் அணிந்த மகளிர் மனம் மகிழும்படி சொரிந்தனர். இருள் நீங்குகின்ற விடியற்காலத்தே பறவைகள் துயில் நீங்கி எழுகின்ற அதிகாலைப்பொழுதில் இடைச்சியர் மோர் கடைந்தனர். புலியின் முழக்கத்தையொத்த ஆரவாரத்தையுடைய மத்தைக்கயிற்றால் வலித்து, குடைக்காளானுடைய முகை போன்ற வெண்மையான உறையாலே இறுகத் தோய்த்த இனிய தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்தனர்.
தயிர் புள்ளியாகத் தெரித்த மோர்ப்பானையைப் பூவாற் செய்த சுமட்டைத் தலையிலே வைத்து, குறிஞ்சி நிலத்து ஊர்களுக்குச் சென்று இடைச்சி மோர் விற்றாள். அப்பெண் நன்றாகிய மாமை நிறத்தவள், குழை என்ற ஆபரணம் அசைகின்ற காதுகளையுடையவள். மூங்கில் போலும் தோளும் ஆற்று மணல் போன்ற கரிய கூந்தலும் உடையவள், அப்பெண் மோர் விற்றதனாற் கிடைத்த நெல்லால் தன்சுற்றத்தாரையெல்லாம் உண்பித்தாள். தான் நெய்யை விற்கின்ற விலைக்குக் கட்டியாகப் பொன்னை வாங்காமல் பால் எருமைகளையும் நல்ல பசுக்களையும் எருமை நாகினையும் நெய்க்கு ஒப்பாகச் சொல்லி வாங்கிவந்தாள்.
வாயை மடித்துச் சீழ்க்கையடிக்கும் இடையர் குடியிருப்பில் உள்ளார், நண்டின் சிறிய குஞ்சுகளைப் போன்ற செவ்விய தினையரிசியால் சமைத்த சோற்றைப் பாலுடன் கலந்து பாணர்க்கும் விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்று பெரும்hணாற்றுப்படை (155-168) கூறுகிறது.
‘நள்ளிருள் விடியப் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்த மொலிப்பவாங்கி
யாம்பி வான் முகையன்ன கூம்பு முகிழ்
உறையமைதீந்தயிர் கலக்கி நுரைதெறித்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டி ரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்தலாய் மகள்
அளைவிலையுணவிற் கிளையுடனருத்தி
நெய்விலை கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமைநல்லான் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்’
என்பது கடியலுர் உருத்திரங் கண்ணனார் கூற்றாகும்.
இங்கே, ஆய் மகள் தான் விற்றநெய்க்கு விலையாகக் கிடைத்த நெல் முதலிய உணவுப் பொருள்களைத் தன் சுற்றத்தார். அனைவர்க்கும் கொடுத்து உண்பித்தாள். கண சமூகத்தில் மனைத் தலைவியான அப்பெண், தன்னல நோக்கம் எதுவுமின்றித் தன் கணத்தின் நலன் ஒன்றையே கருதிச் செயல்பட்டதனை நாம் இங்குக் காண்கிறோம். தான் விற்ற மோருக்கு விலையாகப் பெற்றுவந்த நெல்லைத்தன் கிளையினர் அனைவர்க்கும் தந்து உண்பித்தாள்.தான் விற்ற நெய்க்கு விலையாகக் கட்டிப்பொன்னை வாங்;காமல், தன்குடிக்கு வளம் சேர்க்கும் விதமாகப் பசுவும் எருமையும் வாங்கிவந்தாள். இச்செய்தி கண சமூக மாந்தரின் தலையாய பண்பாக விளங்கும்; தன்னல மறுப்புக்கும் பகிர்ந்துண்ணும் பண்புக்கும் தக்க சான்றாக விளங்குகிறது. இச்செய்தி. உபரிப்பொருளைக் கொடுத்துத் தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் பண்டமாற்றுமுறை நடைமுறைக்கு வந்ததனையும் உணர்த்துகிறது.
மேய்ச்சல் சமூகத்தில் கால்நடைகளான ஆடுமாடுகளின் எண்ணிக்கை பெருகியது. மேய்ச்சல் தொழில் மக்களின் வாழ்க்கைக்குரிய முக்கியமான தொழில் ஆயிற்று, கால்நடைகள் மிகுதியாக வளர்க்கப்பட்டதனைச் சங்க இலக்கியங்களில் பயிலும் ‘தாதெருமறுகு’ எருப்படுவரைப்பு’ என்னும் தொடர்கள் தெளிவாக உணர்த்துகின்றன.
கால வோட்டத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இந்நிலையில் முன்னேற்றகரமான இரும்புக் கருவிகள் பலவற்றை மனிதன் படைத்துக் கொண்டான். தொடக்கத்தில், அவன் செய்து வந்த தொழிலாகிய வேட்டைத் தொழிலுக்குத் தேர்வான கருவிகளே படைக்கப்பட்டன. வேல், ஈட்டி முதலிய கருவிகளே செய்யப்பட்டன. தொடர்ந்து மனிதன் மேய்ச்சல் தொழிலிலும் உழவுத்தொழிலிலும் ஈடுபட்டதனால் அத்தொழிலுக்குத் தேவையான கொழு, கோடரி, குந்தாலி, மண் வெட்டி முதலிய கருவிகளும் செய்யப்பட்டன. இரும்பு உபயோகத்துக்கு வந்த பிறகு மனிதனின் தொழில் முறையிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பபட்டது. இம்மாற்றம் சமூக மாற்றத்துக்கு வழி வகுத்தது.
மனிதன் காட்டு மிராண்டி நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் சமூகத்துக்கு எந்த விதமான சொத்தும் இருக்கவில்லை. நிலமும் காடும் சமூகத்துக்குப் பொதுவாக இருந்தன. அவற்றின் மீது தனிமனிதன் எவனும் உரிமை கொண்டாடவில்லை. மனிதன் வசித்த குடிசைகளும் பயன்படுத்திய வேட்டைக்கருவிகளும் வீட்டு உபயோகப்பொருள்களும் மட்டுமே சமூகத்தின் சொத்தாக இருந்தன. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்த நிலையில் கால்நடைகள் சமூகத்தின் சொத்துக்கள் ஆயின. நிலத்தைத் திருத்திப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டபிறகு, விளைந்து வந்த உணவுப் பொருள்களான வரகு, தினை, பயறு வகைகள் முதலியனவும் சேமிக்கப்பட்டு சமூகத்தின் பொதுச் சொத்தாகவே பயன்படுத்தப்பட்டன. கால் நடைகளை மந்தையாகத்திரட்டி மேய்த்து வளர்க்கத் தொடங்கிய போது, கால்நடைகளும், அவற்றில் இருந்து கிடைத்த பாலும் பால் பொருட்களும், தோலும் இறைச்சியும் உரோமம் முதலியனவும் சமூகத்தின் பொதுவுடைமையாயின. இவை தனிமனிதனின் ஆக்கிரமிப்புக்கு இன்னும் உள்ளாகவில்லை.
இரும்புக் கருவிகள் புதிது புதிதாகப் படைக்கப்பட்டமையால் காட்டைச் சுட்டுத் திருத்திய நிலைமாறி வெட்டித் திருத்திச் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றித் திருத்தும் நிலை ஏற்பட்டது, திருத்துவதும் எளிதாயிற்று. தேவைக்கேற்ப நிலங்கள் திருத்தப்பட்டன. உழவுத்தொழிலில் ஏர்களையும் சகடங்களையும் ஈர்த்துச் செல்லக் கால்நடைகள்- குறிப்பாக காளைகளும் எருமைகளும் பயிற்றிப் பயன்படுத்தப்பட்டன.
‘ஈரச் செவ்வியுதவின ஆயினும்
பல்லெருத்துள்ளும் நல்லெருத்து நோக்கி
வீறு வீறாயும் உழவன்”
என்று புறநானூறு (289) காளைகள் உழவுத்தொழிலில் வசக்கிப் பயன்படுத்தப்பட்டது குறித்துக் கூறுகிறது. அதனால் சுமைகளைக் காளை எருமை முதலியவற்றின் முதுகில் ஏற்றி வந்த நிலை மாறியது. மாடுகளால் ஈர்த்துக் செல்லப்படும் சகடங்கள் செய்யப்பட்டன, பயன்படுத்தப்பட்டன. சமூகத்தின் மக்கள் அனைவரும் சேர்ந்து உழைத்துப் பாடுபட்டு உற்பத்தி செய்த இச்செல்வம் சமூகத்தின் மக்கள் அனைவருக்கும் சொந்தமான சமூகத்துக்குப் பொதுவான - சொத்தாகவே இருந்தன. இச்செல்வம் குறித்து தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளல் தக்கது. இது குறித்து அவர் கூறுவதாவது;
‘இங்கே (பழைய உலகத்தில்) மிருகங்களைப் பழக்குவதும் மந்தையாகப் பெருக்குவதும் இதுவரை கேட்டறியாத செல்வத்திற்குரிய ஓர் ஊற்றுக் கண்ணைப் பயன்படுத்தி,புத்தம் புதிய சமுதாய உறவுகளையும் சிருஷ்டித்தன. அநாகரிக நிலையின் கடைக்கட்டம் வரையிலும் நிலையான செல்வம் என்று வீடும் துணிமணிகளும் நேர்த்தியற்ற நகைகளும் உணவு பெறவும் தயாரிக்கவும் பயன்பட்ட கருவிகளும் அதாவது, மிகவும் சாதாரண வகைப்பட்ட வீட்டுச் சாமான்களும் ஆயுதங்களும் படகுகளும் மட்டுமே இருந்தன. மக்கள் உணவுக்காக தினம் தினம் பாடுபட வேண்டியிருந்தது.
இப்பொழுதோ குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள், பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் ஆகியவற்றுடன் ஐந்து நதிகள் பாயும் பகுதியிலும் கங்கை நதிப்பிரதேசத்திலும் ஆரியர்கள் (அதைவிட நீர்வளம் மிக்க ஆக்ஸஸ், ஜகார் தஸ் ஆறுகள் ஓடுகிற புல்வெளிப் பிரதேசங்களில் உள்ள ஆரியர்கள், யூப்ரடிஸ் டைகிரிஸ் நதிப்பக்கங்களில் உள்ள செமைட்டுக்கள்) பெற்றிருந்த உடைமைகளை வெறுமனே மேற்பார்வை பார்த்து மிகச் சாதாரண கவனிப்பு அளித்து வந்தாலே போதும்;;; அவற்றின் எண்ணிக்கையை மேலும் மேலும் பெருக்க முடிந்தது. இறைச்சியும் பாலுமாக சத்துமிக்க உணவு கிடைத்து வரும். ஆனால் இந்தப் புதிய செல்வம் யாருக்குச் சொந்தமாக இருந்தது? சந்தேகமின்றி ஆரம்பத்தில் அது கணத்துக்கே சொந்தமாயிருந்தது ‘ (நூல் : குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்)
எங்கல்ஸ் அவர்களின் இக்கூற்று தமிழகத்துக்கும் பொருந்தும். மக்கள் கண சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் உடைமைகள் அனைத்தும் சமூகத்துக்கே சொந்தமாக இருந்தன. கால்நடைகளும் உணவு தானியங்களுமாகச் சேர்ந்திருந்த ஏராளமான செல்வத்தைச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்தே அனுபவித்தனர். தமக்குள் எவ்விதப் பாகுபாடும் இன்றிச் சமமாக அனுபவித்தனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.
பகுத்துண்ணும் பண்பு
தமிழகத்துக் குறிஞ்சி முல்லை நிலங்களில் மக்கள் வேட்டைத் தொழிலையும் நிரை மேய்த்தலையும் வாழ்வுக்குரிய பிரதானமான ஆதாரமாகக் கொண்டு கண சமூகமாக வாழ்ந்தனர். இந்நிலங்கள் அடிக்கடி வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் ஆகும். மக்கள் பற்றாக்குறையான வாழ்க்கையே மேற்கொண்டிருந்தனர். இந்நிலையிலும் அவர்கள் கண சமூகத்தின் பங்கீட்டு மரபுகளைக் கறாராகப் பின்பற்றினார்கள். எழுதப்படாத இச்சட்டத்தை எவரும் மீறியதில்லை.
கொடிய வறட்சிமிக்க கோடைக்காலங்களில் நீர்வற்றியநிலையில் பள்ளங்களில் சேற்றைத் தோண்ட ஊறிய சிறிதளவு நீராயினும் சரி: வேட்டையில் கொன்ற விலங்காயினும் சரி: வெட்சிப் போரில் கவர்ந்து வந்த ஆநிரையாயினும் சரி: அவையனைத்தையும் மக்கள் தமக்குள் எவ்வித வேறுபாடுமின்றிச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். அம்மக்களின் பகுத்துண்டலாகிய சீரிய பண்புக்கு கீழ் வரும் புறநானூற்றுப்பாடலடிகள் தக்க சான்றாக விளங்குகின்றன. சங்ககாலத்தில் மக்கள் கண சமூகமாக வாழ்ந்தனர் என்பதற்கும் இப்பாடல் சரியான சான்றாகும். அப்பாடல் இது:
‘களிறு நீறாடிய விடுநில மருங்கில்
வம்பப் பெரும்பெயல் வரைந்து சொரிந் திறந்தெனக்
குழிக்கொள் சின்னீர் குரா அலுண்டலிற்
சேறுகிளைத்திட்ட கலுழ்கண்ணூறல்
முறையினுண்ணும் நிறையா வாழ்க்கை
முளவு மாத்தொலைச்சிய முழுச் சொலாடவர்
உடும்பிழுதறுத்த வொடுங்காய்ப் படலைச்
சீறில் முன்றிற் கூறு செய்திடு மார்
கொள்ளிவைத்த கொழுநிணநாற்றம்
மறுகுடன்கமழும” - புறநானூறு 325.
பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட விடுநிலத்தில் பெய்த மழை நீர்பள்ளங்களில் சிறிதளவே தங்கியிருந்தது. அதனையும் காட்டில் மேய்ந்து வந்த ஆடுமாடுகள் குடித்து வற்றச் செய்து விட்டன. அதனால் மக்கள் குடிநீருக்காகச் சேற்றைத் தோண்டியதில் நீர் சிறிதளவே ஊறியது. ஊறிய நீர் மக்களின் தேவைக்குப் போதுமானதாக இல்லை. ஆனாலும் அம்மக்கள் அந்நீரைத்தமக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். அதற்காக முறைவைத்து நீரை முகந்து சென்று உண்டனர். நீருக்காக அவர்கள் அந்நிலையிலும் முண்டியடித்து மோதிக் கொள்ளவில்லை. சண்டையில்லை. சச்சரவு இல்லை. கலங்கிய சேற்றில் தோண்டியதால் ஊறிய சிறிதளவுநீரையும் ஒருவர் பின் ஒருவராக முறைகொண்டு சென்று (ஞரநரயளலளவநஅ ) வரிசையாக முகந்து வந்தனர்.
அதைப் போலவே வேட்டையாடிக் கொண்டுவந்த உடும்பின் தசையைத் தீயில் இட்டுச் சுட்டுத் தமக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். உடும்பு சிறிய விலங்கு: அதனைப் பச்சையாக அறுத்துப் பங்கிட்டால் அப்பங்கைச் சுடவோ சமைக்கவோ முடியாது. எனவே அவர்கள் அதைச் சுட்டுத்தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். ‘கூறு செய்திடுமார் கொள்ளி வைத்த கொழுநிணம்” என்பது கவிக் கூற்று. இக்கூற்று ‘பங்கிடுவதற்காவே அவர்கள் அதனைச்சுட்டார்கள்” என்பதை உணர்த்துகிறது.
புறநானூறு காட்டும் மற்றொரு காட்சி: முல்லை நிலத்துச்சிற்றூர் ஒன்றில் இல்லத்தலைவி தன் இல்லத்தில் இருந்த தினையைச் சோறு சமைத்தாள். அரிசி சிறிதளவே இருந்தது. அதைச் சமைத்து வைத்தாள். ஆனால் அதை உண்ணக் காத்திருந்தோர் மிகப் பலராக இருந்தனர். அதற்காக அவள் கலக்கமுறவில்லை. காத்திருந்த அனைவரையும் தன் இல்லத்தின் முற்றத்தில் இருந்த நெடிய பந்தலில் வரிசையாக அமரச்செய்தாள். சமைத்து வைத்திருந்த உணவை அனைவர்க்கும் முறை முறையாகத் தந்து உண்ணச் செய்தாள். ஏற்போர் பலராக இருந்தும் அவரது பன்மையை மனங்கொள்ளாது பலரும் ஏற்றமையுமாறு வழங்கி மேம்பட்டாள். அவள் செயல்கண்டு வியந்தபுலவர் முது கூத்தனார் அவளை ‘இற்பொலிமகடூஉ” என்று ஏற்றமுடன் போற்றினார்.
‘உள்ளது
தவச் சிறிதாயினும மிகப்பலரென்னாள்
நீணெடும்பந்தர் ஊண் முறையூட்டும்
இற்பொலிமகடூஉ” என்பது புலவரின் புகழுரையாகும்.
இங்கு “சிறு சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே, பெருஞ்சோற்றானும் நனிபலகலத்தன்மன்னே” என்று அவ்வையார் கணசமூகத் தலைவனான அதியமான் நெடுமான் அஞ்சி குறித்துக் கூறியது நம் கவனத்துக்குரியதாகும். கணசமூகமாக வாழ்ந்த மக்கள் அச்சமூகத்தின் பங்கீட்டு விதிகளை எந்த அளவுக்கு மதித்துப் போற்றினர் என்பதை மேற்குறித்த பாடலடிகள் உணர்த்துகின்றன. இம்மக்களின் பங்கீட்டுச் செயல் உபரி நிலையில் நிகழ்ந்தது அல்ல. பற்றாக்குறையான நிலையில் பங்கிட்டுக் கொண்ட செயலேயாகும், என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வரகும் தினையுமாகச் சமைத்த சிறிதளவு சோறும் வேட்டையாடிக் கொணர்ந்த உடும்பைச்சுட்ட கறியும் “சேறுகிளைத் திட்ட குழிக்கொள் சின்னீரும்” மட்டுமல்லாது, கரந்தையாரை வென்று கவர்ந்து வந்த ஆநிரைகளையும் கூட கணசமூக மாந்தர் தமக்குள் பங்கிட்டுக் கொண்டனர் என்ற செய்தியையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.
“காலைப்
புல்லார் இனநிரை செல்புற நோக்கிக்
கையிற் சுட்டிப் யை வெண்ணிச்
சிலையின் மாற்றியோனே அவைதாம்
மிகப் பலவாயினு மென்னாம் எனைத்தும்
வெண்கோள் தோன்றாக்குழிசியொடு
நாளுறை மத்தொலி கேளாதோனே”
என்னும் புறப்பாடலடிகள் வெட்சிப்போரில் கவர்ந்து வந்த ஆநிரைகளைக் கண சமூகமாந்தர் பங்கிட்டுக் கொண்ட செய்தியை நமக்குக் கூறுகின்றன.
‘வெட்சித்தலைவன் கரந்தையாரை வென்று கவர்ந்து வந்த நிரைதாம் மிகப் பலவேயாயினும் அவனுக்கு அவைதாம் என்ன பயன் படும் எத்தன்மைத்தும்? பால் முதலியன பெய்யப்படாமையின் சிறிதும் வெள்ளிய முகம் தோன்றாத பானையினை நாட்கலையில் கண்டான். ஆனால் உறை தெறிப்பக் கடையும் மத்தின் ஒலி கேளாமுன்னே தான் கவர்ந்து வந்த நிரையனைத்தும் பிறர்க்கு நேராகக் கொடுத்தல் வல்லனாயினான். “என்று தலைவன் கவர்ந்து வந்த ஆநிரைகளைக் குழுவில் உள்ளார் அனைவர்க்கும் பங்கிட்டளித்த விரைவு இங்கு புலவரால் வியப்புடன் குறிக்கப்படுகிறது.
இங்கு அத்தலைவன் தான் கவர்ந்து வந்த ஆநிரைகளைப் பங்கிடுவதில் தயக்கம் எதுவும் காட்டவில்லை. தனக்கெனச் சிறந்தது எதனையும் அவன் ஒதுக்கி வைத்துக் கொள்ளவில்லை. அவனது இச்செயல் புலவருக்குப் பெருவியப்பைத் தந்தது. அவ்வியப்பின் வெளிப்பாடுதான், ‘அவைதாம் மிகப் பலவாயினும் என்னாம் எனைத்தும்” என்ற வினாவாக வெளிவந்தது. தலைவனது தன்னல மற்ற இச்செயலுக்கு அவன் வாழ்ந்த சமூக அமைப்பே காரணமாகும். அவன் பொதுவுடைமை வகைப்பட்ட கண சமூகத்தில் வாழ்ந்தான். சமூகத்தில் இன்னும் தனிச் சொத்துடைமை பற்றிய சிந்தனை ஏற்படாத நிலையினையே இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
கிடைத்த பொருள் எதுவாயினும் அவை அனைத்தையும் மக்கள் தமக்குள் சம அளவில் பங்கிட்டுக் கொள்ளும் பழக்கம் கணசமூகமாக வாழ்ந்த பண்டை மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்து. வேட்டையில் கிடைத்தது எது வாயினும் அதனைத்தன் குழுவில் உள்ளார் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது கணசமூகத்தின் இயல்பு ஆகும். “உலகம் முழுவதிலும் கணசமூகத்தில் தனியாளுக்கு வேட்டைப்பொருள், மீன், உணவு முதலியவற்றுள் தனியுரிமை இருக்க வில்லை, அவன் வாழ்ந்த சமத்துவ சமூகம் தான்பெறும் எதையும் குழுவினருடன் பங்கிட்டுக் கொள்ளும் படி இயல்பான உள்ளுணர்வாகவே அவனை உந்தியது.” என்று கணசமுகமாக வாழ்ந்த பழங்குடியினைரைப்பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்று தமிழகத்துக்கும் பொருந்தும் என்பதனை மேற்குறித்த புறநானூற்றுப் பாடலடிகள் உணர்த்துகின்றன.
இப்பாடல்கள், இம்மக்கள் தாம் வேட்டையாடிக் கொண்டுவந்த ஊனைவிலைக்கு விற்க வில்லை. குழுவில் உள்ள வலியவன் தனக்கு என்று சிறந்தையோ கூடுதலாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. இருந்ததை அனைவரும் தமக்குள் சம அளவில் பங்கிட்டுக் கொண்டனர்.” என்ற செய்தியை நமக்குக் கூறுகின்றன. இங்கே மக்கள் தம் உழைப்பின் பயனைத் தாமே துய்க்கின்ற காட்சியையும் காண்கிறோம். ‘புராதன பொதுவுடைமைத் சமூகத்தில் பொதுச் சொத்துடைமை கூட்டு உழைப்பு சமத்துவ அடிப்படையிலான விநியோகம் முதலியவை ஆதிக்கம் செலுத்திய வரையில் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுபடவில்லை.” என்ற மார்க்சீய அறிஞர்களின் கூற்றுக்கு இப்பாடல்கள் தக்க சான்றாக அமைந்துள்ளன.
மண்பாண்டங்கள் செய்யத் தெரிந்திருந்தமையால் மனிதன் தினை முதலிய தானியங்களைக் குற்றி அரிசியாக்கிச் சமைத்து உண்ணக் கற்றுக் கொண்டான் பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலியவற்றை தயாரித்துப் பயன்படுத்தலானான். மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் இவற்றைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மேய்ச்சல் சமூகமாக மாறத் தொடங்கிய போதுதான் இவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் மனிதனிடம் ஏற்பட்டது. இது மனித வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமாற்றம் எனலாம்.
‘மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழிரும் புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகினுவித்த புன்கம்
கூதளங்கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை அகலிலைப்பகுக்கும்” - புறநானூறு 168
(மரையான் கறந்த நுரைகொண்ட இனிய பாலை, மான் தசையைச்சமைத்த புலால் நாறும் பானையின் நிணம் தோய்ந்த வெளிய நிறத்தையுடைய பெரிய வெளிப்பக்கத்தைக் கழுவாமல் உலை நீராக வார்த்து ஏற்றிச் சந்தன விறகால் சமைக்கப்பட்ட சோற்றை, கூதாளி அழகுடன் விளங்கும் மலை மல்லிகை நாறும் முற்றத்தில் வளமான குலைகளையுடைய வாழையினது அகன்ற இலையில் பலருடனும் பகுத்துண்ணும்) என்று மலையில் மேய்ந்த மரையாவைக் கறந்து பாலை உலையாக ஏற்றிச் சமைத்து வாழை யிலையில் எயினர் சோற்றைப் பகிர்ந்து உண்டதனைப் புறநானூறு கூறுகிறது. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்து வந்த நிலையின் தொடக்கத்தை இது குறிக்கிறது எனல் சரியேயாகும். சங்ககாலத்தில் தமிழகத்தில் மக்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த நிலை பற்றிக் கூறுகின்ற பாடல்களில் பசு, பால், தயிர் முதலியன பற்றிய குறிப்புகள் காணப்படாமை நோக்கத்தக்கது.
பாலையும் பால் பொருட்களையும் நீண்டநாட்களுக்குச் சேமித்துப் பாதுகாக்க முடியாது, எனவே மனிதன் பால் தரும் விலங்குகளான பசு எருமை முதலியவற்றைப் பாலுக்காக மந்தையாகத் திரட்டி மேய்த்துப் பாதுகாக்கவும் அதனால் பாலும் பால்படு பொருள்களும் பெற்றுப் பயன் துய்க்கவும் முற்பட்டான். பசுக்களுடன் எருமைகளையும் ஆடுகளையும் பன்றிகளையும் கூட மந்தையாக வளர்க்கலானான். இப்போது மனிதன் அவற்றை மந்தையாக வளர்த்துப் பயன்கொள்ளத் தெரிந்து கொண்டான். இவை அவனுக்குப் பால், இறைச்சி, தோல் முதலிய பொருள்களைக் கொடுத்தன. பறவைகளில் கோழிகளையும் வளர்க்கலானான். குடிசைகளில் கோழி வளர்த்தமை பற்றி “கோழி சேக்கும் கூடு” என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. கோழிகள் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டன. காவலுக்காகவும் வேட்டைக்காவும் நாய் வளர்க்கப்பட்டது.
‘தொடர்நாயாத்த துன்னருங் கடிநகர்” என்றும்
‘பகுவாய் ஞமலியொடு பைம்புதலெருக்கி “என்றும் பெரும்பாணாற்றுப்படை (112,125 ) எயினர் நாய்வளர்த்தது பற்றிக் கூறுகிறது.
இடையர் குடியிருப்பு
குறிஞ்சி நிலத்து எயினர் ஊர்களைப் போலவே முல்லை நிலத்து ஆயர்களின் ஊர்களும் காவற்காடு மற்றும் விடு நிலம் எனப்பட்ட மேய்ச்சல் நிலங்கள் சூழ அமைந்திருந்தன. குடிசைகள் வரிந்த கழிகளில் வைக்கோலாலே வேயப்பட்டிருந்தன. அவை மழை மேகங்கள் போலக் கறுத்துக் காணப்பட்டன. கழிகளால் கட்டப்பட்ட கதவுகளைக் கொண்டிருந்தன. சிறு தூற்றையுடைய வாயில்களில் குறிய கால்கள் நடப்பட்டு, அவற்றில் ஆட்டு மறிகள் நின்று தின்னும் வகையில் தழைகள் கட்டப்பட்டிருந்தன. முற்றத்தில் நடப்பட்டிருந்த குறிய முளைகளில் தாமணி தொடுத்தநெடிய தாம்புகள் கட்டப்பட்டிருந்தன. தங்குமிடமாகிய சேக்கையில் கிடாயினுடைய தோலைப் பாயலாகக் கொண்டு முதியவன் காவலுக் காகப்படுத்திருந்தான். கட்டு முள்ளாகிய வேலி சூழ்ந்த எருமிகுந்த ஊரில் வளைந்த முகத்தையுடைய செம்மறியாடுகளுடன் வெள்ளாடுகளும் கிடந்தன.
‘மறிய
குளகரையாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றைவாயிற்செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்
அதளோன் துஞ்சுங் காப்பின் உதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத்துருவை யொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி எருப்படு வரைப்பு” என்று முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த ஆயர்களின் ஊர் குறித்துப் பெரும்பாணாற்றுப்படை (147-54) பேசுகிறது. தொழுக்களையுடைய ஊர்களில் குடிசைகளின் முற்றத்தில் வரகு இட்டு நிரப்பிய குதிர்கள் மிகுதியாக இருந்தன. அவை யானைக் கூட்டம் போல் காணப்பட்டன. குடிசைகளின் முற்றங்களில் அமைக்கப்பட்டிருந்த பந்தரில் வரகு திரிகைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவை யானையின் முழந்தாள் போலத் தோற்றமளித்தன இக்காட்சியினை
‘முள்ளுடுத்
தெழுகாடோங்கிய தொழுவுடை வரைப்பிற்
பிடிக்கணத்தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந்திரி மரப்பந்தர்’
என்று பெரும்பாணற்றுப்படை (184 - 87 ) காட்டுகிறது.
நெடுகக் கட்டிய கொட்டிலின் ஒரு பக்கத்தில் அடுப்பெரித்து ஒரு பக்கத்தில் தொழில்; ஒழிந்திராத நாளில் சகடையில் உருளைகளையும் கலப்பைகளையும் சார்த்தி எருதுகளையும் கட்டி வைத்திருந்தனர். அதனால் கொட்டிலின் சுவர் தேய்ந்து புகைப்படிந்து காணப்பட்டது. இதனை
‘குறுஞ்சாட்டுருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர்பறைந்த கொட்டில்”என்று அந்நூல் மேலும் ( 188-89 ) கூறுகிறது.
குழலும் யாழும்
முல்லை நிலத்து இடையன் செருப்பு விடாமற் கிடந்து வடு அழுந்தின பாதங்களையுடையவன். பசுக்களுக்கு வருந்தஞ் செய்யும் தடியை ஊன்றியதும் மரங்களை ஒடியெறிந்து கொடுக்கும் கோடரியால் தழும்பிருந்ததுமான வலிய கைகளையுடையவன். இரண்டு முனைகளிலும் உரியையுடைய காக்கள் மேலே யிருந்ததனால் உண்டாகிய தழும்பு மிக்க மயிரெழுந்த தோள்களையுடையவன். எல்லாமணமும் பொருந்தும் பசு கறந்த பாற்கையைத் தடவிக் கொண்ட தலைமயிரையுடையவன். கலம்பகமாகிய மாலையைக் கழுத்தில் அணிந்திருந்தான். ஒற்றையாகப் பொருந்திய கோவணமாகிய உடையை அணிந்திருந்தான். கன்றுகள் பொருந்தின பசுத்திரளோடே காட்டில் தங்கியிருந்த அவன், கடைக் கொள்ளியால் துளையிடப்பட்ட மூங்கில் குழலில் பாலைப்பண் இசைத்தான். குமிழின் கொம்பில் மரற்கயிற்றால் வளைத்துக் கட்டின யாழை விரலாலே தெறித்துக் குறிஞ்சிப் பண்ணை வாசித்தான். இதனை
‘தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண்டூன்றிய மழுத்தின் வன்கை
யுரிக்காவூர்ந்த மருப்படு மயிர்ச் சுவன்
மேம்பாலுரைத்த வோரியோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக்காட்ட
பல்பூமிடைந்த படலைக் கண்ணி
யொன்றமருடுக்கைக் கூழாரிடையன்
கன்றமர் நிரையொடு கானத்தல்கி
யந்து ணவிர்புகை கமழக் கை முயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம்பாலை முனையிற் குமிழின்
புழற் கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற்பறவை கிளை செத்தோர்க்கும்” என்று பெரும்பாணாற்றுப்படை ( 169-183) கூறுகிறது.
உணவுக்காக விலங்குகளை விரட்டிச் சென்று வேட்டையாடும் தொழிலில் ஈடுபட்டிருந்த வேடன் ஓய்வு ஒழிச்சலின்றி வேட்டையாடவே நேரம் சரியாக இருந்தது. ஆனால் மனிதன் கால்நடை மேய்ச்சலை மேற்கொண்ட பொழுது அவனுக்கு ஓய்வு மிகுதியாகக் கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் அவன் இசை முதலிய கலைகளில் தன் மனத்தைச் செலுத்தலானான். அதனால் பல கலைகள் வளர்ந்தன. மேலே குறித்த பெரும்பாணாற்றுப் படைப் பாடலடிகள் இவ்வுண்மையைத் தெளிவாக உணர்த்துகின்றன. இங்கு, இது குறித்து எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ள கூற்று நம்கவனத்துக்குரியதாகிறது. அக்கூற்று இது. ‘குதிரைகள் பசுக்கள் ஒட்டகைகள் கழுதைகள் வெள்ளாடுகள் செம்மறியாடுகள் பன்றிகள் ஆகியவற்றின் மந்தைகளுடன் முன்சென்று கொண்டிருக்கிற மேய்ச்சல் தொழில்புரிந்த மக்கள் சமூகங்கள், பெற்றிருந்த உடைமைகளை வெறுமனே மேற்பார்வை செய்து மிகச்சாதாரணமான கவனிப்பு அளித்து வந்தால் போதும், அவற்றின் எண்ணிக்கையை மேலும் மேலும் பெருக்க முடிந்தது. பாலும் இறைச்சியுமாகச் சத்துமிக்க உணவு கிடைத்துவரும். இதுவரை உணவு சேமிப்புக்குக் கையாண்ட முறைகள் பின் தள்ளப்பட்டுப்போயின. ஒரு காலத்தில் அவசியமாய் இருந்த வேட்டைத் தொழில் இப்போது சுகஜீவன வேலையாகிவிட்டது” (நூல் : குடும்பம் தனித் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)
‘வேட்டைச் சமூகத்து எயினனைவிட மேய்ச்சல் சமூகத்து இடையனுக்கு ஓய்வு மிகுதியாகக் கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் அவன் குழல்,யாழ் முதலிய இசைக்கருவிகளைச்செய்யும் இயக்கவும் தெரிந்து கொண்டான். அதனால் இசை முதலியகலைகளோடு எண்ணும் எழுத்துமாகிய கலைகளும் தோன்றி வளரலாயின’ என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இடையரின் விருந்தோம்பற் சிறப்பு
மழைக்காலத்தில் ஆகாயத்தில் திரிகின்ற நீர்சுமந்த மேகம் போன்ற வரகு வைக்கோலால் வேய்ந்த அழகிய குடிசைகளையுடைய சிற்றூரில் உள்ளவர்கள் வரகினது அவிழாகிய சோற்றை அவரையினது நன்றாகிய பருப்பை விட்டுப் புழுங்க வெந்ததனைத்தாமும் உண்டு விருந்தினராகிய பாணர்க்கும் மிகுதியாக வழங்கினர். இதனை,
‘பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேய்ந்த கவின் குடிச் சீறுர்
நெடுங்குரற்பூளைப் பூவினன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண்டன்ன
அவரை வான் புழுக் கட்டிப் பயில்வுற்
றின் சுவை மூரற் பெறுகுவீர்’ என்று பெரும் பாணாற்றுப்படை (190 -96) கூறுகிறது.
கிடாய்கள் கலந்துள்ள செம்மறியாட்டுத் திரள் வெள்ளாட்டுடன் கலந்து கல்லென்ற ஓசையுடைய காட்டில் கடல்போல் ஒலிக்கும் பல ஆட்டினங்களின் திரளிலே இடையர்கள் இரவில் பாலும் பாற்சோறும் தமக்காகச் சமைத்ததனை விருந்திரனராகிய பாணர்க்கும் தந்து உண்பித்தனர்.
‘கல்லென் கடத்திடைக் கடலின் ஒலிக்கும்
பல்யாட்டின நிரை எல்லினர் புகினே
பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர்”
என்று மலைபாடுகடாம் ( 415- 17 ) முல்லை நிலத்து ஆயர்களின் விருந்தோம்பற்சிறப்பு பற்றிக் கூறுகிறது.
பாலும் பண்ட மாற்று வணிகமும்
வேற்றுப்புலங்களிலே பசுக்கூட்டத்தில் இருந்த சங்கு போன்ற வெண்மையான நிறமுடைய பசுக்களின் இனிய பாலை ஆநிரைகளைக் காக்கின்ற இடையர்கள் கொண்டுவந்து, வளையல் அணிந்த மகளிர் மனம் மகிழும்படி சொரிந்தனர். இருள் நீங்குகின்ற விடியற்காலத்தே பறவைகள் துயில் நீங்கி எழுகின்ற அதிகாலைப்பொழுதில் இடைச்சியர் மோர் கடைந்தனர். புலியின் முழக்கத்தையொத்த ஆரவாரத்தையுடைய மத்தைக்கயிற்றால் வலித்து, குடைக்காளானுடைய முகை போன்ற வெண்மையான உறையாலே இறுகத் தோய்த்த இனிய தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்தனர்.
தயிர் புள்ளியாகத் தெரித்த மோர்ப்பானையைப் பூவாற் செய்த சுமட்டைத் தலையிலே வைத்து, குறிஞ்சி நிலத்து ஊர்களுக்குச் சென்று இடைச்சி மோர் விற்றாள். அப்பெண் நன்றாகிய மாமை நிறத்தவள், குழை என்ற ஆபரணம் அசைகின்ற காதுகளையுடையவள். மூங்கில் போலும் தோளும் ஆற்று மணல் போன்ற கரிய கூந்தலும் உடையவள், அப்பெண் மோர் விற்றதனாற் கிடைத்த நெல்லால் தன்சுற்றத்தாரையெல்லாம் உண்பித்தாள். தான் நெய்யை விற்கின்ற விலைக்குக் கட்டியாகப் பொன்னை வாங்காமல் பால் எருமைகளையும் நல்ல பசுக்களையும் எருமை நாகினையும் நெய்க்கு ஒப்பாகச் சொல்லி வாங்கிவந்தாள்.
வாயை மடித்துச் சீழ்க்கையடிக்கும் இடையர் குடியிருப்பில் உள்ளார், நண்டின் சிறிய குஞ்சுகளைப் போன்ற செவ்விய தினையரிசியால் சமைத்த சோற்றைப் பாலுடன் கலந்து பாணர்க்கும் விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்று பெரும்hணாற்றுப்படை (155-168) கூறுகிறது.
‘நள்ளிருள் விடியப் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்த மொலிப்பவாங்கி
யாம்பி வான் முகையன்ன கூம்பு முகிழ்
உறையமைதீந்தயிர் கலக்கி நுரைதெறித்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டி ரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்தலாய் மகள்
அளைவிலையுணவிற் கிளையுடனருத்தி
நெய்விலை கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமைநல்லான் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்’
என்பது கடியலுர் உருத்திரங் கண்ணனார் கூற்றாகும்.
இங்கே, ஆய் மகள் தான் விற்றநெய்க்கு விலையாகக் கிடைத்த நெல் முதலிய உணவுப் பொருள்களைத் தன் சுற்றத்தார். அனைவர்க்கும் கொடுத்து உண்பித்தாள். கண சமூகத்தில் மனைத் தலைவியான அப்பெண், தன்னல நோக்கம் எதுவுமின்றித் தன் கணத்தின் நலன் ஒன்றையே கருதிச் செயல்பட்டதனை நாம் இங்குக் காண்கிறோம். தான் விற்ற மோருக்கு விலையாகப் பெற்றுவந்த நெல்லைத்தன் கிளையினர் அனைவர்க்கும் தந்து உண்பித்தாள்.தான் விற்ற நெய்க்கு விலையாகக் கட்டிப்பொன்னை வாங்;காமல், தன்குடிக்கு வளம் சேர்க்கும் விதமாகப் பசுவும் எருமையும் வாங்கிவந்தாள். இச்செய்தி கண சமூக மாந்தரின் தலையாய பண்பாக விளங்கும்; தன்னல மறுப்புக்கும் பகிர்ந்துண்ணும் பண்புக்கும் தக்க சான்றாக விளங்குகிறது. இச்செய்தி. உபரிப்பொருளைக் கொடுத்துத் தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் பண்டமாற்றுமுறை நடைமுறைக்கு வந்ததனையும் உணர்த்துகிறது.
மேய்ச்சல் சமூகத்தில் கால்நடைகளான ஆடுமாடுகளின் எண்ணிக்கை பெருகியது. மேய்ச்சல் தொழில் மக்களின் வாழ்க்கைக்குரிய முக்கியமான தொழில் ஆயிற்று, கால்நடைகள் மிகுதியாக வளர்க்கப்பட்டதனைச் சங்க இலக்கியங்களில் பயிலும் ‘தாதெருமறுகு’ எருப்படுவரைப்பு’ என்னும் தொடர்கள் தெளிவாக உணர்த்துகின்றன.
கால வோட்டத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இந்நிலையில் முன்னேற்றகரமான இரும்புக் கருவிகள் பலவற்றை மனிதன் படைத்துக் கொண்டான். தொடக்கத்தில், அவன் செய்து வந்த தொழிலாகிய வேட்டைத் தொழிலுக்குத் தேர்வான கருவிகளே படைக்கப்பட்டன. வேல், ஈட்டி முதலிய கருவிகளே செய்யப்பட்டன. தொடர்ந்து மனிதன் மேய்ச்சல் தொழிலிலும் உழவுத்தொழிலிலும் ஈடுபட்டதனால் அத்தொழிலுக்குத் தேவையான கொழு, கோடரி, குந்தாலி, மண் வெட்டி முதலிய கருவிகளும் செய்யப்பட்டன. இரும்பு உபயோகத்துக்கு வந்த பிறகு மனிதனின் தொழில் முறையிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பபட்டது. இம்மாற்றம் சமூக மாற்றத்துக்கு வழி வகுத்தது.
மனிதன் காட்டு மிராண்டி நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் சமூகத்துக்கு எந்த விதமான சொத்தும் இருக்கவில்லை. நிலமும் காடும் சமூகத்துக்குப் பொதுவாக இருந்தன. அவற்றின் மீது தனிமனிதன் எவனும் உரிமை கொண்டாடவில்லை. மனிதன் வசித்த குடிசைகளும் பயன்படுத்திய வேட்டைக்கருவிகளும் வீட்டு உபயோகப்பொருள்களும் மட்டுமே சமூகத்தின் சொத்தாக இருந்தன. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்த நிலையில் கால்நடைகள் சமூகத்தின் சொத்துக்கள் ஆயின. நிலத்தைத் திருத்திப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டபிறகு, விளைந்து வந்த உணவுப் பொருள்களான வரகு, தினை, பயறு வகைகள் முதலியனவும் சேமிக்கப்பட்டு சமூகத்தின் பொதுச் சொத்தாகவே பயன்படுத்தப்பட்டன. கால் நடைகளை மந்தையாகத்திரட்டி மேய்த்து வளர்க்கத் தொடங்கிய போது, கால்நடைகளும், அவற்றில் இருந்து கிடைத்த பாலும் பால் பொருட்களும், தோலும் இறைச்சியும் உரோமம் முதலியனவும் சமூகத்தின் பொதுவுடைமையாயின. இவை தனிமனிதனின் ஆக்கிரமிப்புக்கு இன்னும் உள்ளாகவில்லை.
இரும்புக் கருவிகள் புதிது புதிதாகப் படைக்கப்பட்டமையால் காட்டைச் சுட்டுத் திருத்திய நிலைமாறி வெட்டித் திருத்திச் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றித் திருத்தும் நிலை ஏற்பட்டது, திருத்துவதும் எளிதாயிற்று. தேவைக்கேற்ப நிலங்கள் திருத்தப்பட்டன. உழவுத்தொழிலில் ஏர்களையும் சகடங்களையும் ஈர்த்துச் செல்லக் கால்நடைகள்- குறிப்பாக காளைகளும் எருமைகளும் பயிற்றிப் பயன்படுத்தப்பட்டன.
‘ஈரச் செவ்வியுதவின ஆயினும்
பல்லெருத்துள்ளும் நல்லெருத்து நோக்கி
வீறு வீறாயும் உழவன்”
என்று புறநானூறு (289) காளைகள் உழவுத்தொழிலில் வசக்கிப் பயன்படுத்தப்பட்டது குறித்துக் கூறுகிறது. அதனால் சுமைகளைக் காளை எருமை முதலியவற்றின் முதுகில் ஏற்றி வந்த நிலை மாறியது. மாடுகளால் ஈர்த்துக் செல்லப்படும் சகடங்கள் செய்யப்பட்டன, பயன்படுத்தப்பட்டன. சமூகத்தின் மக்கள் அனைவரும் சேர்ந்து உழைத்துப் பாடுபட்டு உற்பத்தி செய்த இச்செல்வம் சமூகத்தின் மக்கள் அனைவருக்கும் சொந்தமான சமூகத்துக்குப் பொதுவான - சொத்தாகவே இருந்தன. இச்செல்வம் குறித்து தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளல் தக்கது. இது குறித்து அவர் கூறுவதாவது;
‘இங்கே (பழைய உலகத்தில்) மிருகங்களைப் பழக்குவதும் மந்தையாகப் பெருக்குவதும் இதுவரை கேட்டறியாத செல்வத்திற்குரிய ஓர் ஊற்றுக் கண்ணைப் பயன்படுத்தி,புத்தம் புதிய சமுதாய உறவுகளையும் சிருஷ்டித்தன. அநாகரிக நிலையின் கடைக்கட்டம் வரையிலும் நிலையான செல்வம் என்று வீடும் துணிமணிகளும் நேர்த்தியற்ற நகைகளும் உணவு பெறவும் தயாரிக்கவும் பயன்பட்ட கருவிகளும் அதாவது, மிகவும் சாதாரண வகைப்பட்ட வீட்டுச் சாமான்களும் ஆயுதங்களும் படகுகளும் மட்டுமே இருந்தன. மக்கள் உணவுக்காக தினம் தினம் பாடுபட வேண்டியிருந்தது.
இப்பொழுதோ குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள், பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் ஆகியவற்றுடன் ஐந்து நதிகள் பாயும் பகுதியிலும் கங்கை நதிப்பிரதேசத்திலும் ஆரியர்கள் (அதைவிட நீர்வளம் மிக்க ஆக்ஸஸ், ஜகார் தஸ் ஆறுகள் ஓடுகிற புல்வெளிப் பிரதேசங்களில் உள்ள ஆரியர்கள், யூப்ரடிஸ் டைகிரிஸ் நதிப்பக்கங்களில் உள்ள செமைட்டுக்கள்) பெற்றிருந்த உடைமைகளை வெறுமனே மேற்பார்வை பார்த்து மிகச் சாதாரண கவனிப்பு அளித்து வந்தாலே போதும்;;; அவற்றின் எண்ணிக்கையை மேலும் மேலும் பெருக்க முடிந்தது. இறைச்சியும் பாலுமாக சத்துமிக்க உணவு கிடைத்து வரும். ஆனால் இந்தப் புதிய செல்வம் யாருக்குச் சொந்தமாக இருந்தது? சந்தேகமின்றி ஆரம்பத்தில் அது கணத்துக்கே சொந்தமாயிருந்தது ‘ (நூல் : குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்)
எங்கல்ஸ் அவர்களின் இக்கூற்று தமிழகத்துக்கும் பொருந்தும். மக்கள் கண சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் உடைமைகள் அனைத்தும் சமூகத்துக்கே சொந்தமாக இருந்தன. கால்நடைகளும் உணவு தானியங்களுமாகச் சேர்ந்திருந்த ஏராளமான செல்வத்தைச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்தே அனுபவித்தனர். தமக்குள் எவ்விதப் பாகுபாடும் இன்றிச் சமமாக அனுபவித்தனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.
பகுத்துண்ணும் பண்பு
தமிழகத்துக் குறிஞ்சி முல்லை நிலங்களில் மக்கள் வேட்டைத் தொழிலையும் நிரை மேய்த்தலையும் வாழ்வுக்குரிய பிரதானமான ஆதாரமாகக் கொண்டு கண சமூகமாக வாழ்ந்தனர். இந்நிலங்கள் அடிக்கடி வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் ஆகும். மக்கள் பற்றாக்குறையான வாழ்க்கையே மேற்கொண்டிருந்தனர். இந்நிலையிலும் அவர்கள் கண சமூகத்தின் பங்கீட்டு மரபுகளைக் கறாராகப் பின்பற்றினார்கள். எழுதப்படாத இச்சட்டத்தை எவரும் மீறியதில்லை.
கொடிய வறட்சிமிக்க கோடைக்காலங்களில் நீர்வற்றியநிலையில் பள்ளங்களில் சேற்றைத் தோண்ட ஊறிய சிறிதளவு நீராயினும் சரி: வேட்டையில் கொன்ற விலங்காயினும் சரி: வெட்சிப் போரில் கவர்ந்து வந்த ஆநிரையாயினும் சரி: அவையனைத்தையும் மக்கள் தமக்குள் எவ்வித வேறுபாடுமின்றிச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். அம்மக்களின் பகுத்துண்டலாகிய சீரிய பண்புக்கு கீழ் வரும் புறநானூற்றுப்பாடலடிகள் தக்க சான்றாக விளங்குகின்றன. சங்ககாலத்தில் மக்கள் கண சமூகமாக வாழ்ந்தனர் என்பதற்கும் இப்பாடல் சரியான சான்றாகும். அப்பாடல் இது:
‘களிறு நீறாடிய விடுநில மருங்கில்
வம்பப் பெரும்பெயல் வரைந்து சொரிந் திறந்தெனக்
குழிக்கொள் சின்னீர் குரா அலுண்டலிற்
சேறுகிளைத்திட்ட கலுழ்கண்ணூறல்
முறையினுண்ணும் நிறையா வாழ்க்கை
முளவு மாத்தொலைச்சிய முழுச் சொலாடவர்
உடும்பிழுதறுத்த வொடுங்காய்ப் படலைச்
சீறில் முன்றிற் கூறு செய்திடு மார்
கொள்ளிவைத்த கொழுநிணநாற்றம்
மறுகுடன்கமழும” - புறநானூறு 325.
பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட விடுநிலத்தில் பெய்த மழை நீர்பள்ளங்களில் சிறிதளவே தங்கியிருந்தது. அதனையும் காட்டில் மேய்ந்து வந்த ஆடுமாடுகள் குடித்து வற்றச் செய்து விட்டன. அதனால் மக்கள் குடிநீருக்காகச் சேற்றைத் தோண்டியதில் நீர் சிறிதளவே ஊறியது. ஊறிய நீர் மக்களின் தேவைக்குப் போதுமானதாக இல்லை. ஆனாலும் அம்மக்கள் அந்நீரைத்தமக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். அதற்காக முறைவைத்து நீரை முகந்து சென்று உண்டனர். நீருக்காக அவர்கள் அந்நிலையிலும் முண்டியடித்து மோதிக் கொள்ளவில்லை. சண்டையில்லை. சச்சரவு இல்லை. கலங்கிய சேற்றில் தோண்டியதால் ஊறிய சிறிதளவுநீரையும் ஒருவர் பின் ஒருவராக முறைகொண்டு சென்று (ஞரநரயளலளவநஅ ) வரிசையாக முகந்து வந்தனர்.
அதைப் போலவே வேட்டையாடிக் கொண்டுவந்த உடும்பின் தசையைத் தீயில் இட்டுச் சுட்டுத் தமக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். உடும்பு சிறிய விலங்கு: அதனைப் பச்சையாக அறுத்துப் பங்கிட்டால் அப்பங்கைச் சுடவோ சமைக்கவோ முடியாது. எனவே அவர்கள் அதைச் சுட்டுத்தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். ‘கூறு செய்திடுமார் கொள்ளி வைத்த கொழுநிணம்” என்பது கவிக் கூற்று. இக்கூற்று ‘பங்கிடுவதற்காவே அவர்கள் அதனைச்சுட்டார்கள்” என்பதை உணர்த்துகிறது.
புறநானூறு காட்டும் மற்றொரு காட்சி: முல்லை நிலத்துச்சிற்றூர் ஒன்றில் இல்லத்தலைவி தன் இல்லத்தில் இருந்த தினையைச் சோறு சமைத்தாள். அரிசி சிறிதளவே இருந்தது. அதைச் சமைத்து வைத்தாள். ஆனால் அதை உண்ணக் காத்திருந்தோர் மிகப் பலராக இருந்தனர். அதற்காக அவள் கலக்கமுறவில்லை. காத்திருந்த அனைவரையும் தன் இல்லத்தின் முற்றத்தில் இருந்த நெடிய பந்தலில் வரிசையாக அமரச்செய்தாள். சமைத்து வைத்திருந்த உணவை அனைவர்க்கும் முறை முறையாகத் தந்து உண்ணச் செய்தாள். ஏற்போர் பலராக இருந்தும் அவரது பன்மையை மனங்கொள்ளாது பலரும் ஏற்றமையுமாறு வழங்கி மேம்பட்டாள். அவள் செயல்கண்டு வியந்தபுலவர் முது கூத்தனார் அவளை ‘இற்பொலிமகடூஉ” என்று ஏற்றமுடன் போற்றினார்.
‘உள்ளது
தவச் சிறிதாயினும மிகப்பலரென்னாள்
நீணெடும்பந்தர் ஊண் முறையூட்டும்
இற்பொலிமகடூஉ” என்பது புலவரின் புகழுரையாகும்.
இங்கு “சிறு சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே, பெருஞ்சோற்றானும் நனிபலகலத்தன்மன்னே” என்று அவ்வையார் கணசமூகத் தலைவனான அதியமான் நெடுமான் அஞ்சி குறித்துக் கூறியது நம் கவனத்துக்குரியதாகும். கணசமூகமாக வாழ்ந்த மக்கள் அச்சமூகத்தின் பங்கீட்டு விதிகளை எந்த அளவுக்கு மதித்துப் போற்றினர் என்பதை மேற்குறித்த பாடலடிகள் உணர்த்துகின்றன. இம்மக்களின் பங்கீட்டுச் செயல் உபரி நிலையில் நிகழ்ந்தது அல்ல. பற்றாக்குறையான நிலையில் பங்கிட்டுக் கொண்ட செயலேயாகும், என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வரகும் தினையுமாகச் சமைத்த சிறிதளவு சோறும் வேட்டையாடிக் கொணர்ந்த உடும்பைச்சுட்ட கறியும் “சேறுகிளைத் திட்ட குழிக்கொள் சின்னீரும்” மட்டுமல்லாது, கரந்தையாரை வென்று கவர்ந்து வந்த ஆநிரைகளையும் கூட கணசமூக மாந்தர் தமக்குள் பங்கிட்டுக் கொண்டனர் என்ற செய்தியையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.
“காலைப்
புல்லார் இனநிரை செல்புற நோக்கிக்
கையிற் சுட்டிப் யை வெண்ணிச்
சிலையின் மாற்றியோனே அவைதாம்
மிகப் பலவாயினு மென்னாம் எனைத்தும்
வெண்கோள் தோன்றாக்குழிசியொடு
நாளுறை மத்தொலி கேளாதோனே”
என்னும் புறப்பாடலடிகள் வெட்சிப்போரில் கவர்ந்து வந்த ஆநிரைகளைக் கண சமூகமாந்தர் பங்கிட்டுக் கொண்ட செய்தியை நமக்குக் கூறுகின்றன.
‘வெட்சித்தலைவன் கரந்தையாரை வென்று கவர்ந்து வந்த நிரைதாம் மிகப் பலவேயாயினும் அவனுக்கு அவைதாம் என்ன பயன் படும் எத்தன்மைத்தும்? பால் முதலியன பெய்யப்படாமையின் சிறிதும் வெள்ளிய முகம் தோன்றாத பானையினை நாட்கலையில் கண்டான். ஆனால் உறை தெறிப்பக் கடையும் மத்தின் ஒலி கேளாமுன்னே தான் கவர்ந்து வந்த நிரையனைத்தும் பிறர்க்கு நேராகக் கொடுத்தல் வல்லனாயினான். “என்று தலைவன் கவர்ந்து வந்த ஆநிரைகளைக் குழுவில் உள்ளார் அனைவர்க்கும் பங்கிட்டளித்த விரைவு இங்கு புலவரால் வியப்புடன் குறிக்கப்படுகிறது.
இங்கு அத்தலைவன் தான் கவர்ந்து வந்த ஆநிரைகளைப் பங்கிடுவதில் தயக்கம் எதுவும் காட்டவில்லை. தனக்கெனச் சிறந்தது எதனையும் அவன் ஒதுக்கி வைத்துக் கொள்ளவில்லை. அவனது இச்செயல் புலவருக்குப் பெருவியப்பைத் தந்தது. அவ்வியப்பின் வெளிப்பாடுதான், ‘அவைதாம் மிகப் பலவாயினும் என்னாம் எனைத்தும்” என்ற வினாவாக வெளிவந்தது. தலைவனது தன்னல மற்ற இச்செயலுக்கு அவன் வாழ்ந்த சமூக அமைப்பே காரணமாகும். அவன் பொதுவுடைமை வகைப்பட்ட கண சமூகத்தில் வாழ்ந்தான். சமூகத்தில் இன்னும் தனிச் சொத்துடைமை பற்றிய சிந்தனை ஏற்படாத நிலையினையே இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
கிடைத்த பொருள் எதுவாயினும் அவை அனைத்தையும் மக்கள் தமக்குள் சம அளவில் பங்கிட்டுக் கொள்ளும் பழக்கம் கணசமூகமாக வாழ்ந்த பண்டை மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்து. வேட்டையில் கிடைத்தது எது வாயினும் அதனைத்தன் குழுவில் உள்ளார் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது கணசமூகத்தின் இயல்பு ஆகும். “உலகம் முழுவதிலும் கணசமூகத்தில் தனியாளுக்கு வேட்டைப்பொருள், மீன், உணவு முதலியவற்றுள் தனியுரிமை இருக்க வில்லை, அவன் வாழ்ந்த சமத்துவ சமூகம் தான்பெறும் எதையும் குழுவினருடன் பங்கிட்டுக் கொள்ளும் படி இயல்பான உள்ளுணர்வாகவே அவனை உந்தியது.” என்று கணசமுகமாக வாழ்ந்த பழங்குடியினைரைப்பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்று தமிழகத்துக்கும் பொருந்தும் என்பதனை மேற்குறித்த புறநானூற்றுப் பாடலடிகள் உணர்த்துகின்றன.
இப்பாடல்கள், இம்மக்கள் தாம் வேட்டையாடிக் கொண்டுவந்த ஊனைவிலைக்கு விற்க வில்லை. குழுவில் உள்ள வலியவன் தனக்கு என்று சிறந்தையோ கூடுதலாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. இருந்ததை அனைவரும் தமக்குள் சம அளவில் பங்கிட்டுக் கொண்டனர்.” என்ற செய்தியை நமக்குக் கூறுகின்றன. இங்கே மக்கள் தம் உழைப்பின் பயனைத் தாமே துய்க்கின்ற காட்சியையும் காண்கிறோம். ‘புராதன பொதுவுடைமைத் சமூகத்தில் பொதுச் சொத்துடைமை கூட்டு உழைப்பு சமத்துவ அடிப்படையிலான விநியோகம் முதலியவை ஆதிக்கம் செலுத்திய வரையில் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுபடவில்லை.” என்ற மார்க்சீய அறிஞர்களின் கூற்றுக்கு இப்பாடல்கள் தக்க சான்றாக அமைந்துள்ளன.
சங்க காலத்தமிழகத்தில் அடிமைகள் - வெ.பெருமாள் சாமி
‘உலகமெங்கும் தனியுடைமையோ ஒடுக்குபவர்களோ ஒடுக்கப்படுபவர்களோ இல்லாத ஒரு சமூக அமைப்பில் இருந்துதான் மனித வரலாறு ஆரம்பமானது” என்பது, மார்க்சீய அறிஞர்கள் ஆராய்ந்து கூறிய உண்மை ஆகும். அக்கூற்றுக்கு ஏற்பவே தமிழகத்திலும் தாய் தலைமை ஏற்றிருந்த கணசமூகத்தில் இருந்துதான் அடிமைச்சமூகமும் நிலப்பிரபுத்துவ சமூகமும் தோன்றின.
தமிழகத்தில் பிறநிலங்களைவிட மருதநிலத்தில் சமூக மாற்றம் முன்னதாகவே நிகழ்ந்தது. இங்கு, ‘எல்லாச் சமூக உறவுகளின் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடிய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி பூகோளச் சூழ்நிலைகளின் தன்மையால் தீர்மானிக்கப்படுகின்றது” என்ற மார்க்சீய அறிஞர்களின் கூற்று நம் கவனத்துக்கு உரியதாகிறது.
மருதநிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டிருந்தனர். அம்மக்கள் ஊரன், மகிழ்நன், கிழவன், மனைவி, கிழத்தி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர், தொழுவர் எனப்பட்டனர். இவர்களில் ஊரன், மகிழ்நன், கிழவன், மனைவி, கிழத்தி என்போர் மேன்மக்கள் எனப்பட்டனர். இவர்கள் அடிமை எஜமானர்களும் ஆண்டைகளும் ஆவர். கிழவன் என்ற சொல்லுக்கு, நிலத்துக்கும் அடிமைகளுக்கும் உரிமை உடையவன் என்பதே பொருள் ஆகும். உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர், தொழுவர் என்போர் கீழ்மக்கள் எனப்பட்டனர். இவர்கள் அடிமைகள் ஆவர். தொழும்பர் என்ற சொல்லுக்கு அடிமைகள் என்றே தமிழ் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன.
ஆற்றங்கரையில் அமைந்திருந்த மருதநிலத்தின் நீர் வளம் மற்றும் நிலவளத்துடன் உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட முன்னேற்றமும் மக்கள் பெருக்கமும் அவர்களின் உழைப்பும் சேர்ந்ததால் உற்பத்தியும் விளைச்சலும் அதீதமாகப் பெருகின. விளைச்சலின் பெருக்கத்தை ‘ வேலி ஆயிரம் விளையும்” என்று சங்க இலக்கியங்கள் பெருமையாகப் பேசுகின்றன. இரும்பு உபயோகத்துக்கு வந்திருந்தது. புதிய முன்னேற்ற கரமான உற்பத்திக் கருவிகள் படைக்கப்பட்டன.
‘பிடியுயிர்ப்பன்ன கைகவர் இரும்பு” - புறநானூறு
‘மிதியுலை கொல்லன் முறிகொடிறு - பெரும்பாணாற்றுப்படை 207
‘அரம் பொருத பொன்” - திருக்குறள்
முதலிய தொடர்கள் இதற்குச் சான்றளிக்கின்றன.
கருவிகளின் படைப்புக்கு தேவை ஒரு முக்கிய காரணி ஆகும். வேட்டைக் கருவிகளான வில்லும் அம்பும் மருதநிலத்தில் போர்க்கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. கற்கருவிகளின் இடத்தை இரும்புக் கருவிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. உணவுக்காக விலங்குகளை வேட்டையாடித்திரிந்த மனிதன், அவற்றை மந்தையாகத் திரட்டி மேய்த்துப் பயன்கொள்ளத்தெரிந்து கொண்டான். பயிர் சாகுபடியிலும் வேளாண்மையிலும் ஈடுபட்டான். உணவு உற்பத்தி செய்தான். ஏர் கொழு, கோடரி. அரிவாள் முதலிய வேளாண் கருவிகளோடு கரும்பு யந்திரங்களும் தேர்களும் சகடங்களும் செய்யப்பட்டன. புதிய புதிய போர்க்கருவிகளும் படைக்கப்பட்டன. சகடங்களை ஈர்த்துச் செல்;லக் கால் நடைகள் பயிற்று விக்கப்பட்டன. ஓடங்களும், படகுகளும், பாய்மரக்கலங்களும் செய்யப்பட்டன். ‘கடலோடும் நாவாய்” என்று திருக்குறள் கூறுகிறது.
உற்பத்தியிலும் உற்பத்திக் கருவிகளிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தால் சமூகமாற்றம் ஓசையின்றி நிகழ்ந்து. சுய நல அடிப்படையிலான உற்பத்திப் பெருக்கத்துக்காக சக மனிதன் அடிமையாக்கப்பட்டான். கால வோட்டத்தில் கணசமூகத்தில் இருந்து அதனினும் முன்னேறிய தான அடிமைச் சமூகம் தோன்றியது. தமிழக வரலாற்றில் முதன் முதலாக வர்க்கங்களும் வர்க்க முரண்பாடுகளும் தோன்றின. அடிமைகள், அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் ஆண்டைகள் என்றும் சமூகம் இரண்டு வர்க்கங்களாகப் பிளவுபட்டது.
அடிமைச் சமூகத்தில் அவர்களின் உழைப்பால் உற்பத்தி மிகுதியாகப் பெருகினாலும் அதன் பயன் மக்களைச் சென்றடைய வில்லை. அடிமைகளின் கடின உழைப்பால் தான் அரண்மைனைகளும் வளமனைகளும் கோட்டைகளும் கொத்தளங்களும் கட்டப்பட்டன, அகழிகள் அகழப்பட்டன. ‘ காடு கொன்று நாடாக்கி குளந்தொட்டு வளம் பெருக்கும்” பணிகளையும் அடிமைகளே செய்தனர், ஆனால் ஆண்டைகள் அடிமைகளைச் சுரண்டிக் கொழுத்தனர்;, அவர்களின் சுய நலத்துக்காகவும் சுகபோகத்துக்காகவும் அடிமைகளின் உழைப்பு உறிஞ்சப்பட்டது.
அடிமைகளான உழைப்பாளிகள் ஆண்டைகள் கொடுத்த பழைய சோற்றை உண்டுதான் பசியாறினர். குடிசைகளில் தான் வாழ்ந்தனர். அக்குடிசைகளுமே ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்களில் அமைத்துக் கொள்ளும் படி நிர்பந்திக்கப்பட்டனர். ‘பறழ்பன்றிப பல கோழி உறை கிணற்றுப்புறச்சேரி” என்று பட்டினப் பாலை இது பற்றிக்கூறுகிறது. ‘குட்டிகளையுடைய பன்றிகளையும் பல சாதியாகிய கோழிகளையும் உறைவைத்த கிணறு களையும் உடைய இழிகுலத்தோர் இருக்கும் தெருவுகள்” என்று நச்சினார்க்கினியர் இதற்கு உரை கூறினார். உழைக்கும் மக்கள் அடிமையாக்கி ஒடுக்கப்பட்ட செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகவே கூறுகின்றன.
அடிமைகளை ஆண்டைகள் கடுமையாகச் சுரண்டினர். உற்பத்திப் பெருக்கத்துக்காக கடினமாக உழைக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். ஆண்டைகள் மற்றும் அரசர்களின் பாதுகாப்புக்காக கோட்டைகள், கொத்தளங்கள், அரண்கள் மற்றும் அகழிகள் அமைத்திடப் போரில் பிடிப்பட்ட கைதிகளை அடிமையாக்கினர். கரிகாற் சோழன் சிங்கள நாட்டை வென்று பிடித்து வந்த கைதிகளை அடிமையாக்கிக் கொண்டு வந்து காவிரிக்குக் கரையமைத்தான் என்பது ஒரு வரலாற்றுச் செய்தியாகும்.
அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் ஆடவரும் மகளிருமான அடிமைகள் பலர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். மகளிர் சமையல் காரிகளாகவும் சலவைக்காரிகளாகவும் நெல்குற்றுவோராகவும் பணிசெய்தனர். இதனை, ‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாணுலக்கைப்பரூஉக் குற்றரிசி”
என்று புறநானூறு ( 399 ) கூறுகிறது.
‘களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழிஇய தூவெள்ளறுவை’ - புறநானூறு : 311
(களர்நிலத்து உண்டாகிய கூவலைத் தோண்டி நாள் தோறும் வண்ணாத்தி துவைத்த வெளுத்த தூய வெள்ளிய ஆடை ) என்று அந்நூல் பேசுகிறது.
செல்வர் மனைகளில் அடிமைகள்
இவையன்றி, செல்வர்மனைகளில் அவர்தம் பிள்ளைகளைப் பேணிவளர்க்கும் பணிகளிலும் அடிமை மகளிர் அமர்த்தப்பட்ருந்தனர். ‘செல்வர்களின் பிள்ளைகள் உருட்டி விளையாடுவதற்காக அடிமைகளான தச்சர்கள் மூன்று கால்களையுடைய சிறு தேர் செய்து கொடுத்தனர். அதனைச் செல்வர்மனைச் சிறு பிள்ளைகள் உருட்டி விளையாடித்திரிந்தனர். அவர்கள் தமது தளர்நடையால் உண்டான வருத்தம் தம்மை விட்டு நீங்கும்படி, பால் சுரந்த முலையினையுடைய செவிலித்தாயாராகிய அழகிய பெண்களைத் தழுவிக் கொண்டு அம்முலையிற் பாலை நிரம்ப உண்டு தமது படுக்கையிலே துயில் கொண்டனர்.” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
தச்சச்சிறா அர் நச்சப்புனைந்த
வூரா நற்றேர் உருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட அலர் முலைச்
செவிலியம் பெண்டிர்தம் தழீஇப் பாலார்ந்
தமளித் துஞ்சும் அழகுடை வியனகர்”
என்று பெரும்பாணாற்றுப்படை ( 248 - 52 ) என்று பேசுகிறது.
செல்வர் மனைகளில் அவர்தம் பிள்ளைகளுக்கு அடிமைகளான செவிலியர் தம் முலைப்பாலை உண்பித்துப் பசி போக்கி உறங்கச் செய்தனர் என்ற செய்தியை நமக்குக் கூறிய இலக்கியங்கள், அச்செவிலியரின் பிள்ளைகளின் கதியாதாயிற்று என்று கூறவில்லை.
அடிமைகளான பெண்கள் மழலைப் பருவத்துச் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது,செல்வர்களின் மனைவியர்க்கும் பணிவிடையும் குற்றேவலும் செய்யப்பணிக்கப்பட்டனர். ஆண்டைகளின் பிள்ளைகளுக்கு, அடிமைகளான செவிலியர்; தம் முலைப்பாலை உண்பித்து உறங்கச் செய்தனர். அவர்கள் மட்டுமல்லாது, அப்பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்வதற்காகவும் அலங்கரித்து அழகு செய்வதற்காகவும் ஐந்து வகையான அடிமைப் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இப்பெண்கள் ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடிபயிற்றுவாள், கைத்தாயர் எனப்பட்டனர். ‘மானிடமகளிர்க்குத் தாயர்பலரும் கை செய்து பிறப்பிக்கும் அழகு’ என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்குச் சான்றளிக்கிறார். ஆண்டைகளின் குழந்தைகளுக்குப் பாலூட்ட நியமிக்கப்பட்ட செவிலி, இவ் ஐவருள் ஊட்டுவாள் எனப்பட்டாள்.
அரண்மனைகளில் அடிமைகள்
அரண்மனைகளில் அடிமைகளான பெண்கள் அரசியர்க்குச் சாத்தம்மியில் கஸ்தூரி அறைத்துக் கொடுத்தனர் என்ற செய்தியை நெடுநல் வாடை (49 - 50) கூறுகிறது.
‘கடியுடை வியனகர் சிறு குறுந்தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பல கூட்டுமறுக”
(காவலையுடைய அகன்ற மனைகளில் சிறிய குற்றேவல் வினைஞர் கருங்கொள்ளின் நிறத்தையொத்த நல்ல சாத்தம்மியில் பசுங்கூட்டறைத்தனர்) என்பது அந்நூல் கூறும் செய்தியாகும்.
அடிமை மகளிர் அரசியர் முதலான அரண்மனைப் பெண்களுக்குச் சந்தனம், மஞ்சள், கஸ்தூரி முதலான மணப் பொருள்களை அறைத்துக் கொடுத்ததுடன், கவரியும் ஆலவட்டமும் வீசினர். இவையல்லாது, அடிமைப்பெண்களாகிய சேடிகள் அரசியரின் பாதங்களை மென்மையாக வருடிக் கொடுத்து (கால் பிடித்து விட்டு) உறங்கப் பண்ணினர். இதனை, ‘மெல்லியல் மகளிர் நல்லடி வருட” (மெத்தென்ற தன்மையுடைய சேடியர் துயில் உண்டாகுமோ என்று அடியைத்தடவினர்) என்று நெடுநல்வாடை (151) கூறுகிறது.
அரசனாகிய தலைவன் போர் முதலிய காரணங்களால் தலைவியைப் பிரிய நேரிட்ட காலங்களில் பிரிவாற்றாமையால் வருந்துதலுற்ற தலைவியின் பிரிவுத்துயரைப் போக்கும் முயற்சிகளில் பெருமுது பெண்டிராகிய அடிமைகள் ஈடுபட்டனர். நெல்லும் முல்லை மலரும் தூவி அம்மகளிர் நற்சொல் (விரிச்சி) கேட்டலாகிய செயலில் ஈடுபட்டனர். இதனை
அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசையின வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழலரி தூஉய்க்கை தொழுது
பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப”
(அரிய காவலையுடைய பழைய ஊர்ப்பக்கத்துப் பாக்கதே படைத்தலைவர் ஏவலால் நற்சொல் கேட்டற்குரிய பெரிய முதிர்ந்த பெண்டிர் நல்ல பூக்களையுடைய இனமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி அவிழ்ந்த பூவை, நாழியிடத்தே கொண்டு போன நெல்லுடனே தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டனர்) என்று, பெருமுது பெண்டிர் படைத்தலைவர் ஏவலால் நெல்லும் மலரும் தூவி நற்சொல் கேட்ட செய்தியினை முல்லைப் பாட்டு ( 7-11) கூறுகிறது. மேலும்
‘நரை விராவுற்ற நறுமெனக் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவும் உரைபல பயிற்றி” நெடுநல்வாடை :152 - 154
(நரை கலத்தலுற்ற மெல்லிய மயிரினையுடைய சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயார்,’இவள் ஆற்றாவொழுக்கம் மிகுகையினாலே, திரண்டு பொருளோடு புணராப் பொய் மொழியும் மெய் மொழியுமாகிய உரைகள் பலவற்றையும் பலமுறை சொல்லி ஆற்றினர்) என்று தலைவியின் பிரிவுத்துயரைப் போக்கும் முயற்சியில் பெருமுது பெண்டிரும் செவிலியரும் ஈடுபட்டதனை இலக்கியங்கள் பேசுகின்றன.
இங்ஙனம் செவிலியர், சேடியர், தாதியர், பெருமுது பெண்டிர் முதலான அடிமைகள் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் குற்றறேவலும் பணிவிடையும் செய்ய நியமிக்கப்பட்டிருந்தனை இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இப்பெண்களை ‘ அடியோர் பாங்கு” என்று குறிப்பிடுகிறார். (சிலம்பு :16:85) அடியோர் என்பவர் அடிமைகளே என்பதனை “ அடியோர் பாங்கினும்; வினைவலர்பாங்கினும்” என்ற நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். அடியோர் என்பவர் உரிமையின்றித் தலைமைக்குக்கட்டுப்பட்டு வாழ்ந்தவர் ஆவர். அடியோர் என்ற சொல் அடிமைகள் என்ற பொருளில் கலித்தொகையிலும் குறிக்கப்பட்டுள்ளது.
கொண்டிர் மகளிர்
போரில் தோல்வியுற்ற பகைவர் மனைகளில் இருந்து பிடித்துவரப்பட்ட பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர். பகைவர் மனையோராய்ப்பிடித்து வரப்பட்ட மகளிர் “ என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்குச் சான்றளிக்கிறார். அப்பெண்கள் சமையல் காரிகளாகவும், சலவைக் காரிகளாகவும் நெல் குற்று வோராகவும், பணியமர்த்தப்படடனர் என்பதை முன்னர்க் கண்டோம். இம்மகளிருள் இளமையும் அழகும் உடையார் அரசர் மற்றும் செல்வர்களின் ஆசைநாயகியர் ஆக்கப்பட்டனர். இதனை,
‘மழையெனமருளும் மகிழ்செய் மாடத்து
இழையணிவரப்பினின்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப்பல்கால்
வாக்குபுதரத்தர”
(இழையணிந்த அழகினையுடைய பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யும் பெண்கள் உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை, மழையென்னும்படி மாடத்திடத்தே பலகாலும் ஓட்டமற்ற பொன்னற் செய்த வட்டில்கள் நிறையத்தந்து உண்பித்தனர்) என்று பொருநராற்றுப்படை அறிவிக்கிறது.
பகைவர் மனையோராய்ப் பிடித்து வரப்பட்ட இப்பெண்கள் கொண்டி மகளிர் எனப்பட்டனர். இவ்வடிமைப் பெண்கள் நீருண்ணும் துறையிலே சென்று மூழ்கிக்கோயில்களைத் தூய்மை செய்யவும் அந்திக் காலத்தே கோயில்களில் விளக்கேற்றவும், தறிகளுக்குப் பூச்சூட்டவும் பணியமர்த்தப்பட்டனர். ‘பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்பமகளிரை வைத்தார், அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதி” என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் காரணமும் விளக்கமும் கூறினார்.
இக்கொண்டிமகளிர் பரத்தையர் ஆக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. ‘ கொண்டி மகளிர் “ என்ற தொடர் பரத்தையர் என்ற பொருளில் ‘பயன்பல வாங்கி வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர் என்று மணிமேகலையிலும் மதுரைக்காஞ்சியிலும் கூறப்படும் செய்தி மேற் குறித்த கூற்றுக்கு அரண் செய்கிறது எனலாம்.
பெண்களேயல்லாது, ஆண்களும் அரண்மனைகளில் அடிமைகளாகக் குற்றேவல் செய்தனர் என்பதையும் ஆடவரான அவ்வடிமைகள் அரசியர் வாழும் அந்தப்புரம் முதலிய பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியையும் நெடுநல்;வாடை (106-107) கூறுகிறது.
‘பீடுகெழுசிறப்பின் பெருந்தகையல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு”
(பெருமை பொருந்தின தலைமையினையுடைய பாண்டியனல்லாது, குறுந்தொழில் செய்யும்; அடிமைகளான ஆண்களும் அணுகவாராத அரிய காவலையுடைய கட்டுக்கள்) என்பது, நூலாசிரியர் கூற்று.
‘கடியுடைவியனகர்” எனப்பட்ட கட்டுக்காவல் மிக்க அரண் மனைகளில் அடிமைகளாகப்பணிபுரிந்த ஆடவர்கள், ஆடவர் என்ற ஒரே காரணத்திற்காக அரசியர் வாழும் அந்தப்புரப் பகுதிக்குள் புகத்தடைவிதித்த அரசர்கள்தான், போர்க்களங்களில் தாம் அமைத்துத்தங்கிய பாசறைகளிலும் பாடிவீடுகளிலும் பணிபுரிந்திடப் பெண்களையும் உடன் அழைத்துச் சென்றனர், அப்பெண்களும் பாசறைகளில் ‘பாடை வேறுபட்ட பலவாகிய பெரிய படைக்கு நடுவே” (நச்சினார்க்கினியர் கூற்று) பணிபுரிய வற்புறுத்தப்பட்டனர் என்ற முரண் நம் சிந்தனைக்கு உரியதாகிறது.
அரண்மனைகளில் குறுந்தொழில் செய்வோராக நியமிக்கப்பட்ட அடிமைகளான ஆடவர்கள் அரசர்களுக்கு ஆலவட்டம், குடை, கொடி, பதாகை முதலியவற்றையும் செய்து கொடுத்தனர்.
‘கைவல்கம்மியன் கவின்பெறப்புனைந்த
செங்கேழ்வட்டம்” (கையாற் புனைதல் வல்ல உருக்குத்துகிறவனாலே அழகுறப்பண்ணின சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம்) என்று நெடுநல் வாடை (57-58) அது குறித்த செய்தியைக் கூறுகிறது.
அரசர்களின் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகளான பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் சமையல் காரர்களாகப் பணிபுரிந்தனர்;.
‘கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை”
(வளைந்த அரிவாளைக் கொண்ட வடுவழுந்தின வலியுடைத்தாகிய கையினையுடைய மடையன் (சமையல்காரன்) ஆக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசை) என்று பெரும்பாணாற்றுப்படை(471-472) இது குறித்துக் கூறுகிறது.
இவரையல்லாமல் சூதர் மாகதர் வைதாளிகர் நாழிகைக் கணக்கர் முதலானோரும் அரண்மனைகளிலும் அடிமைகளாகப் பணிபுரிந்தனர். இவர்கள் அரசர்களை முகஸ்துதியாகப் புகழ்ந்து பாடும் வேலைகளைச் செய்தனர். அவர்களும் நின்;றேத்துவார் இருந்தேத்துவார் என ஏற்றத்தாழ்வாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் இலக்கியங்கள் காட்டுகின்றன.
சூதர் என்போர் நின்று கொண்டு அரசர்களை வாழ்த்தினர். அரசர்களுக்கு எதிரில் உட்கார்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படாத நிலையினையே ‘நின்றேத்துவார்” என்ற சொல் உணர்த்துகிறது. மாகதர் என்போர் இருந்தேத்திப்புகழைச் சொல்வோராவர். நாழிகைக் கணக்கர், அரசர்களுக்கு நேரத்தைக் கணக்கிட்டுக் கூறினர். வைதாளிகர் என்போர் தத்தம் துறைக்குரியவற்றைச் சொல்வோராவர். மேலும் அரசர்களுக்குப் பள்ளியெழுச்சியின் போது காலைப் பொழுதில் பள்ளியெழுச்சி முரசு முழக்குவோரும் இருந்தனர்.
‘சூதர்வாழ்த்த மாகதர் நுவல
வேதாளிகரொடு நாழிகையிசைப்ப
இமிழ் முரசிரங்க ‘ என்பது மதுரைக் காஞ்சி (670 -672) இது குறித்துக் கூறும் செய்தியாகும்.
போர்க்களத்தில் அடிமைகள்
அரண்மனைகளில் குற்றேவல் செய்வதற்காகப் பணியமர்த்தப்பட்ட அடிமைகளான பெண்களையும் பாணர் துடியர் முதலான அடிமைகளையும் அரசர்கள் போர்க் களங்களுக்கு உடனழைத்துச் சென்றனர். அரண்மனைகளில் மட்டுமல்லாது, போர்க்களங்களிலும் அரசர் படைத்தலைவர் முதலாயினர்க்குப் பணிவிடை செய்யவும் அவர்களின் காமப்பசிக்கு இரையாகவும் அடிமை மகளிர் உடன் கொண்டு செல்லப்பட்டனர், குற்றவேலும் பணிவிடையும் செய்யப் பணிக்கப்பட்டனர்.
‘குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ்சிறுபுறத்து
இரவு பகல் செய்யும் திண்பிடியொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்டமங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்கம் நந்துதொறு மாட்ட”
(சிறிய வளையலணிந்த முன் கையையும் கூந்தலசைந்து கிடக்கின்ற அழகிய சிறிய முதுகையும் உடையோரும் திண்ணிய கைப்பிடியையுடைய வாளைக் கச்சிலே பூண்ட வரும் நெய்வழிகின்ற திரிக்குழாயையுடையவரும் ஆன அடிமைப்பெண்கள், நெடியதிரியை எங்கும் கொளுத்தின ஒழுங்காய் அமைந்த விளக்குகள் அணையுந் தோறும் தம்கையிற்பந்தத்தால் கொளுத்தினர்) என்று முல்லைப்பாட்டு (45 - 49) கூறுகிறது.
போருக்குச் செல்லும் வீரர்கள் அவ்வப் போர்த்துறைக்குரிய பூவைச் சூடிச் செல்வது மரபு, அரசர்கள் அதற்கேற்பவீரர்களுக்குப் பூ வழங்குவர். போர்ப் பூ வழங்கும் செய்தி வீரர்களுக்குப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது. அப்பணியைத் துடியன் இழிசினன் முதலான அடிமைகளே செய்தனர். அடிமையாகிய இழிசினன் யானை மீதமர்ந்து பறை முழக்கிப் போர்ப் பூவைப் பெற்றிட வருமாறு வீரரை அழைத்தான். இழிசினன். அங்ஙனம் அழைத்ததனை.
‘கேட்டியோ வாழிபாண பாசறைப்
பூக்கோளின் றெறன்றையும
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே” புறநானூ : 289
(பாணனே பாசறையிடத்தே போர்க்குரிய மறவர்க்குப் போர்ப்பூவைத் தரும் பொழுது இப்பொழுது என்று அறிவிக்கும் புலையன் முழக்குகின்ற பறையின் ஓசையைக்கேட்பாயாக); என்று, புலையன் போர்ப் பூவைப் பெற்றுச் செல்லப் பறைமுழக்கி வீரரை அழைத்த காட்சியைப் புலவர் கழாத் தலையார் காட்டுகிறார்.
‘நிறப்படைக் கொல்காயானை மேலோன்
குறும்பர்க் கெறியும் ஏவற்றண்ணுமை”
(குத்துக் கோலுக்கு அடங்காத யானைமேலிருப் போனாகியவள்ளுவன், அரண்புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு முழக்கும், பூவைக் கொள்ளுமாறு ஏவுதலையுடைய தண்ணுமை (பறை) என்று, வள்ளுவன் யானை மேலமர்ந்து வீரரைப் போர்ப் பூவைப்பெறுவதற்குப் பறையறைந்து அழைத்த காட்சியைப் புறநானூறு :293 காட்டுகிறது.
துடியன், பறையன், பாணன், புலையன் இழிசினன் முதலான அடிமைகள் பாசறைகளிலும் பாடி வீடுகளிலும் அரசர்க்குப் பணி விடை செய்வதற்காகப் போர்க்களத்துக்கு உடனழைத்துச் செல்லப்பட்டனர். துடியர் பறையர் என்போர் போர்க்களத்தில் துடியையும் பறையையும் முழக்கு வோராகப் பணிபுரிந்தனர். இதனை, ‘துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின” (துடிப்பறை கொட்டுபவனே பறையை முழக்கும் குறுந்தடியைக் கொண்டு நிற்கும் புலையனே) என்றும் ‘உவலைக்கண்ணித்துடியன்” என்றும் புறநானூறு கூறுகிறது.
போரில் தலைவன் வீழ்ந்து பட்டால் அவனது போர்க் கருவிகளான வேல் கேடகம் முதலானவற்றை, உடன் அழைத்துச் செல்லப்பட்ட துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர்.
‘பாசறையீரே பாசறை யீரே
துடியன் கையது வேலேயடிபுணர்
வாங்கிரு மருப்பிற்றீந் தொடைச் சீறியாழ்
பாணன்கையது தோலே” புறநானு : 285.
(மாற்றார் எறிந்த வேல்மார்பிற்பட்டு தலைவன் மண்ணிற் சாய்ந்தானாக அவனது வேல் துடிகொட்டுவோன் கையதாயிற்று தலைவனது கேடகம் பாணன் கையதாயிற்று) என்று தலைவன் போரில் வீழ்ந்து பட்டானாக அவனது வேலும் தோலுமாகியவற்றைத் துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர் என்ற செய்தியை அரிசில் கிழார் கூறுகிறார்.
சுpறாஅர் துடியர் பாடுவன் மகா அர்
தூவெள்ளறுவை மாயோற் குறுகி
இரும்புட் பூச லோம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரிகடிகுவென்” - புறநானூறு: 291
(அடிமைகளான துடியர்களே பாணர்களே தூய வெள்ளிய ஆடையணிந்த கரியனாகிய தலைவனை அணுகி, கரிய பறவைகள் செய்யும் ஆரவாரத்தை நீக்கு வீராக, யானும் விளரிப் பண்ணைச் சுழற்சியுறப்பாடி, தின்ன வரும் குறுநரிகளை யோட்டுவேன்.) என்று, போரில் வீழ்ந்து பட்ட வீரனது மனைவி, போர்க்களத்துக்குத் தலைவனுடன் சென்றிருந்த துடியனையும் பாணனையும் பார்த்துக் கூறியதாக நெடுங்களத்துப் பரணர்; கூறுகிறார். இவ்வாறு போர்க்களத்துக்கு அடிமைகளான பெண்களும் துடியரும் பாணரும் தலைவர்களால் உடனழைத்துச் செல்லப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது.
பாணரும் பாடினியரும் துடியரும் பறையரும் ஆண்டைகளின் அடிமைகளாக அவர்களின் ஆதரவில் வாழ்ந்தனர். போரில் ஆண்டையாகிய தலைவன் வீழ்ந்து பட்ட போது அவனது பராமரிப்பில் வாழ்ந்து வந்த துடியர் பாணர் முதலியோரது நிலை இரங்கத்தக்க தாயிற்று. இதனை,
‘துடிய பாண பாடுவல் விறலி
என்னாகுவிர்கொல் அளியர் நுமக்கும்
இவணுறை வாழ்க்கையோ அரிதே ‘ புறநானூறு : 280
(துடி கொட்டுபவனே பாணனே பாடல் வல்ல விறலியே நீங்கள் என்ன ஆவீர்களோ, இரங்கத்தக்கீர், இது காறும் இருந்தாற் போல இனி இவ்விடத்தே இருந்து வாழலாம் என்பது அரிதே) என்று போரில் இறந்து பட்ட தலைவனது மனைவி, துடியர் பாணர் முதலானோரது நிலைக்கு இரங்கிக் கூறியதாக மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.
பாணர் அடிமைகளாக ஆண்டைகளின் தயவில் வாழ்ந்தனர்;. அவர்களைப் பரத்தையரின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். ஆண்டைகளுக்காகப் பரத்தையர் பால் தூது சென்றனர். இதனைச் சங்க இலக்கியங்களில் மருதத்திணை சார்ந்த பாடல்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. ‘பாணர் அடிமைகளாகப் பரத்தையர் வீடுகளுக்கும் உடன் சென்றனர், பாடி வீடுகளுக்கும் உடன் சென்றனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
ஈமத்தொழிலில் அடிமைகள்
புலையன் இழிசினன் முதலான அடிமைகளை ஆண்டைகள் பிணஞ்சுடுதல் போன்ற இழிபணிகளைச் செய்யவும் ஏவினர். ஆண்டைகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவர்களும் இடுதலும் சுடுதலுமாகிய ஈமத்தொழில்களைச் செய்தனர்.
கள்ளியேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுளாங்கண்
உப்பில்லா அவிப்புழுக்கல்
கைக் கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோனீயப் பெற்று
நிலங்கலனாக விலங்குபலிமிசையும் -புறநானூறு :363
(கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முது காட்டில் வெள்ளிடையே ஓங்கிய அகன்ற இடத்தின் கண் உப்பின்றி வேக வைத்த சோற்றைக் கையிற் கொண்டு பின்புறம் பாராது இழிசினனாகிய புலையன் கொடுக்கப் பெற்று நிலத்தையே உண் கலனாகக் கொண்டு வைத்து வேண்டாத பலியுணவை ஏற்கும் ) என்றும்
‘கள்ளிபோகிய களரி மருங்கில்
வெள்ளினிறுத்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்திட சில்லவிழ்வல்சி
புலையனேவப் புன் மேலமர்ந்துண்
டழல்வாய்ப் புக்கபின்’ - புறநானூறு :360
(கள்ளிகள் ஒங்கியுள்ள பிணஞ்சுடு களத்தின்கண் பாடையை நிறுத்திய பின்பு பரப்பிய தருப்பைப் புல்லின் மேல் கள்ளுடன் படைக்கப்பட்ட சில சோறாகிய உணவைப் புலயைன் உண்ணுமாறு படைக்க, தருப்பைப் புல்லின் மேல் இருந்துண்டு சுடலைத்தீயில் எரிந்தனர்) என்றும் இலக்கியங்கள் பேசுகின்றன.
‘இழிசினனாகிய புலையன் பிணத்துக்கு உப்பில்லாத சோறும் கள்ளும் பின்புறம் திரும்பிப் பாராமல் படைத்தலாகிய சடங்கைச் செய்தலோடு பிணத்தை இடுதலும் சுடுதலும் ஆகிய ஈமத்தொழிலையும் செய்தான் என்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.
இழிந்தவையும் கடினமானவையுமான தொழில்களைச் செய்யுமாறு அடிமைகாளகிய சகமனிதர்களை ஆண்டைகள் வற்புறுத்தி ஏவினர். வயல்களில் உழுதல், நீர்பாய்ச்சுதல், தொளிகலக்குதல், நாற்று நடுதல், களைபறித்தல், காவல் காத்தல், நெல்லரிதல், பிணையலடித்தல், பொலி தூற்றுதல், நெல்லை ஆண்டைகளின் மனைகளில் உள்ள நெற் கூடுகளில்சேர்த்தல் போன்ற கடினமான பணிகளைக் கடையர் கடைசியர் உழவர் உழத்தியர் களமர் முதலானவர்களே செய்தனர். இவர்கள் கீழ் மக்கள் எனப்பட்டனர். தமிழ் இலக்கணநூல்களும் இலக்கியநூல்களும் அங்ஙனமே குறித்துக் கூறுகின்றன.
சங்க இலக்கியங்களில் இத்தகைய தொழில் செய்தாரைக் குறிக்கும் பொழுது ‘சிறு’ அல்லது ‘சிறார்’ என்னும் சொல்லுடன் சேர்த்தே குறிப்பிட்டனர். தச்சச் சிறார். வேட்கோச் சிறார், சிறுகுறுந் தொழுவர் என்று குறிக்கப்பட்டனர். அவர்களை அடிமைகள் அல்லது கீழ் மக்கள் என்று குறிப்பதற்காகவே இச் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன. ‘சிறாஅர் துடியர் பாடுவன் மகாஅர்’ என்று துடியரும் பாணரும் சிறார் என்று அழைக்கப்பட்டதைப் புறநானூறு ( 291) காட்டுகிறது. இங்ஙனம் தச்சர், வேட்கோவர், குறுந்தொழுவர், துடியர் பாணர் முதலியவர்களை அடிமைகள் என்று குறிப்பதற்காவே அச்சொற்களுடன் சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன.
வயதில் மூத்தவர்களான அடிமைகளையும் கீழ்ச்சாதியாரையும் இளையோரான ஆண்டைகளும் ஆதிக்க சாதியாரும் மரியாதை இல்லாமல் அடே என்று அழைப்பதும் வாடா போடா என்று ஏவுவதும் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இவ்வழக்கம் அடிமைச் சமூகம் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்ட வழக்கமாகும். இவ்வழக்கம் சங்க காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதையே, தச்சர் வேட்கோவர் முதலான சொற்களோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ள சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் உணர்த்துகின்றன.
உழவர், களமர், புலையர் முதலான அடிமைகள் ஊருக்குள் வாழ அனுமதிக்கப்;படவில்லை. ஊருக்கு வெளியே ஓதுக்குப் புறமான சேரிகளில் வசிக்கவே அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். சுரண்டும் வர்க்கத்தவர் ஆன ஆண்டைகள் வாழ்ந்த ஊர்களையும் அரண்மனைகளையும் புகழ்ந்து பாடிய புலவர்கள் உழைப்பாளிகளும் அடிமைகளும் ஆன கீழ் மக்கள் வாழ்ந்த சேரிகளைப்பாடாமல் ஒதுக்கினர். இது பற்றி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்திக்கப்பட்டனர். பழைய சோறே அடிமைகளுக்கு உணவாக ஆண்டைகளால் வழங்கப்பட்டது. ஆண்டைகள் உடுத்துக்களைந்த பழைய ஆடைகளே அடிமைகளுக்குக் கொடுக்கப்பட்டன. பிற்காலத்தில் ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் வளமனைகளில் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்தப் படுத்தப்பட்டனர். இவ்வடிமைகள் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அவ்வழக்கம் சங்க காலத்திலும் நிலவியது. அண்மைகாலத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரையிலும் நீடித்திருந்தது.
அடிமைக் கொடை
அடிமைகளைச் சங்க காலத்தில் விலைக்குவிற்கும் வழக்கம் இல்லை. அதற்கான சான்றுகள் இலக்கியங்களில் காணப்படவில்லை. அக்காலத்தில் அடிமை வாணிகம் தோன்றாமைக்கு வணிகமுறை வழக்கத்துக்கு வாராததும் ஒரு காரணமாகும். அந்தக் காலகட்டத்தில் வாணிபம் என்பது பண்டமாற்று முறையாகவே இருந்தது. இது குறித்து ஏராளமான செய்திகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆண்டைகள் அடிமைகளைப் பரிசிலர்க்கு தானமாக வழங்கும் வழக்கம் இருந்தது.
சிக்கல்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழி யாதன் என்பவன் குண்டுகட்பாலியாதனார் என்ற புலவருக்கு யானை குதிரை ஆநிரை நெற்போர் முதலியவற்றோடு அடிமைகளையும் தானமாக வழங்கினான் என்ற செய்தியைப்புறநானூறு ( 387 ) கூறுகிறது.
குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்று நிறை நிரையென்கோ
மனைக்களம ரொடு களமென்கோ
ஆங்கவை கனவென மருள வல்லே நனவின்
நல்கியோனே நசைசால்; தோன்றல்
( மலை போன்ற யானைகளும் கொய்யப்பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும் மன்றிடம் நிறைந்த ஆநிரைகளும் மனைக்கண் இருந்து பணிபுரியும் அடிமைகளான களமரும் ஆகிய அவற்றைக் கனவு என்று மயங்குமாறு நனவின்கண் விரைவாக நல்கினான் ) என்பது பரிசில் பெற்ற புலவர் பாலியாதனரின் கூற்று ஆகும்.
ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்னும் வள்ளல் தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்கு யானை குதிரை அணிகலன் தேர் முதலியவற்றையும் எருதுகளையும் தேரைச் செலுத்தும் பாகனையும் பரிசிலாகக் கொடுத்தான் என்ற செய்தியைச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. ( 257 - 61 )
கடுந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்து பெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெலவொழிக்கும் மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ
யன்றே விடுக்கு மவன் பரிசில்’
( பாண்டில் எருது, வலவன் வண்டி யோட்டி) ( வலிய தொழிலைச்செய்யும் தச்சருடைய கையாற் செய்யும் உருக்கள் எல்லாம் முற்றுப் பெற்ற தேரினையும் தன் கடுமையால் குதிரையின் செலவைப் பின்னே நிறுத்தும் அழகும் வலிமையும் உடைய கால் களையும் ஒளிபொருந்திய முகத்தையும் உடைய நாரை எருத்தையும் அதனைச் செலுத்தும் பாகனையும் யானைகுதிரை அணிகலன்களையும் தந்து அவன் அன்றே விடுக்கும் ) என்பது இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நமக்குக் கூறும் செய்தியாகும். இவ்வாறு அடிமைகளை ஆண்டைகள் புலவர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
ஆண்டைகள் ஊர்ந்து சென்ற சிவிகைகளை அடிமைகள் சுமந்து சென்ற காட்சியை வள்ளுவர் நமக்குக் காட்டுகிறார்.
‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை” - குறள் என்பது வள்ளுவர் காட்டும் காட்சியாகும், இங்கு சிவிகை பொறுத்தார் அடிமைகள் ஊர்ந்தார் ஆண்டைகள். ஆடவரும் மகளிருமான அடிமைகளை ஆண்டைகள் அனைத்து விதமான பணிகளையும் செய்யுமாறு ஏவிப் பணி கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. வலியோராகிய சிலர் எளியோராகிய பலரை - சகமனிதர்களை - மனிதக்கால் நடைகளாகக் கருதிப் பணியமர்த்திய கொடுமை தனியுடைமைச் சிந்தனையின் வெளிப்பாடு என்பது சங்க இலக்கியங்கள் வாயிலாக மனித குலவரலாறு நமக்குக் கூறும் செய்தியாகும்.
தமிழகத்தில் பிறநிலங்களைவிட மருதநிலத்தில் சமூக மாற்றம் முன்னதாகவே நிகழ்ந்தது. இங்கு, ‘எல்லாச் சமூக உறவுகளின் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடிய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி பூகோளச் சூழ்நிலைகளின் தன்மையால் தீர்மானிக்கப்படுகின்றது” என்ற மார்க்சீய அறிஞர்களின் கூற்று நம் கவனத்துக்கு உரியதாகிறது.
மருதநிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டிருந்தனர். அம்மக்கள் ஊரன், மகிழ்நன், கிழவன், மனைவி, கிழத்தி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர், தொழுவர் எனப்பட்டனர். இவர்களில் ஊரன், மகிழ்நன், கிழவன், மனைவி, கிழத்தி என்போர் மேன்மக்கள் எனப்பட்டனர். இவர்கள் அடிமை எஜமானர்களும் ஆண்டைகளும் ஆவர். கிழவன் என்ற சொல்லுக்கு, நிலத்துக்கும் அடிமைகளுக்கும் உரிமை உடையவன் என்பதே பொருள் ஆகும். உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர், தொழுவர் என்போர் கீழ்மக்கள் எனப்பட்டனர். இவர்கள் அடிமைகள் ஆவர். தொழும்பர் என்ற சொல்லுக்கு அடிமைகள் என்றே தமிழ் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன.
ஆற்றங்கரையில் அமைந்திருந்த மருதநிலத்தின் நீர் வளம் மற்றும் நிலவளத்துடன் உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட முன்னேற்றமும் மக்கள் பெருக்கமும் அவர்களின் உழைப்பும் சேர்ந்ததால் உற்பத்தியும் விளைச்சலும் அதீதமாகப் பெருகின. விளைச்சலின் பெருக்கத்தை ‘ வேலி ஆயிரம் விளையும்” என்று சங்க இலக்கியங்கள் பெருமையாகப் பேசுகின்றன. இரும்பு உபயோகத்துக்கு வந்திருந்தது. புதிய முன்னேற்ற கரமான உற்பத்திக் கருவிகள் படைக்கப்பட்டன.
‘பிடியுயிர்ப்பன்ன கைகவர் இரும்பு” - புறநானூறு
‘மிதியுலை கொல்லன் முறிகொடிறு - பெரும்பாணாற்றுப்படை 207
‘அரம் பொருத பொன்” - திருக்குறள்
முதலிய தொடர்கள் இதற்குச் சான்றளிக்கின்றன.
கருவிகளின் படைப்புக்கு தேவை ஒரு முக்கிய காரணி ஆகும். வேட்டைக் கருவிகளான வில்லும் அம்பும் மருதநிலத்தில் போர்க்கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. கற்கருவிகளின் இடத்தை இரும்புக் கருவிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. உணவுக்காக விலங்குகளை வேட்டையாடித்திரிந்த மனிதன், அவற்றை மந்தையாகத் திரட்டி மேய்த்துப் பயன்கொள்ளத்தெரிந்து கொண்டான். பயிர் சாகுபடியிலும் வேளாண்மையிலும் ஈடுபட்டான். உணவு உற்பத்தி செய்தான். ஏர் கொழு, கோடரி. அரிவாள் முதலிய வேளாண் கருவிகளோடு கரும்பு யந்திரங்களும் தேர்களும் சகடங்களும் செய்யப்பட்டன. புதிய புதிய போர்க்கருவிகளும் படைக்கப்பட்டன. சகடங்களை ஈர்த்துச் செல்;லக் கால் நடைகள் பயிற்று விக்கப்பட்டன. ஓடங்களும், படகுகளும், பாய்மரக்கலங்களும் செய்யப்பட்டன். ‘கடலோடும் நாவாய்” என்று திருக்குறள் கூறுகிறது.
உற்பத்தியிலும் உற்பத்திக் கருவிகளிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தால் சமூகமாற்றம் ஓசையின்றி நிகழ்ந்து. சுய நல அடிப்படையிலான உற்பத்திப் பெருக்கத்துக்காக சக மனிதன் அடிமையாக்கப்பட்டான். கால வோட்டத்தில் கணசமூகத்தில் இருந்து அதனினும் முன்னேறிய தான அடிமைச் சமூகம் தோன்றியது. தமிழக வரலாற்றில் முதன் முதலாக வர்க்கங்களும் வர்க்க முரண்பாடுகளும் தோன்றின. அடிமைகள், அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் ஆண்டைகள் என்றும் சமூகம் இரண்டு வர்க்கங்களாகப் பிளவுபட்டது.
அடிமைச் சமூகத்தில் அவர்களின் உழைப்பால் உற்பத்தி மிகுதியாகப் பெருகினாலும் அதன் பயன் மக்களைச் சென்றடைய வில்லை. அடிமைகளின் கடின உழைப்பால் தான் அரண்மைனைகளும் வளமனைகளும் கோட்டைகளும் கொத்தளங்களும் கட்டப்பட்டன, அகழிகள் அகழப்பட்டன. ‘ காடு கொன்று நாடாக்கி குளந்தொட்டு வளம் பெருக்கும்” பணிகளையும் அடிமைகளே செய்தனர், ஆனால் ஆண்டைகள் அடிமைகளைச் சுரண்டிக் கொழுத்தனர்;, அவர்களின் சுய நலத்துக்காகவும் சுகபோகத்துக்காகவும் அடிமைகளின் உழைப்பு உறிஞ்சப்பட்டது.
அடிமைகளான உழைப்பாளிகள் ஆண்டைகள் கொடுத்த பழைய சோற்றை உண்டுதான் பசியாறினர். குடிசைகளில் தான் வாழ்ந்தனர். அக்குடிசைகளுமே ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்களில் அமைத்துக் கொள்ளும் படி நிர்பந்திக்கப்பட்டனர். ‘பறழ்பன்றிப பல கோழி உறை கிணற்றுப்புறச்சேரி” என்று பட்டினப் பாலை இது பற்றிக்கூறுகிறது. ‘குட்டிகளையுடைய பன்றிகளையும் பல சாதியாகிய கோழிகளையும் உறைவைத்த கிணறு களையும் உடைய இழிகுலத்தோர் இருக்கும் தெருவுகள்” என்று நச்சினார்க்கினியர் இதற்கு உரை கூறினார். உழைக்கும் மக்கள் அடிமையாக்கி ஒடுக்கப்பட்ட செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகவே கூறுகின்றன.
அடிமைகளை ஆண்டைகள் கடுமையாகச் சுரண்டினர். உற்பத்திப் பெருக்கத்துக்காக கடினமாக உழைக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். ஆண்டைகள் மற்றும் அரசர்களின் பாதுகாப்புக்காக கோட்டைகள், கொத்தளங்கள், அரண்கள் மற்றும் அகழிகள் அமைத்திடப் போரில் பிடிப்பட்ட கைதிகளை அடிமையாக்கினர். கரிகாற் சோழன் சிங்கள நாட்டை வென்று பிடித்து வந்த கைதிகளை அடிமையாக்கிக் கொண்டு வந்து காவிரிக்குக் கரையமைத்தான் என்பது ஒரு வரலாற்றுச் செய்தியாகும்.
அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் ஆடவரும் மகளிருமான அடிமைகள் பலர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். மகளிர் சமையல் காரிகளாகவும் சலவைக்காரிகளாகவும் நெல்குற்றுவோராகவும் பணிசெய்தனர். இதனை, ‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாணுலக்கைப்பரூஉக் குற்றரிசி”
என்று புறநானூறு ( 399 ) கூறுகிறது.
‘களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழிஇய தூவெள்ளறுவை’ - புறநானூறு : 311
(களர்நிலத்து உண்டாகிய கூவலைத் தோண்டி நாள் தோறும் வண்ணாத்தி துவைத்த வெளுத்த தூய வெள்ளிய ஆடை ) என்று அந்நூல் பேசுகிறது.
செல்வர் மனைகளில் அடிமைகள்
இவையன்றி, செல்வர்மனைகளில் அவர்தம் பிள்ளைகளைப் பேணிவளர்க்கும் பணிகளிலும் அடிமை மகளிர் அமர்த்தப்பட்ருந்தனர். ‘செல்வர்களின் பிள்ளைகள் உருட்டி விளையாடுவதற்காக அடிமைகளான தச்சர்கள் மூன்று கால்களையுடைய சிறு தேர் செய்து கொடுத்தனர். அதனைச் செல்வர்மனைச் சிறு பிள்ளைகள் உருட்டி விளையாடித்திரிந்தனர். அவர்கள் தமது தளர்நடையால் உண்டான வருத்தம் தம்மை விட்டு நீங்கும்படி, பால் சுரந்த முலையினையுடைய செவிலித்தாயாராகிய அழகிய பெண்களைத் தழுவிக் கொண்டு அம்முலையிற் பாலை நிரம்ப உண்டு தமது படுக்கையிலே துயில் கொண்டனர்.” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
தச்சச்சிறா அர் நச்சப்புனைந்த
வூரா நற்றேர் உருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட அலர் முலைச்
செவிலியம் பெண்டிர்தம் தழீஇப் பாலார்ந்
தமளித் துஞ்சும் அழகுடை வியனகர்”
என்று பெரும்பாணாற்றுப்படை ( 248 - 52 ) என்று பேசுகிறது.
செல்வர் மனைகளில் அவர்தம் பிள்ளைகளுக்கு அடிமைகளான செவிலியர் தம் முலைப்பாலை உண்பித்துப் பசி போக்கி உறங்கச் செய்தனர் என்ற செய்தியை நமக்குக் கூறிய இலக்கியங்கள், அச்செவிலியரின் பிள்ளைகளின் கதியாதாயிற்று என்று கூறவில்லை.
அடிமைகளான பெண்கள் மழலைப் பருவத்துச் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது,செல்வர்களின் மனைவியர்க்கும் பணிவிடையும் குற்றேவலும் செய்யப்பணிக்கப்பட்டனர். ஆண்டைகளின் பிள்ளைகளுக்கு, அடிமைகளான செவிலியர்; தம் முலைப்பாலை உண்பித்து உறங்கச் செய்தனர். அவர்கள் மட்டுமல்லாது, அப்பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்வதற்காகவும் அலங்கரித்து அழகு செய்வதற்காகவும் ஐந்து வகையான அடிமைப் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இப்பெண்கள் ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடிபயிற்றுவாள், கைத்தாயர் எனப்பட்டனர். ‘மானிடமகளிர்க்குத் தாயர்பலரும் கை செய்து பிறப்பிக்கும் அழகு’ என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்குச் சான்றளிக்கிறார். ஆண்டைகளின் குழந்தைகளுக்குப் பாலூட்ட நியமிக்கப்பட்ட செவிலி, இவ் ஐவருள் ஊட்டுவாள் எனப்பட்டாள்.
அரண்மனைகளில் அடிமைகள்
அரண்மனைகளில் அடிமைகளான பெண்கள் அரசியர்க்குச் சாத்தம்மியில் கஸ்தூரி அறைத்துக் கொடுத்தனர் என்ற செய்தியை நெடுநல் வாடை (49 - 50) கூறுகிறது.
‘கடியுடை வியனகர் சிறு குறுந்தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பல கூட்டுமறுக”
(காவலையுடைய அகன்ற மனைகளில் சிறிய குற்றேவல் வினைஞர் கருங்கொள்ளின் நிறத்தையொத்த நல்ல சாத்தம்மியில் பசுங்கூட்டறைத்தனர்) என்பது அந்நூல் கூறும் செய்தியாகும்.
அடிமை மகளிர் அரசியர் முதலான அரண்மனைப் பெண்களுக்குச் சந்தனம், மஞ்சள், கஸ்தூரி முதலான மணப் பொருள்களை அறைத்துக் கொடுத்ததுடன், கவரியும் ஆலவட்டமும் வீசினர். இவையல்லாது, அடிமைப்பெண்களாகிய சேடிகள் அரசியரின் பாதங்களை மென்மையாக வருடிக் கொடுத்து (கால் பிடித்து விட்டு) உறங்கப் பண்ணினர். இதனை, ‘மெல்லியல் மகளிர் நல்லடி வருட” (மெத்தென்ற தன்மையுடைய சேடியர் துயில் உண்டாகுமோ என்று அடியைத்தடவினர்) என்று நெடுநல்வாடை (151) கூறுகிறது.
அரசனாகிய தலைவன் போர் முதலிய காரணங்களால் தலைவியைப் பிரிய நேரிட்ட காலங்களில் பிரிவாற்றாமையால் வருந்துதலுற்ற தலைவியின் பிரிவுத்துயரைப் போக்கும் முயற்சிகளில் பெருமுது பெண்டிராகிய அடிமைகள் ஈடுபட்டனர். நெல்லும் முல்லை மலரும் தூவி அம்மகளிர் நற்சொல் (விரிச்சி) கேட்டலாகிய செயலில் ஈடுபட்டனர். இதனை
அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசையின வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழலரி தூஉய்க்கை தொழுது
பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப”
(அரிய காவலையுடைய பழைய ஊர்ப்பக்கத்துப் பாக்கதே படைத்தலைவர் ஏவலால் நற்சொல் கேட்டற்குரிய பெரிய முதிர்ந்த பெண்டிர் நல்ல பூக்களையுடைய இனமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி அவிழ்ந்த பூவை, நாழியிடத்தே கொண்டு போன நெல்லுடனே தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டனர்) என்று, பெருமுது பெண்டிர் படைத்தலைவர் ஏவலால் நெல்லும் மலரும் தூவி நற்சொல் கேட்ட செய்தியினை முல்லைப் பாட்டு ( 7-11) கூறுகிறது. மேலும்
‘நரை விராவுற்ற நறுமெனக் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவும் உரைபல பயிற்றி” நெடுநல்வாடை :152 - 154
(நரை கலத்தலுற்ற மெல்லிய மயிரினையுடைய சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயார்,’இவள் ஆற்றாவொழுக்கம் மிகுகையினாலே, திரண்டு பொருளோடு புணராப் பொய் மொழியும் மெய் மொழியுமாகிய உரைகள் பலவற்றையும் பலமுறை சொல்லி ஆற்றினர்) என்று தலைவியின் பிரிவுத்துயரைப் போக்கும் முயற்சியில் பெருமுது பெண்டிரும் செவிலியரும் ஈடுபட்டதனை இலக்கியங்கள் பேசுகின்றன.
இங்ஙனம் செவிலியர், சேடியர், தாதியர், பெருமுது பெண்டிர் முதலான அடிமைகள் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் குற்றறேவலும் பணிவிடையும் செய்ய நியமிக்கப்பட்டிருந்தனை இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இப்பெண்களை ‘ அடியோர் பாங்கு” என்று குறிப்பிடுகிறார். (சிலம்பு :16:85) அடியோர் என்பவர் அடிமைகளே என்பதனை “ அடியோர் பாங்கினும்; வினைவலர்பாங்கினும்” என்ற நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். அடியோர் என்பவர் உரிமையின்றித் தலைமைக்குக்கட்டுப்பட்டு வாழ்ந்தவர் ஆவர். அடியோர் என்ற சொல் அடிமைகள் என்ற பொருளில் கலித்தொகையிலும் குறிக்கப்பட்டுள்ளது.
கொண்டிர் மகளிர்
போரில் தோல்வியுற்ற பகைவர் மனைகளில் இருந்து பிடித்துவரப்பட்ட பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர். பகைவர் மனையோராய்ப்பிடித்து வரப்பட்ட மகளிர் “ என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்குச் சான்றளிக்கிறார். அப்பெண்கள் சமையல் காரிகளாகவும், சலவைக் காரிகளாகவும் நெல் குற்று வோராகவும், பணியமர்த்தப்படடனர் என்பதை முன்னர்க் கண்டோம். இம்மகளிருள் இளமையும் அழகும் உடையார் அரசர் மற்றும் செல்வர்களின் ஆசைநாயகியர் ஆக்கப்பட்டனர். இதனை,
‘மழையெனமருளும் மகிழ்செய் மாடத்து
இழையணிவரப்பினின்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப்பல்கால்
வாக்குபுதரத்தர”
(இழையணிந்த அழகினையுடைய பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யும் பெண்கள் உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை, மழையென்னும்படி மாடத்திடத்தே பலகாலும் ஓட்டமற்ற பொன்னற் செய்த வட்டில்கள் நிறையத்தந்து உண்பித்தனர்) என்று பொருநராற்றுப்படை அறிவிக்கிறது.
பகைவர் மனையோராய்ப் பிடித்து வரப்பட்ட இப்பெண்கள் கொண்டி மகளிர் எனப்பட்டனர். இவ்வடிமைப் பெண்கள் நீருண்ணும் துறையிலே சென்று மூழ்கிக்கோயில்களைத் தூய்மை செய்யவும் அந்திக் காலத்தே கோயில்களில் விளக்கேற்றவும், தறிகளுக்குப் பூச்சூட்டவும் பணியமர்த்தப்பட்டனர். ‘பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்பமகளிரை வைத்தார், அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதி” என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் காரணமும் விளக்கமும் கூறினார்.
இக்கொண்டிமகளிர் பரத்தையர் ஆக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. ‘ கொண்டி மகளிர் “ என்ற தொடர் பரத்தையர் என்ற பொருளில் ‘பயன்பல வாங்கி வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர் என்று மணிமேகலையிலும் மதுரைக்காஞ்சியிலும் கூறப்படும் செய்தி மேற் குறித்த கூற்றுக்கு அரண் செய்கிறது எனலாம்.
பெண்களேயல்லாது, ஆண்களும் அரண்மனைகளில் அடிமைகளாகக் குற்றேவல் செய்தனர் என்பதையும் ஆடவரான அவ்வடிமைகள் அரசியர் வாழும் அந்தப்புரம் முதலிய பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியையும் நெடுநல்;வாடை (106-107) கூறுகிறது.
‘பீடுகெழுசிறப்பின் பெருந்தகையல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு”
(பெருமை பொருந்தின தலைமையினையுடைய பாண்டியனல்லாது, குறுந்தொழில் செய்யும்; அடிமைகளான ஆண்களும் அணுகவாராத அரிய காவலையுடைய கட்டுக்கள்) என்பது, நூலாசிரியர் கூற்று.
‘கடியுடைவியனகர்” எனப்பட்ட கட்டுக்காவல் மிக்க அரண் மனைகளில் அடிமைகளாகப்பணிபுரிந்த ஆடவர்கள், ஆடவர் என்ற ஒரே காரணத்திற்காக அரசியர் வாழும் அந்தப்புரப் பகுதிக்குள் புகத்தடைவிதித்த அரசர்கள்தான், போர்க்களங்களில் தாம் அமைத்துத்தங்கிய பாசறைகளிலும் பாடிவீடுகளிலும் பணிபுரிந்திடப் பெண்களையும் உடன் அழைத்துச் சென்றனர், அப்பெண்களும் பாசறைகளில் ‘பாடை வேறுபட்ட பலவாகிய பெரிய படைக்கு நடுவே” (நச்சினார்க்கினியர் கூற்று) பணிபுரிய வற்புறுத்தப்பட்டனர் என்ற முரண் நம் சிந்தனைக்கு உரியதாகிறது.
அரண்மனைகளில் குறுந்தொழில் செய்வோராக நியமிக்கப்பட்ட அடிமைகளான ஆடவர்கள் அரசர்களுக்கு ஆலவட்டம், குடை, கொடி, பதாகை முதலியவற்றையும் செய்து கொடுத்தனர்.
‘கைவல்கம்மியன் கவின்பெறப்புனைந்த
செங்கேழ்வட்டம்” (கையாற் புனைதல் வல்ல உருக்குத்துகிறவனாலே அழகுறப்பண்ணின சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம்) என்று நெடுநல் வாடை (57-58) அது குறித்த செய்தியைக் கூறுகிறது.
அரசர்களின் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகளான பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் சமையல் காரர்களாகப் பணிபுரிந்தனர்;.
‘கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை”
(வளைந்த அரிவாளைக் கொண்ட வடுவழுந்தின வலியுடைத்தாகிய கையினையுடைய மடையன் (சமையல்காரன்) ஆக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசை) என்று பெரும்பாணாற்றுப்படை(471-472) இது குறித்துக் கூறுகிறது.
இவரையல்லாமல் சூதர் மாகதர் வைதாளிகர் நாழிகைக் கணக்கர் முதலானோரும் அரண்மனைகளிலும் அடிமைகளாகப் பணிபுரிந்தனர். இவர்கள் அரசர்களை முகஸ்துதியாகப் புகழ்ந்து பாடும் வேலைகளைச் செய்தனர். அவர்களும் நின்;றேத்துவார் இருந்தேத்துவார் என ஏற்றத்தாழ்வாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் இலக்கியங்கள் காட்டுகின்றன.
சூதர் என்போர் நின்று கொண்டு அரசர்களை வாழ்த்தினர். அரசர்களுக்கு எதிரில் உட்கார்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படாத நிலையினையே ‘நின்றேத்துவார்” என்ற சொல் உணர்த்துகிறது. மாகதர் என்போர் இருந்தேத்திப்புகழைச் சொல்வோராவர். நாழிகைக் கணக்கர், அரசர்களுக்கு நேரத்தைக் கணக்கிட்டுக் கூறினர். வைதாளிகர் என்போர் தத்தம் துறைக்குரியவற்றைச் சொல்வோராவர். மேலும் அரசர்களுக்குப் பள்ளியெழுச்சியின் போது காலைப் பொழுதில் பள்ளியெழுச்சி முரசு முழக்குவோரும் இருந்தனர்.
‘சூதர்வாழ்த்த மாகதர் நுவல
வேதாளிகரொடு நாழிகையிசைப்ப
இமிழ் முரசிரங்க ‘ என்பது மதுரைக் காஞ்சி (670 -672) இது குறித்துக் கூறும் செய்தியாகும்.
போர்க்களத்தில் அடிமைகள்
அரண்மனைகளில் குற்றேவல் செய்வதற்காகப் பணியமர்த்தப்பட்ட அடிமைகளான பெண்களையும் பாணர் துடியர் முதலான அடிமைகளையும் அரசர்கள் போர்க் களங்களுக்கு உடனழைத்துச் சென்றனர். அரண்மனைகளில் மட்டுமல்லாது, போர்க்களங்களிலும் அரசர் படைத்தலைவர் முதலாயினர்க்குப் பணிவிடை செய்யவும் அவர்களின் காமப்பசிக்கு இரையாகவும் அடிமை மகளிர் உடன் கொண்டு செல்லப்பட்டனர், குற்றவேலும் பணிவிடையும் செய்யப் பணிக்கப்பட்டனர்.
‘குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ்சிறுபுறத்து
இரவு பகல் செய்யும் திண்பிடியொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்டமங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்கம் நந்துதொறு மாட்ட”
(சிறிய வளையலணிந்த முன் கையையும் கூந்தலசைந்து கிடக்கின்ற அழகிய சிறிய முதுகையும் உடையோரும் திண்ணிய கைப்பிடியையுடைய வாளைக் கச்சிலே பூண்ட வரும் நெய்வழிகின்ற திரிக்குழாயையுடையவரும் ஆன அடிமைப்பெண்கள், நெடியதிரியை எங்கும் கொளுத்தின ஒழுங்காய் அமைந்த விளக்குகள் அணையுந் தோறும் தம்கையிற்பந்தத்தால் கொளுத்தினர்) என்று முல்லைப்பாட்டு (45 - 49) கூறுகிறது.
போருக்குச் செல்லும் வீரர்கள் அவ்வப் போர்த்துறைக்குரிய பூவைச் சூடிச் செல்வது மரபு, அரசர்கள் அதற்கேற்பவீரர்களுக்குப் பூ வழங்குவர். போர்ப் பூ வழங்கும் செய்தி வீரர்களுக்குப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது. அப்பணியைத் துடியன் இழிசினன் முதலான அடிமைகளே செய்தனர். அடிமையாகிய இழிசினன் யானை மீதமர்ந்து பறை முழக்கிப் போர்ப் பூவைப் பெற்றிட வருமாறு வீரரை அழைத்தான். இழிசினன். அங்ஙனம் அழைத்ததனை.
‘கேட்டியோ வாழிபாண பாசறைப்
பூக்கோளின் றெறன்றையும
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே” புறநானூ : 289
(பாணனே பாசறையிடத்தே போர்க்குரிய மறவர்க்குப் போர்ப்பூவைத் தரும் பொழுது இப்பொழுது என்று அறிவிக்கும் புலையன் முழக்குகின்ற பறையின் ஓசையைக்கேட்பாயாக); என்று, புலையன் போர்ப் பூவைப் பெற்றுச் செல்லப் பறைமுழக்கி வீரரை அழைத்த காட்சியைப் புலவர் கழாத் தலையார் காட்டுகிறார்.
‘நிறப்படைக் கொல்காயானை மேலோன்
குறும்பர்க் கெறியும் ஏவற்றண்ணுமை”
(குத்துக் கோலுக்கு அடங்காத யானைமேலிருப் போனாகியவள்ளுவன், அரண்புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு முழக்கும், பூவைக் கொள்ளுமாறு ஏவுதலையுடைய தண்ணுமை (பறை) என்று, வள்ளுவன் யானை மேலமர்ந்து வீரரைப் போர்ப் பூவைப்பெறுவதற்குப் பறையறைந்து அழைத்த காட்சியைப் புறநானூறு :293 காட்டுகிறது.
துடியன், பறையன், பாணன், புலையன் இழிசினன் முதலான அடிமைகள் பாசறைகளிலும் பாடி வீடுகளிலும் அரசர்க்குப் பணி விடை செய்வதற்காகப் போர்க்களத்துக்கு உடனழைத்துச் செல்லப்பட்டனர். துடியர் பறையர் என்போர் போர்க்களத்தில் துடியையும் பறையையும் முழக்கு வோராகப் பணிபுரிந்தனர். இதனை, ‘துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின” (துடிப்பறை கொட்டுபவனே பறையை முழக்கும் குறுந்தடியைக் கொண்டு நிற்கும் புலையனே) என்றும் ‘உவலைக்கண்ணித்துடியன்” என்றும் புறநானூறு கூறுகிறது.
போரில் தலைவன் வீழ்ந்து பட்டால் அவனது போர்க் கருவிகளான வேல் கேடகம் முதலானவற்றை, உடன் அழைத்துச் செல்லப்பட்ட துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர்.
‘பாசறையீரே பாசறை யீரே
துடியன் கையது வேலேயடிபுணர்
வாங்கிரு மருப்பிற்றீந் தொடைச் சீறியாழ்
பாணன்கையது தோலே” புறநானு : 285.
(மாற்றார் எறிந்த வேல்மார்பிற்பட்டு தலைவன் மண்ணிற் சாய்ந்தானாக அவனது வேல் துடிகொட்டுவோன் கையதாயிற்று தலைவனது கேடகம் பாணன் கையதாயிற்று) என்று தலைவன் போரில் வீழ்ந்து பட்டானாக அவனது வேலும் தோலுமாகியவற்றைத் துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர் என்ற செய்தியை அரிசில் கிழார் கூறுகிறார்.
சுpறாஅர் துடியர் பாடுவன் மகா அர்
தூவெள்ளறுவை மாயோற் குறுகி
இரும்புட் பூச லோம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரிகடிகுவென்” - புறநானூறு: 291
(அடிமைகளான துடியர்களே பாணர்களே தூய வெள்ளிய ஆடையணிந்த கரியனாகிய தலைவனை அணுகி, கரிய பறவைகள் செய்யும் ஆரவாரத்தை நீக்கு வீராக, யானும் விளரிப் பண்ணைச் சுழற்சியுறப்பாடி, தின்ன வரும் குறுநரிகளை யோட்டுவேன்.) என்று, போரில் வீழ்ந்து பட்ட வீரனது மனைவி, போர்க்களத்துக்குத் தலைவனுடன் சென்றிருந்த துடியனையும் பாணனையும் பார்த்துக் கூறியதாக நெடுங்களத்துப் பரணர்; கூறுகிறார். இவ்வாறு போர்க்களத்துக்கு அடிமைகளான பெண்களும் துடியரும் பாணரும் தலைவர்களால் உடனழைத்துச் செல்லப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது.
பாணரும் பாடினியரும் துடியரும் பறையரும் ஆண்டைகளின் அடிமைகளாக அவர்களின் ஆதரவில் வாழ்ந்தனர். போரில் ஆண்டையாகிய தலைவன் வீழ்ந்து பட்ட போது அவனது பராமரிப்பில் வாழ்ந்து வந்த துடியர் பாணர் முதலியோரது நிலை இரங்கத்தக்க தாயிற்று. இதனை,
‘துடிய பாண பாடுவல் விறலி
என்னாகுவிர்கொல் அளியர் நுமக்கும்
இவணுறை வாழ்க்கையோ அரிதே ‘ புறநானூறு : 280
(துடி கொட்டுபவனே பாணனே பாடல் வல்ல விறலியே நீங்கள் என்ன ஆவீர்களோ, இரங்கத்தக்கீர், இது காறும் இருந்தாற் போல இனி இவ்விடத்தே இருந்து வாழலாம் என்பது அரிதே) என்று போரில் இறந்து பட்ட தலைவனது மனைவி, துடியர் பாணர் முதலானோரது நிலைக்கு இரங்கிக் கூறியதாக மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.
பாணர் அடிமைகளாக ஆண்டைகளின் தயவில் வாழ்ந்தனர்;. அவர்களைப் பரத்தையரின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். ஆண்டைகளுக்காகப் பரத்தையர் பால் தூது சென்றனர். இதனைச் சங்க இலக்கியங்களில் மருதத்திணை சார்ந்த பாடல்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. ‘பாணர் அடிமைகளாகப் பரத்தையர் வீடுகளுக்கும் உடன் சென்றனர், பாடி வீடுகளுக்கும் உடன் சென்றனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
ஈமத்தொழிலில் அடிமைகள்
புலையன் இழிசினன் முதலான அடிமைகளை ஆண்டைகள் பிணஞ்சுடுதல் போன்ற இழிபணிகளைச் செய்யவும் ஏவினர். ஆண்டைகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவர்களும் இடுதலும் சுடுதலுமாகிய ஈமத்தொழில்களைச் செய்தனர்.
கள்ளியேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுளாங்கண்
உப்பில்லா அவிப்புழுக்கல்
கைக் கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோனீயப் பெற்று
நிலங்கலனாக விலங்குபலிமிசையும் -புறநானூறு :363
(கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முது காட்டில் வெள்ளிடையே ஓங்கிய அகன்ற இடத்தின் கண் உப்பின்றி வேக வைத்த சோற்றைக் கையிற் கொண்டு பின்புறம் பாராது இழிசினனாகிய புலையன் கொடுக்கப் பெற்று நிலத்தையே உண் கலனாகக் கொண்டு வைத்து வேண்டாத பலியுணவை ஏற்கும் ) என்றும்
‘கள்ளிபோகிய களரி மருங்கில்
வெள்ளினிறுத்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்திட சில்லவிழ்வல்சி
புலையனேவப் புன் மேலமர்ந்துண்
டழல்வாய்ப் புக்கபின்’ - புறநானூறு :360
(கள்ளிகள் ஒங்கியுள்ள பிணஞ்சுடு களத்தின்கண் பாடையை நிறுத்திய பின்பு பரப்பிய தருப்பைப் புல்லின் மேல் கள்ளுடன் படைக்கப்பட்ட சில சோறாகிய உணவைப் புலயைன் உண்ணுமாறு படைக்க, தருப்பைப் புல்லின் மேல் இருந்துண்டு சுடலைத்தீயில் எரிந்தனர்) என்றும் இலக்கியங்கள் பேசுகின்றன.
‘இழிசினனாகிய புலையன் பிணத்துக்கு உப்பில்லாத சோறும் கள்ளும் பின்புறம் திரும்பிப் பாராமல் படைத்தலாகிய சடங்கைச் செய்தலோடு பிணத்தை இடுதலும் சுடுதலும் ஆகிய ஈமத்தொழிலையும் செய்தான் என்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.
இழிந்தவையும் கடினமானவையுமான தொழில்களைச் செய்யுமாறு அடிமைகாளகிய சகமனிதர்களை ஆண்டைகள் வற்புறுத்தி ஏவினர். வயல்களில் உழுதல், நீர்பாய்ச்சுதல், தொளிகலக்குதல், நாற்று நடுதல், களைபறித்தல், காவல் காத்தல், நெல்லரிதல், பிணையலடித்தல், பொலி தூற்றுதல், நெல்லை ஆண்டைகளின் மனைகளில் உள்ள நெற் கூடுகளில்சேர்த்தல் போன்ற கடினமான பணிகளைக் கடையர் கடைசியர் உழவர் உழத்தியர் களமர் முதலானவர்களே செய்தனர். இவர்கள் கீழ் மக்கள் எனப்பட்டனர். தமிழ் இலக்கணநூல்களும் இலக்கியநூல்களும் அங்ஙனமே குறித்துக் கூறுகின்றன.
சங்க இலக்கியங்களில் இத்தகைய தொழில் செய்தாரைக் குறிக்கும் பொழுது ‘சிறு’ அல்லது ‘சிறார்’ என்னும் சொல்லுடன் சேர்த்தே குறிப்பிட்டனர். தச்சச் சிறார். வேட்கோச் சிறார், சிறுகுறுந் தொழுவர் என்று குறிக்கப்பட்டனர். அவர்களை அடிமைகள் அல்லது கீழ் மக்கள் என்று குறிப்பதற்காகவே இச் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன. ‘சிறாஅர் துடியர் பாடுவன் மகாஅர்’ என்று துடியரும் பாணரும் சிறார் என்று அழைக்கப்பட்டதைப் புறநானூறு ( 291) காட்டுகிறது. இங்ஙனம் தச்சர், வேட்கோவர், குறுந்தொழுவர், துடியர் பாணர் முதலியவர்களை அடிமைகள் என்று குறிப்பதற்காவே அச்சொற்களுடன் சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன.
வயதில் மூத்தவர்களான அடிமைகளையும் கீழ்ச்சாதியாரையும் இளையோரான ஆண்டைகளும் ஆதிக்க சாதியாரும் மரியாதை இல்லாமல் அடே என்று அழைப்பதும் வாடா போடா என்று ஏவுவதும் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இவ்வழக்கம் அடிமைச் சமூகம் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்ட வழக்கமாகும். இவ்வழக்கம் சங்க காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதையே, தச்சர் வேட்கோவர் முதலான சொற்களோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ள சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் உணர்த்துகின்றன.
உழவர், களமர், புலையர் முதலான அடிமைகள் ஊருக்குள் வாழ அனுமதிக்கப்;படவில்லை. ஊருக்கு வெளியே ஓதுக்குப் புறமான சேரிகளில் வசிக்கவே அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். சுரண்டும் வர்க்கத்தவர் ஆன ஆண்டைகள் வாழ்ந்த ஊர்களையும் அரண்மனைகளையும் புகழ்ந்து பாடிய புலவர்கள் உழைப்பாளிகளும் அடிமைகளும் ஆன கீழ் மக்கள் வாழ்ந்த சேரிகளைப்பாடாமல் ஒதுக்கினர். இது பற்றி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்திக்கப்பட்டனர். பழைய சோறே அடிமைகளுக்கு உணவாக ஆண்டைகளால் வழங்கப்பட்டது. ஆண்டைகள் உடுத்துக்களைந்த பழைய ஆடைகளே அடிமைகளுக்குக் கொடுக்கப்பட்டன. பிற்காலத்தில் ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் வளமனைகளில் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்தப் படுத்தப்பட்டனர். இவ்வடிமைகள் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அவ்வழக்கம் சங்க காலத்திலும் நிலவியது. அண்மைகாலத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரையிலும் நீடித்திருந்தது.
அடிமைக் கொடை
அடிமைகளைச் சங்க காலத்தில் விலைக்குவிற்கும் வழக்கம் இல்லை. அதற்கான சான்றுகள் இலக்கியங்களில் காணப்படவில்லை. அக்காலத்தில் அடிமை வாணிகம் தோன்றாமைக்கு வணிகமுறை வழக்கத்துக்கு வாராததும் ஒரு காரணமாகும். அந்தக் காலகட்டத்தில் வாணிபம் என்பது பண்டமாற்று முறையாகவே இருந்தது. இது குறித்து ஏராளமான செய்திகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆண்டைகள் அடிமைகளைப் பரிசிலர்க்கு தானமாக வழங்கும் வழக்கம் இருந்தது.
சிக்கல்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழி யாதன் என்பவன் குண்டுகட்பாலியாதனார் என்ற புலவருக்கு யானை குதிரை ஆநிரை நெற்போர் முதலியவற்றோடு அடிமைகளையும் தானமாக வழங்கினான் என்ற செய்தியைப்புறநானூறு ( 387 ) கூறுகிறது.
குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்று நிறை நிரையென்கோ
மனைக்களம ரொடு களமென்கோ
ஆங்கவை கனவென மருள வல்லே நனவின்
நல்கியோனே நசைசால்; தோன்றல்
( மலை போன்ற யானைகளும் கொய்யப்பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும் மன்றிடம் நிறைந்த ஆநிரைகளும் மனைக்கண் இருந்து பணிபுரியும் அடிமைகளான களமரும் ஆகிய அவற்றைக் கனவு என்று மயங்குமாறு நனவின்கண் விரைவாக நல்கினான் ) என்பது பரிசில் பெற்ற புலவர் பாலியாதனரின் கூற்று ஆகும்.
ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்னும் வள்ளல் தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்கு யானை குதிரை அணிகலன் தேர் முதலியவற்றையும் எருதுகளையும் தேரைச் செலுத்தும் பாகனையும் பரிசிலாகக் கொடுத்தான் என்ற செய்தியைச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. ( 257 - 61 )
கடுந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்து பெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெலவொழிக்கும் மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ
யன்றே விடுக்கு மவன் பரிசில்’
( பாண்டில் எருது, வலவன் வண்டி யோட்டி) ( வலிய தொழிலைச்செய்யும் தச்சருடைய கையாற் செய்யும் உருக்கள் எல்லாம் முற்றுப் பெற்ற தேரினையும் தன் கடுமையால் குதிரையின் செலவைப் பின்னே நிறுத்தும் அழகும் வலிமையும் உடைய கால் களையும் ஒளிபொருந்திய முகத்தையும் உடைய நாரை எருத்தையும் அதனைச் செலுத்தும் பாகனையும் யானைகுதிரை அணிகலன்களையும் தந்து அவன் அன்றே விடுக்கும் ) என்பது இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நமக்குக் கூறும் செய்தியாகும். இவ்வாறு அடிமைகளை ஆண்டைகள் புலவர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
ஆண்டைகள் ஊர்ந்து சென்ற சிவிகைகளை அடிமைகள் சுமந்து சென்ற காட்சியை வள்ளுவர் நமக்குக் காட்டுகிறார்.
‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை” - குறள் என்பது வள்ளுவர் காட்டும் காட்சியாகும், இங்கு சிவிகை பொறுத்தார் அடிமைகள் ஊர்ந்தார் ஆண்டைகள். ஆடவரும் மகளிருமான அடிமைகளை ஆண்டைகள் அனைத்து விதமான பணிகளையும் செய்யுமாறு ஏவிப் பணி கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. வலியோராகிய சிலர் எளியோராகிய பலரை - சகமனிதர்களை - மனிதக்கால் நடைகளாகக் கருதிப் பணியமர்த்திய கொடுமை தனியுடைமைச் சிந்தனையின் வெளிப்பாடு என்பது சங்க இலக்கியங்கள் வாயிலாக மனித குலவரலாறு நமக்குக் கூறும் செய்தியாகும்.
الاشتراك في:
الرسائل (Atom)