‏إظهار الرسائل ذات التسميات நான்மணிக் கடிகை. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات நான்மணிக் கடிகை. إظهار كافة الرسائل

நான்மணிக் கடிகை - சாமி. சிதம்பரனார்

நூலின் பெருமை

நான்மணிக் கடிகை ஒரு சிறந்த நூல். இதனுள் இன்று 106 வெண்பாக்கள்
காணப்படுகின்றன. நூறு வெண்பாக்கள் தாம் நூலாசிரியரால் பாடப்பட்டிருக்க
வேண்டும். ஆறு வெண்பாக்கள் எப்படியோ வந்து சேர்ந்துவிட்டன.
இவற்றுள் இரண்டு வெண்பாக்கள் கடவுள் வாழ்த்தாக இருக்கின்றன.
இரண்டும் திருமாலைப் பற்றியே கூறுகின்றன இந்த இரண்டும், நூலினுள்
நான்கும்இந்நூலாசிரியரால் பாடப்பட்டவை அல்ல என்றே கொள்ள
வேண்டும்.

நான்மணிக் கடிகை-நான்கு மணிகள் பதித்த ஆபரணம். ஒவ்வொரு
பாடலும் ஒவ்வொரு அணிகலன். அந்த அணிகலன்களிலே நான்கு நான்கு
இரத்தினங்கள் பதித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே நான்மணிக் கடிகை
என்பதன் விளக்கம்.

நங்கையர் நாணமும் நல்கூர்ந்தார் நாணமும்!

அனைவரும், தங்கள் பெருமைக்குக் களங்கம் ஏற்பட்டால் பிறரைக் காண நாணுவர். ஆனால், பெண்களுக்கு நாணம், பிறக்கும்போதே தோன்றிய அணிகலனாக விளங்குகிறது. நாணம், பெண்ணின் அழகுக்கு அழகு தரும் பிறவிச் செல்வமாகும். எவ்வெப்பொருள்களுக்கு எவை அழகு தருகின்றன என்ற கருத்தைப் பதினெண்கீழ்க்கணக்கு நூலான நான்மணிக்கடிகை சிறப்பாக விளக்குகிறது.

"நிலத்துக்கு அழகு தருவது நெல்லும் கரும்பும். குளத்துக்கு அழகு தருவது தாமரை. பெண்மையின் பெருமைக்கு அழகு தருவது நாணம். அனைவருக்கும் அழகு தருவதுதான் செல்லும் உலகத்துக்குப் பயன்படும் நல்லறம்' என்ற கருத்தை,