‏إظهار الرسائل ذات التسميات ஐங்குறுநூறு. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات ஐங்குறுநூறு. إظهار كافة الرسائل

சங்க இலக்கியங்களில் இசைத்தமிழ் - முனைவர் வெ.வரதராசன்

கலைகளுள் சிறந்தது இசைக்கலை. இசையில் இன்பக்கூறு இயல்பாகவே அமைந்துள்ளது. இசை உயிரினங்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இசைக்கலை உணர்வின் உறைவிடம்; இறைமையின் மறைவிடம்.


சங்ககாலத்து மக்களின் அன்றாட வாழ்வில்இசைபெரிதும் இடம்பெற்றிருந்தது. இசையை அனுபவிக்க மொழி தடையில்லை, பகுத்தறிவும் தேவையில்லை, பொருள் விளக்கமும் கட்டாயமன்று. பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார்,


ஆறலைக் கள்வர் படைவிட அருளின

மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை (21-22)


எனப் பாலை யாழின் சிறப்பை, “வழிப்பறி செய்து பொருளை அபகரிக்கும் கள்வர்களின் கல்மனதையும் கரையச்செய்யும் தன்மை யாழிசைக்கு உண்டு. அதனால் அவர்தம் கையிலுள்ள கொலைக் கருவிகளை கைவிட்டு நல்லவர்களாக மாறிவிடுவர்என்று கூறியுள்ளார்.


ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில், “தலைவியின் பேச்சு யாழிசையின் இன்பம் போன்றதுஎன்பதை, “நரம் பார்ந்தன்ன தீங்கிளவி” (185) எனப் பாராட்டியுள்ளான் தலைவன். கலித்தொகைப் பாடல் ஒன்றில்,

மணம் வீசா முல்லைப்பூ - மு.முனீஸ் மூர்த்தி

குறிஞ்சிப் பாடல்களை வாசிக்கையில் இன்ப உணர்வு மேலோங்குவதற்கும், பாலை, முல்லைப் பாடல்களை வாசிக்கையில் இரக்க உணர்வு முன்னிற்பதற்கும் "உரிப்பொருளே' காரணம்.

அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் "இருத்தல்' என்பதாகும். அதாவது, "பிரிந்தவர் வருந்துணையும் ஆற்றியிருத்தல்' என்பதாகும். முல்லைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள தலைவியின் "இருத்தல்' சார்ந்த காட்சிப்படுத்தல்களை அறிஞர் பலர் சுட்டிச் செல்கின்றனர். தலைவியின் இருத்தல் செயலானது உறுப்பு நலன் அழிவு, கண்ணீர் விடல், தெய்வக் கற்புடன் வாழ்தல் எனும் செயல் நிலைகளை உடையனவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அகப்புறவய அவலங்களைத் தாண்டி மேலும் ஓர் அவலம் தலைவியைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்துகிறது.