இறையை உணர்தலே இறையுணர்வு எனப்படும். இறையுணர்வு கிடைக்க ஐம்பொறிகளும் துணைநிற்றல் அவசியம். அவ்வைம்பொறிகளும் அத்துணை எளிதாய் வசப்பட்டுவிடுமா என்ன? ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு விதத்தில் அடங்காப் பிடாரிகள்தான். வெறும் கைகூப்பி வணங்கி வெளிப்படுத்துதல் மட்டுமே பக்தி ஆகிவிடாது.
திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தனது "திருவரங்கக் கலம்பக'த்தில் அடியார்களின் மனநிலையை அழகாகவும் வியந்தும் விவரிக்கிறார்.