இந்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று. சங்க இலக்கியங்களோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் தகுதிவாய்ந்தது இந்நூல். வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூல் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலை யாத்துள்ளார் இந்நூலாசிரியர். அகம், புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. நூலும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலின்வழியாக 108 பாடல்கள் முத்தொள்ளாயிரச் செய்யுள்களாக இன்றைக்குக் கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட பேரிலக்கியமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.
إظهار الرسائل ذات التسميات முத்தொள்ளாயிரம். إظهار كافة الرسائل
إظهار الرسائل ذات التسميات முத்தொள்ளாயிரம். إظهار كافة الرسائل
நங்கையர் நாணமும் நல்கூர்ந்தார் நாணமும்!
அனைவரும், தங்கள் பெருமைக்குக் களங்கம் ஏற்பட்டால் பிறரைக் காண நாணுவர். ஆனால், பெண்களுக்கு நாணம், பிறக்கும்போதே தோன்றிய அணிகலனாக விளங்குகிறது. நாணம், பெண்ணின் அழகுக்கு அழகு தரும் பிறவிச் செல்வமாகும். எவ்வெப்பொருள்களுக்கு எவை அழகு தருகின்றன என்ற கருத்தைப் பதினெண்கீழ்க்கணக்கு நூலான நான்மணிக்கடிகை சிறப்பாக விளக்குகிறது.
"நிலத்துக்கு அழகு தருவது நெல்லும் கரும்பும். குளத்துக்கு அழகு தருவது தாமரை. பெண்மையின் பெருமைக்கு அழகு தருவது நாணம். அனைவருக்கும் அழகு தருவதுதான் செல்லும் உலகத்துக்குப் பயன்படும் நல்லறம்' என்ற கருத்தை,
الاشتراك في:
الرسائل (Atom)