‏إظهار الرسائل ذات التسميات விவேக சிந்தாமணி. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات விவேக சிந்தாமணி. إظهار كافة الرسائل

சொல்லவந்தது இதுதான்!

உலகின் ஈடு இணையற்ற நம் தாய்மொழி தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளன. ஒன்பாண் சுவையும் விரவிக்கிடக்கின்ற பல பாடல்கள் பாடிய புலவர்களின் கவிநயத்தையும், கற்பனைத் திறனையும், சொக்கவைக்கும் சொல்லாடல் கலையையும் அவர்தம் படைப்பாற்றலையும் நமக்கு விளக்குவனவாகும்.

பல அறநெறிக் கருத்துகளை உள்ளடக்கிய விவேக சிந்தாமணியின் பல பாடல்கள், தமிழ்த் திரைப்படங்களில் கூட எடுத்தாளப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றன. கிராமங்களில் வாழும் கல்லாதார் கூட விவேக சிந்தாமணியின் பல பாடல்களை செவிவழிக்கேட்டு, சிந்தையில் ஏற்றி எடுத்துக்காட்டிப் பேசும் இயல்பினராக இன்றும் விளங்குவதைக் காணலாம்.