பதிற்றுப்பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிற்றுப்பத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கற்பழிக்கத் தூண்டிய கவிதை - எஸ்.இராமச்சந்திரன்

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர், மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்றார் என்று சைவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைவது, மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளகாட்டுமாவது உரித்துஎனத் தொடங்கும் தேவாரப் பதிகமாகும். இப்பதிகத்தில், சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பதற்கு ஆலவாய் அண்ணல் திருவருள் புரியவேண்டும் என்று தமது கோரிக்கையினைப் பத்து பாடல்கள் மூலமாகச் சம்பந்தர் வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில் சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பது மட்டுமின்றி, சமண-பெளத்தப் பெண்டிரைக் கற்பழிப்பதும் - அல்லது கற்பழிக்குமாறு பொதுமக்களைத் தூண்டுவதும் - சம்பந்தரின் நோக்கமாக இருந்திருக்கவேண்டுமென்று சிலர் வாதிடுகின்றனர்.
இவ்வாறு சிலர் வாதிடுவதற்கு ஆதாரமாக இருப்பதுபெண்ணகத்து எழிற் சாக்கியப் பேய் அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமேஎன்ற சம்பந்தரின் தேவாரப் பாடல் வரியாகும். ‘பெண்ணகத்து எழில்என்ற அடைமொழி இடம் பெற்றிருப்பதால்கற்பழிக்கஎன்று சம்பந்தர் குறிப்பிட்டிருப்பதுசாக்கிய (பெளத்த) மதத்தையும், சமண மதத்தையும் பின்பற்றும் பெண்டிரைக் கற்பழிக்கஎன்ற பொருளிலேயே ஆகும் என்பது இவ்வாறு வாதிடுவோரின் கட்சியாகும்.

கவரிமா(ன்) - வே.சிதம்பரம்

மானம் பெரிது என்று வாழ்கின்றவர்களை "கவரிமா'(ன்)னுக்கு உவமை கூறும் மரபு இலக்கியங்களிலும், மக்கள் வழக்கிலும் உள்ளது. "கவரிமா' என்று அறியப்பட்டுள்ள விலங்கு மான் இனத்தைச் சேர்ந்தது அல்ல. தவறாக அவ்வாறு குறிப்பிடப்படுகிறது. "கவரி' என்று சங்க இலக்கியங்களிலும் "கவரிமா' என்று திருக்குறளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கவரிமா தமிழ்நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் உயர்ந்த திபெத் பீடபூமியில் வாழும் ஒரு விலங்கு. மாட்டு வகையைச் சேர்ந்தது. இந்த விலங்கு ஆங்கிலத்தில்  Yak என்று பொதுப்பெயராலும், போஸ் க்ரன்னின்ஸ் என்று விலங்கினப் பெயராலும் குறிப்பிடப்படுகிறது. கவரிமா பற்றிய செய்தி பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா-வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு கவரிமா பற்றிய பி.எல்.சாமி, செந்தமிழ்ச்செல்வி இதழில் "சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது நூலாக 1970-இல் வெளிவந்தது. பிறகு மு.வை.அரவிந்தன் தனது "உரையாசிரியர்கள்' நூலில், கவரிமா பற்றி குறிப்பிட்டுள்ளார்.