களவழி நாற்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களவழி நாற்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

களவழி நாற்பது - சாமி. சிதம்பரனார்

 நூலின் சிறப்பு

களவழி நாற்பது என்றால் களத்தைப் பற்றிப்பாடிய நாற்பது என்று
பொருள். இதில் நாற்பது வெண்பாக்கள் தாம் இருக்க வேண்டும். ஆனால்
இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றன. எப்படியோ ஒரு வெண்பா வந்து
சேர்ந்து விட்டது. வெண்பாவிலே நாலு அடிகளுக்கு மேல் வருமாயின்
அதைப் பஃறொடை வெண்பா என்பர். இந்நூலில் பஃறொடை
வெண்பாக்களும் இருக்கின்றன. பஃறொடை-பல்தொடை; பல அடிகள்
தொடர்ந்திருப்பவை.

களவழிப் பாடல்களிலே இரண்டு வகையுண்டு. உழவர்கள்
நெற்கதிரை அறுத்துக் களத்திலே கொண்டுவந்து சேர்த்து. அடித்து,
நெல்லைக் குவிக்கும் ஏர்க்களத்தைப் பாடுவது ஒன்று. நால்வகைப்
படைகளையும் கொண்டு போர் செய்யும் போர்க்களத்தைப் பாடுவது
மற்றொன்று. ஏர்க்களம், போர்க்களம் இந்த இரண்டைப் பற்றியும் பாடும்
பாடல்களுக்கும் களவழிப் பாடல்கள் என்று பெயர்.

யானையை மறைத்த அம்புகள் - மீனா சுந்தர்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் "களவழி நாற்பது' போர்க்களம் குறித்த பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது. சோழ மன்னன், சேர மன்னனை வெற்றி கொண்ட செய்தியை கற்பனை வளத்தோடும், கருத்துச் செறிவோடும் எடுத்தியம்பும் பாடல்களாக உள்ள இவற்றை, சங்கப் புலவரான பொய்கையார் பாடியுள்ளார். மொத்தம் உள்ள 41 பாடல்களும் வெண்பா இலக்கணத்திலேயே புனையப்பட்டுள்ளன.